கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, April 24, 2023

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 9th social science tamil medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 9th social science English medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 8th social science English medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 8th social science tamil medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 7th social science tamil medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD 

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 7th social science English medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD 

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 6th social science English medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 6th social science tamil medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD 

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு விடைக்குறிப்பு 2023 pdf 10th tamil govt answer key

பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, April 19, 2023

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 9th science English medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

ஒன்பதாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 9th science tamil medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD 

ஏழாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 7th science tamil medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 6th science English medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD 

ஆறாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 6th science tamil medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 8th science English medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 8th science tamil medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD

Tuesday, April 18, 2023

ஆறாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 6th maths tamil medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 6th maths English medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 7th maths English medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் pdf 2023 விருதுநகர் மாவட்டம் 7th maths tamil medium third term SA question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 9th Maths tamil medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD

எட்டாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 8th Maths tamil medium annual exam question paper virudhunagar 2023

பதிவிறக்கு/DOWNLOAD

8th Maths English medium annual exam question paper virudhunagar pdf எட்டாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 2023

பதிவிறக்கு/DOWNLOAD

9th Maths English medium annual exam question paper virudhunagar pdf ஒன்பதாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 2023

பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, April 16, 2023

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 10th social science economics important two mark questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 10th social science economics important two mark questions 

பொருளியல்

1.நாட்டு வருமானம் - வரையறு.

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?

3. சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது ஏன்?

4.அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?

5.GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக.

6. வளர்வீத வரி என்றால் என்ன?

7. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையின் பெயர்களை எழுதுக. 

8.பசுமைப் புரட்சியின் விளைவுகளை எழுதுக.

9. கப்பலுக்கு வாயில் பற்றி விளக்குக.

10. SIPCOT பற்றி விளக்குக.

11. பண்டங்கள் மற்றும் பணிகள் வரிகள் பற்றி எழுதுக.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 10th social science civics important two mark questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 

10th social science civics important two mark questions 

1.இந்தியாவின் செம்மொழிகள் யாவை?

2. இந்தியாவின் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

3. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

4. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

5. அரசியலமைப்பு என்றால் என்ன?

6. பஞ்சசீலக் கொள்கை ஏதேனும் நான்கினைக் கூறுக.

7. தேசிய அவசர நிலை என்றால் என்ன?

8. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக. 

9.ஏதேனும் இரு அடிப்படை உரிமைகள் எழுதுக.

10. உலகப் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் நிலை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

11. நிதி மசோதா பற்றிக் குறிப்பு வரைக.

12.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 10th social science geography important two mark questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 

1.இந்தியாவின் திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறுக. 

2."ஜெட் காற்றோட்டங்கள்" என்றால் என்ன?

3.தமிழ்நாட்டின் முக்கியத் தீவுகளைக் குறிப்பிடுக.

4.பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? 

5.தக்காண பீடபூமி - குறிப்பு வரைக. 

6. "பருவமழை வெடிப்பு" என்றால் என்ன?

7.தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

8.தமிழ்நாட்டின் வேளாண் பருவகாலங்களை எழுதுக. 

9.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக. 

10. காலநிலையைப் பாதிக்கும் காரணிகளைப் பட்டியலிடுக.

11. வேளாண்மை வரையறு.

12. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்கு திட்டத்தின் பெயர்களை எழுதுக. 

13. இந்தியாவில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் யாவை?

14. இந்தியாவின் முக்கிய உயிர்க் கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்து எழுதுக.

15. நவீன நீர்ப்பாசன முறைகள் யாவை?

16.மெக்னீசியத்தின் பயன்கள் யாவை?

17. பறக்கும் தொடருந்து திட்டம் பற்றி கூறுக.

18. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

19. இயற்கை எரிவாயு என்றால் என்ன?

20. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது?

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் 10th social science history important 2 mark questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்


1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

2. மூன்றாம் உலக நாடுகள் பற்றி எழுதுக.

3.களக்காடு போரின் முக்கியத்துவம் யாவை? 

4.ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.


5.திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக. 

6.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

7. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

8. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

9. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன? 

10.பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

11. பதுங்கு குழிப்போர் பற்றி எழுதுக.

12.சுவாமி விவேகானந்தரின் செயல்பாட்டாளர் சித்தாந்தத்தின் தாக்கமென்ன?

13. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன? 

14. திருப்பூர் குமரன் வீரமரணம் பற்றிக் கூறுக.

15.தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திதாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக. 

16. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?

17.இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்துக் குறிப்பு வரைக.

18. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

19. பகத்சிங் பற்றி எழுதுக.

20. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறு குறிப்பு வரைக.

21. பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான காரணங்கள் யாவை?

22. லேட்டரன் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை? 

23. 1801 கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

24. சம்பரான் சத்தியாகிரகம் பற்றி நீவீர் அறிவது யாது?

25. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்கள் யாவை?

26. ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் ஏன் திரும்பப் பெற்றார்?

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் உள்ளே இருந்து வரும் முக்கிய வினாக்கள் 10th social science book inside important questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 
புத்தகத்தின் உள்ளே இருந்து வரும் முக்கிய வினாக்கள்:


முதல் உலகப்போரின் விளைவுகள் யாவை? 

அணிசேரா இயக்கம் பற்றி விரிவாக எழுதுக.

சிவகங்கை சீமை வேலுநாச்சியார் பற்றி விவரி.

பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவு பற்றி விவரி. 

வங்காளத்தில் தொடக்க கால சீர்திருத்த இயக்கத்தில் ராஜாராம் மோகன் ராயின் பங்கை விவரி.

மருது சகோதரர்களின் கலகம் பற்றி விவரி, 

வேலூர் புரட்சியில் இந்திய வீரர்களின் மனக்குறை பற்றி விவரி. 

இந்திய தேசிய காங்கிரசின் சில முக்கியக் கோரிக்கைகள் பற்றி விவரி.

காந்தியடிகளும் மக்கள் தேசியமும் பற்றி விவரி.

ரௌலட் சத்தியாகிரகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரி,

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் பற்றி விவரி.

சுயமரியாதை இயக்கம் பற்றி விவரி.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் 10th social science important five mark questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் 
முக்கிய ஐந்து மதிப்பெண்கள்

வரலாறு 

இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.

தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர் கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும். 

ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க, 

சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி,


பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?


காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமாக சட்ட மறுப்பு இயக்கம் குறித்து விரிவாக எழுதவும்.

நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.

 கட்டபொம்மன் வீரதீரப்போர் பற்றி விவரி.

இந்திய சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.

19-ம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெற இட்டுச்சென்ற சூழ்நிலைகள் யாவை?

தமிழ்நாட்டு சமூக மாற்றத்தில் தந்தை பெரியார் பங்கு பற்றி விவரி.

புவியியல்


இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

 இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி,

நகரமயமாக்கம் என்றால் என்ன? அதன் தாக்கங்களை விளக்குக. 

இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.

ஏதேனும் இரண்டு இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள் பற்றி எழுதுக.

காவிரி ஆறு குறித்துத் தொகுத்து எழுதுக.

கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கான சூழ்நிலைகளை விவரி. 


புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய தேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக. 

இந்திய தொழிலகங்கள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் யாவை?

குடிமையியல்

அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் யாவை?

அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.

இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற நீதிமன்ற அதிகாரங்களை விவரி. 

அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.

பொருளியல்

உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.

சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.

GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி. 

வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் யாவை?

நாட்டு வருமானத்தைக் கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி. 

பசுமைப்புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.

பொது விநியோக முறை பற்றி விவரி.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் முக்கிய கட்டாய வினாக்கள் 10th social science geography important compulsory questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் முக்கிய கட்டாய வினாக்கள்

இந்தியாவின் அட்சரேகை தீர்க்க ரேகை பரவல் பற்றி எழுதுக.

இந்தியாவின் இயற்கை அமைப்பின் ஐந்து பெரும் பிரிவுகளை விவரி.

 இமயமலையில் உள்ள முக்கிய கணவாய்கள் யாவை? 

புலிகள் பாதுகாப்பு திட்டம் பற்றிக் கூறுக.

நில வரைபட உதவியுடன் தமிழக கடலோர மாவட்டங்களை எழுதுக.

 தமிழ்நாட்டில் மிதமான அதிகமான மழை பெறும் மாவட்டங்களை எழுதுக. 

சதுப்பு நிலக் காடுகள் பற்றி எழுதுக.

இமயமலை பல சிகரங்களின் இருப்பிடம் பற்றி எழுதுக. 

தீபகற்ப ஆறுகள் பற்றி எழுதுக.

இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் யாவை?

சமச்சீர் காலநிலை என்றால் என்ன?

இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் யாவை? 

மண்வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மேலாண்மை பற்றி எழுதுக.

பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKY) பற்றிக் கூறுக. 

இந்தியாவில் உள்ள பல்வேறு இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்கள் யாவை?

தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் யாவை? 

கெயில் (GAIL) பற்றி எழுதுக.

தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIEW) பற்றி எழுதுக.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிக் கூறுக.

மக்கள் தொகை சீரற்று இருப்பதற்கான காரணங்கள் யாவை? 

ஷெர்ஷா சூரியின் ராயல் சாலை பற்றி எழுதுக.

செய்தித்தாள் ஊடகம் பற்றி கூறுக.

மலைகளின் உயரம் கடல் மட்டத்திலிருந்து அளக்கப்படுவது ஏன்?

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

கடல் பாதுகாப்பு மேலாண்மை பற்றி எழுதுக.

நீர் சேகரிப்பதற்கான வழிமுறைகளை எழுதுக. 

தமிழ்நாட்டின் வேளாண்மை முறைகள் யாவை?

வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள் யாவை?

இரண்டாவது பசுமைப் புரட்சி ( இயற்கை வேளாண்மை) பற்றிக் கூறுக. 

இயற்கை கரிம வேளாண்மைத் திட்டம் பற்றிக் கூறுக.

டான் டீ (TAN TEA) பற்றிக் கூறுக.

புவியியல் குறியீடு பற்றி (GI TAG) எழுதுக.

தமிழ்நாட்டின் முக்கிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் யாவை?


 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ( TANU ) பற்றிக் கூறுக.

தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் யாவை? 

இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்கள் யாவை?

Wednesday, April 12, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 6th tamil exam answer key virudhunagar district term 3

 

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்

தொகுத்தறித் தேர்வு 2023

ஆறாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி 1

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                         10X1=10

1. ஆ.மதுரை

2. இ.சுறுசுறுப்பு

3. அ.குழந்தைகளைப் பாதுகாப்போம்

4. இ.இன்னுயிர்

5. ஈகை

6. நான்கு

7. ஜி.யு.போப்

8. பசிப்பிணி போக்கியவர்

9. பாரதியார்

10. நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

 

 

பகுதி 2

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

11. 1.திருவள்ளுவர்

       2.காளிதாசர்

       3.கம்பர்

 

12. அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால்

       போதும்.

         இன்பநிலை தானே வந்து சேரும்.

 

 

13.     இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும்.

         மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

 

 

14.     ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

 

 

15.     சொற்களின் வகைகள் –

1.        பெயர்ச்சொல்,

2.       வினைச்சொல்,

3.       இடைச்சொல்,

4.       உரிச்சொல்.

 

 

16. கோ என்றால் பசு.

முகி என்றால் முகம்.

பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் பொய்கை கோமுகி என்ற பெயர் பெற்றது.

 

17. மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

 

 

3 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              3X4=12

 

18. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

19. சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி

       வாழ வழிகாண வேண்டும்.

         சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

 

20. தீய செயல்களைச் செய்யாதீர்கள்.

பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.

இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள்.

இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

 

 

21. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

22. தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.

          ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

          திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.

          சென்னை இலக்கியமாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார்.

          உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள், இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று கூறினார்.

 

 

23. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

பகுதி 4

அடிபிறழாமல் எழுது

 

24. பராபரக்கண்ணி                                                                     4

தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!

-        தாயுமானவர்

 

25. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்                                     2

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

 

பகுதி 4

 

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

26.அ.கருணை

ஆ.இலக்கியம்

 

27.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

28.அ. புத்தகம் – பொருட்பெயர்.

 

ஆ. விடியல் – காலப்பெயர்.

 

29.அ. பயம்

ஆ. விருப்பம்

 

 

30.அ.அஃது

 

ஆ.அது

 

31. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

32. மற்று

 

 

 

பகுதி 5

ஏதேனும் 1                                 1X6=6

33, 34

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 6

ஏதேனும் 1                                 1X6=6

35, 36

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 7th tamil exam answer key virudhunagar district term 3

 

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்

தொகுத்தறித் தேர்வு 2023

பருவம் 3

ஏழாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி 1

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                         10X1=10

1.இ.ஒப்புரவு

2.ஈ.தாமிரபரணி

3.ஆ.எளிமை

4.இ.நாடு+என்ப

5.புடவை

6.கருணை

7.உலகம்

8.நெய்

9.குற்றாலம்

10.பாய்ச்சுதல்

 

பகுதி 2

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

11.அங்கவை, சங்கவை

 

12. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள்

பச்சையாறு

மணிமுத்தாறு

சிற்றாறு

காரையாறு

சேர்வலாறு

கடனாநதி

 

13. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனி பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி எனப்படும்.

எடுத்துக்காட்டு – கலகல.

 

14. காக்கைக் குஞ்சு என்று எண்ணியிருந்த காக்கைக்கு அன்றைக்கு தான் அது குயில் குஞ்சு என்று தெரிந்தது.

எனவே காக்கை குயில் குஞ்சை போகச் சொன்னது.

 

15. பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

 

16. உவமை வேறு உவமைக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.

இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.

எடுத்துக்காட்டு - தமிழ்த் தேன்

 

17. பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு என வள்ளுவர் கூறுகிறார்.

 

3 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              3X4=12

 

18. சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.

இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கு உரியது.

அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.

அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது என்கிறது இயேசு காவியம்.

 

 

19. இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

சிலர் பழமை வாய்ந்த மொழியை ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர் வேறு சிலர்.

ஆனால் அந்த தலைவர் பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்றால் அது தமிழ் மொழி தான் என்று காயிதே மில்லத் உறுதியாகச் சொன்னார்.

இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் திராவிட மொழிகள் தான் இந்த மண்ணிலே முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள்.

அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப் பழமையான மொழி.

எனவே தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்.

 

20. இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தராது.

அடுக்குத்தொடர் பிரித்தால் பொருள் தரும்.

இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரு முறை மட்டுமே வரும்.

அடுக்குத்தொடரில் ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும்.

இரட்டைக்கிளவியில் சொற்கள் இணைந்து நிற்கும்.

அடுக்குத்தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்.

இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளில் வரும்.

அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் காரணமாக வரும்.

 

21. மனிதர்களே விதைக்கவும் களை எடுக்கவும் அறுவடை செய்யவும் பயன்படுத்தப்பட்டனர் அன்று.

உழவு மாடுகள் செய்த வேலையை இன்று எந்திரங்கள் செய்கின்றன.

கமலை பூட்டி நீர் இறைத்தல்,  ஏற்றம் மூலம் இறைத்தல் என்ற நிலை மாறி மின்விசை மூலம் நீர் இறைக்கும் எந்திரங்கள் அப்பணியைச் செய்கின்றன.

மிகப்பெரிய அணைக்கட்டுகள் கட்டி அதில் வாய்க்கால்கள் அமைத்து பாசன முறை மேற்கொள்ளப்படுகிறது இன்று.

 

 

22. உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

 

 

 

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

23.அ.செல்வம்

ஆ.கவிஞர்

 

24.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

25.அ. தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.

 

ஆ. மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

 

26.அ. செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.

ஆ. பட்டு, கோட்டை, கோடை, கோடு, படு, படை, பட்டை.

 

 

27.அ.உள்ளங்கை நெல்லிக்கனி போல

 

ஆ.குன்றின் மேலிட்ட விளக்கு போல

 

28.அ.எத்தனை

ஆ.என்ன

 

29. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 4

அடிபிறழாமல் எழுது

 

30. புதுமை விளக்கு                                                                    4

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச்- செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று.

-        பொய்கையாழ்வார்

 

 

31. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்                                             2

சேராது இயல்வது நாடு.

 

 

பகுதி 5

ஏதேனும் 1                                 1X6=6

32, 33

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 6

ஏதேனும் 1                                 1X6=6

34, 35

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

9th English annual exam question paper virudhunagar pdf ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 2023

பதிவிறக்கு/DOWNLOAD

8th English annual exam question paper virudhunagar pdf எட்டாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 2023

பதிவிறக்கு/DOWNLOAD

7th English third term exam question paper virudhunagar pdf summative assessment ஏழாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் பருவ தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் விருதுநகர்

பதிவிறக்கு/DOWNLOAD

6th English third term exam question paper virudhunagar pdf summative assessment ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் பருவ தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் விருதுநகர்

பதிவிறக்கு/DOWNLOAD

Tuesday, April 11, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 9th tamil annual exam answer key virudhunagar district

 

விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வு 2023

முழு ஆண்டுத் தேர்வு

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி 1

சரியான விடை –                       15 X 1 = 15

1.        ஈ. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

2.       அ. பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

3.       ஆ. ஊரகத் திறனறித் தேர்வு

4.       அ. ஆராயாமை, ஐயப்படுதல்

5.       ஆ. வந்துவிட்டான், வரவில்லை

6.       ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

7.       ஈ. தொகைச்சொற்கள்

8.       இ. என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

9.       , இ. மோகன்சிங், ஜப்பானியர்

10.      இ.திருக்குறள்

11.      ஆ.பொருள் பின்வருநிலையணி

12.     அ.இராவண காவியம்

13.     ஆ.புலவர் குழந்தை

14.     ஆ.பெயரெச்சம்

15.     இ.துன்புறுதல்

 

பகுதி 2

பிரிவு 1

எவையேனும் நான்கு வினாக்கள்                  4 X 2 = 8

21 – கட்டாய வினா

 

16.     ஆறு, ஏரி, கிணறு, கண்மாய்.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

17. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ.மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் எவை?

ஆ.தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்த முறை எவ்வாறு அமைந்தது?

 

18. சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் , இறக்கும் வரை உள்ள நோய் ஆகும்.

 

19. இடம் :

மணிமேகலையின் விழாவறை காதையில் முரசு அறைந்தவன் கூறியது.      

பொருள் : 

பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்.   

விளக்கம் :

இந்திர விழாவிற்காக புகார் நகரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று முரசு அறைந்தவன் தெரிவித்தான்.

 

20. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஏன்?, எதற்கு?, எப்படி? என்னும் வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது பகுத்தறிவு எனப்படும்.

 

கட்டாய வினா

21. அன்புநாண்   ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

 

பிரிவு 2

எவையேனும் 5 மட்டும்              5 X 2 = 10

22. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

23. வளர்ப்பாய்

வளர்+ப்+ப்+ஆய்

வளர் – பகுதி

ப் – சந்தி

ப் – எதிர்கால இடைநிலை

ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

 

24. வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்.

கிளியே பேசு – விளித்தொடர்.

 

25.அ.சொற்றொடர்

ஆ.எழுத்துரு

 

26. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

27. அ.மதில்

ஆ.துன்பம்

 

28. அ. “நாளை வீட்டுக்கு வருவேன்,” என்று முரளி கூறினார்.

ஆ. தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்வதாக ஆசிரியர் கூறினார்.

 

பகுதி 3

 

பிரிவு 1

எவையேனும் 2 மட்டும்                       2 X 3 = 6

29. உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் ஆகும்.

          உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் ஆகும்.

 

30. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

31. அ.மலேயா, ஜப்பானியர்

ஆ.இந்திய தேசிய இராணுவம்

இ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பிரிவு 2

எவையேனும் 2 மட்டும்                       2 X 3 = 6

 

34 – கட்டாய வினா

 

32. o  ஆடும் இளம் பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.

o        மதுரையை ஆளும் மன்னனாம் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.

o        மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளை உடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.

o        அத்தை மகனும் மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

o        இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

 

 

33. o  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "ஓ, என் சமகாலத் தோழர்களே!" என்னும் கவிதையில் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

o        அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் என்கிறார்.

o        பண்டைத்தமிழரின் பெருமைகளை எல்லாம் கண்ணுக்குள்ளே பொருத்தக் கூறுகிறார்.

o        எடுப்பார் கைப்பிள்ளையாக இராமல் ஏவுகணை செலுத்துவதிலும் திறமை பெற்று இனிக் காணும் கோள்களில் கூட தமிழ் வாழ வழிவகை செய்யுங்கள் என்கிறார்.

o        கட்டுப்பாட்டை மறக்காமல் பொறுமையைக் கடைபிடிக்கக் கூறுகிறார்.

o        கூட்டுப்புழு தான் நாளை பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறக்க வேண்டாம் என்கிறார்.

 

கட்டாய வினா

34. அ. முத்தொள்ளாயிரம்

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

 

அல்லது

 

ஆ. பெரிய புராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்  குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை  வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்  குளமெல்லாம்  கடல் அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்                            -  சேக்கிழார்

 

 

பிரிவு 3

எவையேனும் 2 மட்டும்                       2 X 3 = 6

 

35.

o        வல்லினம் இட வேண்டிய இடத்தில் இடாமல் எழுதுவதும் இட அவசியம் இல்லாத இடத்தில் இடுவதும் பொருள் வேறுபாட்டைத் தரும்.

o        கைதட்டு      -        இதில் வல்லினம் மிகாது (இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது)

o        கைத்தட்டு   -        சிறிய தட்டு  எனப்பொருள் வேறுபடுவதை அறியலாம்.

o        வாழ்த்துகள்  -        பாராட்டுகள் எனப்பொருள்படும்.

o        வாழ்த்துக்'கள்' - வல்லினம் மிக எழுதினால் வாழ்த்துவதற்காக வழங்கப்பட்ட கள் எனப் பொருள் வேறுபடும்.

o        மருந்துக்கடை - மருந்து விற்பனை செய்யும் கடை எனப் பொருள்படும்.

o        மருந்து கடை - வல்லினம் சேர்க்காமல் எழுதினால் 'மருந்தைக் கடை' என்று பொருள் வேறுபடும்.

 

 

36. ஆற்-றுவார்              நேர் நிரை              கூவிளம்

ஆற்-றல்                         நேர் நேர்                தேமா

பணி-தல்                         நிரை நேர்              புளிமா

அது-சான்-றோர்             நிரை நேர் நேர்       புளிமாங்காய்

மாற்-றா-ரை                    நேர் நேர் நேர்         தேமாங்காய்

மாற்-றும்                         நேர் நேர்                தேமா

படை                              நிரை                     மலர்

 

37. அணி –

உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவகஅணி ஆகும்.

எ.கா – இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

                வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

                அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்...

விளக்கம் –

இப்பாடலில் இன்சொல் நிலமாகவும் வன்சொல் களையாகவும் வாய்மை எருவாகவும் அன்பு நீராகவும் அறம் கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

 

பகுதி 4                                    

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 5 X 5 = 25

         

38.அ. o        அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு அப்பெருமரத்துடன் போட்டி போடுவதே வாழ்க்கைப்போர்.

o        வாழ்க்கை உறுதிபெற வேண்டுமென்றால் போட்டியிட்டு, போரிட்டே ஆக வேண்டும்.

o        பெருமரத்துடன் முட்டி மோதி மேலே செல்லும் துணிச்சலே இன்பம்.

o        முயற்சி உள்ளனவே வாழ்வில் மலர்ச்சி பெறும்.

o        நம்பிக்கை, தன்முனைப்போடு கூடிய போட்டியில் கமுகு வென்றது என வெற்றிபெறுவதற்கான வழிகளை ஆசிரியர் கூறுகிறார்.

 

ஆ. o  இன்றைய கணினிக் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் படித்தவராக இருந்தால் மட்டுமே தம் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

o        வானூர்தியைச் செலுத்தல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை என்கிறார் பாரதிதாசன்.

o        அதனை உண்மை என்று சொல்லும் நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது.

o        குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் விமானப்படை விமானத்தை இந்தியாவின் முதல் பெண் விமானப்படை விமானி அவனி சதுர்வேதி என்பவர் ஓட்டிச் சாதனை படைத்துள்ளார்.

o        "உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல் அன்றோ?", என்று கேள்வி கேட்கிறார் பெண்ணினத்தைப் பார்த்து.

o        ஆண் பெண் இருவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

o        இயற்கை வாழ்வை மறந்துவிட்டு மக்கள் செயற்கையாக வேதிப்பொருட்கள் கலந்த பொடிகளை உணவில் சுவை ஊட்டுவதற்காகச் சேர்ப்பது மாற வேண்டும்.

o        சிறுதானிய உணவுகள், காய்கறிகள், கீரைகள் சமைக்கும் விதம் அறிந்து தம்மக்களை வளர்க்க வேண்டும்.

 

39. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ. தலைப்பு

அனுப்புநர்

பெறுநர்

விளி

பொருள்

இப்படிக்கு

இடம், நாள்

உறைமேல் முகவரி

 

 

ஆ. தலைப்பு

முகவரி, நாள்

விளி

பொருள்

இப்படிக்கு

உறைமேல்முகவரி

 

40. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

41. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

42.அ. ஒரு முறை புத்தரும் அவருடைய சீடர்களும் தாகத்தில் இருந்தபோது அவர்கள் ஓர் ஏரிக்கரையை அடைந்தார்கள். அப்போதுதான் யாரோ ஒருவர் தன் ஆடைகளை அலசி இருந்ததால் ஏரி கலங்கியிருந்தது. எனவே தன் சீடர்களை அருகில் இருந்த மரத்தடியில் சிறிது ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த அரை மணி நேரத்தில் தண்ணீர் தெளிவானதைக் கண்டனர் சீடர்கள். தண்ணீரில் கலந்த களிமண் அடியில் தங்கும் வரை நீங்கள் காத்திருந்தீர்கள். அதுபோலவே தான் நம் மனமும். மனம் கலங்கும் போது அதனை தொந்தரவு செய்யாமல் சற்று ஓய்வெடுக்க விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். மீண்டும் தன் நிலைக்கு மனம் திரும்பும். நம் வாழ்வின் மிகச்சிறந்த முடிவுகளெல்லாம் அமைதியான மனது எடுத்த முடிவுகளே!

 

ஆ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

பகுதி 5

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 3 X 8 = 24

 

43. அ. அல்லது ஆ

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

44. அ. அல்லது ஆ

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

45. அ. அல்லது ஆ

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive