கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 31, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-09-2025. திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

01-09-2025. திங்கள்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல் ;

அதிகாரம்: பண்புடைமை ; 

குறள் எண் : 682.

குறள் :

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று.

விளக்கம் :

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

பழமொழி :

விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.

Whenever you fall, it is to rise and not to weep.

இரண்டொழுக்க பண்புகள்:

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் அவ்வாறே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமை உடையவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிவிடுவாய்.

சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

01. உலக வங்கியின் தற்போதைய தலைவர் யார்?

திரு.அஜய் பங்கா -Mr.Ajay Banga

02. வைனு பாப்பு மத்திய வானியல் ஆய்வகம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?

ஜவ்வாது மலை காவலூர்திருப்பத்தூர்

Javadhu Hills Kavalur Thirupathur

English words :

incredible extremely good, A, 2

Grammar Tips: When to use "of" and "off"

OF

1. To show possession:

Ex: A Friend OF mine

2. To state what something is made of

Ex: A table made OF wood

3. To show what something contains

Ex: A jar of milk

OFF

1. To show movement away from a place

Ex: The dog runs OFF

2. To indicate separation Ex: "His hat fell OFF"

3. To form phrasal verbs

Ex: shut the water OFF

4. Describe disconnection

Ex: I worked on and OFF as a waitress."

அறிவியல் களஞ்சியம் :

வியன்னாவைச் சேர்ந்த பிரான்ஸ் மெஸ்மர் (Franz Mesmer) முதலாவதாகத் தரவு துயில் நெறியை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தினார். அவருடைய தரவு துயில் உத்தி (technique) ஆற்றல் வசியம் (Mesmerism) என அறியப்பட்டிருந்தது.

நீதிக்கதை - சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்

அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.

குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுத் திரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : அடாவடிக்காரனிடம் சண்டையிடுவதைவிட சமயோசிதமாக நடப்பது நல்லது.

இன்றைய செய்திகள் - 01.09.2025

*தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்

* ஏமனில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹூத்தி பிரதமர் படுகொலை

*அதிகரித்து வரும் முதலீட்டு மோசடிகள்: போலி லிங்க்-களில் இருந்து பாதுகாப்பாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

விளையாட்டுச் செய்திகள்

*கெய்ல், பொல்லார்டுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்து அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை

ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 50 தங்க பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது இந்தியா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:

சின்னர், கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines - 01.09.2025

* Venkatraman appointed as Tamil Nadu DGP in charge of law and order.

* Houthi PM killed in Israeli airstrike in Yemen.

* Investment scams on the rise: Police advise being safe from fake links.

SPORTS NEWS

Alex Hales becomes the second player to score 14,000 runs in T20 after Gayle and Pollard

Asian Shooting Championship: India creates history by winning 50 gold medals

US Open Tennis: Sinner, Coco Gabe advance to the 4th round.

Prepared by Covai women ICT போதிமரம் 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15

6th tamil model notes of lesson

lesson plan september 15

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-09-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

1. ஏற்றத் தாழ்வற்ற ................... அமைய வேண்டும். தமிழ்த்துகள்

அ.சமூகம்       ஆ. நாடு        இ.வீடு                     ஈ.தெரு

2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ....................... ஆக இருக்கும்.

அ.மகிழ்ச்சி      ஆ. கோபம்      இ. வருத்தம்               ஈ.அசதி

3. நிலவு+என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................. தமிழ்த்துகள்

அ. நிலயென்று  ஆ. நிலவென்று  இ. நிலவன்று              ஈ.  நிலவுஎன்று

4. தமிழ்+எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .........................

அ.தமிழங்கள்         ஆ. தமிழெங்கள்       இ. தமிழுங்கள்        ஈ.தமிழ்எங்கள்

5. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...................... தமிழ்த்துகள்

அ. அமுது+தென்று    ஆ. அமுது+என்று இ. அமுது+ஒன்று      ஈ.அமு+தென்று

6. செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது... தமிழ்த்துகள்

அ. செம்மை+பயிர்     ஆ.செம்+பயிர்         இ.செமை+பயிர்        ஈ.செம்பு+பயிர்

7.தொன்மை என்னும் சொல்லின் பொருள் ................... தமிழ்த்துகள்

அ.புதுமை       ஆ.பழமை       இ.பெருமை            ஈ.சீர்மை

8.இடப்புறம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.....

அ.இடன்+புறம்    ஆ.இடை+புறம்   இ.இடம்+புறம்              ஈ.இடப்+புறம்

9.சீரிளமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..... தமிழ்த்துகள்

அ.சீர்+இளமை   ஆ.சீர்மை+இளமை        இ.சீரி+இளமை      ஈ.சீற்+இளமை

10.சிலம்பு+அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் .................

அ.சிலம்பதிகாரம் ஆ.சிலப்பதிகாரம் இ.சிலம்புதிகாரம்      ஈ.சிலபதிகாரம்

 

11. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

12. முன்பெல்லாம் மழைக்காலம் எவ்வாறு இருக்கும்?                       தமிழ்த்துகள்

13. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம்பெயர்கின்றன?

14. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது? தமிழ்த்துகள்

15. நாம் யாருடன் சேரக்கூடாது?    

16. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை? தமிழ்த்துகள்

17. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.          

18. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை? தமிழ்த்துகள்

19. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?தமிழ்த்துகள்

20. குருவிகள் ஏதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன? 

21. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது? தமிழ்த்துகள்

22. காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.                   

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15

7th tamil model notes of lesson

lesson plan september 15

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-09-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

 அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                

1. வானில் ................... கூட்டம் திரண்டால் மழை பொழியும்.          தமிழ்த்துகள்

அ.அகில்                ஆ.முகில்                         இ.துகில்                           ஈ.துயில்

2. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ..................

அ.அரை                 ஆ.ஒன்று                         இ.ஒன்றரை                    ஈ.இரண்டு

3. கண்நின்று எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள முரண்தொடைச் சொற்கள் ..............................

அ.கண்நின்று - முன்னின்று                            ஆ.கண்நின்று - சொல்லினும்

இ.சொல்லினும் - சொல்லற்க                           ஈ.கண்அற – சொல்லற்க    தமிழ்த்துகள்

4. காடெல்லாம் -   என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ.காடு+டெல்லாம்    ஆ.காடு+எல்லாம்               இ.கா+டெல்லாம்                ஈ.கான்+எல்லாம்

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

5. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை ........................ கப்பல்கள் எனப்பட்டன.   தமிழ்த்துகள்

6. உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு ........................ ஆகும்.

இ. பொருத்துக.

7. எரா                    -        திசைகாட்டும் கருவி          தமிழ்த்துகள்

8. பருமல்                -        அடிமரம்

9. மீகாமன்              -        குறுக்கு மரம்

10. காந்த ஊசி         -        கப்பலைச் செலுத்துபவர்                                  தமிழ்த்துகள்

பகுதி II

ஈ. ஓரிரு சொற்களில் விடையளிக்க. (ஏதேனும் ஐந்து வினாக்கள் மட்டும்)                      5x2=10

11. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

12. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?                         தமிழ்த்துகள்

13. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

14. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்? தமிழ்த்துகள்

15. பகத்சிங் கண்ட கனவு யாது?    

16. நாவல்மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது? தமிழ்த்துகள்

17. வட்டாரமொழி எனப்படுவது யாது?                 


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15

 8th tamil model notes of lesson

lesson plan september 15

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-09-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.


அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                                                 10 X 1 = 10

1. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் .........

அ.செல்க                .ஓடு                             .வாழ்க                          .வாழிய

2. முத்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................

அ.மூன்று + தமிழ்     ஆ.முத்து + தமிழ்               இ.மு + தமிழ்                     ஈ.முத் + தமிழ்

3. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

.விளக்கு             .கல்வி                         .விளையாட்டு                 .பாட்டு

4. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ................. தமிழ்த்துகள்

.பாரதிதாசன்        .தந்தை பெரியார்            .வ.உ.சிதம்பரனார்           .பெருஞ்சித்திரனார்

5. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

.சோம்பல்             .அகம்பாவம்                  .வருத்தம்                      .வெகுளி

6. உதடுகளைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் .....................

.,                    .,                          .,                             .,

7. புகழாலும் பழியாலும் அறியப்படுவது ............................. தமிழ்த்துகள்

. அடக்கமுடைமை . நாணுடைமை             .நடுவுநிலைமை             .பொருளுடைமை

8. அங்கண் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...........................................

அ.அம் + கண்          ஆ.அ + கண்                     இ.அங் + கண்                   ஈ.அங்கு + கண்

9. நோய்கள் பெருக மனிதன் ............................ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.

அ.வீட்டை              ஆ.உணவை                    இ.நாட்டை                        ஈ.இயற்கையை

10. மலர்களிலிருந்து வரும் ....................... வண்டுகளை ஈர்க்கும். தமிழ்த்துகள்

அ.மந்தம்                 ஆ.அந்தம்                        இ.சந்தம்                           ஈ.கந்தம்

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.                                                                                     5 X 1 = 5

11. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ............. என அழைக்கப்பட்டன.           தமிழ்த்துகள்

12. நெடுமை+தேர் - என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் .........

13. உலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது ......................... என்னும் அறிவுக்கலை.

14. வானமளந்தது - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

15. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ......................... இன்பம் ஆகும்.                      தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

இ.பொருத்துக.                                                                                                          5 X 1 = 5

16. க்,ங்            - நாவின் இடை, அண்ணத்தின் இடை

17. ச்,ஞ்           - நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

18. ட்,ண்          - கீழ் உதடும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால்                         தமிழ்த்துகள்

19. த்,ந்             - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

20. வ்               - நாவின் முதல், அண்ணத்தின் அடி


ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 15

9th tamil model notes of lesson

lesson plan september 15

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

15-09-2026 

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

 கனவிலும் கூட இன்னாதது எவர் நட்பு? தமிழ்த்துகள்

உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.       

 எனைத்தானும் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.          தமிழ்த்துகள்

. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

 அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. உலகில் மூவாயிரம் மொழிகள் .................................. (பேசு)

2. தவறுகளைத் ............................ (திருத்து)                                 தமிழ்த்துகள்

 பிழை நீக்கி எழுதுக.

அ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.   

ஆ. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

 படிப்போம்; பயன்படுத்துவோம்!.                    தமிழ்த்துகள்

Archaeology                                       

Hero Stone

 இடவாகுபெயர் – குறிப்பு தருக.          

 பொருள் எழுதித் தொடரமைக்க.     

           
அ.
குளவி, குழவி                                 

ஆ. பரவை, பறவை        தமிழ்த்துகள்

பரப்புமின் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.


வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக. தமிழ்த்துகள்


 பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

 

 புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.                            தமிழ்த்துகள்


 தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

 

 சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக. தமிழ்த்துகள்


 உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க

தமிழ்த்துகள்

Blog Archive