கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 04, 2026

SCIENCE EXHIBITION AVUDAIYAPURAM GOVT SCHOOL VNR DIST அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி


SCIENCE EXHIBITION AVUDAIYAPURAM GOVT SCHOOL VNR DIST

science club activities Science fair

வகுப்பு 10 தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2026 ராணிப்பேட்டை


10th tamil model question ranipettai

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf இராணிப்பேட்டை மாவட்டம் 2026

 பதிவிறக்கு/DOWNLOAD 


SSLC TENTH 10TH TAMIL second revision exam question paper pdf Ranipet district 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மன்றத் தேர்வு தூத்துக்குடி 2026 மாதிரி பொதுத்தேர்வு Tamil mandra thervu


SSLC tenth tamil common public exam model question paper pdf thoothukudi district 2026

Tamil mandra thervu
Payirchi thervu
Thamizhaga tamizhasiriyar kazhagam

தமிழகத் தமிழாசிரியர் கழகம் பயிற்சித் தேர்வு 

தமிழ் மன்றத் தேர்வு 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் pdf தூத்துக்குடி மாவட்டம் கழக பயிற்சித் தேர்வு 2026

 பதிவிறக்கு/DOWNLOAD 


SSLC tenth tamil common public exam model question paper pdf thoothukudi district 2026

Tamil mandra thervu
Payirchi thervu
Thamizhaga tamizhasiriyar kazhagam

தமிழகத் தமிழாசிரியர் கழகம் பயிற்சித் தேர்வு 

தமிழ் மன்றத் தேர்வு 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

04-02-2026. புதன் 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

; இயல்: துறவறவியல் ;

அதிகாரம்: வெகுளாமை

குறள் எண் : 304.

குறள் :

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற.

உரை :

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

பழமொழி :

தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.

Small efforts daily lead to big results.

இரண்டொழுக்க பண்புகள்:

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி :

இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள். - ஔவையார்

பொது அறிவு :

01. ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?

HMS சேலஞ்சர்- HMS Challenger

02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?

அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 

America -Lunar Orbiter 1

English words :

Cascade - waterfall

Studious hardworking

தமிழ் இலக்கணம் :

இரண்டு வட மொழிச் சொற்கள் சேர்ந்து ஒரு சொல் வரும் போது

வல்லினம் மிகாது

தேசம் + பிதா = தேசபிதா

> ஆனால் முதல் எழுத்து வடமொழி சொல்லாக இருந்து அடுத்த சொல்

தமிழ் சொல்லாக இருந்தால் வல்லினம் மிகும்

தேச + தந்தை = தேசத் தந்தை.

தேசம் வடமொழிச் சொல். தந்தை தமிழ் சொல்

அறிவியல் களஞ்சியம் :

1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.

பிப்ரவரி 04 -வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, பிறப்பு நவம்பர் 8, 1680 இறப்பு பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.

பிப்ரவரி 04 உலகப் புற்றுநோய் நாள்

WORLD CANCER DAY

4 FEBRUARY

உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை -திருக்குறள் கதைகள் - கர்வம் கொண்ட மயில்

குறள் :

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம் :

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

கதை :

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்குத் தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையைக் காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ,மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னைத் தேடி வர வேண்டும்.

ஆனால் அந்த குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள்.

நீதி : தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.

இன்றைய செய்திகள் 04.02.2026

* செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்துள்ளது.

* இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

* இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Today's Headlines - 04.02.2026

* The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government hospital.

* The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..

* Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.

SPORTS NEWS

The 4th Women's Premier League (WPL) 20-over cricket match between 5 teams is underway in Vadodara, Gujarat. The Smriti Mandhana-led Royal Challengers Bangalore team, which finished first with 12 points (6 wins, 2 losses) at the end of the league round, advanced directly to the final.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 03, 2026

AI Miracles செயற்கை நுண்ணறிவு அதிசயங்கள்


 

வகுப்பு 10 தமிழ் வினாத்தாள் 2026 விடைக்குறிப்பு விருதுநகர் 10th tamil second revision exam answer



10th tamil second revision exam answer


பத்தாம் வகுப்பு தமிழ் 2026 இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD 


SSLC TENTH 10TH TAMIL second revision exam answer key pdf virudhunagar district 2026

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026

பதிவிறக்கு/DOWNLOAD 

SSLC TENTH 10TH TAMIL second revision exam question paper pdf virudhunagar district 2026

பத்தாம் வகுப்பு தமிழ் 2026 இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 10th tamil second revision exam answer key Virudhunagar district 2026

பத்தாம் வகுப்பு  தமிழ்

இரண்டாம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2026

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஆ.வங்காள, ஆங்கில                                                     1

2. இ.வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு                                     1

3. ஆ.மணிப்பெயர் வகை                                                     1

4. அ.அகவற்பா                                                                 1

5. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது                             1

6. ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி                                               1

7. இ.அவர்                                                                       1        தமிழ்த்துகள்

8. ஆ.இன்மையிலும் விருந்து                                             1

9. ஆ.எழுவாய்த்தொடர்                                                      1

10. அ.கைம்மாறு கருதாமல் அறம் செய்வது                            1

11. ஆ.கிண்கிணி                                                                1

12. ஆ.சிலப்பதிகாரம்                                                          1

13. அ.இளங்கோவடிகள்                                                      1

14. ஆ.எண்ணும்மை                                                           1

15. ஈ.பகர்வனர் - பட்டினும்                                                         1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      திருவடி        - சிலம்பு, கிண்கிணி

இடை                    - அரைஞாண் மணி, அரைவடங்கள்.

நெற்றி                   - வட்ட வடிவான சுட்டி.

காது                      - குண்டலங்கள், குழைகள்.

உச்சிக் கொண்டை  - ஒலிமிக்க முத்துகள்.                                               1

தமிழ்த்துகள்

17.      அ.இந்தியாவில் எந்த மாநிலம் காற்றாலை மின்உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது?                                                                                          1

ஆ.அலைவாய்க் கரையில் என்ற புதினம் எதைப் பேசுகிறது?                        1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

18.   அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.

இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.                                           2

தமிழ்த்துகள்

19.      இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.                                                 2

தமிழ்த்துகள்

20.              ஆவிரம் பூச்சம்பா,             ஆனைக் கொம்பன் சம்பா,

        குண்டுச் சம்பா,                          குதிரைவாலிச் சம்பா,

        சிறு மணிச்சம்பா,                        சீரகச் சம்பா.                                          2

தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் 

தியற்கை அறிந்து செயல்.                                                            2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     அ. ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரனாக மாறியது போல மனக்கோட்டை கட்டினான்.                                                                                                      1

ஆ. ஒரு வேலையைச் செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும்.   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

23. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும்.

புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.”                               2

தமிழ்த்துகள்

24. அ. விதியை மாற்ற இயலாது என்று வீதியில் விழுந்த பெரியவர் கூறினார்.          1

ஆ. தொடு என்று காதில் அணியும் தோடு ஒன்றை நீட்டினாள்.                               1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

25. பதிந்து - பதி + த் (ந்) + த் + உ

பதி - பகுதி

த் - சந்தி, ' ந் ' ஆனது விகாரம்

த் -  இறந்தகால இடைநிலை

உ -  வினையெச்ச விகுதி                                                                               2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

26. பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.                                                    2

தமிழ்த்துகள்

27. அ. காடு.                                                                                                  1

ஆ. காற்று.                                                                                                    1

தமிழ்த்துகள்

28. அ. மெய்யெழுத்து                                                                                      1

ஆ. நாடக ஆசிரியர்                                                                                         1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. உணவாக நான், முக்கால் பங்கு நான்,

விளைவுக்கு நான்,   ஐம்பூதங்களுள் நான்,

மழையாக நான்,       பேராற்றல் நான்.                                                                 3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

30.     ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் தான் வளர்ச்சி பெறுகின்றன.

விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன.

பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.                                                           3

தமிழ்த்துகள்

31. அ. சென்னை, ஆயிரம் விளக்கு வட்டம், சால்வன் குப்பம்.                  1

ஆ. 1906                                                                                                       1

இ. வ.உ.சிதம்பரனார்                                                                                        1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே        - காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில்

தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட  -   நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ  -     யானைகள் கொண்ட படையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

33. 1.  பழமைக்கும் பழமையானது.

2.       புதுமைக்கும் புதுமையானது.

3.       குமரிக்கண்டத்தில் அரசாண்டது.

4.       பாண்டியன் மகளாய்ப் பிறந்தது.

5.       சங்க இலக்கியமாய் விளங்குவது.

6.       திருக்குறளின் பெருமையாய் இருப்பது.                                                    3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

          வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே.        - அதிவீரராம பாண்டியர்.                        3

அல்லது

ஆ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.   

                                        - வீரமாமுனிவர்.                                                3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் பர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். 

போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை.

வாகை என்றால் வெற்றி.                                                                       3

தமிழ்த்துகள்

36. சொற்பொருள் பின்வருநிலை அணி

ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

எ.கா –

     இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

     இன்மையே இன்னா தது

அணிப்பொருத்தம்

'இன்மை' என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது. 3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

37. சீர்                    அசை                    வாய்பாடு

கொடுப்/பதூ/உம்     - நிரை நிரை நேர்    - கருவிளங்காய்

துய்ப்/பதூ/உம்        - நேர் நிரை நேர்      - கூவிளங்காய்

இல்/லார்க்              - நேர் நேர்               - தேமா

கடுக்/கிய                - நிரை நிரை           - கருவிளம்

கோ/டிஉண்            - நேர் நிரை             - கூவிளம்

டா/யினும்               - நேர் நிரை             - கூவிளம்

இல்                        - நேர்                      - நாள்

இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது.                         3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்.       

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

ஆ. ஆள்வினை உடைமை கருத்துகள்.                                 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

39.அ கலைத்திருவிழா வாழ்த்து மடல்

நாள், இடம்                                           ½

விளித்தல்                                                     ½

கடிதச்செய்தி                                                2½

இப்படிக்கு                                                     ½

உறைமேல் முகவரி                                         1

என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

அல்லது

ஆ. நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்                                           ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல் முகவரி                                        ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                       5       

தமிழ்த்துகள்

42. அ.      பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகள்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. கலைஞர்                                                                                             8

அல்லது                           தமிழ்த்துகள்

. விருந்தோம்பல்                              

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. புயலிலே ஒரு தோணி                                                                            8

அல்லது                           தமிழ்த்துகள்

. இராமானுசர்

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. மதிப்புரை                                                                                            8

அல்லது                           தமிழ்த்துகள்

. இலக்கியம் காட்டும் அறம்    

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

செ.பாலமுருகன்,

தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641  தமிழ்த்துகள்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-02-2026. செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

03-02-2026. செவ்வாய்

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

; இயல்: துறவறவியல் ;

அதிகாரம்: வெகுளாமை

குறள் எண் : 303.

குறள் :

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய

பிறத்தல் அதனான் வரும்.

உரை :

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும்,

தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :

> கடின உழைப்பிற்கு மாற்று எதுவும் இல்லை.

There is no substitute for hard work.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி :

இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் - இறையன்பு ஐஏஎஸ்.

பொது அறிவு:

01. கரீபியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவு எது?

கியூபா -Cuba

02.இந்தியாவின் முதல் இரத்த வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

கொல்கத்தா-மேற்கு வங்காளம் Kolkatta-west Bengal

English words :

Adverse - unfavorable. பாதகமான. எதிரான.

+ Anticipate -to expect something to happen,

hope for something

ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருத்தல்.

தமிழ் இலக்கணம்:

என்ன? யாவை? என்ற வினாச் சொற்களை எங்கு உபயோகிக்க வேண்டும்?

வினா கேட்கும் போது செயல் ஒருமையாக இருந்தால் என்ன என்பதை பயன்படுத்த வேண்டும்? செயல் பன்மையாக இருந்தால் யாவை என்பதை பயன்படுத்த வேண்டும்.

எ.கா

> காற்று மாசுபாட்டிற்குக் *காரணங்கள்* என்ன? இது தவறு காரணங்கள் என்று பன்மையில் வருவதால் காற்று மாசுபாட்டிற்குக் *காரணங்கள்* யாவை ? என்று வர வேண்டும் காற்று மாசுபாட்டிற்குக் *காரணம்* யாவை? என்று வரக்கூடாது. காரணம் என்பது ஒருமைச் செயல் எனவே

காற்று மாசுபாட்டிற்குக் காரணம் என்ன என்று வர வேண்டும்?

அறிவியல் களஞ்சியம் :

குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகத்துடனான தொடர்பை துண்டிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, ஷார்ட்வேவ் மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் இங்கு அடைவதில்லை.

பிப்ரவரி 03 - யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்

யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg; பிறப்பு 1398 - இறப்பு பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது.

பிப்ரவரி 03 ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்

கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை

எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை,

பிறப்பு ஏப்ரல் 23, 1827 - இறப்பு பெப்ரவரி 3, 1900.

இவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை.

நீதிக்கதை -எதிர்காலம்

ஒரு நாள் முல்லா தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை, அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும், மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார். முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன், அடித்து மிரட்டிப் பார்த்தேன், ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.

குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும், மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

அம்மா, முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டாரே? என்று திகைப்போடு கேட்டான் பையன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு, முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.

இன்றைய செய்திகள் 03.02.2026

*பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு. கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

* இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு & உளவு அமைப்பான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அமைப்பிற்கு ரூ.6,782.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

* ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம்-டிரம்ப்

விளையாட்டுச் செய்திகள்

*இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

Today's Headlines - 03.02.2026

* Chief Minister quote *travel is a classroom without books* at the center of Tourism Summit. Also Tamil Nadu government has allocated Rs. 612 crore for the department of tourism in the last 5 years.

* The central government has allocated Rs. 6,782.43 for the 'Intelligence Bureau' that is India's internal security & spy agency.

* US president Trump said

they will launch a military attack on Iran if there is no agreement

*SPORTS NEWS*

The T-20 World Cup will be held in India and Sri Lanka from February 7 to March 8.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Monday, February 02, 2026

மூன்று வழிகள் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Three ways kutty kathai


tamil short story Three ways kutty kathai



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-02-2026. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

02-02-2026. திங்கள்.

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: குடியியல் ;

அதிகாரம் : நன்றியில் செல்வம் ; 

குறள் எண் :1002.

குறள் :

பொருளானாம் எல்லாமென்றீயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு

உரை :

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

பழமொழி :

> பாம்பின் கால் பாம்பறியும்.

A thief knows a thief.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி :

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி உனக்கு தானாகவே வந்து சேரும். - விவேகானந்தர்.

பொது அறிவு :

01.தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து"" (Switzerland of South America) என்று அழைக்கப்படும் நாடு எது?

உருகுவே Uruguay

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வெப்ப நீரூற்றுகள் (hot springs) உள்ள நாடு எது?

ஜப்பான்-Japan

English words:

+ Greed - பேராசை

+ slander - அவதூறு 

தமிழ் இலக்கணம் :

தேனீர் தேநீர் எது சரி?

பிரித்துப் பார்க்கும் போது நமக்கு சரியான விடை கிடைத்து விடும்.

தேனீர் பிரித்தால் தேன் + நீர் = என்று வரும். தேன் நீர் என்பதின் பொருள் தேன் கலந்த நீர்.

தேநீர் இப்போது இதை பிரித்து பார்ப்போம். தேநீர் = தே+ நீர்

தே என்பதற்கு இறைவன், இனிமை, தேயிலை என்று மூன்று வகைப் பொருள் தரும்.

எனவே நமக்கு தேநீர் என்பது தான் சரியான வார்த்தை என்பது புரிந்து விட்டது.

அறிவியல் களஞ்சியம் :

உலகின் மர்ம பகுதிகளில் ஒன்றான மெக்சிகோவில் 'மௌன மண்டலம் உள்ளது. இங்கு சென்றால் மின்னணு கருவிகள் எதுவுமே வேலை செய்யாது. வானொலி சமிக்ஞைகளும் கிடைக்காது. இப்படி எதுவுமே கிடைக்காத பகுதியாக உள்ள இந்த இடத்தில் மர்மங்களை அவிழ்க்க பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று வரை விடை கிடைத்தபாடில்லை.

பிப்ரவரி 02

உலக சதுப்பு நில நாள்

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.

அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால்  உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. 

நீதிக்கதை - நன்றி கொன்ற ஓநாய்

ஓர் அடர்ந்த காட்டில் ஓநாய் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது. அப்போது அதன் தொண்டையில் எலும்பு சிக்கிக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது. அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, உதவும்படி மிகவும் கெஞ்சியது.

ஓநாயின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது. தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு... நான் தருவதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய். மேலும் உன் கழுத்தைக் கடித்துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டியடித்தது. நன்றியில்லாத ஓநாய்க்கு உதவியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது.

நீதி : ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.

இன்றைய செய்திகள் 02.02.2026

*திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் -மு.க.ஸ்டாலின்

* கேரளாவில் அரசு & அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் இல்லை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

* காங்கோ நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 'பிராந்திய போர் வெடிக்கும்' அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

விளையாட்டுச் செய்திகள்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்த்து.46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

Today's Headlines - 02.02.2026

*M.K. Stalin has announced that the Thiruvottriyur Highway will be named as Vallalar Highway.

*The Kerala state government has announced that there will no longer be any tuition fees for students pursuing undergraduate courses in Arts and Science in government and government-aided colleges in Kerala.

* 200 workers died in the Congo gold mine due to the sand slide

* Iran warned US that there will be regional war.

SPORTS NEWS

Australian Open Tennis: Alcaraz beats Djokovic to win championship. Carlos Alcaraz wins 7 Grand Slam titles at a young age.

The 5th and final T20 match between India and New Zealand was played in Thiruvananthapuram. India won the T20 series 4-1. by 46 runs

Prepared by

Covai women ICT போதிமரம்

Sunday, February 01, 2026

Rangoli competition ghss AVUDAIYAPURAM கோலப்போட்டி ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி


 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நிலம் பொது tamil model notes of lesson

6th tamil model notes of lesson

lesson plan February 9

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-02-2026 முதல் 13-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

நிலம் பொது

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-602 தாங்கள் பார்த்த, கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள். சடங்குகள் போன்றவற்றைப் பற்றித் தயக்கமின்றி வினா எழுப்பவும், கலந்துரையாடவும் செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்தல்.

9.நுண்திறன்கள்

பழங்குடியினரின் நாட்டுப்பற்றை உணரும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-nilam-pothu.html

https://tamilthugal.blogspot.com/2022/07/2-8th-tamil-mindmap-unit-2-nilam-pothu.html

https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-nilam-pothu.html

https://tamilthugal.blogspot.com/2021/04/8th-tamil-urainadai-ulagam-nilam-pothu.html

https://tamilthugal.blogspot.com/2021/03/96-land-names-in-tamil.html

https://tamilthugal.blogspot.com/2024/11/1.html

11.ஆயத்தப்படுத்துதல்

பழங்குடியினர் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

இயற்கை வளங்கள் குறித்துத் தங்கள் அனுபவங்களைப் பகிரச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நிலம் மிகவும் புனிதமானது. இயற்கை வளங்கள் அனைத்தும் பழங்குடியினரின் உறவுகள். விலங்குகளை வேட்டையாடக் கூடாது. நிலத்தை நேசிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல். சியாட்டல் போன்ற தலைவர்கள் குறித்து மாணவர்கள் கலந்துரையாடுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நிலத்தின் இன்றியமையாமையை மாணவர்களுக்குக் கூறுதல்.

          இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி       நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

          ந.சி.வி – தொடரில் அமைத்து எழுதுக.

                   வேடிக்கை, உடன்பிறந்தார்

                   நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.

          உ.சி.வி      நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நிலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.

          நிலவளத்தைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகளைத் தொகுத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive