கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, July 21, 2026

வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 2026 tenth answer key

 






வகுப்பு 9 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 9th tamil key 2026

 






வகுப்பு 8 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 8th tamil key 2026

 





ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf 2026 விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD 


6th tamil first mid term exam question paper 2026 virudhunagar district pdf 

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf 2026 விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD 


7th tamil first mid term exam question paper 2026 virudhunagar district pdf 

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf 2026 விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


8th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf 2026 விருதுநகர்

9th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district


பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf 2026 விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


10th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு 2026 விடைக்குறிப்பு

8th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district

எட்டாம் வகுப்பு       தமிழ்

முதல் இடைப்பருவத் தேர்வு               2026                     விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                              5 × 1 = 5

1. ஆ) ஆழி

2. ஆ) தந்தை பெரியார்

3. அ) தார்

4. இ) உணவின்

5. இ) வானம் + அளந்தது

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.                                                                     2 × 1 = 2

6. வீரமாமுனிவர்

7. பட்டை                         தமிழ்த்துகள்

III. பொருத்துக.                                                                                 3 × 1=3

8. க்,ங் - நாவின் முதல், அண்ணத்தின் அடி

9. ச்,ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை

10. ட்,ண்       - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

IV. எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                   6 × 2 =12

11. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பையும்,

மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும்,

இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தையும்

இடமாகக் கொண்டு பிறக்கின்றன

12. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் தமிழ் காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்.

13. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.

இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.

14.  கடலும் மலையும் கதிரும் நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள்.

எனவே இயற்கை போற்றத்தக்கது.

15. மணம் மிகுந்த மலர்களும் கூரை போல் விரிந்திருந்த இலைகளும் வெந்து கரிய நிறம் பெற்று விட்டதால் பட்ட மரம் தனது அழகை இழந்தது

16. தினமும் 45 நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்,

15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி,

7 மணிநேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்.

17. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

18. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றை எழுதுவது கடினம்.

புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது ஓலைச்சுவடிகள் சிதைந்துவிடும்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.                 2 × 4 = 8

19. எக்காலத்தும் நிலைபெற்று வாழும் தமிழ் மொழி.

 ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி.

 ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ்கொண்ட தமிழ் மொழி.

 எங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க.

20. மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.

மாறிப்போன உணவு , மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.

நிலத்தை உரங்களாலும், பூச்சிக் கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணமும் தான் இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.

21. பாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.

பனி மூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.

பட்ட  மரத்தின் ஆடும் கிளைகளில் சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.

இவை ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன.

தமிழ்த்துகள்

VI. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளி.             1 × 5 = 5

22 1.பாறைகளிலும் குகை சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் மனிதன்.

2.தொடக்கக் காலத்தில் எழுத்து ஓவிய வடிவமாகவே இருந்தது.

3.இவ்வரிவடிவ எழுத்தை ஓவிய எழுத்து என்பர்.

4.ஒவ்வொரு வரி வடிவமும் அவ்வடிவத்திற்குரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.

5.பின் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாக மாறியது.

6.ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

7.ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளே இன்றைய எழுத்துகள் ஆகும்.

                   தமிழ்த்துகள்

23. மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம் மருந்தில்லா மருத்துவம், உடலைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்து இருக்கிறது.

தனித்துவமான பார்வை கொண்ட தமிழர் மருத்துவம் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும்.

இந்த மருத்துவத்தின் பயன்பாடோ மூலக்கூறுகளோ, மருந்துகளோ, சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

நோய்க்கான சிகிச்சை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கு வாழ்வியலையும் சொல்கிறது.

நோயை மட்டுமன்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

VII. அடிபிறழாமல் எழுதுக .                                                 1 × 3 = 3

24. தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு                                   தமிழ்த்துகள்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!                                                                  - பாரதியார்                தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

VIII.எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி.               2 × 2 = 4

25. அ. சித்திர எழுத்து

ஆ. உயிரொலி                                     தமிழ்த்துகள்

26. அ. சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன்

ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன்

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

27.அ வாழ்த்துகள்

ஆ பக்கங்கள்

IX. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடை அளிக்க.                            1 × 8 = 8

28) தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகள்.

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

29) 'எனது தாய்மொழி'  கட்டுரை.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.9865447641  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்


ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு விடைக்குறிப்பு 2026

  9th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district

விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வுகள்

முதல் இடைப்பருவத்தேர்வு – 2026

ஒன்பதாம் வகுப்பு விடைக்குறிப்புகள்

கால அளவு – 1.30 மணி                                தமிழ்                     மதிப்பெண்கள் 50

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                               8x1=8

1. இ. வளர்க

2. இ. மோனை, எதுகை, இயைபு

3. ஈ. புலரி

4. ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

5. இ. பக்கம்

6. ஈ. ஓடி வா ஓடி வா

7. இ. சிற்றிலக்கியம்

8. இ. வளம்

 

II.எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.                                   3x2=6

9. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலையே கூவல் என்று அழைக்கப்படுகிறது.

 

10. நான் பேசும் மொழி தமிழ் மொழி.

   அது தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

 

11. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி.

 

12. அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.

அதனால் அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.

இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லின் காட்சிக்கு ஒப்பிடப்படுகிறது.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

III.எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க.                        3x2=6

13. படிப்போம்; பயன்படுத்துவோம்.

அ. மெய்யொலிகள்

ஆ. குமிழிக் கல்

14. அகராதியில் காண்க

அ. தலைவன்

ஆ. ஆலமரம்

15. பிழை நீக்கி எழுதுக.

அ. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

ஆ. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.

16. அளபெடை இரண்டு வகைப்படும்.  
அவை

உயிரளபெடை,      ஒற்றளபெடை.

 

IV.எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி.                                      4x3=12

22ஆவது வினாவிற்குக் கட்டாயம் விடையளிக்கவும்.

17.சோழர் காலக் குமிழித்தூம்பை மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள் காணப்படும்.

மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும்.

கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.

இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

18. 'குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக் கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்' - ஈரோடு தமிழன்பன்.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவேன்.

தமிழே கணினிக்கு ஏற்ற மொழி என்ற நிலை தொடர உதவுவேன்.

புதிய தமிழ் இலக்கியங்கள் படைப்பேன்.

 

19. உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர், இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

அவ்வாறு 'நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்' என்கிறார் குடபுலவியனார்.

 

20. தமிழ்                - மூன்று              

மலையாளம் - மூணு

தெலுங்கு              - மூடு         

கன்னடம்              - மூரு        

துளு                     - மூஜி

திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.

 

21. தண்ணீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.

நம் முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

22. அ குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார்  கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ -  திறம்எல்லாம்

வந்துஎன்றும்  சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்துஎன்று  சொல்லிய நாச்சிந்துமே.

 

அல்லது

 

ஆ. காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்  குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை  வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்  குளமெல்லாம்  கடல் அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம். -  சேக்கிழார்

 

V.  விடையளிக்க.                                                                                2x5=10

23. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

24. அ. அல்லது ஆ.

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

VI. ஏதேனும் ஒரு வினாவிற்கு மட்டும் விடையளி.                                 1X8=8

25. அ. அல்லது ஆ.

பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை. 9865447641


பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு 2026 விருதுநகர்

 10th tamil first mid term exam question answer key 2026 virudhunagar district

பத்தாம் வகுப்பு       தமிழ்

முதல் இடைத் தேர்வு சூலை 2026

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                8x1=8 தமிழ்த்துகள்

1. அ.வேற்றுமை உருபு                                    1

2. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது          1

3. ஆ.வான்வெளியில், பேரொலியில்                  1

4. ஆ.எழுவாய்த்தொடர்                                   1

5. ஈ.சருகும் சண்டும்                                       1

6. இ. தொல்காப்பியர்                                       1

7. இ. உண்டா – வண்டா                                  1

8. ஆ.காலக்கணிதம்                                        1

 

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                           3x2=6

9.அ. உலகக் காற்று நாள் எப்போது?                                                                   1

ஆ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?           1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

10.      முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும் போது மேகங்கள் துணிச்சலானவை. 1

தாகங்கள் தீர்க்கும்போது மேகங்கள் மிகவும் கருணை உள்ளவை.                           1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

11. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்கள்

         ஆவிரம் பூச்சம்பா,

         ஆனைக் கொம்பன் சம்பா,

         குண்டுச் சம்பா,

         குதிரைவாலிச் சம்பா,

         சிறு மணிச்சம்பா,

         சீரகச் சம்பா.

இதன் மூலம் தமிழின் சொல் வளத்தை உணரலாம்.                                              2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

12.      உயிர்களின் சுவாசம் காற்று!

     காற்றின் சுவாசம் மரம்!

தூய்மையை நேசிப்போம்!

     தூய காற்றைச் சுவாசிப்போம்.                                                              2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

13. இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள்

சிலப்பதிகாரம்,                                                                                       1

மணிமேகலை.                                                                                       1

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                   3x2=6

14. அ. உயிரெழுத்து                                                                             1

ஆ. சுழல்காற்று                                                                                    1

 

15. அ. அளவுகோலைக் கொடு என்று வாங்கி அதை வைத்து ஒரு கோடு போட்டான்.  1

ஆ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும்.                                                     1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

16. அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.                    1

ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.                                           1

 

17. கட்டுரையைப் படித்த கலையரசன்.                                                      1

கட்டுரையில் படித்த செய்தி இது.                                                             1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

18. நான்கு, இரண்டு  ,                                                                      2

IV.எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி.                           4x3=12

24ஆவது வினாவிற்குக் கட்டாயம் விடையளிக்கவும்.

19. அறிந்தது            -          அறிதல்                

அறியாதது               -          அறியாமை

புரிந்தது                   -          புரிதல்                  

புரியாதது                  -          புரியாமை

தெரிந்தது                 -         தெரிதல்               

தெரியாதது              -         தெரியாமை

பிறந்தது          -         பிறத்தல்      

பிறவாதது                -         பிறவாமை.                                           3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

20. உணவாக நான், 

முக்கால் பங்கு நான்,

விளைவுக்கு நான்,  

ஐம்பூதங்களுள் நான்,

மழையாக நான்,      

பேராற்றல் நான்.

இவ்வாறு நீர் தன்னைப்பற்றிப் பேசும்.                                                                  3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

21. 1.   நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.

2.       தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விடு.

3.       மாங்கன்று தளிர்விட்டது.

4.       வாழைக்குருத்து மழையின்றி வாடியது.

5.       பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது.                                      3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

22. பாடிக் காட்டினார்                    - வினையெச்சத்தொடர்

கேட்டுப் பாடினர்                          - வினையெச்சத்தொடர்

கேட்ட பாடலில்                           - பெயரெச்சத்தொடர்

சிறுவினாக்களைக் கேட்டார்         - வேற்றுமைத்தொடர்

எழுதுபவருக்குப் பரிசு                  - வேற்றுமைத்தொடர்.                                    3

தமிழ்த்துகள்

23. காற்றில் கலந்து விடும் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவை மழை பெய்யும் போது நீரில் கரைந்துவிடுவதால் அமில மழை பெய்கிறது.          3

 

24. கட்டாய வினா.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!.                                                           3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

 

விடை அளிக்க                                                         2x5=10

25. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.                                                            5

 

 

 

 

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

26. அ)நாள், இடம்                                           ½

விளித்தல்                                                     ½

கடிதச்செய்தி                                                2½

இப்படிக்கு                                                     ½

உறைமேல்முகவரி                                         1

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்                       

அல்லது

ஆ. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்கள்            5

பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

விடை அளிக்க                                                          1x8=8

27. அ. புயலிலே ஒரு தோணி                                                         8

                                  அல்லது                          தமிழ்த்துகள்

. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்                                               

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641 தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive