கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 07, 2026

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 13

 


NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 13 link touch below👇




TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 13

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07.04.2026 - செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

07.04.2026 - செவ்வாய்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரணியல் ;

அதிகாரம் : நாடு

; குறள் எண் : 732.

குறள் :

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு.

உரை :

மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்

பழமொழி :

உன்னை நம்பினால் வெற்றி பெறுவாய்.

Believe in yourself and succeed.

இரண்டொழுக்க பண்புகள்:

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

* சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிவருகின்றன . -ஏபிஜே அப்துல் கலாம்.

பொது அறிவு :

01. நமது உடலில் ரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் எது?

வைட்டமின் கே -Vitamin K

02. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது எது?

அபெர்டீன், ஸ்காட்லாந்து 
Aberdeen, Scotland.

English words :

Appraisal - evaluation மதிப்பீடு 

Cautious - being careful to avoid risks.
எச்சரிக்கை 

தமிழ் இலக்கணம் :

ஒரு, ஓர் வரும் இடங்கள் எவை என்று பார்ப்போம்

உயிர் எழுத்துகள் முன் ஓர் வரும்

ஓர் அலை

ஓர் ஆயுதம்

ஓர் இலை

ஓர் ஈ

ஓர் ஒட்டகம்

உயிர்மெய் எழுத்துகள் முன் ஒரு வரும்

ஒரு காகம்

ஒரு மெத்தை

ஒரு சத்திரம்

ஒரு மரம்

ஒரு பழம்

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் 50% முதல் 80% வரையிலான ஆக்ஸிஜன் கடல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்று பல்வேறு விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இந்த உற்பத்தியின் பெரும்பகுதி, தாவர அடிப்படையிலான கடல்வாழ் உயிரினங்களால் நடைபெறுகிறது. கடல்வாழ் பிளாங்க்டன்கள், பாசிகள், கடற்பாசிகள் மற்றும் சில பாக்டீரியாக்கள் ஒளிச்சேர்க்கை செய்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

ஏப்ரல் 7

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் அன்று கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

ஏப்ரல் 7

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்

பிறப்பு 7 ஏப்ரல் 1770 - இறப்பு 23 ஏப்ரல் 1850.

ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார்

இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.

நீதிக்கதை - பசி

ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருக்கையில், ஓர் எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது. உடனே மனம் உடைந்து போனான்.

அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார். அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன். மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.

அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் முடியவில்லை மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார். அதற்கு அரசர் நடந்ததைக் கூறினார். நம் நாட்டு பூனைகள் அதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன. எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.

ஆனால் அவற்றாலும் அந்த எலியைப் பிடிக்க முடியவில்லை. எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில், அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதுக்கு? எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை...

ஆனால் இளவரசர் சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதிசயம்! ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான்.

உடனே இளவரசருக்குச் சுரீர் என்றது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?

நீதி:

எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.

இன்றைய செய்திகள்

07.04.2026

* 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி அன்று வெளியாகும்.

* இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரியோனை குறிவைத்து, ஈரான் படைகள் மிகப்பெரிய அளவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன.

*விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: புவனேஷ்வர் குமார் சாதனை

Today's Headlines 07.04.2026

* The Class 12 public examination results will be released on May 8.

156 Chinese nationals have been arrested in Sri Lanka for being involved in large-scale international online financial fraud operations.

* Iran has carried out a major drone attack targeting Ben Gurion International Airport in Tel Aviv, Israel.

Sports News

Bhuvneshwar Kumar becomes the first fast bowler to take 200 wickets in the Indian Premier League.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Monday, April 06, 2026

TET TRB TNPSC TAMIL ILAKKANAM THOLILPEYAR FREE ONLINE QUIZ தொழிற்பெயர் தமிழ் இலக்கண வினாடி வினா

தமிழ்த்துகள் தொழிற்பெயர் இலக்கண வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

தமிழ் இலக்கணம்: தொழிற்பெயர்

வினாக்கள்: 20 | காலம்: 10:00 நிமிடங்கள்

10:00

TET TRB TNPSC TAMIL ILAKKANAM AKUPEYAR FREE ONLINE QUIZ ஆகுபெயர் தமிழ் இலக்கண வினாடி வினா

ஆகுபெயர் இலக்கண வினாடி வினா

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணம்: ஆகுபெயர் (20 வினாக்கள்)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

10:00

TET TRB TNPSC TAMIL ILAKKANAM VINAIMUTRU FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம் - வினைமுற்று வினாடிவினா

தமிழ்த்துகள் - தமிழ் இலக்கணம்: வினைமுற்று

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

மொத்தம்: 20 வினாக்கள் | காலம்: 10 நிமிடங்கள்

10:00

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 12

 


NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 12 link touch below👇




TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 12

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06.04.2026 . திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

06.04.2026 . திங்கள் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல் : அரணியல் ;

அதிகாரம் : நாடு

; குறள் எண் : 731.

குறள் :

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு.

உரை :

குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

பழமொழி :

வெற்றிக்கு கல்வியே திறவுகோல்.

Education is the key to success.

இரண்டொழுக்க பண்புகள்:

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியைத் தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்

பொன்மொழி :

ஒருவரை ஒருவர் மன்னிக்க பழகிக்கொள்வோம். அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும் - லியோ டால்ஸ்டாய்.

பொது அறிவு :

01.தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கப்படும் இடம் எது?

கழுகுமலை- தூத்துக்குடி 

Kazhugumalai- Thoothukudi

02.இந்தியாவின் தேசிய ரயில் அருங்காட்சியகம் எங்குள்ளது?

புதுடில்லி -Newdelhi

English words:

bluff to try to make people believe that something is true when it is not.

பொய்யான ஒன்றை மெய்யெனக் கூறி பிறரை ஏய்க்க முயலுதல்

brackish about water containing some salt but not as much as sea water 

கடல்நீர் அளவுக்கு அல்லாது ஓரளவு உப்பு நீரான.

தமிழ் இலக்கணம்:

இன்று நாம் தாவரங்களின் இலைகளின் சரியான தமிழ்ச் சொல் அறிந்து கொள்வோம்

1. ஆல், அரசு, மா, பலா, வாழை இலை

2. அகத்தி, பசலை, முருங்கை - கீரை

3. அருகு, கோரை - புல்

4. நெல், வரகு பிற தானியங்கள் - தாள்

5. மல்லி - தழை

6. சப்பாத்திக் கள்ளி, தாழை - மடல்

7. கரும்பு, நாணல் - தோகை

8. பனை, தென்னை - ஓலை

9. கமுகு (பாக்கு) -கூந்தல்

அறிவியல் களஞ்சியம் :

தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்.

நீதிக்கதை -முல்லைக்காட்டு குரங்கு!

முல்லைக்காட்டுக்கு புதிதாக குரங்கு ஒன்று வந்தது. அந்த குரங்கின் பெயர் கிட்டு! அது நிறைய மந்திர வித்தைகளை செய்து காட்டியது. வெறும் கையை காட்டி, அந்த கையை அப்படியும் இப்படியும் ஆட்டி ஆட்டி சர்க்கரையை வரவைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த சர்க்கரையை அனைவருக்கும் கொடுத்தது. ஒரு பூவை எடுத்து அப்படியே கைகளில் வைத்து கசக்கி தூக்கி வானத்தில் வீசியது. பூ குருவியாக மாறி வானத்தில் பறந்தது. அதைப்பார்த்து முல்லைக்காட்டு முயல்களும், எலிகளும், யானைகளும், மான்களும் ஆச்சர்யப்பட்டன. அனைவரும் கைத்தட்டி மகிழ்ந்தனர்.

வித்தைகள் காட்டிக்கொண்டிருந்த குரங்கு திடீரென கூட்டத்தை நோக்கி உங்கள் தலைவன் யார்?" என்று கேட்டது. "எங்களுக்கெல்லாம் தலைவர் சிங்கராஜாதான்! ஏன் கேக்கறீங்க?" என்றது எலிக்குட்டி. பதிலே சொல்லாமல் சிரித்துக்கொண்டே சிங்கத்தின் குகைக்கு கிளம்பியது குரங்கு கிட்டு. சிங்கராஜாவின் குகை வாசலில் நின்றுகொண்டு "ஏய் கோழை சிங்கமே.. வெளியேவா.. தைரியமிருந்தா என்னோடு மோதிப்பார்" என்று கூப்பிட்டது. குகைக்குள்ளேயிருந்து நரியாரும் சிங்கராஜாவும் வெளியே வந்தனர்.

"வணக்கம் குரங்காரே நீங்க யார் உங்களை இந்த காட்டில் பார்த்ததில்லையே! ஏன் கோபமாக கூச்சல் போட்டுகிட்டு இருக்கீங்க" என்றது. "நான் இமயமலையிலிருந்து வருகிறேன், கடவுள் எனக்கு நிறைய மந்திர சக்தி கொடுத்திருக்கிறார். மரியாதையாக இந்த காட்டை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடிவிடு. இல்லையென்றால் உன்னை ஒரே நிமிடத்தில் அழித்துவிடுவேன். தைரியமிருந்தால் என்னோடு சண்டை போட்டு ஜெயித்துகாட்டு!" என்று சிங்கராஜாவை சண்டைக்கு அழைத்தது.

தன்னுடைய வெறும் கையை அப்படி இப்படி ஆட்டி அதிலிருந்து சர்க்கரையை வரவழைத்து "அஸ்கு லஸ்கா.. குஸ்கு புஸ்கா" என்று சொல்லி சிங்கத்தின் மீது வீசியது! சிங்கத்துக்கு ரொம்பே கோபம் வந்துவிட்டது.. "மவனே உன்னை அடிச்சி நொறுக்கிடறேன்" என குரங்கை அடிக்கப் பாய்ந்தார். உடனே நரியார் சிங்கத்திடம் சென்றார். "சிங்கராஜா இவன் ஒரு டம்மிபீஸு.. இவனை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க" என்றார் நரியார் நந்து.

குரங்கிடம் போய் நரியார் பேசினார். "குரங்காரே.. ரொம்ப பேசாதீங்க..நான் கூட மிகப்பெரிய மந்திரவாதிதான். என்னோடு உங்களால் போட்டிபோட முடியுமா? நான் செய்யும் மாயாஜாலத்தை உங்களால் செய்ய முடியுமா?" என்றார். "அப்படி என்ன என்னாலேயே செய்யமுடியாத மந்திர வித்தை?" என்று திமிராக கேட்டது கிட்டு. "நாளைக்கு காலைல சூரியன் உதிக்கும்போது ஆற்றங்கரைக்கு வந்துடுங்க குரங்காரே.. நம்ம போட்டிய அங்க வச்சிக்கலாம்" என்றார் நரியார்.

உடனே குரங்கு ஆவேசமாக "ஏய் நரியே! நாளைக்கு போட்டில நீ தோத்துட்டா சிங்கராஜா இந்த காட்டைவிட்டே போயிடணும். அதுக்கு பிறகு இந்த முல்லைக்காட்டுக்கு நான்தான் ராஜா! நான் வச்சதுதான் சட்டம். எல்லாரும் என் பேச்சைதான் கேக்கணும்." என்றது குரங்கு. "ஒருவேளை நீங்க தோத்துட்டா என்ன பண்றது குரங்காரே" என்றார் நரியார். உடனே குரங்கு "சிங்கராஜா காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு போய்விடுகிறேன்" என்றது.

இரவெல்லாம் குரங்கு கிட்டுவுக்கு தூக்கமே வரவில்லை. "அப்படி என்ன நமக்கு தெரியாத வித்தையாக இருக்கும்" என்று யோசித்துக் கொண்டேயிருந்தது. அடுத்த நாள் ஆற்றங்கரையில் நரியார் நந்துவும் குரங்கு கிட்டுவும் சந்தித்தனர். முல்லைக்காட்டில் இருக்கிற அத்தனை பேரும் அங்கே கூடியிருந்தனர். சிங்கராஜாவும் ஆர்வத்தோடு வந்திருந்தார்."இந்த நரியாருக்கு ஒரு மந்திரமும் தெரியாதே எப்படி ஜெயிக்கப்போறார்னே புரியலையே" என்று சிங்கராஜாவுக்கு மிகவும் பயமாக இருந்தது.

நரியார் கிட்டுவை கூப்பிட்டு ஆற்றுக்கு நடுவில் இருந்த ஒரு கொடியைக் காட்டினார். "குரங்காரே அதோ அங்கே ஆத்துக்கு நடுவுல ஒரு கொடி தெரியுதே! அதை ஆற்றின் மேல் நடந்து சென்று எடுத்துட்டு வராங்களோ அவங்கதான் வின்னர்! கைகளில் தண்ணீர் படக்கூடாது" என்றார் நரியார். கிட்டுவுக்கு ஆற்றில் நடக்க தெரியாது. இருந்தாலும் யாராலும் தண்ணீரில் நடக்க முடியாதே என்கிற தைரியத்தில் ஒப்புக்கொண்டார். எப்படியும் நரியார் தண்ணீரில் விழுந்துவிடுவார் என நினைத்தார்.

இருவரும் தயாராயினர். முதலில் நரியார் ஓடிப்போய் ஆற்றுக்குள் குதித்தார். எல்லோரும் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தனர். நரியார் தண்ணீருக்குள் மூழ்கவில்லை. அப்படியே தண்ணீர் மேல் ஒற்றைக்காலில் நின்றார். எல்லோரும் சூப்பர் சூப்பர் என கைத்தட்டினர். அப்படியே பொறுமையாக ஆற்றில் நடந்த நரியார், ஆற்றின் மேலேயே நடனம் ஆடினார். குரங்கு கிட்டுவைப் பார்த்து சிரித்து கேலி செய்து சிரித்தார். ஆற்றுக்கு நடுவில் இருந்த கொடியை எடுத்துக்கொண்டு வந்து குரங்கிடம் காட்டினார்.

"குரங்காரே நான் ஆத்துல நடந்து போயிட்டு வந்தாச்சு. இப்போ நீங்க... நடந்துபோய் இன்னொரு கொடியை எடுத்துட்டு வாங்க" என்றார் நரியார். குரங்குக்கு தலையே சுற்றுவதைப்போல இருந்தது. அவர் எத்தனையோ மாயாஜால வித்தைகள் கற்றிருந்தாலும் இது மட்டும் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்யலாம் என நினைத்து ஆற்றுக்குள் குதித்தார். தொப்புக்கடீர் என தண்ணீருக்குள் விழுந்தார்.

"நான் தோத்துட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க இந்தாங்க மாணிக்கக்கல்" என்று சிங்கராஜாவிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார். "குரங்காரே எவ்ளோதான் நமக்கு திறமையிருந்தாலும் ஆணவமாக இருக்க கூடாது, அது நம்மையே அழிச்சிடும்" என்று அறிவுரை கூறினார் சிங்கராஜா. மந்திரவாதி குரங்கு காட்டைவிட்டே ஓடியது.

சிங்கராஜாவுக்கும் முல்லைக்காட்டு விலங்குகளுக்கும் ஒன்று மட்டும் புரியவேயில்லை. நரியார் நந்துவுக்கு எந்த மந்திரமும் தெரியாது பிறகு எப்படி நீரில் நடந்துகாட்டினார்? எலிக்குட்டி போய் நரியாரிடம் கேட்டது "நரியாரே எப்படி நீங்க தண்ணீல நடந்துபோனீங்க" என்றது. சிங்கராஜாவும் "ஆமாம் நரியாரே நீங்க எப்படி தண்ணீரில் நடந்து போனீங்க" என்றார்.

"சிங்கராஜா அந்த குரங்குக்கு மந்திரமும் தெரியாது மாயமும் தெரியாது. அது ஒரு மோசடி பேர்வழி. விரலுக்கு நடுவில் சின்ன சின்ன சர்க்கரை கட்டிகளை வைத்துக்கொண்டு கையை அப்படியும் இப்படியும் ஆட்டி அந்த கட்டிகளை உடைத்து பொடியாக்கி ஏதோ வெறும் கையில் சக்கரையை வரவைத்த மாதிரி உங்கள் மேல் வீசியதை பார்த்தேன்." என்று நரியார் சொல்ல.. "ஓஹோ..!" என்று ஆச்சர்யப்பட்டார் சிங்கராஜா

"அப்போதே தெரிந்துவிட்டது அவன் ஒரு போலி மந்திரவாதி என்று. அதனால் அவனை ஏமாற்றி ஜெயிக்க நினைத்தேன். அதனால் குரங்கினை ஆற்றில் நடக்கிற போட்டிக்கு அழைத்தேன்." என்றார் நரியார். "அதுசரிங்க நரியாரே எப்படி தண்ணீரில் நடந்து சென்றீர்கள்" என்றார் சிங்கராஜா.

"அதுவா... நேற்று இரவு ஆற்றில் இருக்கிற நம் ஆமையாரையும் அவருடைய நண்பர்களையும் சந்தித்து ஆற்றின் குறிப்பிட்ட சில இடங்களில் வெளியே தெரியாதபடி தண்ணீருக்குள் மிதக்கும்படி சொல்லியிருந்தேன் அதனால் ஆற்றின் மேல் அவர்களுடைய முதுகில் காலைவைத்து ஜாலியாக நடந்து சென்றேன். இந்த குரங்கு நடக்கும்போது ஆமையார் நகர்ந்து போய்விட்டிருந்தார்! அவ்வளவுதான்!" என்று புன்னகை செய்தார்.

"பலே நரியாரே! அசத்திட்டீங்க" என்று சிங்கராஜா கைதட்டி வாழ்த்த.. இதை கேட்டுக்கொண்டிருந்த முல்லைக்காட்டின் மற்ற விலங்குகளும் கைதட்டி மகிழ்ந்தன.

இன்றைய செய்திகள் 06.04.2026

* இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு எப்போதும் ஒரு குறிப்பிட்ட நாட்டை சார்ந்திருப்ப தில்லை. வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது

* ஈரானின் மிக உயரமான பாலத்தை அமெரிக்க தகர்த்துள்ள நிலையில் வளைகுடாவில் உள்ள 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டமிட்டுள்ளது.

* ஏப்ரல் 21 முதல் 23 வரை கருத்துக்கணிப்புகளை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இந்திய அணி

ஐபிஎல் 2026 போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

Today's Headlines 06.04.2026

* India does not depend on any single country for its fuel needs. It imports crude oil from multiple nations, including Gulf countries.

* Following the destruction of Iran's tallest bridge by the United States, Iran is reportedly planning to destroy 8 bridges in the Gulf region.

* The Election Commission has imposed a ban on broadcasting opinion polls from April 21st to 23rd

SPORTS NEWS

The Indian team is currently touring Zimbabwe for matches.

In the IPL 2026 tournament, Rajasthan Royals secured their second win of the season by defeating Gujarat Titans by 6 runs.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, April 05, 2026

TET TRB TNPSC TAMIL ILAKKANAM INA ELUTHUGAL FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம்: இன எழுத்துகள் வினாடிவினா

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணம்: இன எழுத்துகள் (Ina Eluthugal)

மொத்த வினாக்கள்: 20 | போட்டித் தேர்வு மாதிரி

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641


TET TRB TNPSC TAMIL ILAKKANAM MOLI MUTHAL IRUTHI ELUTHUGAL FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம்: மொழி முதல் & இறுதி எழுத்துகள் வினாடிவினா

தமிழ் இலக்கணம்: மொழி முதல் & இறுதி எழுத்துகள்

மொத்த வினாக்கள்: 20 | போட்டித் தேர்வு மாதிரி

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

TET TRB TNPSC TAMIL ILAKKANAM SUTTU, VINA ELUTHUGAL FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம்: சுட்டு & வினா எழுத்துகள் வினாடி-வினா

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணம்: சுட்டு & வினா எழுத்துகள்

TNPSC / TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி வினாடி-வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

TET TRB TNPSC TAMIL ILAKKANAM NALVAKAI SORKAL FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம்: நால்வகைச் சொற்கள் வினாடிவினா

தமிழ்த்துகள் - தமிழ் இலக்கணம்: நால்வகைச் சொற்கள் (MCQ)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

மொத்த வினாக்கள்: 20


AFTER SUBMIT SCROLL UP TOP SEE CORRECT ANSWER AND SCORE

TET TRB TNPSC TAMIL ILAKKANAM PEYARCHOL FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம் பெயர்ச்சொல் வினாடிவினா

 

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணம்: பெயர்ச்சொல் வினாடி-வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

உங்கள் மதிப்பெண்: / 20

AFTER SUBMIT SCROLL UP TOP SEE CORRECT ANSWER AND SCORE

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 11

 


NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 11 link touch below👇




TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 11

 

Saturday, April 04, 2026

ஈஸ்டர் வாழ்த்துகள் Happy Easter

 


Easter greeting poem of the risen man happy easter உயிர்த்தெழுந்த நாயகன் ஈஸ்டர் வாழ்த்துக் கவிதை

 


Easter greeting poem of the risen man happy easter

TET TRB TNPSC TAMIL GRAMMAR ANI ILAKKANAM FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணப் பயிற்சித் தேர்வு வினாடிவினா (அணி இலக்கணம்)

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணப் பயிற்சித் தேர்வு (அணி இலக்கணம்)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

AFTER SUBMIT SCROLL UP TOP SEE CORRECT ANSWER AND SCORE

TET TRB TNPSC TAMIL YAPPU ILAKKANAM GRAMMAR FREE ONLINE QUIZ தமிழ் யாப்பிலக்கணம் வினாடி வினா

தமிழ்த்துகள் தமிழ் யாப்பிலக்கணம் வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

1. யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
நான்கு
ஐந்து
ஆறு
எட்டு
சரியான விடை: ஆறு (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை)
2. குறில் எழுத்து தனித்து வருவது எது?
நேரசை
நிரையசை
அலகு
தளை
சரியான விடை: நேரசை
3. இரண்டு குறில் எழுத்துக்கள் இணைந்து வருவது?
நேரசை
நிரையசை
மூவசைச்சீர்
ஈரசைச்சீர்
சரியான விடை: நிரையசை
4. 'தேமா', 'புளிமா' என்பன எவ்வகைச் சீர்கள்?
மூவசைச்சீர்
காய்ச்சீர்
ஆசிரிய உரிச்சீர்
வஞ்சி உரிச்சீர்
சரியான விடை: ஆசிரிய உரிச்சீர் (ஈரசைச்சீர்)
5. வெண்பாவிற்குரிய தளை எது?
இயற்சீர் வெண்டளை
கலித்தளை
ஒன்றிய வஞ்சித்தளை
நேரொன்று ஆசிரியத்தளை
சரியான விடை: இயற்சீர் வெண்டளை / வெண்சீர் வெண்டளை
6. நான்கு சீர்களைக் கொண்ட அடி எது?
குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
சரியான விடை: அளவடி (நேரடி)
7. முதல் எழுத்து ஒன்றி வருவது எது?
எதுகை
மோனை
இயைபு
முரண்
சரியான விடை: மோனை
8. இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
மோனை
எதுகை
அந்தாதி
அளபெடை
சரியான விடை: எதுகை
9. காய்ச்சீரின் மற்றொரு பெயர் என்ன?
வஞ்சி உரிச்சீர்
வெண்பா உரிச்சீர்
ஆசிரிய உரிச்சீர்
மூவசைச்சீர்
சரியான விடை: வெண்பா உரிச்சீர்
10. 'செப்பலோசை' எவ்வகை பாவிற்குரியது?
ஆசிரியப்பா
வெண்பா
கலிப்பா
வஞ்சிப்பா
சரியான விடை: வெண்பா
11. அகவலோசை கொண்ட பா எது?
வெண்பா
கலிப்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
சரியான விடை: ஆசிரியப்பா
12. துள்ளலோசை எவ்வகை பாவிற்குரியது?
கலிப்பா
வஞ்சிப்பா
ஆசிரியப்பா
வெண்பா
சரியான விடை: கலிப்பா
13. தூங்கலோசை எவ்வகை பாவிற்குரியது?
கலிப்பா
வஞ்சிப்பா
வெண்பா
ஆசிரியப்பா
சரியான விடை: வஞ்சிப்பா
14. ஈரசைச்சீர்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு
நான்கு
ஆறு
எட்டு
சரியான விடை: நான்கு (தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்)
15. மூவசைச்சீர்கள் மொத்தம் எத்தனை?
நான்கு
ஆறு
எட்டு
பத்து
சரியான விடை: எட்டு
16. 'மலர்' என்பது யாப்பு இலக்கணப்படி எதனைக் குறிக்கும்?
நேரசை
நிரையசை
நேர்பு
நிரைபு
சரியான விடை: நிரையசை
17. ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ, சீரோ மீண்டும் வருவது?
எதுகை
அந்தாதி
மோனை
முரண்
சரியான விடை: அந்தாதி
18. 'நிரை நிரை' என்பது எதனைக் குறிக்கும்?
தேமா
கருவிளம்
கூவிளம்
புளிமா
சரியான விடை: கருவிளம்
19. அடியின் இறுதியில் எழுத்துக்கள் ஒன்றி வருவது?
மோனை
இயைபு
எதுகை
தளை
சரியான விடை: இயைபு
20. சீர்களை இணைப்பதற்கு என்ன பெயர்?
தளை
அடி
தொடை
அசை
சரியான விடை: தளை

TRB TNPSC EXAM பொது அறிவு வினாடி வினா GK FREE ONLINE QUIZ

 

தமிழ்த்துகள் - பொது அறிவு வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

1. இந்தியாவின் மிக உயரிய விருது எது?

சரியான விடை: பாரத ரத்னா

2. தமிழகத்தின் மாநில விலங்கு எது?

சரியான விடை: வரையாடு

3. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் யார்?

சரியான விடை: கால்டுவெல்

4. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?

சரியான விடை: 206

5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?

சரியான விடை: தஞ்சாவூர்

6. உலகிலேயே மிக நீளமான நதி எது?

சரியான விடை: நைல்

7. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை யார்?

சரியான விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

8. ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் வாயு எது?

சரியான விடை: கார்பன் டை ஆக்சைடு

9. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோள் எது?

சரியான விடை: புதன்

10. 'சிப்பாய் கலகம்' நடைபெற்ற ஆண்டு?

சரியான விடை: 1857

11. இரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்பு எது?

சரியான விடை: சிறுநீரகம்

12. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: சர்தார் வல்லபாய் படேல்

13. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

சரியான விடை: ஜூன் 5

14. இந்தியாவின் தலைநகரம் எது?

சரியான விடை: புது தில்லி

15. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

சரியான விடை: 133

16. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: சார்லஸ் பாபேஜ்

17. 'சிலப்பதிகாரம்' இயற்றியவர் யார்?

சரியான விடை: இளங்கோவடிகள்

18. வைட்டமின் 'C' குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

சரியான விடை: ஸ்கர்வி

19. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?

சரியான விடை: மும்பை

20. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

சரியான விடை: ராஜஸ்தான்

AFTER SUBMIT SCROLL UP TOP SEE CORRECT ANSWER AND SCORE

தமிழ்த்துகள்

Blog Archive