கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 30, 2025

நவராத்திரி திருவிழா அருப்புக்கோட்டை பிரம்மாண்ட கொலு NAVARATRI KOLU DOLLS APK TEMPLE


 

தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 7 விடை +1 talent exam question answer viruthai


+1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 7 விடைக்குறிப்பு

        tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 7 -

  Pdf LINK

TTSE Model Question paper 7 answer key


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 7 pdf விடைக்குறிப்பு

     tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

TET paper 2

TTSE Model Question paper 7 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை சாமி கும்பிட நல்ல நேரம் ayutha pooja and saraswati pooja prayer time

 


தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 6 விடை +1 talent exam question answer viruthai


+1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 6 விடைக்குறிப்பு

       tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 6 -

  Pdf LINK

TTSE Model Question paper 6 answer key



தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 6 pdf விடைக்குறிப்பு

    tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

TET paper 2

TTSE Model Question paper 6 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 5 விடை +1 talent exam question answer viruthai


+1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 5 விடைக்குறிப்பு

      tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 5 -

  Pdf LINK

TTSE Model Question paper 5 answer key



தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 5 pdf விடைக்குறிப்பு

   tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

TET paper 2

TTSE Model Question paper 5 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

Monday, September 29, 2025

மிதிவண்டி bicycle


 

தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 4 விடை +1 talent exam question answer viruthai


+1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 4 விடைக்குறிப்பு

     tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 4 -

  Pdf LINK

TTSE Model Question paper 4 answer key



தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 4 pdf விடைக்குறிப்பு

  tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

TET paper 2

TTSE Model Question paper 4 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

கல்லுளி மங்கன் : பெயர்க் காரணம் kalluli mangan

 கல்லுளி மங்கன் : பெயர்க் காரணம்

பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கங்களுக்க பின்னால் துல்லியமான அறிவியல் காரணம் இருப்பது போல், இவர்களின் சொல்லும் பெரும் அர்த்தங்கள் பொதிந்தவையாக இருக்கும்.
பெரும்பாலானவர்களை திட்டும் போது சரியாக “கல்லுளி மங்கன்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அவைருமே அறிந்திருக்க கூடும்.அதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா?
என்ன அர்த்தம்?
உண்மையில் “கல்லுளி மங்கன்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறப்படுகின்றது. கல்+உளி(உரி)+மங்கன் ஆரம்த்தில் இந்த வார்த்தை கல்லுரி மங்கன் என்று தான் குறிப்பிடப்பட்டது.
அதாவது உரிக்கவே முடியாத கல்லை உரிக்க வேண்டும் என்ற பிடிவாதகுணம் கொண்டவர்களை தான் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
ஆனால் இது காலப்போக்கில் கல்லுளி மங்கன் என மாற்றம் பெற்றது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் கல்லை உளியால் செதுக்கி தான் சிலை செய்வார்கள்.
இப்படி கல்லை செதுக்கக்கூடிய கூர்மையான உளியையே மங்கச்செய்யும் அளவுக்கு ( உடைய செய்யும்) அழுத்தம் நிறைந்த கல் போன்ற குணம் கொண்டவர்கள் என்று அர்த்தம்.
அதாவது நீங்கள் எவ்வளவு போராடினாலும் சிலர் அவர்களின் அருத்துக்களில் இருந்து மாறவே மாட்டார்கள் மாறாக அவர்களுடன் போராடும் நீங்கள் தான் சோர்வடையும் நிலை ஏற்படும்.
இப்படிப்பட்டவர்களை தான் கல்லுளி மங்கன் என குறிப்பிட்டுள்ளனர். இனிமேல் இந்த வார்த்தையை சரியான இடத்தில் அர்தத்தை அறிந்து பயன்படுத்துங்கள்.

தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 3 விடை +1 talent exam question answer viruthai


+1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 3 விடைக்குறிப்பு

    tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 3 -

  Pdf LINK

TTSE Model Question paper 3 answer key


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 3 pdf விடைக்குறிப்பு

 tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

TET paper 2

TTSE Model Question paper 3 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

Sunday, September 28, 2025

காணக் கிடைக்காத கால்குலேட்டர் very old calculator


 

தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 2 விடை +1 talent exam question answer viruthai


+1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 2 விடைக்குறிப்பு

   tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 2 -

  Pdf LINK

TTSE Model Question paper 2 answer key



தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 2 pdf விடைக்குறிப்பு

 tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2

TET paper 2

TTSE Model Question paper 2 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

Saturday, September 27, 2025

Old telephone பழைய தொலைபேசி தொல்பொருள்


 

தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 1 விடை +1 talent exam question answer viruthai


 +1 talent exam question answer viruthai

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 1 விடைக்குறிப்பு

  tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

QUESTION 1 -

  Pdf LINK

TTSE Model Question paper 1 answer key



தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 1 pdf விடைக்குறிப்பு

 tamil moli ilakkiya thiranari thervu 

tamil talent search exam 2025

TTSE Model Question paper 1 pdf

பதிவிறக்கு/DOWNLOAD



Answer Key

Friday, September 26, 2025

வா வா கடல் அலையே va va kadal alaiye sea wave


 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.09.2025 வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.09.2025 வெள்ளி 

திருக்குறள்: 

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்வதில் மிகுந்த விருப்பமுடையவர், அளவறிந்து வாழும் நெறியில் நின்று வாழமாட்டார்.

பழமொழி :

Success tastes sweeter after struggle. 
போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :
என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ்

பொது அறிவு : 
1. உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் நாள் எது ?

செப்டம்பர் 27-September 27


2. 'தென்னாட்டு ஸ்பா' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம் எது?

குற்றாலம் (தமிழ்நாடு) -Coutrallam (Tamilnadu)

English words :
Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்
Grammar Tips: 

 Usage of "Some, Any, much, many, few and little"

Some used in Positive sentences, countable and uncountable 

Ex: I have some friends 

She bought some milk

Any used in negative sentences and questions 

Ex: I don't need any help.

Do you have any idea 

to be continued

அறிவியல் களஞ்சியம் :
 உலகில் முதன்முதலாக (1969ல்) நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) சாதனை படைத்தது. நிலவில் காலடி வைத்த முதல் வீரரானார் நீல் ஆம்ஸ்ட்ராங் . இதற்குப்பின் இதுவரை எந்தவொரு நாடும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியதில்லை. இந்நிலையில் 50 ஆண்டுக்குப்பின் மீண்டும் மனிதர்களை அனுப்பும் 'ஆர்டிமிஸ்-II' திட்டம், 2026 பிப்.,ல் செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்துள்ளது. எஸ்.எல்.எஸ்., ராக்கெட்டில் ஓரியன் விண்கலத்தில், ஒரு பெண் உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்கு செல்வர். நிலவில் தரையிறங்காமல் சுற்றி வருவர். பயண காலம் 10 நாட்கள்.
செப்டம்பர் 26

மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்
மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது.

நீதிக்கதை
 வரும்முன் காப்போம்
ஒரு ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது. அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள். வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது. குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள். பின்னர் அவர்களில் ஒருவர் இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம். 
இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது. உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை. குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை. இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.
ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் சோமு, தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லிவிட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு அய்யோ கடவுளே! ராமு அப்பொழுதே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே என்று புலம்பியது.
ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம் என்றது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன். வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி மகிழ்ச்சியாக வாழ்ந்தது. வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது. வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமு மீனோ கொல்லப்பட்டு விட்டது.

இன்றைய செய்திகள்

26.09.2025

⭐சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.


⭐ கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


⭐முதல்முறையாக ரெயில் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி


⭐சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷ்ரேயஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Today's Headlines


⭐The Tamil Nadu Excellence in Education program has begun in Chennai. Teachers, instructors, and administrators of educational institutions who have done excellent work will be felicitated.


⭐The Directorate of Medical Education and Research has issued a warning to private medical colleges that the accreditation of colleges will be cancelled if they charge additional fees from students joining MBBS and BDS through counselling. 


⭐First missile test through train was successful 


⭐Chief Minister M.K. Stalin will  inaugurate Agribusiness festival in Chennai.


 SPORTS NEWS 


🏀The first Test match between India 'A' and Australia 'A' ended in a draw. Shreyas has been appointed as the captain for the ODI series.

Thursday, September 25, 2025

எரிமலை volcano

ஏழாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

7th maths quarterly exam question paper virudhunagar district English medium summative assessment 2025 term 1

ஏழாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

7th maths quarterly exam question paper virudhunagar district tamil medium summative assessment 2025

ஒன்பதாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

9th maths quarterly exam question paper English medium virudhunagar district 2025

ஒன்பதாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

9th maths quarterly exam question paper tamil medium virudhunagar district 2025

ஆறாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

6th maths quarterly exam question paper English medium virudhunagar district 2025

ஆறாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

6th maths quarterly exam question paper virudhunagar district tamil medium summative assessment term 1

எட்டாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

8th maths quarterly exam question paper virudhunagar district tamil medium 2025

எட்டாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

8th maths quarterly exam question paper English medium virudhunagar district 2025

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

9th science quarterly exam question paper virudhunagar district English medium 2025

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

9th science quarterly exam question paper virudhunagar district 2025 tamil medium 

ஏழாம் வகுப்பு அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

7th science quarterly exam question paper tamil medium virudhunagar district 2025 summative assessment term 1

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.09.2025 வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.09.2025 வியாழன் 

திருக்குறள்: 

குறள் 515: 

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் 

சிறந்தானென் றேவற்பாற் றன்று. 

விளக்க உரை: 

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

பழமொழி :

A single kind word can change someone's entire day. 
ஒரு இனிய சொல் ஒருவரின் முழு நாளையே மாற்றிவிடும்.

இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :
சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்கும்போது ஒரு மனிதன் தனக்குத்தானே தலைவனாகிறான் - சாக்ரடீஸ்

பொது அறிவு : 
01.தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

போடிநாயக்கனூர்- தேனி மாவட்டம்

Bodinayakanur -Theni District

02.FIDE உலக சதுரங்கப் போட்டி 2025 எந்த நாட்டில் நடைபெற உள்ளது?

கோவா- இந்தியா

Goa- India

English words :
Take on –accept a task. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்

Grammar Tips: 

 "Into" vs "in to"

“Into” is a preposition that means "to the inside" of something.

As per rules prepositions describe the relationship between a noun or pronoun and another word.

Ex: We walk into a restaurant 

We use “in to” when either the word “in” or the word “to” is part of a verbal phrase.

Ex: “Let's check in to the hotel before we go out.”

“Jessie stopped in to pick up lunch.”

அறிவியல் களஞ்சியம் :
 கடலுக்கு அடியில் தனிமங்கள்

மெக்சிகோவின் மேற்கு -- அமெரிக்காவின் ஹவாய் இடையே உள்ள கடல் பகுதியில் 13,123 அடி ஆழத்தில் நிக்கல், மாங்கனீசு, காப்பர், ஜிங்க், கோபால்ட் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன. இவை 'பாலிமெட்டாலிக் நுாடுல்ஸ்' என அழைக்கப்படும் பாறைகளில் கலந்துள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதே போல சூரிய ஒளி இல்லாத 13 ஆயிரம் - 19 ஆயிரம் அடி ஆழ பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, இந்த தனிமங்களின் மூலக்கூறுகள் உதவுகின்றன. இப்பகுதி 45 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அவர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை
 ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. தாகம் தண்ணிரை வயிறு முட்ட நீரை பருகியது.
அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.
சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.

மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை. 


புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.


இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.


“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.

இதற்குள் மானை நெருங்கிய புலி அதன் மீது பாய்ந்து, அதை கொன்று தின்றது.

நீதி: ஆபத்துக்கு உதவாத அழகை விட நம்மை காக்கும் நமது உறுப்புகள், நல்ல நண்பர்கள் நமக்கு தேவை.

இன்றைய செய்திகள்

25.09.2025


⭐தமிழகத்தில் ₹.1,500 கோடியில்,133 புதிய துணை மின்நிலையங்கள் & ஏற்கெனவே உள்ள துணை மின்நிலையங்களில், 52 பவர் டிரான்ஸ் ஃபார்மர்களைப் பொருத்த தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.


⭐நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன்   இயக்கம்: 1,440 பேர் பயணிக்கலாம்.


⭐தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀ஐசிசி தரவரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் உச்சத்தை தொட்ட அபிஷேக் சர்மா..!


Today's Headlines


⭐The Tamil Nadu Electricity Board is planning to install 133 new substations & 52 power transformers in existing substations at a cost of ₹1,500 crore in Tamil Nadu.


⭐ Nellai - Chennai Vande Bharat train to operate with 20 coaches: 1,440 passengers can travel. 


⭐ Meteorological Centre has announced  heavy rain likely in Tamil Nadu till 30th  September


 SPORTS NEWS 


🏀Cricket - Abhishek Sharma surpasses Virat Kohli,  Suryakumar Yadav in ICC rankings.

Wednesday, September 24, 2025

அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A.சௌந்தரபாண்டியனார் தமிழ்க் கட்டுரைப் போட்டி


ACHAM AKATRIYA ANNAL W.P.A.S

ACHAM AKATRIYA ANNAL W.P.A.SOUNDARAPANDIYANAR

TAMIL KATTURAI PDF WPAS ESSAY

PDF LINK

அச்சம் அகற்றிய அண்ணல் W.P.A.சௌந்தரபாண்டியனார் தமிழ்க் கட்டுரைப் போட்டி pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


ACHAM AKATRIYA ANNAL W.P.A.SOUNDARAPANDIYANAR

TAMIL KATTURAI PDF WPAS ESSAY

திறன் இயக்கம் 6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டுத் தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள் THIRAN

💐💐💐💐💐

*_திறன் இயக்கம் 2025_* 

*6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்*

👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 வழக்கமான நடைமுறையின் படி திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 திறன் இயக்கத்தில் பயிற்றுவிக்கும் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 காலாண்டு தேர்வில் திறன் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 60க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 8 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 100 க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின்பு மாணவர்களின் Report Card ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

👉 மதிப்பெண்களை உள்ளீட்டை ( MARK ENTRY ) 22.09.2025 திங்கட்கிழமை முதல் 10.10.2025 வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ள வேண்டும்

💐💐💐💐

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி மாதிரி வினாத்தாள்கள் 2


model questions 10th social science

pdf link touch below


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி மாதிரி வினாத்தாள்கள் 2 model questions 10th social science


model questions 10th social science

PDF LINK👇


பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி மாதிரி வினாத்தாள் 2 pdf

   பதிவிறக்கு/DOWNLOAD


TENTH SOCIAL SCIENCE QUARTERLY EXAM MODEL QUESTION PAPER 2 PDF ENGLISH MEDIUM SSLC IMPORTANT QUESTION

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு ஆங்கில வழி மாதிரி வினாத்தாள் 1 pdf

  பதிவிறக்கு/DOWNLOAD


TENTH SOCIAL SCIENCE QUARTERLY EXAM MODEL QUESTION PAPER 1 PDF ENGLISH MEDIUM SSLC IMPORTANT QUESTION

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி மாதிரி வினாத்தாள் 2 pdf

  பதிவிறக்கு/DOWNLOAD


TENTH SOCIAL SCIENCE QUARTERLY EXAM MODEL QUESTION PAPER 2 PDF TAMIL MEDIUM SSLC IMPORTANT QUESTION

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் காலாண்டுத் தேர்வு தமிழ் வழி மாதிரி வினாத்தாள் 1 pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


TENTH SOCIAL SCIENCE QUARTERLY EXAM MODEL QUESTION PAPER 1 PDF TAMIL MEDIUM SSLC IMPORTANT QUESTION

சான்றிதழ் உண்மைத்தன்மை விண்ணப்பம்

Certificate Genuineness form 

பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு 4 வினாத்தாள்

Tenth tamil slip test 4 question paper 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு வினாத்தாள்


9th tamil unit test 3 question paper 

மகிழ் முற்றம் வகுப்புக் குழுத் தலைவர் மதிப்பெண் அட்டவணை

House system House class leader scoring template 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2025 புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2025 புதன் 

திருக்குறள்: 

குறள் 512: 

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை 
ஆராய்வான் செய்க வினை. 

விளக்க உரை: 

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

பழமொழி :

The more you give, the more you gain. 
நீங்கள் அதிகம் கொடுத்தால், அதிகம் பெறுவீர்கள்.

இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :
தன்னை உயர்ந்தவனாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனநோயாளி - அண்ணல் அம்பேத்கர்

பொது அறிவு : 
01 பழங்காலத்தில் "சேரன் தீவு" என்று அழைக்கப்பட்ட நாடு எது?

இலங்கை-Sri Lanka

02. உலக தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

பிப்ரவரி 21- February 21

English words :
Take down –remove something, write down the spoken words, 
ஒரு பொருளை அகற்றுதல், சொல்லுவதை எழுதுதல்

Grammar Tips: 

Prepositions

In - should come before 

* Times of the day - e.g : in Morning

* Months - e.g : in January

* Years - e.g : in 2004

* Seasons - e.g : In Summer

அறிவியல் களஞ்சியம் :
 பூமியை விட்டு விலகும் நிலவு

ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்ற அளவில் நிலவு, பூமியை விட்டு விலகி செல்கிறது. இதனால் பூமி சுற்றும் வேகமும் குறைகிறது. இதனால் ஒரு நாளுக்கான நேரம் 25 மணியாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் நிலவு நகர்வதால் 7 கோடி ஆண்டுக்கு முன் ஒரு நாளுக்கு 23.5 மணி நேரமாக இருந்தது. ஆனால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்பது பூமி - நிலவு இடையிலான 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் வெறும் 0.00000001 சதவீதம் தான். எனவே இது நடக்க லட்சக்கணக்கான ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 24

2014 – மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.

நீதிக்கதை
 புள்ளிமான்கள்

ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.

எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.

சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.

சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.

இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.

நீதி :
நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

24.09.2025

⭐பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார்: பள்ளிக்கல்வி இயக்குனர்.

⭐தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவித்து மக்கள் நியாயமாக பயன் அடைய விடுங்கள்-மு.க.ஸ்டாலின்.

⭐ அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை. எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

Today's Headlines

⭐Director of our  School Education said the second semester textbook will ready for school students 

⭐M.K. Stalin requested  the central government to release the funds which is due for Tamil Nadu and let the people benefit fairly

⭐ Americans get priority in US job opportunities. This comes as a shock to Indians who are the largest recipients of H-1B visas. 

 SPORTS NEWS

🏀 In the last match between India and Australia women's teams, the Australian team won the 3-match ODI cricket series 2-1 and won the trophy.

Tuesday, September 23, 2025

வகுப்பு 10 கணக்கு காலாண்டுத் தேர்வு வினாத்தாள் கணிதம் விருதுநகர் மாவட்டம்


10th maths question tamil and english medium 



10th english question paper quarterly exam 2025 பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்


பத்தாம் வகுப்பு கணக்கு காலாண்டுத் தேர்வு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth maths quarterly exam question paper pdf virudhunagar district tamil and English medium 2025 sslc

பத்தாம் வகுப்பு கணக்கு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் விடைக்குறிப்பு pdf திருவள்ளூர் மாவட்டம்


10th maths quarterly question paper and answer key tamil and english medium thiruvallur district

ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம்

9th English quarterly exam question paper virudhunagar district 2025

பத்தாம் வகுப்பு கணக்கு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் விடைக்குறிப்பு pdf திருவள்ளூர் மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth maths quarterly exam question paper pdf answer key tamil and English medium Thiruvallur district 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.09.2025 செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.09.2025 செவ்வாய் 

திருக்குறள்: 

குறள் 511: 

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப் படும். 

விளக்க உரை: 

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பழமொழி :

Mistakes are proof that you are trying. 
தவறுகளை நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்பதற்கான சான்று.

இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :
உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதுபோல நேர்மையையும் கடைபிடியுங்கள் - ஜவஹர்லால் நேரு

பொது அறிவு : 
01.வரலாற்று புகழ் பெற்ற சார்மினார் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?

தெலுங்கானா-Telangana

02. காவிரி ஆறு எந்த இடத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது?

பூம்புகார் மயிலாடுதுறை மாவட்டம்

Poompuhar - Mayiladuthurai district

English words :
take back – retraction or withdraw/ திரும்ப பெறுதல் அல்லது திரும்ப எடுத்துக் கொள்ளுதல்
Grammar Tips: 

 Plural rule

If the noun ends with s,x,z,ch,sh,ss,zz add es to the noun

Bus– buses

Box–boxes

Match –matches

Bush–bushes

Mess- messes

If the noun ends with f or fe add ves to the noun 

Leaf –leaves

Knife –knives

அறிவியல் களஞ்சியம் :
 இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு பொது மக்கள் நீரின் முக்கியம், அதை பாதுகாக்காவிட்டால் ஏற்படக்கூடிய மோசமான பின் விளைவுகள் குறித்து ஒரு விழிப்புணர்வு அடைய வேண்டும்

செப்டம்பர் 23

சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள்

சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.

நீதிக்கதை
சுயநலம்

ஒரு ஊரில் ராமசாமி என்ற ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சுயநலமானவர். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். அந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். 

சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியினுடையதாக இருக்கலாம் எனக்கருதி, அதை குரு அவரிடம் கொடுத்தார். 

குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ராமசாமி, இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவன் குருவிடம், நான் இந்த பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்த பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திருப்பி தரவேண்டுமென குருவிடம் கூறினார். 

குருவோ மிகவும் நல்லவர். பிறரின் பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். 

நண்பர்கள் இருவரும் ஊரில் உள்ள தலைவரிடம் சென்றனர். விவரத்தை கேட்ட ஊர் தலைவர், ராமசாமியிடம், நீ எவ்வளவு தங்க நாணயங்களை தொலைத்தாய்? என்று கேட்டார். அதற்கு அவர் 40 தங்க நாணயங்கள் என்றார். குருவை பார்த்து நீ எவ்வளவு தங்க நாணயங்களை கண்டுபிடித்தாய்?என்று கேட்டார். அதற்கு அவர் 30 தங்க நாணயங்கள் என்றார். 

ஊர்த்தலைவர் ராமசாமியை பார்த்து, நீ தொலைத் திருப்பதோ 40 தங்க நாணயங்கள். ஆனால் குரு கண்டறிந்திருப்பதோ வெறும் 30 தங்க நாணயங்கள். எனவே இது உன்னுடையதாக இருக்காது. இனிமேல் வேறுயாராவது 40 தங்க நாணயங்களை கொண்டுவந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீ கிளம்பலாம் என்றார். 

தலைவர் குருவைப்பார்த்து நீ கண்டுபிடித்திருப்பது ராமசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது, எனவே இதை நீயே வைத்துகொள் என்றார். 

தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த சங்கடத்தை எண்ணி வருத்தபட்டார். தனது தவறை உணர்ந்த அவர், இனி சுயமில்லாத நேர்மையான மனிதராக வாழவேண்டும் என முடிவுசெய்தார். 

இன்றைய செய்திகள்

23.09.2025

⭐விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐GST 2.0: ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கபடுகிறது.

⭐கடைக்காரர்கள், வர்த்தகர்கள் இந்திய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

⭐கைபர் பக்துன்க்வாவில் உள்ள கிராமத்தின் மீது பாகிஸ்தான் சரமாரி குண்டு வீச்சு: 30 பேர் உயிரிழப்பு


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டி காக்


🏀2036ல் ஒலிம்பிக் போட்டி இந்தியா நடத்துகிறது: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்


Today's Headlines


⭐Chief Minister M.K. Stalin has announced  2,417 nursing vacancies to be filled soon.


⭐GST 2.0 Prices of Aavin milk products are being reduced.


 ⭐PM Modi said shopkeepers, traders should sell made in India products


⭐Pakistan shelling of a village in Khyber Pakhtunkhwa: 30 people were killed.


 SPORTS NEWS 


🏀South Africa's De Kock calls off retirement 


🏀India to host 2036 Olympics: Union Minister Mansukh Mandaviya

Monday, September 22, 2025

தேன்சிட்டு 2025 செப்டம்பர் 2 மாத இதழ் வினாடி வினா வினாவிடை


then chittu September paper quiz question

தேன்சிட்டு 2025 செப்டம்பர் இதழ் 2 வினாடி வினா வினா விடை pdf then chittu 2025 September paper quiz questions and answers

  then chittu 2025 September paper quiz questions and answers


பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth English quarterly exam question paper pdf virudhunagar district 2025

எட்டாம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் 2025 தென்காசி மாவட்டம்

8th tamil quarterly exam question paper 2025 tenkasi district 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.09.2025 திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.09.2025 திங்கள் 

திருக்குறள்: 

குறள் 467: 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 

எண்ணுவம் என்பது இழுக்கு.


விளக்கம்: 

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன் கவனமாக ஆராய வேண்டும்; எதையாவது செய்து முடித்த பிறகு சிந்திப்போம் என்று சொல்வது தவறாகும். 

பழமொழி :

Silence is sometimes the best answer. 
சில நேரங்களில் அமைதியே மிகச் சிறந்த பதில் ஆகும்.

இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :
உண்மைக்காக எதையும் துறக்கலாம். எதற்காகவும் உண்மையைத் துறக்காதே! - சுவாமி விவேகானந்தர் 

பொது அறிவு : 
01. பரமபத விளையாட்டைக் கண்டறிந்தவர் யார்?

குரு ஞானதேவ் - 13 ஆம் நூற்றாண்டு

Saint Gyandev - 13th Century


02.இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?

பிரித்வி ஏவுகணை

Prithvi missile

English words :
take away – remove, 
எடுத்து செல்லுதல்

Grammar Tips: 

 2 sounds of C

"C" when followed by a,o,u or any   consonants 

Ex: Corn, Cat, Cake, cup, coat 


"S" when followed by i,e or y

Ex: cycle, circus, juice, voice


அறிவியல் களஞ்சியம் :
 பல நன்னீர் உயிரினங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைப்பதால் நீர்மாசுபாட்டின் தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

செப்டம்பர் 22

மைக்கேல் பாரடே அவர்களின் பிறந்த நாள்

மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.

மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.

நீதிக்கதை
 மலைப்பாம்பும் மான் குட்டியும்

ஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம். 

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும். 

ஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது. 

மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்? என்றது. 

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் நீ என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு. 

உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன? என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது. 

நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது. 

குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது. 

அதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது. 

எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்? நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?

குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது. 

நீதி :
எப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.09.2025

⭐H-1B விசா விவகாரம்:

அமெரிக்காவில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

⭐"ஈரானில் நல்ல சம்பளத்தில் வேலை" - நம்பி ஏமாற வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை

⭐உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது.


⭐'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் வசதி-முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.

இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார்.


Today's Headlines


⭐H-1B visa issue –  the  students who are going to complete their studies in the US will be affected.


⭐Central government warns not to be fooled as "Good paying jobs in Iran" 


⭐Russia has launched heavy air strikes on Ukraine. Ukraine had been launched drone attacks on oil refineries in Russia's Saratov and Samara provinces.p


⭐Chief Minister  has launched  travel facility through  "Chennai One"  app .


 *SPORTS NEWS* 


🏀 The Korea Open tennis tournament was held in Seoul, the capital of South Korea. Polish player Swiatek played brilliantly and won the championship title.

Sunday, September 21, 2025

மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

Mark list form pdf

திருக்குறள் 175 அஃகி... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - Aggi...


 thirukural Explanation tamil & english - Aggi...

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு வினாடிவினாக்கள் வினாத்தாள்கள் விடைகள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


tamil moli ilakkiya thiranari thervu materials 

11th tamil talent exam questions answers quiz

Friday, September 19, 2025

10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு கள்ளக்குறிச்சி 2025 tamil answer key


PDF LINK👇


10ஆம் வகுப்பு தமிழ் காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு திண்டுக்கல் மாவட்டம் 2025


PDF LINK👇


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.09.2025 வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.09.2025 வெள்ளி 

திருக்குறள்: 

குறள் 466: 

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும். 

 விளக்க உரை: 

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

பழமொழி :

Good habits formed in youth make all difference.  
இளமையில் உருவாகும் நல்ல பழக்கங்கள் வாழ்நாளையே மாற்றுகின்றன.

இரண்டொழுக்க பண்புகள் :
1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]

2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :
செல் நோண்டும் பல மணியில் சில நிமிடம் ஒதுக்கி ,மண் நோண்டி மரம் நடுவோம் - நடிகர் விவேக்

பொது அறிவு : 
01.உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
 சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்
Sir Jagadish Chandra Bose
02.மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம் எது?
            நீலகிரி -The Nilgris

English words :
take after– resemble , 
முன்னோரைப் போல ஒத்து இருத்தல்

Grammar Tips: 

 When and where to use "to and too"

To is used to show direction, place and purpose 

Ex–she gave the book to me

I am going to school 

After 'to' only present tense will come 

Too means also or more than enough 

Ex–I want to play too

The bag is too heavy

அறிவியல் களஞ்சியம் :
 மனிதர்களின் மேல் தோல் கீழ் மல்பீஜியன் அடுக்குகள் (Malphigian Layers) உள்ளன. இவ்வடுக்குகளில் நிறமித் துணுக்குகள் (Pigment Granules) காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றன. இந்நிறமித் துணுக்குகளில் உள்ள இரசாயனப் பொருள்களின் தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதால், நிறமும் வெவ்வேறு விதத்தில் அமைகிறது.

செப்டம்பர் 19
சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.

நீதிக்கதை
 அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். 
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது. 
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது. 
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி. 
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது. 
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது. 
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

இன்றைய செய்திகள்

19.09.2025

⭐TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

வருகிற 28ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள்

www.tnpsc.gov.in, www.tnpscexam.in இணைய தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

⭐சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


⭐அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரியாக 25 சதவீதம் அமல்படுத்தியுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀சர்வதேச கிரிக்கெட் -

அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 2வது இடத்திற்கு முன்னேற்றம்


🏀இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றனர்.


Today's Headlines


⭐TNPSC  Announced  Group 2, 2A exams will be held on the 28th ,through www.tnpsc.gov.in, and hall ticket can be downloaded from the website www.tnpscexam.in ,


⭐In a statement issued by the Chennai Meteorological Department, A low-level circulation is prevailing over the South Indian regions. Due to this, light to moderate rains are likely to occur in the areas of Tamil Nadu, Puducherry and Karaikal.


⭐The US has imposed a 25 percent reciprocal tariff on Indian goods. 

 *SPORTS NEWS*

🏀International Cricket - Indian player Smriti Mandhana moves up to 2nd place in the list of players with most centuries.


🏀Reigning champion Neeraj Chopra and Sachin Yadav will be participating from India. India's Sachin Yadav finished 4th with 86.27 points and Neeraj Chopra finished 8th with 84.03 points.

Thursday, September 18, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.09.2025 வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.09.2025 வியாழன் 

திருக்குறள்: 

குறள் 463: 

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை 
ஊக்கா ரறிவுடை யார். 

விளக்க உரை: 

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

பழமொழி :

The darkest night produces the brightest stars. 
மிக இருண்ட இரவை பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :
1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.

2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :
உயர்ந்த தவம்-பொறுமை. உயர்ந்த ஆயுதம்- மன்னிப்பு உயர்ந்த மகிழ்ச்சி-திருப்தி . -குரு நானக்

பொது அறிவு : 
01."பிக் ஆப்பிள்" என்றழைக்கப்படும் அமெரிக்க நகரம் எது?

நியூயார்க் - Newyork City


02."திருமறைக்காடு" என்று அழைக்கப்படும் ஊர் எது?

வேதாரண்யம் -, நாகப்பட்டினம்

Vedaranyam -Nagapattinam

English words :
stand out – noticable, தனித்துவமாக தெரிதல். stick to – follow strictly ஒரு விதியை, ஒழுங்கை அல்லது ஒரு செயலைத் தவறாமல் பின்பற்றுவது.

Grammar Tips: 

 Common mistakes with cut

1. Cut your nails X

       Clip your nails ✓

2. Cut your hair X

       Trim your hair ✓

3. Cut the bread X

       Slice the bread ✓

 4. Cut the grass X

 Mow the grass ✓

அறிவியல் களஞ்சியம் :
 கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது.

செப்டம்பர் 18

உலக தண்ணீர் கண்காணிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ஆம் தேதி உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இப்போது உலகில்  நீருக்கான  நெருக்கடி மற்றும்  நீர் பற்றாக்குறை, மாசுபாடுகளால் மனிதர்களுக்கு நெருக்கடிகளும் உருவாகியுள்ள சூழலில் உலக தண்ணீர் கண்காணிப்பு தினம் என்பதும் மிக அவசியான ஒரு நாளாக மாறியுள்ளது.

நீதிக்கதை
 மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான். 

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்.

இன்றைய செய்திகள்

18.09.2025

 தொடர்ந்து குண்டு மழை ஏமன் துறைமுக நகரம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 வாக்கு திருட்டு, வாக்கு இயந்திரங்களில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Yகுரேஷி வலியுறுத்தி உள்ளார்.

 விளையாட்டுச் செய்திகள்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி.சிங், ஓஜா நியமனம்

Today's Headlines

 Israeli airstrikes continue on Yemeni port city 

At least 15 people have been killed in a cloudburst that flattened the city of Dehradun.

 Former Chief Election Commissioner S.Y. Qureshi has urged the Election Commission of India to conduct a proper investigation into allegations of vote rigging and irregularities in voting machines.

 *SPORTS NEWS* 

The World Athletics Championships are underway in the Japanese capital Tokyo. India's Neeraj Chopra performed well in his first attempt in today's competition.

RB Singh, Ojha appointed as new selection committee members of the Cricket Board.

தமிழ்த்துகள்

Blog Archive