கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, April 09, 2026

கண்ணா உன் கருணை... பெருமாள் வழிபாடு தசாவதாரம் பாடல்

 


kanna un karunai... perumal valipadu song

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09.04.2026.வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

09.04.2026.வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: படையியல் ;

அதிகாரம் : படைச்செருக்கு ; 

குறள் எண் : 775.

குறள் :

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.

உரை :

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

பழமொழி :

எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to Rome.

இரண்டொழுக்க பண்புகள்:

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

+ இளமையில் கல்வியை புறக்கணித்தவன்,

தனது இறந்த காலத்தை மட்டும் இழந்தவன் அல்ல எதிர்காலத்தையும் இழந்தவன் ஆவான். - யூரி பிடிஷ்.

பொது அறிவு :

01. முதல் உலகப்போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?

வெர்சாய் உடன்படிக்கை, 

The Treaty of Versailles

02.அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு எது?

பிரான்ஸ்-1886

France-1886

English words :

developer - a person or company that builds houses, shops etc உருவாக்குபவர்

Random anything that is without a pattern ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, குறிப்பின்றி

தமிழ் இலக்கணம் :

இளம் பயிர் வகைகளின் பெயர்

நெல், சோளம், கத்திரி - நாற்று

மா, புளி, வாழை - கன்று

தென்னை - பிள்ளை

பனை - மடலி/ வடலி

அறிவியல் களஞ்சியம் :

அறிவியலில் உள்ள மிகவும் வியக்கத்தக்க உண்மைகளில் ஒன்று, நாம் உண்ணும் உணவைச் சுவைக்க உமிழ்நீர் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு உணவு சுவைப்பதற்கு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் உமிழ்நீரில் கரைய வேண்டும். உணவில் உள்ள வேதிப்பொருட்கள் கரைந்தவுடன், அவற்றை நமது சுவை மொட்டுகளில் உள்ள ஏற்பிகளால் கண்டறிய முடியும்.

நீதிக்கதை -

குரங்கின் காற்றாடி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி. உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது. காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது. அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.

இன்றைய செய்திகள்

09.04.2026

* சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்தடை அதிகரித்து வருகிறது.

* ஈரானை குறிவைத்து வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களில் அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது.

*ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

விளையாட்டுச் செய்திகள்

*மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.

Today's Headlines 09.04.2026

* Power outages are increasing in Chennai and the districts of Chengalpattu, Kanchipuram, and Tiruvallur.

* The United States is deploying advanced missiles at military bases in Gulf countries targeting Iran.

* Donald Trump has announced that a 50% import tariff will be imposed on all countries supplying military weapons to Iran.

SPORTS NEWS

In the Indian Premier League match between the Mumbai Indians and the Rajasthan Royals, Rajasthan won by 27 runs. With this, the Rajasthan Royals have secured the top position in the points table with 3 wins in 3 matches.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, April 08, 2026

TET TRB TNPSC TAMIL GRAMMAR FREE ONLINE QUIZ அடிப்படைத் தமிழ் இலக்கணம் வினாடிவினா

தமிழ்த்துகள் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

போட்டித் தேர்வுப் பயிற்சி

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

வினா: 1/20 10:00

தேர்வு முடிந்தது!

TET TRB TNPSC TAMIL ILAKKANAM VETRUMAI FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம் வேற்றுமை வினாடிவினா

தமிழ்த்துகள் வேற்றுமை இலக்கணம்

வினாக்களும் விளக்கங்களும்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

வினா: 1/20 10:00

தமிழ்த்துகளின் வாழ்த்துகள்!

தேர்வு முடிந்தது.

TET TRB TNPSC TAMIL ILAKKANAM FREE ONLINE QUIZ TAMIL ILAKKIYA SORKAL தமிழ் இலக்கிய வகைச் சொற்கள் வினாடிவினா

இலக்கிய வகைச் சொற்கள் Quiz

தமிழ்த்துகள் இலக்கிய வகைச் சொற்கள் (இலக்கணம்)

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரம்: 10:00 மதிப்பெண்: 0 / 20

தேர்வு முடிந்தது!

TET TRB TNPSC TAMIL ILAKKANAM VALU FREE ONLINE TEST தமிழ் இலக்கணம் வழு & வழாநிலை வினாடிவினா

தமிழ்த்துகள் இலக்கண வினாடி வினா - வழக்கு

தமிழ்த்துகள் இலக்கணத் தேர்வு (வழு & வழாநிலை)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரம்: 10:00 மதிப்பெண்: 0/20

தேர்வு நிறைவடைந்தது!

TET TRB Psychology Quiz உளவியல் வினாடி வினா

Psychology Quiz - Tamilthugal

தமிழ்த்துகள் - உளவியல் வினாடி வினா (Psychology Quiz)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரம்:
10:00

தமிழ்த்துகளின் வாழ்த்துகள்!

AFTER SUBMIT SCROLL UP TOP SEE SCORE

ஆறாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

6th english annual exam question paper virudhunagar district 

ஏழாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் முழு ஆண்டுத் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2026

7th maths English medium question paper virudhunagar district 

ஒன்பதாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

9th maths tamil medium annual exam question paper virudhunagar district 

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 14

 

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 14 link touch below👇



TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 14

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08.04.2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

08.04.2026. புதன்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: படையியல் ;

அதிகாரம் : படைச்செருக்கு; 

குறள் எண் : 774.

குறள் :

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.

உரை :

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

பழமொழி :

> அறிவு வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் செல்வம்.

Knowledge is a lifelong treasure.

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆனதில்லை. வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை. காமராஜர்.

பொது அறிவு:

01.செடிகளின் வளர்ச்சியை அறிவதற்கு பயன்படும் கருவி எது?

கிரிஸ்கோகிராஃப்- Crescograph.

02. 'என் உண்மை' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியவர் யார் ?

முன்னாள் பிரதமர். திருமதி.இந்திரா காந்தி 
Former Prime Minister Mrs. Indira Gandhi

English words:

commotion confused movement,

பெருங் கூச்சல், அதி உற்சாகமான அல்லது குழப்பமான இயக்கம்

concoction any foodstuff or medicines made by combining different ingredients,

வேறுபட்ட உணவு பொருட்கள் அல்லது மருந்து பொருட்களின் கலவை

தமிழ் இலக்கணம்:

தோலின் தன்மை கொண்டு அவை அழைக்கப்படும் பெயர்கள்.

1. மெல்லிய பழத் தோல் - தொலி

2. திண்ணமான பழத்தோல் - தோல்

3. வன்மையான பழத்தோல் - ஓடு

4. காய்ந்த முழு சுரையின் தோல் - குடுவை

5. நெல், கம்பின் தோல் - உமி

அறிவியல் களஞ்சியம் :

ஹீலியத்தை அதன் கொதிநிலையை விட சில டிகிரி குறைவாக, அதாவது 452 டிகிரி ஃபாரன்ஹீட் (-269 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலைக்குக் குளிர்வித்தால், அது மீப்பாய்மமாக (superfluid) மாறுகிறது. அதாவது, அதனால் உராய்வின்றி நகர முடியும். அது ஒரு கண்ணாடிக் குவளையின் ஓரங்களுக்கு மேல் உயர்ந்து செல்ல முடியும். இது மட்டுமல்ல, ஒரு கொள்கலனில் உள்ள மூலக்கூறு-மெல்லிய விரிசல்கள் வழியாகவும் அது வெளியேற முடியும். அறிவியலில் உள்ள மற்ற வியக்கத்தக்க உண்மைகளில் பிரபஞ்சத்தில் இரண்டாவது அதிக அளவில் காணப்படும் தனிமம் ஹீலியம் ஆகும்.

ஏப்ரல் 08

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் நினைவுநாள்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா Bankim Chandra Chattopadhyay பிறப்பு ஜூன் 27, 1838 - இறப்பு ஏப்ரல் 8, 1894.

ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

நீதிக்கதை

பலசாலி முயல்

அடர்ந்த காட்டு வழியே நடந்து கொண்டிருந்த முயல், மூங்கில் குருத்துகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானையைப் பார்த்தது. "வணக்கம் யானையண்ணே. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு" என்றது. தன் காலடியில் நின்ற முயல்குட்டியை அலட்சியமாகப் பார்த்தது யானை. "என் கால் நகம் அளவுகூட இல்லாத நீ எல்லாம் என்கிட்டே பேசுற அளவு வளர்ந்துட்டியா?" என்று கடுமையாகக் கேட்டது. முயல் குட்டியின் முகம் வாடிப்போனது.

ஏன் யானை அண்ணன் தன்னிடம் இப்படி பேசியது என்று யோசித்தபடியே நடந்தது. காட்டையொட்டி இருக்கிற ஏரியில் வாழும் முதலை அக்காவிடம் கேட்கலாமே என்று எரிக்கு ஓடியது. "முதலை அக்கா..." முயலின் சத்தம் கேட்டு, தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்த்தது முதலை. கடற்கரையில் இருந்த முயலைப் பார்த்து, "நீயா? என்னைக் கூப்பிட்டாயா?" என்றது.

ஆமாம் எனத் தலையாட்டியது முயல். அது அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "என் கண்ணைவிட சின்னதா இருக்கற உன்கிட்டே பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை" என்று யானையை விடக் கடுமையாகப் பேசிவிட்டுத் தண்ணீருக்குள் சென்றது முதலை. முயலின் சோகம் அதிகமானது. மீண்டும் முதலையை அழைத்தது. "நான் உருவத்துல சின்னதா இருந்தாலும் பலத்துல உங்களைவிட பெரியவன். வேணும்னா ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா?" என்று கேட்டது. முதலைக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒப்புக்கொண்டது.

நீளமான கயிறைக் கொண்டுவந்து முதலையிடம் கொடுத்தது. "அக்கா, இந்தக் கயிற்றின் இன்னொரு முனையை நான் பிடித்துக் கொள்வேன். நான் இழு என்று சொன்னதும் நீங்கள் இழுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு, கயிறுடன் காட்டுக்குள் ஓடியது. அங்கே இருந்த யானையையும் இதேபோல போட்டிக்கு அழைத்தது. "இதென்ன பெரிய விஷயம்? நான் ஒரு இழு இழுத்தால் நீ காணாமல் போய்விடுவாய்" என்று சொல்லிக்கொண்டே கயிறைத் தன் தும்பிக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது யானை.

"நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. நான் அந்தப் பக்கம் சென்று, கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொள்கிறேன். இழு என்று சொன்னதும் போட்டி தொடங்கும்" என்று சொல்லிவிட்டு, யானையின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு புதரில் மறைந்துகொண்டது. முதலைக்கும் யானைக்கும் கேட்பதுபோல் சத்தமாக, "இழுக்கலாம்" என்று கத்தியது. உடனே அடுத்த முனையில் முயல் குட்டி இருப்பதாக நினைத்து இரண்டு விலங்குகளும் கயிறை வேகமாக இழுத்தன.

இரண்டுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. முயலுக்கா இத்தனை வலிமை இருக்கிறது என்று நம்ப முடியாமல் கயிறை வேகமாக இழுத்தன. கொஞ்சம் விட்டால் முதலை தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. யானைக்கும் அப்படித்தான். தும்பிக்கையே உடைந்துவிடும் போல வலித்தது. இருந்தாலும் இரண்டும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இழுத்தன.

பட்டென இரண்டாக அறுந்தது கயிறு. அந்த வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி மண்டை வீங்கியது யானைக்கு. முதலை பாறையில் மோதி சிராய்த்துக்கொண்டது. முயலின் திட்டம் புரியாமல், உருவத்தை வைத்து திறமையை எடைபோட்டுவிட்டோமே என்று நொந்தபடி யானையும் முதலையும் அதனதன் வேலையைப் பார்க்கக் கிளம்பின.

அன்று முதல் முயல் குட்டியை எங்கே பார்த்தாலும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னது யானை. முதலையும் முயல் குட்டியிடம் மரியாதையாகப் பழகியது.

இன்றைய செய்திகள் 08.04.2026

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4 கோடி குழந்தைகள் உடற்பருமனுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த பாதிப்பு ஆண்டுக்கு 5% அதிகரித்து வருகிறது.

* நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை எழுதவோ அல்லது வழக்குகளில் முடிவெடுக்கவோ Al-யைபயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் & குஜராத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines - 08.04.2026

* 26 lakh people have applied for the NEET examination across the country.

* In India, about 4 crore children under the age of 19 are living with obesity. In India, this incidence is increasing by 5% every year.

*The Kerala High Court and the Gujarat Court have banned AI-initiators from writing their judgments or deciding on cases.

Sports news

The Mantekarlo Masters Tennis competition is going on in Monaco. Men's Singles Division 2nd Round: India's Stefanos Tsitsipas won the 7-5, 6-4 set and advanced to the next round.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, April 07, 2026

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 13

 


NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 13 link touch below👇




TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 13

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07.04.2026 - செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

07.04.2026 - செவ்வாய்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரணியல் ;

அதிகாரம் : நாடு

; குறள் எண் : 732.

குறள் :

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.

உரை :

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்

பழமொழி :

உன்னை நம்பினால் வெற்றி பெறுவாய்.

Believe in yourself and succeed.

இரண்டொழுக்க பண்புகள்:

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

* சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிவருகின்றன . -ஏபிஜே அப்துல் கலாம்.

பொது அறிவு :

01. நமது உடலில் ரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் எது?

வைட்டமின் கே -Vitamin K

02. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

அபெர்டீன், ஸ்காட்லாந்து 
Aberdeen, Scotland.

English words :

Appraisal - evaluation மதிப்பீடு 

Cautious - being careful to avoid risks.
எச்சரிக்கை 

தமிழ் இலக்கணம் :

ஒரு, ஓர் வரும் இடங்கள் எவை என்று பார்ப்போம்

உயிர் எழுத்துகள் முன் ஓர் வரும்

ஓர் அலை

ஓர் ஆயுதம்

ஓர் இலை

ஓர் ஈ

ஓர் ஒட்டகம்

உயிர்மெய் எழுத்துகள் முன் ஒரு வரும்

ஒரு காகம்

ஒரு மெத்தை

ஒரு சத்திரம்

ஒரு மரம்

ஒரு பழம்

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் 50% முதல் 80% வரையிலான ஆக்ஸிஜன் கடல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பல்வேறு விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி, தாவர அடிப்படையிலான கடல்வாழ் உயிரினங்களால் நடைபெறுகிறது. கடல்வாழ் பிளாங்க்டன்கள், பாசிகள், கடற்பாசிகள் மற்றும் சில பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

ஏப்ரல் 7

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் அன்று கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

ஏப்ரல் 7

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

பிறப்பு 7 ஏப்ரல் 1770 - இறப்பு 23 ஏப்ரல் 1850.

ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார்

இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.

நீதிக்கதை - பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஓர் எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் முடியவில்லை மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததைக் கூறினார். நம் நாட்டு பூனைகள் அதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றாலும் அந்த எலியைப் பிடிக்க முடியவில்லை. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...

ஆனால் இளவரசர் சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதிசயம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்குச் சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?

நீதி:

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

இன்றைய செய்திகள்

07.04.2026

* 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியாகும்.

* இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

*விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: புவனேஷ்வர் குமார் சாதனை

Today's Headlines 07.04.2026

* The Class 12 public examination results will be released on May 8.

156 Chinese nationals have been arrested in Sri Lanka for being involved in large-scale international online financial fraud operations.

* Iran has carried out a major drone attack targeting Ben Gurion International Airport in Tel Aviv, Israel.

Sports News

Bhuvneshwar Kumar becomes the first fast bowler to take 200 wickets in the Indian Premier League.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Monday, April 06, 2026

TET TRB TNPSC TAMIL ILAKKANAM THOLILPEYAR FREE ONLINE QUIZ தொழிற்பெயர் தமிழ் இலக்கண வினாடி வினா

தமிழ்த்துகள் தொழிற்பெயர் இலக்கண வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

தமிழ் இலக்கணம்: தொழிற்பெயர்

வினாக்கள்: 20 | காலம்: 10:00 நிமிடங்கள்

10:00

TET TRB TNPSC TAMIL ILAKKANAM AKUPEYAR FREE ONLINE QUIZ ஆகுபெயர் தமிழ் இலக்கண வினாடி வினா

ஆகுபெயர் இலக்கண வினாடி வினா

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணம்: ஆகுபெயர் (20 வினாக்கள்)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

10:00

TET TRB TNPSC TAMIL ILAKKANAM VINAIMUTRU FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம் - வினைமுற்று வினாடிவினா

தமிழ்த்துகள் - தமிழ் இலக்கணம்: வினைமுற்று

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

மொத்தம்: 20 வினாக்கள் | காலம்: 10 நிமிடங்கள்

10:00

தமிழ்த்துகள்

Blog Archive