கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, May 31, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு 2022 பொதுத்தேர்வு வினாத்தாள் pdf 10th tamil govt public exam question paper

வாணிதாசன் ஆசிரியர் குறிப்பு - VANIDASAN

 



பெயர் - வாணிதாசன்

இயற்பெயர் - அரங்கசாமி என்ற எத்திராயலு

புனைப்பெயர் - ரமி

ஊர் வில்லியனூர் - புதுவை.

தந்தை அரங்க திருக்காமு

தாய் - துளசியம்மாள்

பிறந்த தேதி - 22 -07 -1915

மனைவி - ஆதிலட்சுமி.

பட்டங்கள் - கவிஞரேறு, பாவலர்மணி.

இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். 

அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. 

இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. 

உருசியம்ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

 இவர் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர்.

 'தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார். 

பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 


34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.


பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த 'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்னும் தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. 


பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர். 

"தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். 

எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். 

எனவே இவரை 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்' என்று பாராட்டுகின்றனர்.

கவிஞர் வாணிதாசன் எழுதிய நூல்கள்


  1. இரவு வரவில்லை
  2. இன்ப இலக்கியம்
  3. இனிக்கும் பாட்டு
  4. எழில் விருத்தம்
  5. எழிலோவியம்
  6. குழந்தை இலக்கியம்
  7. கொடி முல்லை
  8. சிரித்த நுணா
  9. தமிழச்சி
  10. தீர்த்த யாத்திரை
  11. தொடுவானம்
  12. பாட்டரங்கப் பாடல்கள்
  13. பாட்டு பிறக்குமடா
  14. பெரிய இடத்துச் செய்தி
  15. பொங்கற்பரிசு
  16. வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
  17. வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
  18. வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
  19. விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ

இறந்த தேதி - 07 -08 -1974

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகள் 10th tamil unit 5 book inside one word

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 பலவுள் தெரிக 1 மதிப்பெண் வினாக்கள் pdf 10th tamil unit 5 book inside one word questions

 பதிவிறக்கு/DOWNLOAD


விடைகள்/ANSWERS

Monday, May 30, 2022

பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆசிரியர் குறிப்பு - PALAI PADIYA PERUNKADUKO

 பாலை பாடிய பெருங்கடுங்கோ சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 

சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 58 உள்ளன. 

இவர் ஒரு சேர மன்னன்.

புகழூரிலுள்ள தமிழ்க் கல்வெட்டு அசோகன் காலத்தைச் சேர்ந்தது. 

இந்தக் கல்வெட்டில் இவனது தந்தைபெயர் கோ ஆதன் செல் இரும்பொறை. 

இவனது பெயர் பெருங்கடுங்கோ

இவனது மகன் பெயர் இளங்கடுங்கோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புலவர் அரசன் ஆதலால் செங்கோலாட்சி, கொடுங்கோலாட்சி போன்றவறை நயமான உவமைகளாகச் சுட்டியுள்ளார்.

கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு - KALYANJI



இயற்பெயர் - சி.கல்யாணசுந்தரம். 

 புனைப்பெயர்கள் 

வண்ணதாசன், கல்யாண்ஜி 

ஊர் திருநெல்வேலி 

பிறந்த தேதி 22-08-1946

தந்தை - இலக்கியவாதி தி. க. சிவசங்கரன்.

இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். 

நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன்,  

தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 

1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.

 இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 

2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.

சிறுகதைத் தொகுப்புகள் 

  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  3. சமவெளி
  4. பெயர் தெரியாமல் ஒரு பறவை
  5. மனுஷா மனுஷா
  6. கனிவு
  7. நடுகை
  8. உயரப் பறத்தல்
  9. கிருஷ்ணன் வைத்த வீடு
  10. ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  11. சில இறகுகள் சில பறவைகள்
  12. ஒரு சிறு இசை

புதினங்கள்

  1. சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்புகள்

  1. புலரி
  2. முன்பின்
  3. ஆதி
  4. அந்நியமற்ற நதி
  5. மணல் உள்ள ஆறு

கட்டுரைகள்

  1. அகம் புறம்

கடிதங்கள்

  1. வண்ணதாசன் கடிதங்கள்

மாங்குடி மருதனார் ஆசிரியர் குறிப்பு - MANGUDI MARUTHANAR

 மாங்குடிமருதனார் என்பவர்  சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர்.

 இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர்.

 மதுரைக்காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார்.

மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத் தலைவன் தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

இவனும் ஒரு புலவன். 

இவன் தனது பாடலில் புலவர்கள் தன் அவையில் மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்டு பாடியதைக் குறிப்பிட்டுள்ளான்.


மாங்குடி என்னும் ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ளது.

சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவர் மாங்குடி கிழார். 

இவர் மாங்குடி மருதனார் என்றும் சில பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்.

சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல்கள் 13 உள்ளன.
பாடல்கள்
அகநானூறு 89,
குறுந்தொகை 164, 173, 302,
நற்றிணை 120, 123,
புறநானூறு 24, 26, 313, 335, 372, 396
மதுரைக்காஞ்சி


ஆண்டாள் ஆசிரியர் குறிப்பு - ANDAL

 


ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். 

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.

 ஆண்டாள், திருப்பாவைநாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். 

வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. 

மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் 

என்னும் ஊரில் வசித்துவந்த  விஷ்ணுசித்தர்  (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள்.

 இவர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர்.

 தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையைத் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். 

ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. 

இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாகக் கருட சேவை அன்று நடைபெறுகிறது. 

ஆண்டாள் சூடிய மலர் மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். 

இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது.

மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு - PULAVAR KULANTHAI

 


பெயர் - புலவர் குழந்தை

ஊர் ஓலவலசு - ஈரோடு.

தந்தை முத்துசாமி

தாய் - சின்னம்மை

பிறந்த தேதி - 01 -07 -1906

மனைவி - முத்தம்மை.

மகள்கள் - சமத்துவம், சமரசம்.

இவரது நூல்கள் 2006 இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.

புலவர் குழந்தையின் செய்யுள் நூல்கள்

  • இராவணகாவியம்
  • அரசியலரங்கம்
  • காமஞ்சரி
  • நெருஞ்சிப்பழம்
  • உலகப் பெரியோன் கென்னடி
  • திருநணா சிலேடை வெண்பா
  • புலவர்குழந்தைப் பாடல்கள்
  • கன்னியம்மன் சிந்து
  • ஆடி வேட்டை
  • நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
  • வெள்ளகோவில் வீரகுமாரசாமிரத உற்சவச்சிந்து
  • வீரகுமாரசாமி காவடிச்சிந்து
  • வெள்ளகோவில் வழிநடைச்சிந்து

உரை நூல்கள்

  • திருக்குறள் குழந்தையுரை
  • தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை
  • நீதிக்களஞ்சியம்

இலக்கணம்

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்
  • இன்னூல்

உரை நடை நூல்கள்

  • தொல்காப்பியர் காலத்தமிழர்
  • திருக்குறளும் பரிமேலழகரும்
  • புவாமுல்லை
  • கொங்கு நாடு
  • தமிழக வரலாறு
  • தமிழ் வாழ்க
  • தீரன் சின்னமலை
  • கொங்குநாடும் தமிழும்
  • கொங்குகுலமணிகள்
  • அருந்தமிழ்விருந்து
  • அருந்தமிழ் அமிழ்து
  • சங்கத் தமிழ்ச் செல்வம்
  • ஒன்றேகுலம்
  • அண்ணல் காந்தி
  • தமிழ் எழுத்து சீர்திருத்தம்

இறந்த தேதி - 22 -09 -1972

காரியாசான் ஆசிரியர் குறிப்பு - KARIYASAN

 காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப் பாயிரம் கூறுகிறது.

 இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.

 இவரும் கணிமேதாவியாரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இவர், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார். 

அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துகளையும் சிறியளவில் சமண அறக்கருத்துகளையும் கூறியுள்ளார்.

இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. 

காரியாசனும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணவர்கள் ஆவர்.

தொல்காப்பியர் ஆசிரியர் குறிப்பு - THOLKAPPIYAR


தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். 

இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம். 

இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.

 கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது  மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.

வைரமுத்து ஆசிரியர் குறிப்பு - VAIRAMUTHU

 



பெயர் - வைரமுத்து

ஊர் வடுகபட்டி - தேனி மாவட்டம்.

தந்தை ராமசாமி

தாய் - அங்கம்மாள்

பிறந்த தேதி - 13 -07 -1953

மனைவி - பொன்மணி.

மகன்கள் - மதன் கார்க்கி, கபிலன்.

சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். 

நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். 

கவிதைத் தொகுப்புகள்

  • வைகறை மேகங்கள்
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • இன்னொரு தேசியகீதம்
  • எனது பழைய பனையோலைகள்
  • கவிராஜன் கதை
  • இரத்த தானம்
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • தமிழுக்கு நிறமுண்டு
  • பெய்யெனப் பெய்யும் ம‌ழை
  • "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்"
  • கொடி மரத்தின் வேர்கள்

தன்வரலாறு

  • இதுவரை நான்

கட்டுரைகள்

  • கல்வெட்டுக்கள்
  • என் ஜன்னலின் வழியே
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • வடுகபட்டி முதல் வால்கா வரை
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • தமிழாற்றுப்படை

புதினம்

  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • மீண்டும் என் தொட்டிலுக்கு
  • வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்)
  • சிகரங்களை நோக்கி
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • காவி நிறத்தில் ஒரு காதல்
  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம்
  • கருவாச்சி காவியம் 
  • மூன்றாம் உலகப்போர் 

ஒலி நாடாக்கள்

  • கவிதை கேளுங்கள்
  • தேன் வந்து பாயுது

விருதுகள்

  • கலைமாமணி விருது - 1990.
  • சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
  • பத்ம பூசன் விருது (2014)
  • சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).

விருது பெற்ற பாடல்கள்

  1. அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985.
  2. சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992.
  3. போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994
  4. முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999.
  5. நெஞ்சில் ஜில் ஜில் ஜில்  (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002.
  6. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே  (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று) - 2010.
  7. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016

சீத்தலைச் சாத்தனார் ஆசிரியர் குறிப்பு - Chithalai Chathanar

சீத்தலைச் சாத்தனார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர் ஆவார். 

மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர்.

இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்றும் தானிய வணிகம் செய்தவர் என்றும் இலக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன.

திருச்சியைச் சார்ந்த சீத்தலை என்ற ஊரில் பிறந்தவராக இருந்திருக்கக் கூடும்.


புத்த சமயக் கொள்கையைக் கொண்டிருந்த 'சாது' (சாத்து) என்பதாலோ 'சாத்து' என்கிற வணிக தலைவராக இருந்ததாலோ சாத்தன் என அழைக்கப்பட்டிருக்கிறார்.


சீத்தலைச் சாத்தன் என்கிற பெயரிலேயே மேலும் ஒரு சில புலவர்கள் இருந்ததனால் அவர்களிலிருந்து அடையாளம் பிரித்துக் காட்டுவதற்காக இவர் 'மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன்' என அழைக்கப்படுகிறார்.


இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். 

இவர் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியம் புத்த சமயக் கொள்கைப் பரப்பு நூலாகும்.

புத்த மதக் கருத்துகளை ஆழ்ந்த அனுபவ முறையில் மிக விரிவாக மணிமேகலையில் இவர் கூறியுள்ளார்.


சிலப்பதிகாரம் இயற்றிய சமணத் துறவி இளங்கோவடிகள் மணிமேகலை இயற்றிய சீத்தலைச் சாத்தனாரின் மிக நெருங்கிய நண்பராக இருந்ததாக அறியப்படுகிறது.


சீத்தலைச் சாத்தனார் 'நன்னூற் புலவன்', 'தண்டமிழ் ஆசான், சாத்தன்' என்று இளங்கோவடிகளால் போற்றப்படுகிறார்.

சேக்கிழார் ஆசிரியர் குறிப்பு - SEKKILAR


 பெயர் - சேக்கிழார்

இயற்பெயர் அருண்மொழித்தேவர்

ஊர் குன்றத்தூர் - தொண்டைநாடு

தந்தை வெள்ளியங்கிரி

தாய் - அழகாம்பிகை

காலம் - 12ஆம் நூற்றாண்டு

இயற்றியுள்ள நூல்கள்

  1. பெரியபுராணம்
  2. திருத்தொண்டர் புராண சாரம்
  3. திருப்பதிக் கோவை

இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவர். 

சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலைப் படிப்பதனால்,

 சோழனையும் மக்களையும்  நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து  மூன்று  நாயன்மார்களின்  வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.

பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுத்ததாக நம்பிக்கையுண்டு.

 சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் 

உத்தம சோழப் பல்லவன், 

தொண்டர் சீர் பரவுவார், 

தெய்வப்புலவர், 

தெய்வச்சேக்கிழார் 

போன்ற பட்டங்களைப் பெற்றவர்.


பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.

கவிஞர் தமிழ்ஒளி ஆசிரியர் குறிப்பு - KAVIGNAR TAMIL OLI


 




பெயர் தமிழ் ஒளி


இயற்பெயர் - விசயரங்கம்

ஊர் ஆடூர் - புதுவை

தந்தை சின்னையா

தாய் - செங்கேணி அம்மாள்

பிறந்த தேதி - 21 -09 -1924

புனைப்பெயர்கள் - 

விஜயன், சி.வி.ர.

பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்.

படைப்புகள்

  1. கவிஞனின் காதல் - 1947
  2. நிலை பெற்ற சிலை -1947
  3. வீராயி - 1947
  4. மே தின ரோசா -
  5. விதியோ வீணையோ -1961
  6. கண்ணப்பன் கிளிகள் - 1966
  7. புத்தர் பிறந்தார் (முற்றுப் பெறாத காவியம்)
  8. கோசலக் குமாரி - 1966
  9. மாதவிக் காவியம் - 1995
  10. சிலப்பதிகாரம் காவியமா நாடகமா
  11. திருக்குறளும் கடவுளும்
  12. தமிழர் சமுதாயம்

இறந்த தேதி - 29 -03 - 1965

ஈரோடு தமிழன்பன் ஆசிரியர் குறிப்பு - ERODE TAMILANBAN






இயற்பெயர்     ந.செகதீசன்

பிறப்பு    1933 செப்டம்பர் 28

பெற்றோர்    செ.இரா.நடராசன்- வள்ளியம்மாள்

ஊர்     சென்னிமலை

மாவட்டம்     ஈரோடு

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராகப் பணியாற்றியவர்.

வணக்கம் வள்ளுவ என்னும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருதை 2004 ஆம் ஆண்டில் பெற்றார்.


தமிழன்பன் கவிதைகள்  - தமிழக அரசின் பரிசுபெற்ற நூல்.


இவர் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள் - இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம்.


ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தந்துள்ளார்.

Monday, May 23, 2022

மாற்றுச் சான்றிதழ் அங்க அடையாளங்கள் EMIS T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARKS

EMIS T.C 

SOME COMMON PERSONAL IDENTIFICATION MARKS

மாற்றுச் சான்றிதழ் அங்க அடையாளங்கள்


1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம்

 A mole on the left palm


2.நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead


3.ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம்

 A mole on the index finger


4.இடது முட்டியில் ஒரு தழும்பு 

A scar on the left knee


5.வலது கணுக்காலில் ஒரு வடு

 A scar in the right ankle


6.வலது முழங்கையில் ஒரு வடு

 A scar in the right elbow


7.இடது கட்டை விரலில் ஒரு மச்சம்

 A mole on the left thumb


8.வலது தொடையில் ஒரு தழும்பு

 A scar on the right thigh


9.வலது கன்னத்தில் ஒரு மச்சம் 

 A mole On the right cheek 


10.இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் 

A mole on the left shoulder


11.வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு

 A scar on the right eyebrow


12.வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear


குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளவும்

Tnpsc exam தந்தை அறிவோம் know the fathers டிஎன்பிஎஸ்சி

TNPSC Material 

Tnpsc exam தந்தை அறிவோம் know the fathers


1..வரலாற்றின் தந்தை?


ஹெரடோடஸ்


2.. புவியலின் தந்தை?


தாலமி


3..இயற்பியலின் தந்தை?


நியூட்டன் 


4..வேதியியலின் தந்தை?


இராபர்ட் பாயில்


5..கணிப்பொறியின் தந்தை?


சார்லஸ் பேபேஜ்


6..தாவரவியலின் தந்தை?


தியோபிராச்டஸ்


7..விலங்கியலின் தந்தை?


அரிஸ்டாட்டில்


8..பொருளாதாரத்தின் தந்தை?


ஆடம் ஸ்மித்


9..சமூகவியலின் தந்தை?


அகஸ்டஸ் காம்தே


10..அரசியல் அறிவியலின் தந்தை?


அரிஸ்டாட்டில்


11..அரசியல் தத்துவத்தின் தந்தை?


பிளேட்டோ


12..மரபியலின் தந்தை?


கிரிகர் கோகன் மெண்டல்


13..நவீன மரபியலின் தந்தை?


T .H . மார்கன்


14..வகைப்பாட்டியலின் தந்தை?


கார்ல் லின்னேயஸ்


15..மருத்துவத்தின் தந்தை?


ஹிப்போகிறேட்டஸ்


16..ஹோமியோபதியின் தந்தை?


சாமுவேல் ஹானிமன்


17..ஆயுர்வேதத்தின் தந்தை?


தன்வந்திரி


18..சட்டத்துறையின் தந்தை?


ஜெராமி பென்தம்


19..ஜியோமிதியின் தந்தை?


யூக்லிட்


20..நோய் தடுப்பியலின் தந்தை?


எட்வர்ட் ஜென்னர்


21..தொல் உயரியியலின் தந்தை?


சார்லஸ் குவியர்


22..சுற்றுச் சூழலியலின் தந்தை?


எர்னஸ்ட் ஹேக்கல்


23..நுண் உயரியியலின் தந்தை?


ஆண்டன் வான் லூவன் ஹாக்


24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?


எர்னஸ்ட் ரூதர்போர்ட்


25..நவீன வேதியியலின் தந்தை?


லாவாயசியர்


26..நவீன இயற்பியலின் தந்தை?


ஐன்ஸ்டீன்


27..செல்போனின் தந்தை?


மார்டின் கூப்பர்


28..ரயில்வேயின் தந்தை?


ஜார்ஜ் ஸ்டீவன்சன்


29..தொலைபேசியின் தந்தை?


கிரகாம்ப்பெல்


30..நகைச்சுவையின் தந்தை?


அறிச்டோபேனஸ்


31..துப்பறியும் நாவல்களின் தந்தை?


எட்கர் ஆலன்போ


32..இந்திய சினிமாவின் தந்தை?


தாத்தா சாகேப் பால்கே


33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?


ஹோமி பாபா


34..இந்திய விண்வெளியின் தந்தை?


விக்ரம் சாராபாய்


35..இந்திய சிவில் விமானப்


போக்குவரத்தின் தந்தை?


டாட்டா


36..இந்திய ஏவுகணையின் தந்தை?


அப்துல் கலாம்


36..இந்திய வெண்மைப் புரட்சியின்


தந்தை?


வர்க்கீஸ் குரியன்


37..இந்திய பசுமைப் புரட்சியின்


தந்தை?


சுவாமிநாதன்


38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?


ஜேம்ஸ் வில்சன்


39..இந்திய திட்டவியலின் தந்தை?


விச்வேச்வரைய்யா


40..இந்திய புள்ளியியலின் தந்தை?


மகலனோபிஸ்


41..இந்திய தொழில்துறையின் தந்தை?


டாட்டா


42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?


தாதாபாய் நௌரோஜி


43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?


ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி


44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?


ராஜாராம் மோகன்ராய்


45..இந்திய கூட்டுறவின் தந்தை?


பிரடெரிக் நிக்கல்சன்


46..இந்திய ஓவியத்தின் தந்தை?


நந்தலால் போஸ்


47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?


ஜேம்ஸ் பிரின்சப்


48..இந்தியவியலின் தந்தை?


வில்லியம் ஜான்ஸ்


49..இந்திய பறவையியலின் தந்தை?


எ.ஒ.ஹியூம்


50..இந்திய உள்ளாட்சி அமைப்பின்


தந்தை?


ரிப்பன் பிரபு


51..இந்திய ரயில்வேயின் தந்தை?


டல்ஹௌசி பிரபு


52..இந்திய சர்க்கஸின் தந்தை?


கீலெரி குஞ்சிக் கண்ணன்


53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?


கே.எம் முன்ஷி


54..ஜனநாயகத்தின் தந்தை?


பெரிக்ளிஸ்


55..அட்சுக்கூடத்தின் தந்தை?


கூடன்பர்க்


56..சுற்றுலாவின் தந்தை?


தாமஸ் குக்


57..ஆசிய விளையாட்டின் தந்தை?


குருதத் சுவாதி


58..இன்டர்நெட்டின் தந்தை?


விண்டேன் சர்ப்


59..மின் அஞ்சலின் தந்தை?


ரே டொமில்சன்


60..அறுவை சிகிச்சையின் தந்தை?


சுஸ்ருதர்


61..தத்துவ சிந்தனையின் தந்தை?


சாக்ரடிஸ்


62..கணித அறிவியலின் தந்தை?


பிதாகரஸ்


63..மனோதத்துவத்தின் தந்தை?


சிக்மண்ட் பிரைடு


64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?


இராபர்ட் ஓவன்


65..குளோனிங்கின் தந்தை?


இயான் வில்முட்


66..பசுமைப்புரட்சியின் தந்தை?


நார்மன் போர்லாக்


67..உருது இலக்கியத்தின் தந்தை?


அமீர் குஸ்ரு


68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?


ஜியாப்ரி சாசர்


69..அறிவியல் நாவல்களின் தந்தை?


வெர்னே


70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின்


தந்தை?


அவினாசி மகாலிங்கம்

தமிழ்த்துகள்

Blog Archive