கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 10, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026. செவ்வாய்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

10-03-2026. செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : ஆள்வினையுடைமை ;

குறள் எண் : 613.

குறள்:

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.

உரை :

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

பழமொழி :

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

The childhood shows the man.

இரண்டொழுக்க பண்புகள்:

1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2. எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி :

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் .- சாக்ரடீஸ்.

பொது அறிவு :

01.உலகின் மிக வேகமான பறவை எது?

பெரெக்ரின் ஃபால்கன் - Peregrine Falcon

02. அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

பாதரசம் - Mercury

English words:

+ Grave-serious

Put up with-tolerate

தமிழ் இலக்கணம்:

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2

1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன) மல்லிகை மணம் கமழ்கிறது - சரி

2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா) மாறன் கண் விழித்தான்

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்பாடுதான் காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும். வெளிப்படையான

மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்

 Savitribai Jyotirao Phule.

பிறப்பு 3 சனவரி 1831 - இறப்பு 10 மார்ச் 1897.

ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.

இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று கூகுள் டூடுள் கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

நீதிக்கதை -வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் "இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்" என்றார். மற்றவரும் "ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே" என்றார்.

இவர்கள் பேசுவதைக் கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது. ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமுதாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களைக் காணவில்லை, சும்மா சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு "அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே" என்று புலம்பியது. ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்து கொள்ளலாம்" என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமு ஓடி ஒளிந்து கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது. இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்து கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.



இன்றைய செய்திகள் - 10.03.2026

*தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

* இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

* அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

விளையாட்டுச் செய்திகள்

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையைத் தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.

Today's Headlines - 10.03.2026

* In Tamil Nadu digital population census will be conducted from July 17 to August 30

* A 3,000-year-old wonder discovered in Udumalai A massive stone structure has been identified at Kallapuram

* To prevent a cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

* Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

SPORTS NEWS

The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, March 09, 2026

வகுப்பு 10 தமிழ் மிகவும் முக்கிய நெடுவினாக்கள் 2026 sslc tamil exam very important 8 marks questions

 


2026 sslc tamil exam very important 8 marks questions

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய நெடுவினாக்கள்

43 
1 காற்று மாசுபாடு 
2 சங்க கால விருந்தோம்பல் 
3 மொழிபெயர்ப்புக் கலை
4 மேடை உரை 
5 கலைஞர் 


44
1 பிரும்மம் 
2 புயலிலே ஒரு தோணி 
3 கோபல்லபுரத்து மக்கள் 
4 பாய்ச்சல் 
5 இராமானுசர் 


45
1 சான்றோர் வளர்த்த தமிழ் 
2 கலைத் திருவிழா சென்று வந்த நிகழ்வு 
3 மதிப்புரை 
4 சாலைப் பாதுகாப்பு 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-03-2026. திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

09-03-2026. திங்கள் 

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : ஆள்வினையுடைமை ;

 குறள் எண் : 611.

குறள் :

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.

உரை :

இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

பழமொழி :

ஆனைக்கும் அடி சறுக்கும்.

A good marksman may miss.

இரண்டொழுக்க பண்புகள்:

1.திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2. எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பொன்மொழி :

+ மனித வாழ்க்கை மற்றவைகளுக் கெல்லாம் மேலானது.மேலான செயல்களினால் மேன்மை அடைகிறது .பிளாட்டோ.

Human life is above all others.

It is exalted by superior actions. - PLATO.

பொது அறிவு :

01.சூரியக் குடும்பத்தில் எந்த கிரகம் பின்னோக்கி சுழல்கிறது?

வெள்ளி -Venus

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பிரமிடுகளைக் கொண்ட நாடு எது?

சூடான் -Sudan

English words :

+ Take off 

remove or leave

+ Take on

accept responsibility

தமிழ் இலக்கணம்:

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும்

1. கடிகாரம் வேகமாக ஓடியது (எங்கு ஓடும்?)

கடிகாரம் வேகமாக இயங்கியது

2. மின்விசிறி வேகமாக சுற்றுகிறது (தன்னைத் தானே சுற்றுவதால் சுழல்கிறது)

மின்விசிறி வேகமாக சுழல்கிறது

தொடரும்...

அறிவியல் களஞ்சியம் :

நிலை : துருவங்கள் காந்தத்தின் இரு முனைகளில் மட்டுமே இருக்கும். காந்தப் புலம் காந்தத்தைச் சுற்றியுள்ள முழுவெளியிலும் பரவியிருக்கும்.

பரிமாணம்: துருவம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளி (point), காந்தப் (region/field).

தொடர்பு: காந்தப் புலக் கோடுகள் ஒரு துருவத்தில் தொடங்கி மற்றொரு துருவத்தில் நுழைகின்றன.

துருவ காந்தம் என்பது காந்தப்புலத்தின் வலிமை குவியும் இடம்

மார்ச் 09 யூரி ககாரின் அவர்களின் பிறந்தநாள்

- Yuri Alekseyevich Gagarin.

பிறப்பு 9 மார்ச் 1934 - இறப்பு 27 மார்ச் 1968.

உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

மார்ச் 09 - சாகீர் உசைன் அவர்களின் பிறந்தநாள்

பிறப்பு 9 மார்ச்சு 1951 - இறப்பு 15 திசம்பர் 2024.

இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார்.

இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகன்.

இவர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார். மும்பையில் பிறந்தார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.

நீதிக்கதை நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான். நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்று தான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார். ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே! நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.

சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை. அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான் அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

இன்றைய செய்திகள் 09.03.2026

கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் முழு உருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* தெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு- அமில மழை எச்சரிக்கை விடுத்த ஈரான்

* ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்கா இஸ்ரேல் படைகள் சரமாரி குண்டுவீச்சு.

விளையாட்டுச் செய்திகள்

நியூசிலாந்து நாட்டில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. வருகிற 15-ந்தேதி தொடங்கும் போட்டியை முன்னிட்டு 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Today's Headlines - 09.03.2026

* The Chief Minister inaugurated a full-size statue of K. B. Sundarambal at Kodumudi.

* An oil storage facility caught fire in Tehran, and Iran has issued a warning about possible acid rain.

* The oil depots in Iran were heavily bombed by the forces of United States and Israel.

Sports News

South Africa national cricket team will participate in a five-match international T20 series to be held in New Zealand.Ahead of the series starting on the 15th, a 15-member squad for South Africa has been announced.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Sunday, March 08, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனிதநேயம்

6th tamil model notes of lesson

lesson plan March 16

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-03-2026 முதல் 20-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

மனிதநேயம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

உதவி செய்யும் பண்பைப் பெறுதல்

9.நுண்திறன்கள்

மனிதநேயத்துடன் வாழ்ந்தோரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_68.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_27.html

https://tamilthugal.blogspot.com/2021/03/3-3-manithaneyam-6th-tamil-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

அன்னை தெரசா குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வள்ளலார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மனிதநேயம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். வள்ளலார், அன்னை தெரசா, கைலாஷ் சத்யார்த்தி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல் நேசித்தல் பற்றிக் கூறி வாழ்வில் கடைப்பிடிக்க உறுதி எடுத்தல்.

          மனிதநேயம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பொறுமை, இரக்கம், இன்சொல் பேசுதல் பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் ..............................

          ந.சி.வி – யாரால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?

உ.சி.வி – அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை  

எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.

வள்ளலார் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பயணம்

7th tamil model notes of lesson

lesson plan March 16

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-03-2026 முதல் 20-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

மானுடம் வெல்லும் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பயணம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தன்னம்பிக்கையுடன் சூழல்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைத் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

மாணவர்கள் தாங்கள் மற்றவர்களுக்கு உதவிய நிகழ்வுகள் குறித்து உரையாற்றுதல்.

பிறருக்கு உதவிசெய்து மகிழ்ந்த ஒருவரின் கதை குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_92.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_70.html

https://tamilthugal.blogspot.com/2020/06/payanam-7th-tamil-virivaanam-thu.html

https://tamilthugal.blogspot.com/2020/03/3-3-seventh-tamil-payanam-term-3-unit-3.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கதை பற்றிக் கூறச்செய்தல்.

உதவிய அனுபவம் குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

பாவண்ணன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பயணம் குறித்து விளக்குதல். பயணம் கதையின் தகவல்களை மாணவர்களுடன் பகிர்தல். மிதிவண்டி பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல். சிறுவனின் மனநிலையையும் அவனின் சுழ்நிலையையும் உணரச் செய்தல். மாணவர்களின் மிதிவண்டி ஓட்டிய அனுபவங்களைக் கேட்டல்.

          பயணம் கதை குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். மிதிவண்டியை விட்டுவிட்டு பேருந்தில் ஏன் ஏறினார் என்பதற்கான விடையைக் கூறச் செய்தல். பிறருக்கு உதவும் பண்போடு வாழப் பழகுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மிதிவண்டி குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல். உதவும் பண்புகளைப் பற்றிப் பேசுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – பயணம் கதையை எழுதியவர் ................................

          ந.சி.வி – பயணம் கதையைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – நீ உன் பொருளை பிறருக்குக் கொடுப்பதாக நினைத்து ஒரு கதை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ சென்று வந்த சுற்றுலா குறித்து எழுதுக.

மிதிவண்டி குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பால் மனம்

8th tamil model notes of lesson

lesson plan March 16

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-03-2026 முதல் 20-03-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பால் மனம்

6.பக்கஎண்

163 - 166

7.கற்றல் விளைவுகள்

T-818 தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் (கதை, கட்டுரை, பாடல் வடிவில் அனுபவங்களை வெளிப்படுத்துதல்)

8.கற்றல் நோக்கங்கள்

சிறுகதைகள் மூலம் மனிதர்களின் உளவியலைப் புரிந்துகொள்ளும் திறன்.

9.நுண்திறன்கள்

நற்பண்புகள் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2025/04/blog-post_3.html

https://tamilthugal.blogspot.com/2025/04/pdf_3.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_81.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_18.html

11.ஆயத்தப்படுத்துதல்

விரும்பும் நற்குணங்களைக் கூறச்செய்தல்.

நீதிநெறிக் கதையைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கோமகள் வாழ்க்கை வரலாற்றை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பால் மனம் கதையைக் கூறி விளக்குதல். நற்பண்புகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். கதை மூலம் அறியும் நீதி குறித்து வினவுதல். தியாகத்தை உணர்தல்.

          குழந்தை மனம் பற்றி அறிந்துகொள்ளுதல். நற்பண்புகளுடன் வாழ உறுதிகொள்ளுதல். இது போன்ற கதைகளைப் படைக்க முயலுதல். கதைகளைக் கூறச் செய்தல்.


          மனவரைபடம் மூலம் கதையை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கோமகள் குறித்துக் கூறுதல். குழந்தைகளின் பண்புகள் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கோமகளின் இயற்பெயர் ..............................

          ந.சி.வி – குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்களைப் பற்றித் தொகுத்து எழுதுக.

          உ.சி.வி – நல்ல சமூகம் உருவாக உதவும் நற்பண்புகளை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உனக்குப் பிடித்த தலைவர்களையும் அவர்களின் பண்புகளையும் எழுதுக.

நல்ல பழக்கங்கள் குறித்து இணையம் மூலம் அறிதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 16

 9th tamil model notes of lesson

lesson plan March 16

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-03-2026 முதல் 20-03-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்கள்

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-1.html

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-2.html

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-3.html

4.திருப்புதல் வினாக்கள்

விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.          

அ. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

ஆ. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.

"கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ" இடஞ்சுட்டிப் பொருள் தருக.

 

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

கனவிலும் கூட இன்னாதது எவர் நட்பு?

உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.  

எனைத்தானும் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.              

அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

1. உலகில் மூவாயிரம் மொழிகள் .................................. (பேசு)

2. தவறுகளைத் ............................ (திருத்து)                                

ஏறு தழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

அடிபிறழாமல் எழுதுக.                          

அ. தித்திக்கும் முதல் மண்ணில் முடிய தமிழ்விடு தூது மனப்பாடப் பாடல்                 

ஆ. காடெல்லாம் எனத்தொடங்கும் பெரிய புராணம் மனப்பாடப் பாடல்  

அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

ஒற்றளபெடையை விளக்குக.

சொற்பொருள் பின்வருநிலையணி - விளக்குக.           

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.           

கேள்வி அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.

 

உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய “கால்முளைத்த கதைகள்” (ஆசிரியர் எஸ்.இராமகிருஷ்ணன்) என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

பள்ளி நேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி விண்ணப்பம் எழுதுக.        

அன்பு என்பவர் அழகாபுரியில் உள்ள அஞ்சலகத்தில் தன் கணக்கில் இருந்து 10000 பணம் பெற விரும்புகிறார். தேர்வர் தன்னை அன்பாக எண்ணி படிவத்தை நிரப்பவும்.        

ஆ உங்களுடைய நாள்குறிப்பில் இடம்பெற்ற ஒரு வாரத்திற்குரிய மகிழ்ச்சியான செய்திகளைத் தொகுத்து அட்டவணைப்படுத்துக.

வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.

பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.                  

உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றினை வடிவமைக்க.           

தமிழ்த்துகள்

Blog Archive