கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 16, 2026

2026 பத்தாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையேடு செங்கல்பட்டு 10th tamil slow learner guide

 


10th tamil slow learner guide chengalpattu


பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு செங்கல்பட்டு மாவட்டம் 2026 pdf

     பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil slow learner's guide material for focused learners sslc exam preparation chengalpattu district 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-02-2026. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

16-02-2026. திங்கள்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து தெளிதல் ;

குறள் எண் : 501.

குறள் :

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்

உரை :

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

அற்ப அறிவு அல்லற்கிடம்.

A little knowledge is a dangerous thing.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும்

குறைக்காது. நபிகள் நாயகம்

பொது அறிவு :

01.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பழம் எது?

யுபரி கிங் மெலன்

Yubari King melon

02.இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை யார் நியமிக்கிறார்கள்?

குடியரசுத் தலைவர் President

English words:

foliage all the leaves of a tree or plant.

ஒரு மரம் அல்லது செடியின் இலைத்தொகுதி.

launch - start something new,

புதிதாக ஒன்றைத் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்:

.... 2

1. சும்மா சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன் 
பொருள் - திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன்

2. கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?

பொருள் - அமைதியாக

3. சும்மா சும்மா ஏன் வருகிறாய்? 
பொருள் - அடிக்கடி

சும்மா என்பது ஒரு மாயச் சொல் தான் இல்லையா? எத்தனை சும்மாக்கள் பார்த்து விட்டோம்.

அறிவியல் களஞ்சியம்:

 சமீபத்திய ஆய்வில், ஆஸ்பர்கிலஸ் டெரியஸ் மற்றும் என்ஜியோடோன்டியம் ஆல்பம் ஆகிய இரண்டு பூஞ்சைகள் பாட்டில் மூடிகள் மற்றும் உணவுப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பாலிப்ரோப்பிலீன் என்ற பிளாஸ்டிக் வகையை உடைக்கும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூஞ்சைகளால் பாலிப்ரொப்பிலீனின் ஆய்வக மாதிரிகளை வெறும் 140 நாட்களில் உடைக்க முடிந்தது, இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் பிளாஸ்டிக்கை தானே சிதைவடைவதற்கு எடுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

பிப்ரவரி 16

-தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவுநாள்

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke,

பிறப்பு ஏப்ரல் 30, 1870 - இறப்பு பிப்ரவரி 16, 1944.

இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும். அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

நீதிக்கதை -ஒரு வரம் மூன்று பலன்கள்

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன். மீனும், நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்: மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்.

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்.

கடைசியாக மனைவி கேட்டாள்: நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்? விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும் என்பது தான் அவன் கேட்ட வரம்.

இன்றைய செய்திகள் 16.02.2026

* சென்னையில் 'L' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை அசாமில் அமைகிறது!

* இந்தியாவில் சுமார் 4 கோடியே 20 லட்சம் பேர் தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

விளையாட்டுச் செய்திகள்

டி20 தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா.

டி20 உலகக் கோப்பை 2026: 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Today's Headlines 16.02.2026

* Chief Minister M.K. Stalin inaugurated the 'L' shaped flyover in Chennai.

* India's first underwater road-rail tunnel to be built in Assam.

* Studies suggest that around 42 million people in India are suffering from thyroid disorder.

SPORTS NEWS

T 20 Series: India easily beat Australia Women in first match.

T 20 World Cup 2026: West Indies beat Nepal by 9 wickets

International Table Tennis Tournament is being held in Chennai.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, February 15, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நால்வகைச்சொற்கள், திருக்குறள்

6th tamil model notes of lesson

lesson plan February 23

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

நால்வகைச்சொற்கள், திருக்குறள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

நால்வகைச் சொற்களை அறியும் திறன்.

திருக்குறளின் அறக்கருத்துகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/3-1-naalvagai-sorkal-tamil-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_58.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1_18.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-1-6th-tamil-ilakanam-term-3-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video-6-3_9.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_97.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

11.ஆயத்தப்படுத்துதல்

பல்வேறு சொற்களைக் கூறச்செய்தல்.

திருக்குறள் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

நால்வகைச் சொற்களை அறிமுகப்படுத்துதல்.

திருக்குறளின் சிறப்புகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

சொல் குறித்துக் கூறுதல். பெயர், வினை, இடை, உரிச்சொற்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          உதாரணங்களுடன் விளக்குதல்.

          சொற்களைக் கொடுத்து வகைகளை அறியச் செய்தல்.

          நால்வகைச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்.

          திருக்குறள் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். குறள்களின் பொருளை விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சொற்களின் வகைகளை மாணவர்களிடம் உணர்த்துதல். சொல் பற்றி அறிந்து இனங்காணச் செய்தல். சொந்தமாகச் சொற்களை எழுதுதல்.

திருக்குறள் குறித்து விளக்குதல். குறள் கூறும் பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – சொல் என்றால் என்ன?

ஏழைகளுக்கு உதவி செய்வதே ..............................

          ந.சி.வி – சொற்களின் வகைகளை எழுதுக.

உ.சி.வி – உனக்குப் பிடித்த குறளையும் அதன் பொருளையும் எழுதுக.

நீ அறிந்த உரிச்சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சொல் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இலக்கணம் – பொது, திருக்குறள்

7th tamil model notes of lesson

lesson plan February 23

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

இலக்கணம் பொது, திருக்குறள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்

திருக்குறள் அறக்கருத்துகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் குறித்து அறிதல்.

இரட்டைக் கிளவியைப் பயன்படுத்தி உரையாடல் உருவாக்குதல்.

நாடு, அரண், பெருமை பற்றிய திருக்குறள்களை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2023/07/4-10th-tamil-teaching-aid-ilakkanam-pal.html

https://tamilthugal.blogspot.com/2018/05/thinai.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_18.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

11.ஆயத்தப்படுத்துதல்

திணை, பால் பற்றிக் கூறச்செய்தல்.

அறிந்த திருக்குறள்களைப் பொருளுடன் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

இலக்கணம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

திருக்குறளின் பெருமைகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          திணை, பால், எண், இடம் குறித்து விளக்குதல். எடுத்துக்காட்டுகளை மாணவர்களுடன் பகிர்தல். இரட்டைக்கிளவி பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அடுக்குத்தொடர் பற்றி அறியச் செய்தல். காலம் வகைகளை விளக்குதல்.

          இரட்டைக்கிளவி குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் சொற்களைப் பட்டியலிடுதல்.

          வினைசெயல் வகை, அவைஅஞ்சாமை, நாடு, அரண், பெருமை போன்ற அதிகாரங்களிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள குறள்களை விளக்குதல். குறளின் பொருளையும் அணி நயத்தையும் விளக்குதல். குறள் கூறும் அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மூவிடம் குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல்.

குறளின் சிறப்புகளை விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – செல்கின்றன என்பதற்கு உரிய பால் ................................

............................... ஒரு நாட்டின் அரணன்று

          ந.சி.வி – இரட்டைக்கிளவிக்கு இரண்டு சான்றுகள் தருக.

உ.சி.வி – அடுக்குத்தொடர் – இரட்டைக்கிளவி – ஒப்பிட்டு எழுதுக.

நீங்கள் விரும்பும் குறள் குறித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ அறிந்த அடுக்குத்தொடர்கள் 5 எழுதுக.

திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேற்றுமை, திருக்குறள்

8th tamil model notes of lesson

lesson plan February 23

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

அறத்தால் வருவதே இன்பம் – கற்கண்டு, திருக்குறள்

5.உட்பாடத்தலைப்பு

வேற்றுமை, திருக்குறள்.

6.பக்கஎண்

144 - 154

7.கற்றல் விளைவுகள்

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்).

T-810 பல்வேறு வகை படித்தல் பகுதிகளில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் அவற்றைப் புரிந்துகொண்டு நயம்பாராட்டுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கொடுக்கப்பட்ட சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள் பயனிலைகளை அட்டவணைப்படுத்தி எழுதுதல்.

அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.

9.நுண்திறன்கள்

வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருள்களையும் அட்டவணைப்படுத்தி எழுதுதல்.

திருக்குறளின் பெருமை பற்றியும் திருவள்ளுவரின் பெருமை பற்றியும் பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/08/4-vetrumai-8th-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/02/vetrumai.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_54.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-1.html          

https://tamilthugal.blogspot.com/2026/02/blog-post_19.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

11.ஆயத்தப்படுத்துதல்

வேற்றுமை உருபுகள் இல்லாத தொடர்களைக் கூறி பொருள் வேறுபடுவதை உணர்த்துதல்.

மாணவர்கள் அறிந்த திருக்குறள்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வேற்றுமை வகைகளை அறிமுகப்படுத்துதல்.

திருக்குறளின் பெருமைகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

வேற்றுமை குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். வேற்றுமை வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

வேற்றுமை வரும் பொருள்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

வேற்றுமை உருபுகளையும் சொல்லுருபுகளையும் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.

திருக்குறளைப் பொருளுடன் விளக்குதல். வாழ்வில் குறள் நெறிகளைப் பின்பற்றப் பழகுதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வேற்றுமையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்தல்., திருக்குறளின் சிறப்புகளை உணர்த்துதல்.

15.மதிப்பீடு

          எ.சி.விபெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது ..............................

          ந.சி.விஉடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?

                   எழுவாய் வேற்றுமையை விளக்குக.

          உ.சி.விநட்பு, நட்பு ஆராய்தல் அதிகாரங்களிலுள்ள 2 குறள்களுக்கு விளக்கம் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நான்காம் வேற்றுமைக்குப் புதிய எடுத்துக்காட்டுகளை எழுதுக.

திருவள்ளுவர் குறித்த செய்திகளைத் திரட்டுக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 23

9th tamil model notes of lesson

lesson plan February 23

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

4.திருப்புதல் வினாக்கள்

எண்ணுப்பெயர், திசைப்பெயர்களில் வல்லினம் மிகுந்து வருவதைச் சான்றுடன் எழுதுக.

அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

சொற்பொருள் பின்வருநிலை அணியை விளக்குக.                

பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.  

இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

பள்ளி நேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி விண்ணப்பம் எழுதுக.

வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.

நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக.                            

தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக. 

கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?

நடுகல் என்றால் என்ன?

நிலையான வானத்தில், தோன்றி மறையும் காட்சியைப் பெரியபுராணம் எதனுடன் ஒப்பிடுகிறது?

தென்திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

அன்பு – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 23

 10th tamil model notes of lesson

lesson plan February 23

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

பொதுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............               தமிழ்த்துகள்

அ.முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்                ஆ.குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்              ஈ.மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

2.”மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ” இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறி.

அ.கருமை                        ஆ.பச்சை                         இ.பழுப்பு                 ஈ.நீலம்

3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

4. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ.குலைப்பெயர் வகை                                    ஆ.மணிப்பெயர் வகை                 

இ.கிளைப்பெயர் வகை                                     ஈ.இலைப்பெயர் வகை

5 சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

6. பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

7. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

 உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது”.

பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

8. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

9. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

10. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

11, நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழி நின்று விளக்குக.  

12. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

13. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

படிப்போம் பயன்படுத்துவோம்.      

14. Storyteller                                                 

15. Screenplay                   

16. வெய்யோனொளி... எனத் தொடங்கும் கம்பராமாயண மனப்பாடப்பாடலை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive