கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 30, 2022

மாநிலக் கற்றல் விளைவுகள் பத்தாம் வகுப்பு தமிழ் 10th tamil learning outcomes LO

மாநிலக் கற்றல் விளைவுகள் ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9th tamil learning outcomes LO

அறிவை விரிவு செய் வகுப்பு 11 தமிழ் நூலும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 11TH TAMIL BOOKS & AUTHORS

அறிவை விரிவு செய் வகுப்பு 11 தமிழ் நூலும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 11TH TAMIL BOOK AND AUTHORS LIST PDF


 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் மாதிரி வினாத்தாள் மார்ச் 2022 tenth social science II revision exam model question paper

10th social science II revision exam model question paper english medium பத்தாம் வகுப்பு சமூகஅறிவியல் ஆங்கில வழி மாதிரி வினாத்தாள் மார்ச் 2022

Tuesday, March 29, 2022

அறிவை விரிவு செய் வகுப்பு 10 தமிழ் நூலும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 10TH TAMIL BOOKS & AUTHORS

அறிவை விரிவு செய் வகுப்பு 10 தமிழ் நூலும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 10TH TAMIL BOOK AND AUTHORS LIST PDF

 

பதிவிறக்கு/DOWNLOAD

முக்கிய தினங்கள் போட்டித் தேர்வர் தெரிந்துகொள்ள வேண்டிய நாள்கள் TNPSC IMPORTANT DAYS FOR TNPSC EXAM

TNPSC GROUP IV IMPORTANT NOTES MATERIAL 

January 01 : Global family day.
January 09 : NRI Day.
January 10 : World laughter day.
January 12: National Youth Day.
January 15 :Army Day.
January 23: Netaji Subhash Chandra bose birthday
January 26 : India's Republic Day
January 26 : International Customs day.
January 28 : Lala lajpat rai birthday
January 28 : Data protection day
January 30 : Martyrs' Day
January 30 : World leprosy eradication day
February 04 : World Cancer day
February 06 : International day against female genital mutilation
February 12 : Darwin day
February 12 : World day of the sick.
February 13 : Sarojini Naydu's birthday
February 14 : Valentine’s day
February 20 : World day of social justice
February 21 : International mother language day
February 22 : World scout day
February 23 : World peace and understanding day
February 24 : Central Excise Day.
February 28 : National Science Day.
Also check out: list of All Countries, their Capital and Currency
March 4 : World day of fight against sexual exploitation, National Security day.
March 8 : International Women's Day
March 13 : World kidney day
March 15 :World Disabled Day
March 15 : World consumer right day.
March 20 : World day of theatre for children and young people.
March 20 : International day for Francophonie
March 20 : World Sleep day
March 21 : World Forestry Day.
March 21 :International Day for the Elimination of Racial Discrimination.
March 22 : World water day
March 23 :World Meteorological Day.
March 24 : World T.B. day
March 24 : International day for achievers
March 25 : International day of remembrance-victims of slavery and transatlantic slave trade
March 27 : World Drama day
April 2 : World autism day
April 5 : National Maritime Day.
April 7 :World Health Day.
April 17 : World haemophilia day
April 18 :World Heritage Day.
April 22 :Earth Day.
April 23 : World book and copyright day
April 25 : World Malaria day
April 29 : International Dance day
May 1 : International Labour Day (Workers Day)
May 3 :Press Freedom Day.
May 4 : Coal miner’s day
May (2nd Sunday) : Mother's Day
May 8 :World Red Cross Day.
May 9 : Victory day
May 11 : National Technology Day.
May 12 : International Nurses day
May 14 : World Migratory day
May 15 : International Day of the Family.
May 17 :World Telecommunication Day (Information society day)
May 21 : Anti-terrorism day
May 24 :Commonwealth Day.
May 31 :Anti-Tobacco Day.
June 4 :International Day of Innocent Children Victims of Aggression.
June 5 : World Environment Day.
June 7 : International level crossing awareness day
June 8 : World ocean day
June 12 : World day against child labour
June(2nd Sunday) : Father’s Day.
June 14 : World blood donor day
June 17 : World day to combat desertification and drought
June 20 : World Refugee day.
June 21 : Father's day, World Music day.
June 23 : United Nation’s public service day
June 23 : International Widow’s day
June 26 : International day against Drug abuse & Illicit Trafficking.
June 27 : World Diabetes Day.
July 1 : National Doctor’s day.
July 6 :World Zoonosis Day.
July 11 : World Population Day.
July 12 : World Malala day
July 18 : Nelson Mendela International day
July 28 : World Nature conservation day
August 2 : International Friendship Day.
August 3 : Independence day of Niger
August 5 : Independence day of upper volta
August 6 :Hiroshima Day
August 9 : International day of World’s indigenous people
August 9 :Quit India Day and Nagasaki Day.
August 12 : International Youth day
August 15 : Independence Day of India
August 23 : International day for the remembrance of the slave trade and its abolition
August 29 : National Sports Day.
September 5 : Teachers' Day (Dr. Radhakrishnan’s birthday)
September 5 : Forgiveness day
September 8 :World Literacy Day.
September 14 : Hindi day, World first aid day
September 16 :World Ozone Day. Engineer's day in India
September 21 :Alzheimer's Day, International day of peace
September 25 : Social justice day
September 26 : Day of the Deaf.
September 27 : World Tourism Day.
October 1 : International day of the Older person
October 2 : Mahatma Gandhi birthday, International day of non-violence
October 3 :World Habitat Day, World nature day
October 4 :World Animal Welfare Day.
October 5 : World Teacher’s day.
October 8 : Indian Air Force Day.
October 9 : World Post Office day.
October 10 : National Post Day.
October 11 : International girl child day
October 12 : World Arthritis day.
October 13 :UN International Day for National disaster reduction.
October 14 :World Standards Day.
October 15 : World White Cane Day( guiding the Blind)
October 16 : World Food Day.
October 17 : International day for the eradication of poverty.
October 20 : World statistics day
October 24 : UN Day, World development information Day.
October 30 :World Thrift Day.
November 1 : World vegan day
November 5 : World Radiography day.
November 9 : World services day
November 14 : Children's Day in India, Jawaharlal Nehru birthday
November 16 : International day for Endurance
November 17 : World Student day, National Journalism day
November 18 : World Adult day.
November 19 : World Citizen day.
November 20 : Africa Industrialization Day, Universal children day.
November 21 : World Television day, World Fisheries day.
November 25 : World Non-veg day.
November 26 : Law day
November 29 : International Day of Solidarity with Palestinian People.
November 30 : Flag day.
December 1 : World Aids Day.
December 2 : World Computer literacy day, International day of abolition of slavery
December 3 : International day of People with disabilities, World conservation day
December 4 : Navy Day.
December 5 : International volunteer day for economic and social development.
December 7 :Armed Forces Flag Day, International civil aviation day.
December 9 : The International day against corruption.
December 10 :Human Right Day.
December 11 : International Mountain day.
December 14 : International Energy day.
December 18 : International Migrants day.
December 19 : Goa’s liberation day.
December 20 : International Human solidarity.
December 23 :Kisan Divas Farmer's Day).
December 29 : International Bio-diversity day

12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு 12th Tamil second Revision test Answer key - March 2022

12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு மார்ச் 2022

12th Tamil second Revision test Answer key - March 2022

மொழிப்பாடம் - பகுதி 1 - தமிழ்

கால அளவு : 3.00 மணி நேரம் ] 

[ மதிப்பெண்கள் : 90

அறிவுரைகள் :

(1)அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.. அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும். குறிப்பு : விடைகள் தெளிவாகவும், குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.

1.சுரதா நடத்திய கவிதை இதழ் :

(அ) இலக்கியம்

(ஆ) காவியம்

(இ) ஊர்வலம்

(ஈ) விண்மீன்

விடை : ஆ) காவியம்

2.  ‘குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் ?

(அ) இலக்கியம் 

(ஆ) கணிதம் 

(இ) புவியியல்

(ஈ) வேளாண்மை

விடை : (ஆ) கணிதம்

3.திருவருட்பாவை இயற்றியவர்

(அ) திருஞான சம்பந்தர் 

(ஆ) திருநாவுக்கரசர் 

(இ) சுந்தரர் 

(ஈ) இராமலிங்க அடிகள் 

விடை : (ஈ) இராமலிங்க அடிகள்

4.'மாமயிலை - இலக்கணக் குறிப்புத் தருக.

(அ) உரிச்சொற்றொடர் 

(ஆ) பண்புத்தொகை 

(இ) வினைத்தொகை 

(ஈ) இலக்கணப்போலி

விடை : அ) உரிச்சொற்றொடர்

5. தலைக்கோல் - புணர்ச்சி விதியை தேர்ந்தெடுக்கவும்ன 

(அ) இஈஐவழி யவ்வும்

(ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் 

(இ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

(ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை : ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் 

6.பொருத்துக :

(1) ஆமந்திரிகை -(i) பட்டத்து யானை 

(2) அரசு உவா   - (ii) மூங்கில்

(3) கழஞ்சு - (iii) இடக்கை வாத்தியம்

(4) கழை.   -  (iv) எடை அளவு

(அ) (1)-(iii). (2)-(i). (3)-(iv), (4)-(ii)

(ஆ) (1) -(iv), (2)-(ii), (3)-(i), (4)-(iii)

(இ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)

 (ஈ) (1)-(iv). (2)-(iii), (3)-(ii), (4)-(i)

விடை : அ) (1)-(iii). (2)-(i). (3)-(iv), (4)-(ii)

7.அல்லல் படுப்பதூஉம் இல் - எவரோடு பழகினால்?

(அ) வாள் போல் பகைவர்

(ஆ) மெய்பொருள் காண்பவர்

(இ) எண்ணியாங்கு எய்துபவர்

(ஈ) தீயினத்தார்

விடை : (ஈ) தீயினத்தார்

8. 'நித்திலம்' - என்பதன் பொருள் :

(அ) மாணிக்கம் 

(ஆ) பவளம் 

(இ) முத்து

(ஈ) மரகதம்

விடை : (இ) முத்து

9.ஆராய்ந்து சொல்கிறவர் :

(அ) அரசர் 

(ஆ) சொல்லியபடி செய்பவர் 

(இ) தூதுவர் 

(ஈ) உறவினர்

விடை : இ) தூதுவர்

10. 'தலைக்குளம்' எனும் சிறுகதையின் ஆசிரியர் :

(அ) பூமணி 

(ஆ) உத்தம சோழன் 

(இ) சாந்தா தத் 

(ஈ) தோப்பில் முகமது மீரான்

விடை : (ஈ) தோப்பில் முகமது மீரான்

11. விடுபட்ட சொல்லை நிரப்புக:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்_______

அச்சாணி அன்னார் உடைத்து,

(அ) இடன் அறிந்து 

(ஆ) உருள்பெருந்தேர்க்கு 

(இ) அஞ்சுக 

(ஈ) அறியவாம் 

விடை : (ஆ) உருள்பெருந்தேர்க்கு

12.இரண்டடி வெண்பா என்பது

(அ) குறள் வெண்பா 

(ஆ)சிந்தியல் வெண்பா 

(இ) இன்னிசை வெண்பா 

(ஈ) கலி வெண்பா 

விடை : (அ) குறள் வெண்பா 

13. "என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால் தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது"

(அ) மார்லன் பிராண்டோ

(ஆ) பாலச்சந்திரன்

(இ) வி.பி.கெ. மேனன்

(ஈ) ராஜீவ் நாத்

விடை : (அ) மார்லன் பிராண்டோ

14. சிவாஜி கணேசன் பிறந்த ஊர் :

(அ) விருத்தாசலம் 

(ஆ) விழுப்புரம் 

(இ) வீரப்பூர்

(ஈ) விராலிமலை

விடை : (ஆ) விழுப்புரம்

பகுதி - I 

பிரிவு - 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 

15. ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக.

ஒருமுக எழினி:

நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு ரூ’ முகத்திரை

பொருமுக எழினி:

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை

16. 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே' ' தொடருக்குப் பதவுரை எழுதுக,

அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

17. மனத்தை அதன் போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன் ?

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ” ,,,,,,,,,,,

மனத்தை, அது போகும் போக்கில் செல்லவிடக் கூடாது.

மேலும் மனத்தினைத் தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.

18. கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக.

கலிவிழா – திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா

ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.

19. அக்காலத்துக் கல்விமுறை மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை ?

தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.

கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்

20. நல்ல தமிழில் எழுதுக.

(அ) வித்தியாரம்பம் - கல்வியின் தொடக்கம் 

(ஆ) உபாத்தியாயர்  - ஆசிரியர் 

21. 'குருகுலம்'  விளக்கம் தருக.

பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

பிரிவு - 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

22. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

(அ) எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது. 

விடை : 

எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது

(ஆ) ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.

விடை 

ஐப்பசி அடைமழையில் ஊருணி  நிறைந்தது.

23. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்கவும் : 

(ஆ) தலைமை

ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது
(அ) கோவில் 

கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.
அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.24. தமிழ்ப்படுத்துக :
(அ) PASS PORT  - கடவுச்சீட்டு

(ஆ) VISA - நுழைவு இசைவு

25. ஏதேனும் ஒன்றனுக்குப் புகுபத உறுப்பிலக்கணம் தருக. 

(அ) நினைக்கின்ற 

(ஆ) பேசுவார்.

26. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக. 

(அ) பூம்பாவாய் 

(ஆ) உள்ளொன்று

27. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக்குக :

(ஐ, ஆல், கு, இன், அது, கண்) 

(அ) கபிலன் திறமையானவர் என்று குமரனுக்கு (குமரன்) தெரியும்..

(ஆ) நேற்று முதல் அணையின் (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

28. பொருள் வேறுபாடறிந்து தொடர் அமைக்கவும் :

களம், கலம் 

29. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதக.

குதிரை, வேகம், ஓடு, தாவு

30. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் .

விடை : இரவு சிற்றப்பனை காவலுக்குப் போகச் சொல் .

பகுதி - I 

பிரிவு - 1.

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 

31. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

32. நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக. 

சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம் :

“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது

மண்ண கம் ஒருவழி வகுத்தனர்”

கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர்.

மூங்கில் கொணர்தல் :

பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களைக் கொண்டு வந்தனர்.

ஆடல் அரங்கம் அமைத்தல் :

“நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்.”

நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவுகொண்டு அரங்கம் அமைத்தல்.

மூங்கில் அளவுகோல் :

கைப்பெருவிரலில் இருப்பத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும் எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கப்பட்டது.

33. மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள் யாவை ?


34. சூதும் கள்ளும் கேடு தரும் - திருக்குறள் வழி விவரிக்கவும்.

“சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவது ஒன்று இல்”

சூதின் சிறுமை :

இழிவைத் தந்து சிறப்பை அழிக்கும் சூது போல வறுமை தரத்தக்கது வேறு இல்லை.

“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்”

சூதால் செல்வம் அழியும் :

தொடர்ந்து சூதாடும் இடத்திற்குச் சென்று வந்தால் நீண்டநாள் சம்பாதித்த செல்வமும் பண் பும் கெட்டழியும்.

கள்ளும் விஷமும் ஒன்றே :

உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண் 11 பவர் விஷம் உண்பவர் ஆவார்.

திருத்தமுடியாது :

கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்.

பிரிவு - 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.           35. நீங்கள் ஆசிரியரானால் அன்பினால் மாணாக்கரை எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள் ?

(i) மாணாக்கர்களின் அறிவு, திறன்கள், மனப்பாங்கு , செயற்பாடுகள், பண்புகள், பாடரீதியான அடைவுகள் எல்லா மாணவர்களுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எனது மனநிலையை மாற்றுவேன்.

(ii) கற்றலில் பின்னடைவு அடைந்திருக்கும் மாணாக்கரை எக்காரணம் கொண்டும் கற்றலில் முழு அடைவு அடையும் மாணாக்கரோடு ஒப்பிட்டுக் கூறமாட்டேன் மாறாக, கற்றலில் அம்மாணவன் பின்னடைவு அடைந்ததற்கான காரணத்தைக் கண்டு அவனைத் தேற்றுவேன்.

(iii) கற்றலில் பின்தங்கிய மாணாக்கர் கற்றலில் இடர்ப்படுவதற்கான காரணத்தை இனங்கண்டு அவன் முழுமையான அடைவு எய்த நல்ல வழிகாட்டியாகச் செயல்படுவேன்.

(iv) எல்லா மாணாக்கரையும் அன்புடன் அணுகும் மனத்தைப் பெறுவேன். தகாத வார்த்தைகள், பொருத்தமற்ற வார்த்தைகளை ஒருபோதும் வகுப்பறையில் உச்சரிக்க மாட்டேன்.

(v) மாணக்கர்களின் குடும்பச்சூழல்களை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவேன்.

(vi) மாணாக்கரோடு முரண்படுதல், எதிர்த்து நின்று செயற்படுதல் ; துன்புறுத்தல், மனம்நோக நடத்தல் என்பன போன்ற மனவேதனைப்படுத்தும் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பேன்.

(vii) நல்ல ஆசானாய் இருக்கும் என்னாலும் நல்ல அன்பானவனாய் இருக்க முடியும் என்பதை நிலைநிறுத்துவேன்.

36. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்கவும்.

37. உவே.சா பற்றிக் குறிப்பு வரைக. 

38. 'மையாடல்' பற்றி விளக்குக.

மையாடல் விழா :

(i) சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது ஊமைத்தயிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கலந்து செய்த மையைத் தடவினால் எழுத்துகள் தெளிவாகத் தெரியும்.

(ii) இவ்வாறு தடவும் மையானது சுவடியில் இருக்கும் எழுத்துகளை விளக்கமாகக் காட்டும். கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

(iii) இதனாலேயே அக்ஷராப்பியாசத்தை (எழுத்து அறிவித்தலை) மையாடல் விழா என்றனர்.

பிரிவு - 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. ' 

39. உவமை அணி 

(அல்லது) 

சொற்பொருள் பின்வரும் நிலையணியைச் சான்றுடன் விளக்குக. 

40. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வில் அமைத்து எழுதுக. 

(அ) யானைக்கும் அடி சறுக்கும்

தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும் போல ஆயிற்று.

அல்லது

(ஆ) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

41. இலக்கிய நயம் பாராட்டுக :

(மையக் கருத்துடன் ஏற்புடைய மூன்று நயங்களை எழுதுக) 

அந்தி யிருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான் கண்டேன். 

திசைகள் கண்டேன் பிந்தியந்தக்

 காரிருள்தான் சிரித்த துண்டோ ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே

 நீதான் சிந்தாமல் சிதறாமல் அழகை யெல் ாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் 

ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை 

வானில் எழில் வாழ்வைச் 

சித்தரித்த வண்ணந் தானோ ?

பாரதிதாசன்

42. கீழ்க்காணும் பகுதியைப் படித்துப் பார்த்து, பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா ? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா ? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சித்திக்க முயன்றதும் கிடையாது. 

விடை 

அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது.

43. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்குரிய விடை தருக.

'உணவே மருந்து மருந்தே உணவு" என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள், ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கன், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும் பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணிநேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

வினாக்கள்:

(1) நம் முன்னோர்கள் வாழ்க்கைமுறை எத்தகையது?

'உணவே மருந்து மருந்தே உணவு" என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்

(2) சமச்சீர் உணவு என்பது யாது ?

ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கன், நுண்ணூட்டச் சத்துக்கள் சேர்ந்ததே சமச்சீர் உணவு.

(3) பிணிகளுக்குக் காரணம் யாது ?

ருசிக்காக, சாப்பிடக் கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும் பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும்தான் பிணிகளுக்குக் காரணம்

(4) உணவு செரிமானமாக ஆகும் நேரம் எவ்வளவு ?

4 மணிநேரம்

பகுதி - IV

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

44. (அ) அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணைதிற்கும் என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.

அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் :

”அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண்.”

அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு.”

மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும்.


“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு”

உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்”

பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.

இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண் மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.


திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.

விடை:

முன்னுரை 

வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ்பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவனின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.

அறிவுடைமை :

இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.

மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவதும் அறிவு ஆகும்.

ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர்.

மன உறுதி வேண்டும் :

அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்பு கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாதவற்றைச் செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.

உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பகையாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளுவர்.

கள்உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண் பவனைத் திருத்துவது என்பது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

இறுதியாக ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறியக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண் ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார்.

அல்லது

(ஆ) கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்கவும்...

கவிதை :

சொல்லைச் சிறந்த முறையில் தேர்வு செய்து எதுகை மோனை அமைத்து எழுத வேண்டும்.

அடியளவு தெரிந்து கவிதை எழுத வேண்டும்.

சொற்களை அதற்குரிய இடங்களில் பொருத்தி வைத்து கவிதையினை உருவாக்குதல் வேண்டும்.

கவிதைக்குரிய உறுப்புகள் :

எழுத்துகளைக் கொண்டு சிறந்த அசைகளை உருவாக்குதல் வேண்டும்.

அசைகளைக் கொண்டு சீர்களை உருவாக்குதல் வேண்டும்.

சீர்களை முறையாக உருவாக்கினோம் என்றால் இரண்டு சீர்களுக்கு இடையே தளைகள் உருவாகும். தளைகளை அந்தந்தந்த பாவுக்குரிய முறைப்படி அமைத்தால் கவிதையில் பிழைகள் தோன்றாது. தளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அடிகள் உருவாகும்.

இளமைத் அடிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தோம் என்றால் தொடைகள் தோன்றும்.

அதிக அளவில் சிறந்த தொடைகள் அமைந்து கவிதை வரிகள் இருந்தால் அது சிறந்த கவிதையாக இருக்கும்.

சிறந்த கவிதை :

(i) கவிதைக்குரிய உறுப்புகளை வைத்துக் கவிதை எழுதும் போது, கவிதையின் உறுப்பாகிய சீர்களில் மாச்சீர், விளச்சீர் வரும்படி எழுதினால் பாடல்களிலும் தேமா, புளிமா காய்க்கும்.

(ii) தவறாக சீர்கள் அமைந்தால் பாடல் தவறாக மாறிவரும்.

(iii) செடியில் பூத்தப் பூவில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் தேடி வருவது போல, சிறப்புடன் எழுதிய புலவரின் பாடல் வரிகளில் எப்போதும் புகழ் தங்கும். . இவைகளை அறிந்து கொண்டு கவிதை எழுத வேண்டுமென்று கவிஞர் சுரதா கூறுகிறார்.

45. (அ) பண்டைக் காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

(i) பண்டைக்காலத்தில் ஆசிரியர்களிடையே மிகுந்த உறவுமுறை இருந்தது. ஆசிரியரை உபாத்தியார் என்றனர். உபாத்தியாரைக் கணக்காயர் என்பர். உபாத்தியாயருடைய வீடே குருகுலமாக இருந்தது.

(ii) ஊர்தோறும் பொதுவாக இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருக்கும். அம்மேடையை மன்றம் என்றும் அம்பலம் என்றும் கூறுவர். மன்றம் என்பது மரத்தடியில் உள்ள திண்ணை . அதுதான் : பிறகு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. மரத்தடிப் பள்ளிகள் நாளடைவில் குடிசைப் பள்ளியாக மாறியது.

(iii) பெற்றோர்கள் ஐந்து வயதில் பிள்ளைகளை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். ஒரு நல்ல நாளில் ஏட்டின் மீது மஞ்சள் பூசி பையனிடம் கொடுப்பர். உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்ல மாணவன் அதைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி மாணாக்கர்கள் பலர் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்பர்.

(iv) சுவடியில் எழுத்துகள் தெளிவாகத் தெரிய மஞ்சள், மணத்தக்காளிச் சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக் கரி தடவுவர். உபாத்தியாயர் மாணவர்களை முதலில் மணலில் எழுதிப் பழக்குவர். உபாத்தியாயர் எழுதியதின்மேல் மாணவர்கள் எழுதி எழுதிப் பயிற்சி பெறுவர்.

(v) எழுத்துகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தனர். புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரியெழுத்தின் உறுப்புகளாகும். இதனை முறையாகக் கற்றுக் கொடுத்தனர்.

(vi) மனனம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தனர். மாணாக்கர் அதிக முயற்சி எடுத்து மனனம் செய்தனர்.

(vii)  தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் முதலியவற்றையும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய அகராதி வரிசையில் அமைந்த நூற்களை மனப்பாடம் செய்ய வைப்பதன் மூலமாகக் கற்றுக் கொடுத்தனர்.

(viii) கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மூ லம் கற்பித்தல் நடைபெற்றது. எல்லோரும் ஒன்றாகக் கூடி கேள்விகள் கேட்டும் விடைகூறியும் கற்றுவரும் முறையும் இருந்தது. சுவடியில் எழுத்துகளை எழுதும் முறையும், கற்றுக்கொடுத்தனர்.

(ix) ஆசிரியர்கள் மாணக்கர்களை அன்பினால் வழி நடத்தி வந்தார்கள். கற்றல் கற்பித்தல் முக்கியமாக விளங்கியவாதம் செய்யும் கற்றல் முறையும் இருந்தது. அரசவையில் கூடவாது புரியும் அளவிற்குக் :கற்றல் முறைகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் மாணாக்கர்கள் நூல் பயிலும் இயல்பை நன்னூல் நூற்பா இவ்வாறு கூறும்.

“வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை

கடனாக் கொளினே மடநனி இகக்கும்” – நன்னூல் 41

(x) ஞாபகசக்தியை வளர்க்க தினமும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை ஆசிரியர் சொல்லி அனுப்ப மாணாக்கர் அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொன்னார்கள்.

(xi) இவ்வாறு, மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வளர்க்கும் விதமாக கற்பித்தல் இருந்தது. : மாணவர்களும் தங்களின் அறிவினை வளர்க்கும் விதமாகக் கற்றனர்.

அல்லது

(ஆ) மனனப் பயிற்சி, சுவடிகள், எழுந்தாணிகள் குறித்து உவே.சா குறிப்பிடுவனவற்றை விவரிக்கவும்.

46. (அ) "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன" - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்கவும்.

அல்லது

(ஆ) மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக.

பகுதி - V

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக. 

(அ) 'ஒருமையுடன்......." எனத் தொடங்கும் தெய்வமணிமாலை பாடலை அடிபிறழாமல் எழுதுக, 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை

பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியாதிருக்க வேண்டும்

(ஆ) 'செயல்' என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.


சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

Monday, March 28, 2022

அறிவை விரிவு செய் வகுப்பு 9 தமிழ் நூலும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 9TH TAMIL BOOK AND AUTHORS

அறிவை விரிவு செய் வகுப்பு 9 தமிழ் நூலும் ஆசிரியர்களும் ARIVAI VIRIVU SEY 9TH TAMIL BOOK AND AUTHORS LIST PDF


 பதிவிறக்கு/DOWNLOAD

விடைக்குறிப்பு பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு 10TH TAMIL ANSWER KEY II REVISION MARCH 2022

விடைக்குறிப்பு

1.ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார்
2.ஆ.கேரளா
3.அ.பால் வழுவமைதி
4.இ.தீராத
5.ஈ.மூன்று இடங்கள்
6.இ.இனமொழி விடை
7.அ.அருமை+துணை
8.இ.மாற்றி
9.ஈ.அங்கு வறுமை இல்லாததால்
10.இ.நீர்நிலைகள்
11.அ.சித்திரை, வைகாசி
12.அ.மயக்கம்
13.இ.அறிவு
14.அ.கல்வி+என்றே
15.இ.கல்வி

21.குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

22. அ.கலைச்சொல்
ஆ.அறிவாளர்


23.நான், யான், நாம், யாம்.

24. எட்டு முப்பது பேருந்தைத் தவறவிட்டுவிட்டேன்.நண்பரை உதையுந்தில் பள்ளியில் விடச் சொல்லியிருக்கேன். பள்ளிக்கு ஒன்பது முப்பதுக்கு வந்துவிடுவேன் என ஆசிரியரிடம் சொல்லிடு.

25.உறங்கு+வ்+ஆய்
உறங்கு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை விகுதி

27. மறைந்துவிட,
சீதையொடும்,
போனான்.
மையோ?
மரகதமோ?
நீலக்கடலோ?
கார்மேகமோ?
ஐயோ!
இராமன்.

28.சந்தனமரம்
முல்லைக்கொடி
சந்தனமணம்
முல்லைமணம்
காட்டுமுல்லை
சந்தனக்காடு

29.
அ.ஆழமும் பெரிய அலைகளையும் உடையதால்
ஆ.அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என
இ.யானைகள் கொண்ட சேனையைக் கண்டு

32.
அ.செயற்கை
தியற்கை
ஆ.உலகியல் நடைமுறைகளை அறிந்து
இ.இயற்கை அழகே அழகு

37.
பொரு/ளல் - நி நே - புளிமா
லவ/ரைப் - நி நே - புளிமா
பொரு/ளா/கச் - நி நே நே - புளிமாங்காய்
செய்/யும் - நே நே - தேமா
பொரு/ளல்/ல - நி நே நே - புளிமாங்காய்
தில்/லை - நே நே - தேமா
பொருள் - நிரை - மலர்
இக்குறட்பா மலர் எனும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

Thursday, March 24, 2022

காச நோயை ஒழிப்போம் தமிழ்ப் பேச்சு tamil speech kasanoy tab kaasa noyai olippom

காச நோயை ஒழிப்போம்

முத்துத் தமிழ் படித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது களங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே! முச்சங்கம் வைத்து மூவேந்தர் ஆட்சி செய்த தமிழ் வளர்த்த மண்ணில் பேசவே எத்தனிக்கும் என் முயற்சி ஒரு குழந்தைத்தனமான நிகழ்ச்சியே!

படமாடும் தெய்வங்கள் எல்லாம் நம் துன்பங்களைப் பார்த்தபடி இருந்தாலும் நடமாடும் தெய்வங்களாம் நம் மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு மக்கள் உயிரை மீட்டுத் தருவதற்காக தங்கள் உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றுகிறார்கள். அவர்களின் தன்னலமற்ற பணிக்கு என் தலையாய வணக்கங்கள்.

எத்தனையோ நோய்கள் இத்தரணியில் மக்களைப் பிணியாளர்களாக ஆக்கிக் கொண்டிருந்தாலும் காசநோய் மட்டுமே அவர்களை உருகிக் கொண்டிருக்கிறது. என்பேன் நான் பிற நோயாளிகளைப் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது. அவர் நோயாளி தான் என்று ஆனால் காச நோய் வந்தவர்கள் மட்டும் தும்மலும் இருமலும் வெளிவர தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து விடுவார்கள். அதுவே பிறருக்குப் பரவும் வழியாகவும் அமைந்து விடுகிறது என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் பரவக் கூடிய நோய் காசநோய். இதனை எலும்புருக்கி நோய் என்றும் நாம் கூறுகிறோம். உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி 2016 இந்தியாவில் 2.79 மில்லியன் காசநோய் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்து இருக்கிறார்கள் இவர்களில் ஏறத்தாழ 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று உரைத்திருக்கிறார் வான்புகழ் வள்ளுவர்.

 இதனைக் கருத்தில்கொண்டு நம் அரசும் திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் ஆர் என் டி சி பி மூலமாக 1997ஆம் ஆண்டு முதல் இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. டி ஓ டி எஸ் என்று சொல்லப்படக்கூடிய கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இந் நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஹெல்த் விசிட்டர் என்று சொல்லப்படக்கூடிய மருத்துவப் பணியாளர் மருந்து கொடுத்தல் கண்காணித்தல் காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதித்தல் என்ற ஐந்து நிலைகளில் காசநோய்க்குச் சிகிச்சை அளிக்கிறார். இச்சிகிச்சை மூலம் 6 முதல் 8 மாதங்களில் காச நோய் கட்டுக்குள் வந்துவிடும். காசநோய் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே தொந்தரவுகள் குறைந்துவிடும். இதனால் தனக்கு நோய் தீர்ந்து விட்டதாக நினைத்து தொடர்ந்து சிகிச்சை பெறாமல் விட்டு விட்டால் அவர்கள் காசநோயின் இரண்டாவது நிலை என்று சொல்லப்படக்கூடிய மல்டி ட்ரக் ரேசிஸ்டன்ட் டிபி மற்றும் எக்ஸ்ட்ரீம் டிரக் ரேசிஸ்டன்ட் டிபி என்ற நிலைக்குச் சென்று விடுவார்கள்.

காலை மாலை உலாவி நிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகனார்.

தொடர்ந்த சளி, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் அதிகமாக வியர்த்தல், கை கால் பலம் குறைவு, பசியின்மை, இடைவெளியில்லாமல் இருமுதல் இவையெல்லாம் காசநோயின் அறிகுறிகள். இதை நாம் முன்கூட்டியே அறிந்து விட்டால் காசநோயை லேட்டண்ட் டிபி என்று சொல்லப்படக்கூடிய ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடமுடியும் உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காச நோய்க் கிருமி இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 90 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 17 லட்சம் பேர் இறந்து விடுகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரங்களைச் சொல்லி உள்ளது. காச நோய் என்பது நுரையீரல், மூளை, சிறுநீரகம், முதுகெலும்பு, முதுகுத்தண்டு என்று உள்ளுறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாகத் தின்று தீர்க்கக் கூடிய நோய் என்பது பல பேருக்குத் தெரிவதில்லை. அதனால் தான் இதனை மேலை நாடுகளில் உடல் தின்னும் நோய் என்று சொல்லுகிறார்கள். இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புரதம் மிக முக்கியமான தேவையாகும். புரதச் சத்து மிக்க உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. அசைவ உணவு சாப்பிடுவோர் முட்டை மற்றும் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக மட்டுப்படும்.

சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரீச் தொண்டு நிறுவனம் மூலம் காசநோய் ஒழிப்புக்காக பெரும்பணி செய்து வருகிறார்கள். நுரையீரல் காசநோய் மட்டுமே தும்மல் மூலம் பரவுகிறது உடலின் பிற உறுப்புகளில் வரக்கூடிய காசநோய் அவ்வாறு பரவுவதில்லை காசநோய் என்றவுடன் நுரையீரல் காசநோய் மட்டுமே நம் மக்களுக்குத் தெரியும். ஆனால் இரைப்பை குடல் குருதி சுழற்சி பாதை சிறுநீரகம் பாலுறுப்புகள் எலும்பு இவற்றிலும் இந்நோய் குடிகொள்ளும் என்பது பல பேருக்குத் தெரியாது. இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, இந்தோனேசியா போன்ற 22 நாடுகளில் காசநோய் அதிகமாகப் பரவி உள்ளது. அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஏ.மகிழ்மாறன் அவர்களின் கூற்றுப்படி மக்களுக்குச் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டால் இளம்பிள்ளை வாதம் ஒழிக்கப்பட்டது போல எய்ட்ஸ் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது போல காசநோயையும் எளிமையாகக் கட்டுப்படுத்த முடியும்.

தனி மரம் தோப்பாகாது, ஒரு கை தட்டினால் ஓசை வராது, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதே இங்கே ஒவ்வொரு இந்தியனுக்கும் பாலபாடம். பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை விழிப்புணர்வை ஏற்படுத்தினால் வெற்றிகொள்ள முடியாத நோய்கள் எதுவும் இப்பூமியில் இல்லை.

ஓலைக்குடிசையே ஓவியப் பிழையே
கொசுக்களின் நித்திரைக் குளிர் மாநாட்டில் வசிக்க இடம் தரும் வசந்தப் பந்தலே! என்று கவியரசு வைரமுத்து அவர்கள் சுகாதாரமற்ற பூமியை வருணனை செய்துள்ளார். அப்பூமியில் தான் நாமும் வாழ்ந்து வருகிறோம். தேங்கிக் கிடக்கின்ற நீர்தான் சாக்கடை என்றாகிறது; ஓடுகின்ற தண்ணீரில் அழுக்கு இருப்பதில்லை. எதையும் சாதிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்கள் களத்தில் இறங்கி விட்டால் முடியாது என்பது முட்டாள்களின் சரித்திரத்திலேயே என்றைக்கும் இருக்கும் வாருங்கள் தோழர்களே மக்கள் பணியாற்றுவோம்! நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று இவ்வுலகுக்குக் காட்டுவோம்!

கவிஞர் கல்லூரணி முத்து முருகன்.

Wednesday, March 23, 2022

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil தாய்மைக்கு வறட்சி இல்லை

8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th model notes of lesson tamil மொழியை ஆள்வோம் இயல் 7

7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 7th model notes of lesson tamil மொழியை ஆள்வோம் இயல் 2

6ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 6th model notes of lesson tamil மொழியை ஆள்வோம் 2

வகுப்பு 10 தமிழ் நெடுவினா விடை சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் 10th TAMIL KAMBARAMAYANAM NEDUVINA

Monday, March 21, 2022

மதுரையின் பெருமைகள் தமிழ்ப்பேச்சு கட்டுரை கவிதை நடையில் SPECIALITY OF MADURAI TAMIL SPEECH ESSAY

மதுரையின் பெருமைகள் தமிழ்ப்பேச்சு - கட்டுரை speciality of madurai tamil speech essay

 

மதுரையின் பெருமைகள்

முத்துக் கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்தும் கடல் மீது கலங்களில் விளையாடும் கற்றுக் கலை மிகுந்த காவலனாம் தென்பாண்டி மண்டலத்தின் புகழ் உரைக்க வந்துள்ளேன்.

கூத்தன் இருந்தான் குறளரசன் அங்கிருந்தான் வார்த்தைத் தமிழுக்கு வணங்கிய தமிழ்வேந்தன் கம்பன் இருந்தான் வயதான தமிழ்ப் பாட்டி ஔவை இருந்தாள். நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி ஒண்சாத்தன் சிலம்பு எடுத்த தக்கோன் என புலவர் பலர் இருந்தனர். யாப்பிலாப் பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி காப்பிலாத் தமிழர் நெஞ்சில் பதித்து விட்ட பாண்டிய மன்னரின் பழந்தமிழ்க் குடிகள் நாங்கள்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை நிலங்களை வகுத்து அறம் வளர்த்தவர் தமிழர். தென்மதுரையும் கபாட புரமும் கடல்கோளால் அழிந்த பின்னும் வைகைக் கரையில் மூன்றாவது சங்கம் அமைத்த பெருமை எமக்கே உரியது. விண்ணை முட்டும் பரங்குன்றமும் பசுமை போர்த்திய அழகர் மலையும் தெற்கும் வடக்குமாய் அமைந்து மதுரையின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

எட்டேரு கட்டி இடத்தில் ஒரு யானை கட்டி

பத்தேரு கட்டி உழும் பாண்டியனார் சீமையிலே'

என்று உரைக்கிறது ஒரு நாட்டுப்புறப் பாடல். மதுரையில் ஆட்சி மீனாட்சி என்று சொல்லும் அளவுக்கு சொக்கநாதருடன் குடிகொண்டு இருந்து மதுரை மாநகரின் வடிவமைப்புக்கே காரணமாய் அமைந்திருக்கிறது மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில். மழைநீர் சேமிப்புக்கான தமிழரின் அறிவியல் கண்டுபிடிப்பு தான் அன்றைய தெப்பக்குளங்கள் என்பதற்கு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளமே ஒரு சாட்சி. மேலமடை கீழ மடை என்று ஆங்காங்கே பெரும் கண்மாய்களை அமைத்து கழுந்துகள் மூலம் அவற்றைத் திறந்து விட்டு விவசாயம் செய்தனர் மதுரை மக்கள். மதுரை மல்லிகைக்கு மட்டுமா மணம் உண்டு அங்கே மாத் தமிழுக்கும் ஓர் இடம் உண்டு. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரைத்த நக்கீரர் பிறந்த மண் இது.

ஏதன்ஸ் நகரத்தின் எழில் அமைப்புக்கும் எகிப்தின் பழமைக்கும் கூடல் நகராம் மதுரை சளைத்தது அல்ல. வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று வைகை நதியையும் தமிழையும் எங்கள் மண்ணையும் தனித்தே பிரிக்க முடியாது என்பதற்கு அடையாளமாக தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்றும் தமிழ்க்கெழு கூடல் என்றும் இலக்கியங்கள் குறிக்கின்றன.

மருத மரங்கள் மிகுந்து இருந்ததால் மருதை என்றானதா? கடம்பவனம் மிகுந்து இருந்ததால் கடம்பவனம் என்றானதா? ஆலவாயன் கைப் பாம்பு எல்லை வகுத்துக் கொடுத்ததால் ஆலவாய் என்றானதா? எத்தனை எத்தனை பெயர்கள் எங்கள் மதுரை மண்ணுக்கு. ஈரமும் வீரமும் எங்கள் இனத்தின் அடையாளம். அலங்காநல்லூரும் பாலமேடும் சொல்லும் அதை இன்றைக்கும் உலகு தோறும்.

அகிம்சை தந்த காந்தியே எங்கள் மண்ணை மிதித்த பின் தான் மகாத்மா ஆனார் ஆம்! அரை நிர்வாணப் பக்கிரி என்று வின்ஸ்டன் சர்ச்சில் இகழ்வதற்குக் காரணமாக இருந்த நிகழ்வு மதுரை மேல ரத வீதியில் தான் நடந்தது என்பார்கள். நவநாகரீக உடைகளுடன் வலம்வந்த காந்தியை மண்ணின் மைந்தர் ஆக மாற்றிய பெருமை மதுரைக்கே உரியது.

பதினாறாம் நூற்றாண்டு வரை பாண்டியர்களும் பின்னர் சுல்தான்களாலும் நாயக்க மன்னர்களாலும் ஆளப் பெற்ற மாமதுரை பல மாண்புகளை உடையது. முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை என்பது மட்டுமல்ல நான்காம் சங்கத்தையும் அமைத்த பெருமை வள்ளல் பாண்டித்துரை அவர்களால் மதுரைக்கே வாய்த்தது. ஆனை மலையிலும் அரிட்டாபட்டியிலும் கீழக்கோயில்குடியிலும் சமணர் படுக்கைகள் அமைந்துள்ளன. பல்வேறு சமயங்கள் சாதிகள் சங்கமிக்கும் எங்கள் ஊர் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியத் திருநாட்டின் மரபுக்கு ஓர் எடுத்துக்காட்டு. சித்திரைத் திருவிழா என்னும் முத்திரைத் திருவிழா சமத்துவத்தை இவ்வுலகுக்குச் சொல்லும்.

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு என்று பாடத் தோன்றும் எங்கள் மண்ணை மிதித்தால். ஓடிவரும் நீர் அழகும் ஆடி வரும் தேரழகும் தூங்காநகரமாய் இன்னும் துடிப்புடன் 2,500 ஆண்டுகள் பழமை தாங்கி வீற்றிருக்கிறது எங்கள் மதுரை. கெட்டும் பட்டணம் போ! என்று எங்கள் நகரை பார்த்தபின்தான் பழமொழி பிறந்திருக்கும் போல ஆம்! வந்தாரை வாழவைக்கும் மாமதுரை. கோட்டை கொத்தளங்களோடு கொழுவீற்றிருந்த காலத்தும் மண்ணில் மக்களாட்சி மலர்ந்து விட்ட காலத்தும் நாட்டை ஆளப்போவது யார் என்பதை மிகச் சரியாகக் கணித்து அரியணை ஏற்றுவதில் எங்களுக்கு இணை யாருமில்லை!

நெஞ்சுரம் கொண்ட வீர மறவர்களை நேதாஜியின் படைக்கு அள்ளித் தந்ததும் மதுரை தான்! வடக்கே இருந்து படையெடுப்பு வந்தபோதெல்லாம் ஒன்றுகூடி எதிர்த்ததும் கூடல் நகர் தான்.. எளிமை கண்டு இரங்குவதும் தன்மானம் தொட்டால் போர்ப்பரணி பாடுவதும் எங்கள் முன்னோர் எங்களுக்கு இட்ட விதை

ஊதி அணைத்து விட நாங்கள் ஒன்றும் அகல் விளக்குகள் அல்ல சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்! புயலுக்குத் தலைவணங்க நாங்கள் ஒன்றும் புல் அல்ல எதற்கும் அஞ்சாத இமயமலைகள்!

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்

வாய்ப்புக்கு நன்றி வருகிறேன்! விடைபெறுகிறேன்!

-     கவிஞர் கல்லூரணி முத்துமுருகன்

Friday, March 18, 2022

9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th model notes of lesson tamil அலகிடுதல்

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள்6th, 7th tamil grammar questions ILAKKANAM vinakal

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள்
6th, 7th tamil grammar questions ILAKKANAM vinakal

1. ஒப்பிட்டுக் கூறப்படும் பொருள்

2. தவறான ஒன்றைத் தேர்க

3. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக அந்த எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள்கள் மாறாமல்

4. அழுவம், வங்கம் என்பவை

5. 'தென்னைமரம்' என்பது

6. பொருத்துக 
1.பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான் 
2.வினைப் பகுபதம் - பெரியார் 
3.இடைப் பகுபதம் - நனி பேதை 
4.உரிப் பகாப்பதம் - மன்னே

7. பொருத்துக (குற்றியலுகரம்) வன்தொடர் - பஞ்சு மென்தொடர் -அச்சு இடைத்தொடர் - முரசு உயிர் தொடர் - சால்பு

8. தவறான ஒன்றைத் தேர்க

9. 'வாய் கழுவி வந்தேன்'என்பதை 'வாய் பூசி வந்தேன்' என்பது

10. பகாபதத்துடன் பொருந்தாதது எது

11. பெயர்ப் பகுபதத்தின் வகைகள்

12. சார்பெழுத்துகளின் விரி

13. கொள் - கோள் , உறு - ஊறு என்பவை

14. சமஸ்கிருத மொழி என்பது

15. 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' இப்பாடலில் அமைந்துள்ள அணி யாது

16. 'மியா' என்னும் ஓர் அசைச் சொல். இதில் 'மி'என்ற எழுத்தில் உள்ள இகரம்

17. நொ , நோ என்ற ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உணர்த்தும் பொருள்

18. தவறான இணை எது

19. மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைத் தேடுக

20. விரைவு,வெகுளி, உவகை , அச்சம் ஆகிய பொருளின் காரணமாக வருவது

21. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது

22. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை

23. ஞகர வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்


24. பகுபத உறுப்பிலக்கணத்தில் கட்டளைச் சொல்லாக அமையும் உறுப்பு எது

25. மொழி முதலில் மட்டும் வரும் குறுக்கம்


தமிழ்த்துகள்

Blog Archive