கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, February 20, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தேர்வு Tenth tamil exam one mark question spl test

 


Tenth tamil exam one mark question spl test 


2026 பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் சிறப்புத் தேர்வு வினாத்தாள் pdf

  பதிவிறக்கு/DOWNLOAD 


SSLC TENTH 10TH TAMIL 1 MARK TEST 100 QUESTIONS SPECIAL EXAM QUESTION PAPER PDF 2026 MCQ 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2026. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

20-02-2026. வெள்ளி 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: துறவறவியல் ;

அதிகாரம் : துறவு ; 

குறள் எண்: 341.

குறள் :

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் அலன்.

உரை :

ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

பழமொழி :

> கடன் துன்பத்திற்கு வழிவகுக்கும்.

Borrowing is sorrowing.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2 எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

+ பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.

சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

01. நம் உடலில் உள்ள இரத்தம் ஒரு நாளைக்கு பயணம் செய்யும் தூரம் எவ்வளவு?

சுமார் 19,000 கிலோமீட்டர்- Approximately 19,000 km

02. மழை நீரில் காணப்படும் வைட்டமின் எது?

வைட்டமின் B12 Vitamin B12

English words :

consequence impact happens due to some incidents 
ஒரு செயலினால் ஏற்படும் பின்விளைவுகள்.

contest a competition to find out who is the best 
ஈயார் சிறந்தவர் என்று கண்டறியும் போட்டி

தமிழ் இலக்கணம்:

ஒருமை பன்மையில் வரக்கூடிய பிழைகளை எவ்வாறு கண்டறிந்து அதை சரி செய்வது? வாருங்கள் பார்ப்போம்

> ஒருமை சொற்கள் இறுதியில் து என முடியும்.

> பன்மை சொற்கள் இறுதியில் ன என முடியும்.

இதை கண்டறிய எதை என்ற கேள்வி கேட்க வேண்டும்.

எ.கா 1. பசு கன்றுகளை ஈன்றன.

எது? பசு. பசு ஒருமை ஒருமை து வில் முடியும் சரியான விடை - பசு கன்றுகளை ஈன்றது.

2. கீரைகளில் இரும்பு சத்து உள்ளன.

எது? இரும்பு சத்து. இரும்பு சத்து ஒருமை

சரியான விடை -கீரைகளில் இரும்பு சத்து உள்ளது.

3. வண்டிகள் வரிசையாக நிற்கின்றது எது? வண்டிகள். இது பன்மை. 
சரியான விடை
வண்டிகள் வரிசையாக நிற்கின்றன.

அறிவியல் களஞ்சியம் :

இப்போது நமது பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் / 86,400 வினாடிகள் ஆகும். அப்படித்தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஒரு நாளின் நேரம் என்பதும் மாறக்கூடியதே என்ற தகவல் பெரும்பாலோருக்குத் தெரியாது. இந்த நேரம் முற்றிலும் நிலையானது அல்ல. பூமி உருவான காலத்தில் இருந்து, பூமியின் சுழற்சி வேகம், பல காரணிகளைப் பொருத்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

பிப்ரவரி 20

சமூக நீதிக்கான உலக நாள்

WORLD DAY OF SOCIAL JUSTICE

சமூக நீதிக்கான உலக நாள் அல்லது உலக நீதி நாள் (World Day of Social Justice) என்பது உலக நாடுகள் முழுவதும் ஆண்டுதோறும் பெப்ரவரி 20 ஆம் நாளன்று கடைப்பிடிக்கப்படும் நாளாகும். வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை ஊக்குவிக்கவும், இந்நாள் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில், ஐக்கிய நாடுகள் அவை, மற்றும் சர்வதேச தொழிலாளர் அலுவலகம் உட்பட, பல அமைப்புக்கள் மக்கள் சமூக நீதி முக்கியத்துவம் பற்றிய அறிக்கைகளை தயாரிக்க அமைக்கப் பெற்றுள்ளது.

நீதிக்கதை -எதையும் நாமே நாடிப்போவது சரியா?

ஒரு நாள் நவீன் தன் அம்மாவுடன் கடைக்குப் போனான். அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு, பாட்டிலில் இருந்து சாக்லேட்டைக் காட்டி, உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள் என்றார். ஆனால் நவீன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை. கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை. அதைப் பார்த்த அவன் அம்மா, சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார். அப்பவும் நவீன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார். அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்குப் போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள். எவ்வளவு சிறியதாக இருக்கிறது. நான் பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும். இப்பொழுது பாருங்க.. அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமாக சாக்லேட் கிடைத்திருக்கிறது பாருங்கள் என்றான்.

எதையுமே நாம் விரும்பிக் கேட்டால் குறைவாகத்தான் கிடைக்கும். அதுவாகத் தேடி வந்தால் அதிகமாகக் கிடைக்கும் என்பதை நவீனின் அம்மா புரிந்து கொண்டார்.

இன்றைய செய்திகள்

20.02.2026

* தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.2,000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

* நைஜீரியாவில் விஷவாயு கசிவால் வெடித்து சிதறிய சுரங்கம்: 38 தொழிலாளர்கள் பலி

* அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு.

விளையாட்டுச் செய்திகள்

டி20 உலகக்கோப்பை: இத்தாலியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.

Today's Headlines 20.02.2026

* Minister Geetha Jeevan has officially announced that eligible women in Tamil Nadu will henceforth receive ₹2,000 every year as a special summer assistance amount.

* A mine exploded due to a toxic gas leak in Nigeria: 38 workers died.

* Severe snowstorm in the United States: 8 skiers lost their lives.

Sports News

ICC Men's T20 World Cup: West Indies register a huge win by defeating Italy.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, February 19, 2026

வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2026 ராணிப்பேட்டை 10th tamil model question paper Ranipet district

 


10th tamil model question paper Ranipet district


பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf ராணிப்பேட்டை 2026 sslc TAMIL third revision exam question

  பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth 10th sslc TAMIL third revision exam question paper pdf Ranipet district 2026

வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் வினாத்தாள் 2026 விடைக்குறிப்பு விருதுநகர் 10th tamil third revision exam answer vnr

 


10th tamil third revision exam answer vnr



பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் 2026 sslc TAMIL third revision exam answer key

  பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth 10th sslc TAMIL third revision exam answer key pdf virudhunagar district 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் 2026 sslc TAMIL third revision exam question

 பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth 10th sslc TAMIL third revision exam question paper pdf virudhunagar district 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2026 வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

19-02-2026.வியாழன் .

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து வினையாடல் ;

குறள் எண்: 519.

குறள் :

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்குந் திரு

உரை :

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

பழமொழி :

வெறும் கையால் முழம் போட முடியாது.

An empty sack cannot stand upright.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வாழ்க்கையில் எந்த நெருக்கடி நிலையில் இருக்கும் பொழுதும் வாய்மையை கடைப்பிடிப்பது போல உறுதியான நிச்சயமான பாதுகாப்பு வேறு எதுவும் கிடையாது.கார்லஸ் டிக்கின்ஸ்.

பொது அறிவு:

01. 2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள சின்னம் எது?

மங்கள்யான்- Mangalyaan

02 .உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான கடிகாரம் எங்குள்ளது?

மெக்கா-சவூதி அரேபியா 
Mecca-Saudi Arabia.

English words:

regret

to feel sorry that you did something or that you did not do something.

ஒன்றைச் செய்தமைக்காக/செய்யாமைக்காக வருத்த உணர்வு கொள்ளுதல்

+ remorse

a feeling of sadness because you have done something wrong.

தவறு செய்துள்ளமை காரணமாக மனத்தில் தோன்றும் வருத்த உணர்வு.

தமிழ் இலக்கணம்:

தன்/தம் பயன் படுத்தும் இடங்கள்

ஒருமை வரும்போது *தன்* உபயோகப் படுத்த வேண்டும்.

1. அருளன் *தன்* கையால் பரிசைப் பெற்றுக் கொண்டான்.

2. சிறுமிகள் *தம்* கரங்களால் மலர் தூவினர்.

ஆனால் இதற்கு விலக்கும் உண்டு. மரியாதைக்குரியவர்களைக் குறிக்கும் போது ஒருமையில் இருந்தாலும் *தம்* என்று தான் குறிக்க வேண்டும்

+ சான்றோர் தம்மைத் தாம் புகழ மாட்டார்கள்.

+தலைவர் தம் பணத்தைக் கொடுத்து பள்ளி மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.

அறிவியல் களஞ்சியம் :

நமது பூமிப்பந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், முழுமையான காரணம் பலருக்குத் தெரியாது. சூரியனின் ஈர்ப்பு விசையால் சுழல்வதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். பூமி சுழல்வதற்கான முக்கிய காரணம், அதன் உருவாக்கத்தின் தொடக்க காலத்தில் இருந்தே பெறப்பட்ட கோண உந்தம் (Angular Momentum) ஆகும். சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலம், அதாவது சூரிய விண்மீன் ஒரு பெரும் சுழலும் வாயு மற்றும் தூசியின் மேகத்தில் இருந்து உருவானது. இந்த மேகம் சுழன்று கொண்டே இருந்தது. அப்போது உருவானதுதான் இந்த பூமி. பூமி உள்ளிட்ட கோள்கள் உருவாகும்போது, இந்தப் பிரபஞ்ச அளவிலான சுழற்சியின் உந்தம் அனைத்துக் கோள்களுக்கும் பரிமாறப்பட்டது. இந்த உந்தத்தை இழக்க எந்த புற விசையும் இல்லாததால், பூமி இன்றும் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது.

நீதிக்கதை

அன்பை வெளிப்படுத்தும் விதம்

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியை மாணவர்களிடம், அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று கூறி நான்கு மாணவிகளை அனுப்பினார். திரும்பி வந்த மாணவிகளில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

நான்கு மாணவிகளில் முதலில் கிளம்பிப்போன மாணவி கடைசியில் வெறும் கையுடன் திரும்பி வந்தாள். ஆசிரியை அந்த மாணவியிடம் நீ ஏன் எதையும் கொண்டு வரவில்லை என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன் என்று பதில் கூறினாள்.

மாணவி கூறிய பதிலைக் கேட்டவுடன் ஆசிரியை அந்த மாணவியை அணைத்துக் கொண்டார். அன்பு என்றால் இது தான். ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும் என்றார்.
இன்றைய செய்திகள் 19.02.2026

* தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், மாற் றுத்திறனாளிகள் & ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மூலம் சுமார் 35.33 லட்சம் நபர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

* உலகின் சர்க்கரை கிண்ணம் என அழைக்கப்படும் கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்துவருகிறது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் முடங்கியுள்ளது.

* 'ரஷ்யாவிடம் இருந்து 2000 குழந்தைகள் மீட்பு' -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

விளையாட்டுச் செய்திகள்

*டி20 உலகக் கோப்பை:

நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

Today's Headlines 19.02.2026

* Under the social security schemes in Tamil Nadu, about 3.533 million (35.33 lakh) people are benefiting from pensions provided to senior citizens, persons with disabilities, and destitute widows.

* In Cuba, which is known as the "Sugar Bowl of the World," the fuel shortage is worsening day by day. As a result, the country's economy and the normal life of the people have been severely affected.

* '2,000 children rescued from Russia' - Ukrainian President Zelenskyy

Sports News

T20 World Cup:

Pakistan advanced to the Super 8 round after defeating Namibia.

Prepared by

Covai women ICT போதிமரம் 

NMMS RESULT 2026

Link

முடிவை அறிய Linkஐத் தொட்டு எண்ணையும் பிறந்தநாளையும் பதிவிடுங்கள் 

Wednesday, February 18, 2026

வகுப்பு 10 தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2026 செங்கல்பட்டு 10th tamil model question third revision exam

 


10th tamil model question third revision exam chengalpattu


2026 பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு தூத்துக்குடி 10th tamil slow learner guide thoothukudi

 


10th tamil slow learner guide thoothukudi


திறன் வினாத்தாள் தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு 2026 வகுப்பு 6,7,8,9

 Thiran tamil question paper






பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18-02-2026. புதன் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து வினையாடல் ;

குறள் எண்: 513.

குறள்:

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு

உரை :

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

பழமொழி :

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.

Hard work writes your destiny.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.

கோல்ட்ரிட்ஜ்.

பொது அறிவு :

01. இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?

மீரா குமார் - Meira Kumar

02. இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

டி. உதய குமார்-தமிழ்நாடு

D. Udaya Kumar - Tamilnadu

English words :

Famished - starving

Sluggishly - slowly

தமிழ் இலக்கணம் :

வாக்கிய பிழை பாகம் 2

மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்

வல்லுனராக -இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை

2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே

அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து கடைகள் திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும்

நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்

அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 18 - மார்ட்டின் லூதர் அவர்களின் நினைவுநாள்

Martin Luther, பிறப்பு நவம்பர் 10, 1483 - இறப்பு பெப்ரவரி 18, 1546.

ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.

பிப்ரவரி 18 மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி Michelangelo di Lodovico Buonarroti Simoni, பிறப்பு மார்ச் 6, 1475 - இறப்பு பெப்ரவரி 18, 1564 ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக் கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.

நீதிக்கதை

-நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்.

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி.

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

18.02.2026

* 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

* இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

விளையாட்டுச் செய்திகள்

* டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

Today's Headlines - 18.02.2026

* In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

* In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

* In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

Sports News

In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 17, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf செங்கல்பட்டு 2026

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth 10th sslc TAMIL third revision exam question paper pdf Chengalpattu district 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf 2026 தூத்துக்குடி மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

10th tamil slow learner's guide minimum level material Thoothukudi district notes 2026

திறன் தமிழ் வினாத்தாள் pdf மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வகுப்பு 9

 பதிவிறக்கு/DOWNLOAD


Thiran 9th Tamil Question IX third mid term

திறன் தமிழ் வினாத்தாள் pdf மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வகுப்பு 6, 7, 8

 பதிவிறக்கு/DOWNLOAD


Thiran Tamil Question VI to VIII third mid term

2026 பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு மதுரை 10th tamil slow learner guide madurai notes

 


10th tamil slow learner guide  madurai notes


பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு மதுரை மாவட்டம் 2026 pdf Tenth tamil slow learner's guide Madurai

      பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil new slow learner's guide material for focused learners sslc exam preparation Madurai district 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2026. செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

17-02-2026. செவ்வாய்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து வினையாடல் ;

குறள் எண்: 511.

குறள் :

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

உரை :

நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

பழமொழி :

> தாமதம் தாழ்வுக்கு வழி வகுக்கும்.

Delay is dangerous.

இரண்டொழுக்க பண்புகள்:

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

எழுவதற்கே வீழ்ச்சி ; வெல்வதற்கே தோல்வி ;

விழிப்பதற்கே தூக்கம் -பிரெளனிங்.

பொது அறிவு:

01. ஆசியாவில் விளையாட்டுக்குப் பிரபலமான மற்றும் முதன்மையான நாடாக கருதப்படும் நாடு எது?

சீனா -China

02. இந்திய கரன்சி நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்தியப் பிரதமர் யார்?

டாக்டர் மன்மோகன் சிங்

Dr. Manmohan singh

English words:

Educate to teach someone to gain knowledge

Aberrant - unusual

தமிழ் இலக்கணம் :

இன்று நாம் அறியாமலே செய்யும் சில வாக்கியப் பிழைகளைப் பார்ப்போம்

1. சில மீன்கள் இறந்து கடற்கரை ஓரத்தில் கிடந்தன தவறு - கடற்கரை என்றாலே கடல் ஓரம் தான். எனவே கடற்கரை ஓரம் என்று எழுதாமல் சில மீன்கள் இறந்து கடற்கரையில் கிடந்தன என்று எழுத வேண்டும் 

2. நான் பிரதி வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். இங்கு பிரதி வெள்ளி, வெள்ளிதோறும் இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகின்றன. ஒவ்வொரு வெள்ளியும் என்று பொருள் எனவே நான் வெள்ளிதோறும் நூலகம் செல்வேன். 
அல்லது
நான் பிரதி வெள்ளி நூலகம் செல்வேன். என்று எழுத வேண்டும்
தொடரும்....

அறிவியல் களஞ்சியம் :

பிளாஸ்டிக் கழிவுகளை சுத்திகரிக்கும் நடைமுறை உயிரியல் வழிகளை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும். பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்க பூஞ்சைகளைப் பயன்படுத்தும் முறையானது பிளாஸ்டிக் கழிவு நெருக்கடியைக் கையாளுவதில் ஒரு நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகுந்த அணுகுமுறையாக அமையும். குப்பைத் தொட்டிகள் அல்லது எரியூட்டிகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவைக் குறைக்க இது ஒரு வழியாகும்.

நீதிக்கதை -நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான்.

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.


இன்றைய செய்திகள்

17.02.2026

* தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான இறுதி வாக்காளர் பட்டியல் 23.02.2026 அன்று வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

* அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS படிப்புக்கு 5,023 இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 5,000 இடங்கள் கூடுதலாக 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

விளையாட்டுச் செய்திகள்

ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16 வெற்றிகளை பெற்றுள்ளது.

*டி20 உலகக் கோப்பை 2026:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்.

Today's Headlines 17.02.2026

* Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that the final voter list related to the special radical revision carried out in Tamil Nadu will be published on 23.02.2026.

*The central government has approved an additional 10,023 seats in government medical colleges, including 5,023 seats for MBBS and 5,000 seats for postgraduate medical courses.

* The CBSE public examinations for Classes 10 and 12 will begin tomorrow.

SPORTS NEWS

ICC India has won 16 consecutive matches in the World Cup and Champions Trophy.

T20 World Cup 2026: Afghanistan beat the United Arab Emirates by 5 wickets.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, February 16, 2026

2026 பத்தாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையேடு செங்கல்பட்டு 10th tamil slow learner guide

 


10th tamil slow learner guide chengalpattu


பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு செங்கல்பட்டு மாவட்டம் 2026 pdf

     பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil slow learner's guide material for focused learners sslc exam preparation chengalpattu district 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-02-2026. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

16-02-2026. திங்கள்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து தெளிதல் ;

குறள் எண் : 501.

குறள் :

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்

உரை :

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி :

அற்ப அறிவு அல்லற்கிடம்.

A little knowledge is a dangerous thing.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

நீங்கள் செய்யும் தர்மம் உங்கள் செல்வத்தை ஒருபோதும்

குறைக்காது. நபிகள் நாயகம்

பொது அறிவு :

01.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பழம் எது?

யுபரி கிங் மெலன்

Yubari King melon

02.இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை யார் நியமிக்கிறார்கள்?

குடியரசுத் தலைவர் President

English words:

foliage all the leaves of a tree or plant.

ஒரு மரம் அல்லது செடியின் இலைத்தொகுதி.

launch - start something new,

புதிதாக ஒன்றைத் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்:

.... 2

1. சும்மா சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன் 
பொருள் - திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன்

2. கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டியா?

பொருள் - அமைதியாக

3. சும்மா சும்மா ஏன் வருகிறாய்? 
பொருள் - அடிக்கடி

சும்மா என்பது ஒரு மாயச் சொல் தான் இல்லையா? எத்தனை சும்மாக்கள் பார்த்து விட்டோம்.

அறிவியல் களஞ்சியம்:

 சமீபத்திய ஆய்வில், ஆஸ்பர்கிலஸ் டெரியஸ் மற்றும் என்ஜியோடோன்டியம் ஆல்பம் ஆகிய இரண்டு பூஞ்சைகள் பாட்டில் மூடிகள் மற்றும் உணவுப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் பாலிப்ரோப்பிலீன் என்ற பிளாஸ்டிக் வகையை உடைக்கும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூஞ்சைகளால் பாலிப்ரொப்பிலீனின் ஆய்வக மாதிரிகளை வெறும் 140 நாட்களில் உடைக்க முடிந்தது, இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் பிளாஸ்டிக்கை தானே சிதைவடைவதற்கு எடுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

பிப்ரவரி 16

-தாதாசாகெப் பால்கே அவர்களின் நினைவுநாள்

தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke,

பிறப்பு ஏப்ரல் 30, 1870 - இறப்பு பிப்ரவரி 16, 1944.

இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார். இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும். அவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

நீதிக்கதை -ஒரு வரம் மூன்று பலன்கள்

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது. மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.

மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன். மீனும், நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும் என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.

அவனது தந்தை கூறினார்: மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்.

அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்: மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்.

கடைசியாக மனைவி கேட்டாள்: நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.

மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்? விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும் என்பது தான் அவன் கேட்ட வரம்.

இன்றைய செய்திகள் 16.02.2026

* சென்னையில் 'L' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை-ரெயில் சுரங்கப்பாதை அசாமில் அமைகிறது!

* இந்தியாவில் சுமார் 4 கோடியே 20 லட்சம் பேர் தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

விளையாட்டுச் செய்திகள்

டி20 தொடர்: முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியை எளிதாக வீழ்த்தியது இந்தியா.

டி20 உலகக் கோப்பை 2026: 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

Today's Headlines 16.02.2026

* Chief Minister M.K. Stalin inaugurated the 'L' shaped flyover in Chennai.

* India's first underwater road-rail tunnel to be built in Assam.

* Studies suggest that around 42 million people in India are suffering from thyroid disorder.

SPORTS NEWS

T 20 Series: India easily beat Australia Women in first match.

T 20 World Cup 2026: West Indies beat Nepal by 9 wickets

International Table Tennis Tournament is being held in Chennai.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, February 15, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நால்வகைச்சொற்கள், திருக்குறள்

6th tamil model notes of lesson

lesson plan February 23

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – கற்கண்டு, வாழ்வியல்

5.உட்பாடத்தலைப்பு

நால்வகைச்சொற்கள், திருக்குறள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

நால்வகைச் சொற்களை அறியும் திறன்.

திருக்குறளின் அறக்கருத்துகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/3-1-naalvagai-sorkal-tamil-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_58.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-1-6th-tamil-mindmap-term-3-unit-1_18.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-1-6th-tamil-ilakanam-term-3-unit-1.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video-6-3_9.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_97.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html

11.ஆயத்தப்படுத்துதல்

பல்வேறு சொற்களைக் கூறச்செய்தல்.

திருக்குறள் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

நால்வகைச் சொற்களை அறிமுகப்படுத்துதல்.

திருக்குறளின் சிறப்புகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

சொல் குறித்துக் கூறுதல். பெயர், வினை, இடை, உரிச்சொற்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          உதாரணங்களுடன் விளக்குதல்.

          சொற்களைக் கொடுத்து வகைகளை அறியச் செய்தல்.

          நால்வகைச் சொற்களை அறிந்து பயன்படுத்துதல்.

          திருக்குறள் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். குறள்களின் பொருளை விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சொற்களின் வகைகளை மாணவர்களிடம் உணர்த்துதல். சொல் பற்றி அறிந்து இனங்காணச் செய்தல். சொந்தமாகச் சொற்களை எழுதுதல்.

திருக்குறள் குறித்து விளக்குதல். குறள் கூறும் பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – சொல் என்றால் என்ன?

ஏழைகளுக்கு உதவி செய்வதே ..............................

          ந.சி.வி – சொற்களின் வகைகளை எழுதுக.

உ.சி.வி – உனக்குப் பிடித்த குறளையும் அதன் பொருளையும் எழுதுக.

நீ அறிந்த உரிச்சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

சொல் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

திருக்குறள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive