கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, April 02, 2026

ARUPPUKOTTAI MUTHUMARI amman kodi அருப்புக்கோட்டை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடி


 

வகுப்பு 9 தமிழ் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 9th tamil question answer key 2026

 


9th tamil question answer key 2026 pdf link👇


வகுப்பு 8 தமிழ் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 8th tamil question answer key 2026

 


8th tamil question answer key 2026 pdf link👇


வகுப்பு 7 தமிழ் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 7th tamil question answer key 2026

 


7th tamil question answer key 2026 pdf link👇


வகுப்பு 6 தமிழ் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் 6th tamil question answer key 2026

 


6th tamil question answer key 2026 pdf link👇





ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


9th tamil third term exam question answer key pdf virudhunagar district annual exam 

எட்டாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


8th tamil third term exam question answer key pdf virudhunagar district annual exam 

ஏழாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


7th tamil third term exam question answer key pdf virudhunagar district annual exam 

ஆறாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் 2026

 பதிவிறக்கு/DOWNLOAD 


6th tamil third term exam question answer key pdf virudhunagar district annual exam 

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 8

 


NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 8 link touch below👇




TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 8

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02.04.2026.வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

02.04.2026.வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: நட்பியல் ;

அதிகாரம் : வரைவின் மகளிர் :

குறள் எண் : 917.

குறள் :

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் 
பேணிப் புணர்பவர் தோள்.

உரை :

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

பழமொழி :

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

Bend the twig, bend the tree.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.

2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ்படிதலுடன் நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

* மேலான பண்புள்ளவர்களின் சொற்களைக் கேளுங்கள் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள் ஔவையார்.

பொது அறிவு :

01. நவீன நீர்மூழ்கிக் கப்பல்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜான் பிலிப் ஹாலண்ட், John Philip Holland

02.தமிழ்நாட்டில் வட காவிரி என்று அழைக்கப்படும் நதி எது?

கொள்ளிடம் ஆறு - Kollidam river

English words :

Serene - Calm, peaceful, and untroubled.

 Ambiguous - Having more than one meaning; unclear.

தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

கையெழுத்து, கையொப்பம் இரண்டும் ஒன்றா வேறு வேறா?

இரண்டும் ஒன்று அல்ல. எப்படி என்று காண்போம் வாருங்கள் கையெழுத்து என்பது ஒருவர் பொதுவாக கைப்பட எழுதும் எழுத்து (எழுத்து வடிவம்) ஆகும்.

பயன்பாடு - கடிதம், பாடக் குறிப்புகள் எழுத பயன்படுகிறது.

கையொப்பம் என்பது ஒரு நபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த ஆவணங்களில் இடும் தனித்துவமான, மாற்ற முடியாத கையெழுத்து (signature) ஆகும்.

பயன்பாடு:

கையொப்பம் வங்கி, பத்திரம், அலுவலக ஆவணங்களில் சட்டப்பூர்வ சான்றாகப் பயன்படுகிறது.

கையெழுத்தை சூழலுக்கு ஏற்ப மாற்றலாம் (நிதானமாக, வேகமாக), ஆனால் கையொப்பத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.

அறிவியல் களஞ்சியம் :

மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 02 - பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாள்

(International Children's Book Day - ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.

"இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற (International Non-Profit Organization) @ முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்

குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்

நீதிக்கதை

நண்டு, கொக்கைக் கொன்ற கதை

ஒரு பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்த குளத்தின் கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்" என்று. "நமக்கேன்" என்று இராமல் அதன்முன் வந்தது. "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?" என்றது.

"நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை" என்றது கொக்கு. "மனசு சரி இல்லையா... ஏன்?' என்றது மீன். "அதை ஏன் கேட்கிறாய்... "என்று பிகு பண்ணியது கொக்கு. "பரவாயில்லை சொல்லுங்களேன்"

"சொன்னால் உனக்குத் திக் என்றாகும். "மீனுக்குப் பரபரத்தது.

"சொன்னால்தானே தெரியும்"

"வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்..." என்று இழுத்தது கொக்கு.

"வரட்டுமே"

"என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்."

"அய்யய்யோ!" உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக "நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்" என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

"நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போட முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம்.

அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்" என்றது கொக்கு மிகவும் இரக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின. "அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்" என்றன ஒருமித்தக் குரலில். கொக்குக்கும் கசக்குமா காரியம்? நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கவ்விக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலர வைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது. "ஒ சீவகாருண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்" என்று கெஞ்சியது. வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் - என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கவ்விக்கொண்டு பறந்தது. பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்கு "பக்" கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் "சட்"டென்று புரிந்துவிட்டது. தன் நிலையும் அப்படித்தானா? உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

"கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்" என்றது நண்டு.

"அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?"

"எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன."

"ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான் என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொண்டு பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன. வஞ்சமனத்தானின் உபாயமும் அபாயமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.

இன்றைய செய்திகள் 02.04.2026

* ஓஎன்ஜிசி நிறுவனம், 'தாமன் அப்சைட் டெவலப்மென்ட்' திட்டத்தின் மூலம் எரிவாயு உற்பத்தியை தொடங்கியுள்ளது.

* இந்தியாவில் விமான எரிபொருள் விலை இரு மடங்கு அதிகரிப்பு: 1000 லிட்டர் ரூ.2.07 லட்சமாக உயர்வு.

* போரால் இஸ்ரேல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி.

கேமராக்களில் மூன்றில் ஒரு பங்கு சீனா தயாரிப்புகள் ஆகும்.

விளையாட்டுச் செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அரை சதம் அடித்த இரண்டாவது அதிவேக பேட்ஸ்மேன்வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் விளாசியது ஐபிஎல்லில் புதிய சாதனையாக அமைந்தது.

Today's Headlines - 02.04.2026

* Oil and Natural Gas Corporation has started gas production through the "Daman Upside Development" project.

* Aviation fuel prices in India have doubled: 1000 liters have increased to 2.07 lakh.

* Due to the war, the normal life of people in Israel has been affected.

* One-third of the CCTV cameras sold in India are manufactured in China.

SPORTS NEWS

Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, scored a half-century and became the second fastest batsman to achieve this milestone, setting a new record in the Indian Premier League.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, April 01, 2026

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 7

 



NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 7 link touch below👇




TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 7

 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 9th tamil annual exam answer key 2026 Virudhunagar district 

ஒன்பதாம் வகுப்பு     தமிழ்

முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. இ. மலையாளம்                                                             1

2. அ. ஆராயாமை, ஐயப்படுதல்                                             1

3. ஆ. தைத்திங்கள்                                                           1

4. ஈ. புலரி                                                                        1

5. இ. சிற்றிலக்கியம்                                                           1

6. ஆ. சாவித்திரிபாய் பூலே                                                  1

7. இ. வைரமுத்து                                                              1        தமிழ்த்துகள்

8. அ. மாமல்லபுரம்                                                             1

9. ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                            1

10. ஆ.களர்நிலம்                                                                1

11. ஆ.காரியவாகுபெயர்                                                       1

12. ஈ. தமிழோவியம்                                                            1

13. ஆ. ஈரோடு தமிழன்பன்                                                   1

14. அ. எத்தனை - எத்தனை                                               1

15. இ. தாய் + எனவே                                                           1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      .      கூவல் என்றால் என்ன?                                                               1

.     சாரதா சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது?                                                   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி.                                                                                                2

தமிழ்த்துகள்

18.   இந்திய தேசிய இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.

 தெய்வத்திற்குச் செய்யும் தொண்டினைக் காட்டிலும் தேசத்தொண்டே மேலானதாகும்.

ஆதலால் இராணுவப் பணியில் சேர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.                  2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

19.      அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்.                                               2

தமிழ்த்துகள்

20.     தமிழ்,                     மலையாளம்,

கன்னடம்,                        துளு.                                                            2

தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.                                                             2

தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     அ செந்தமிழும் நாப்பழக்கம்.                                                          1

ஆ இடமெல்லாம் சிறப்பு                                                                         1

தமிழ்த்துகள்

23. பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக் கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன.                                                                                   2

தமிழ்த்துகள்

24. அசை 2 வகைப்படும்.

அவை :

1.நேரசை, 2.நிரையசை                                                                          2

தமிழ்த்துகள்

25. அ. நல்ல தமிழில் எழுதுவோம்                                                            1

ஆ. குழலிக்கும் பாடத் தெரியும்                                                     1

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

26. கொடுத்த - கொடு+த்+த்+அ

கொடு - பகுதி

த்        - சந்தி,

த்        - இறந்தகால இடைநிலை

      - பெயரெச்ச விகுதி                                                                     2

தமிழ்த்துகள்

27. அ. கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்.                                   1

ஆ. அணில் பழம் கொறித்தது.                                                                 1

தமிழ்த்துகள்

28. அ. இந்திய தேசிய இராணுவம்.                                                          1

ஆ நீர் மேலாண்மை                                                                              1

தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. ஔவையார்,       ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார்,           அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார்,           காவற்பெண்டு, நப்பசலையார்.                                              3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 

30.     திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நடுத் திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்கு 'சுந்தரத் தெலுங்கு' எனப்படுகிறது.

மலையாளத்தில் பல்வேறு இலக்கியங்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்பட்டன.

கன்னட எழுத்தாளர்கள் ஏழுபேர் ஞானபீட பரிசு பெற்றுள்ளார்கள்.                            3

தமிழ்த்துகள்

31. அ. கல்வி                                                                                                 1

ஆ. பகுத்தறிவு, சுயமரியாதை உணர்ச்சி, நல்லொழுக்கம்.                                       1

இ. அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் கற்றுத் தரக்கூடாது, தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத் தர வேண்டும்.                                                                   1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

 

32. நாராயணன், மும்மூர்த்திகளின் தலைவன், கேசவன் என்று கண்ணனைப் பாடிடும் ஒலி காதில் கேட்கவில்லையா? கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கிறாயா? கரிக்குருவி, கீச்சாங்குருவிகள் பலவும் ஒலிக்கும் பேரொலி பொழுது விடிந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கிறது.

நீ இன்னும் உறங்குகிறாயே? அறிவில்லாத பெண்ணே! மணமுள்ள கூந்தலுடைய ஆய்ச்சியர் கழுத்தில் அணிந்துள்ள வடமும் ஐம்படைத் தாலியும் கலகலவென ஒலி எழுப்பிட அவர்கள் மத்தினால் தயிர் கடையக் கை அசைத்திடுகையில் எழுகின்ற ஒலியும் உனக்குக் கேட்கவில்லையா?

இளம் பெண்களுக்கு இளம்பெண்களின் கூட்டத்திற்குத் தலைவியான நீ உறங்கலாமா? இது ஆழ்ந்த உறக்கமா? நடிப்பா? ஒலி படைத்த கண்ணழகியே! எழுந்திரு! கதவைத்திற! நீராடச் செல்வோம்! பாவை நோன்பெடுப்போம் என ஒரு பெண் அழைக்கிறாள்.                  3

 

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

33. புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவியத்தில் ஐவகை நில வருணனைகள் வருகின்றன.

தீயிலிட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும், காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் குறிஞ்சி நிலத்தில் மணம் கமழ்ந்து காணப்பட்டன.                                                                              3

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. இராவண காவியம்

கல்லிடைப் பிறந்த ஆறும்

    கரைபொரு குளனும் தோயும்

முல்லை அம் புறவில் தோன்று

      முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

       நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல் அம்செறுவில் காஞ்சி

        வஞ்சியும் மருதம் பூக்கும்              -  புலவர் குழந்தை                           3

தமிழ்த்துகள்

அல்லது

ஆ. பெரிய புராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்  குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை  வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்  குளமெல்லாம்  கடல் அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்.          

                                                                                         -  சேக்கிழார்.                   3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. 1.எண்ணல் அளவை ஆகுபெயர்

ஒன்று பெற்றால் ஒளி மயம் - ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.

2.எடுத்தலளவை ஆகுபெயர்

இரண்டு கிலோ கொடு- நிறுத்து அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

3.முகத்தல் அளவை ஆகுபெயர்

அரை லிட்டர் வாங்கு- முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.

4.நீட்டலளவை ஆகுபெயர்

ஐந்து மீட்டர் வெட்டினான்-நீட்டி அளக்கும் நீட்டல் அளவைப் பெயர், அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது.                                                  3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

36. இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.    

அணி இலக்கணம் :

தொடர்புடைய இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தி விட்டு மற்றொன்றை உருவகப்படுத்தாது விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

விளக்கம் :

அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து குணங்களை தூண்களாக உருவகப் படுத்தியவர், சால்பு என்பதை உருவகம் செய்யவில்லை.

ஆகவே இது ஏகதேச உருவக அணி ஆயிற்று.                                                     3

தமிழ்த்துகள்

37. சீர்                    அசை                              வாய்பாடு

சுழன்/றும்/ஏர்ப்       நிரை நேர் நேர்                   புளிமாங்காய்

பின்/னது               நேர் நிரை                        கூவிளம்

உல/கம்                 நிரை நேர்                         புளிமா

அத/னால்               நிரை நேர்                         புளிமா

உழந்/தும்               நிரை நேர்                         புளிமா

உழ/வே                  நிரை நேர்                         புளிமா

தலை                    நிரை                               மலர்                                          3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                                             5x5=25

தமிழ்த்துகள்

38.அ. இராவணகாவியம் காட்சிகள்                                                         5

அல்லது

ஆ. நயம் பாராட்டுக.                                                                               5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

39. அ. பதிப்பகத்திற்குக் கடிதம்.                                                                        5

(அல்லது)

ஆ. நண்பனுக்குக் கடிதம்.                                                                    

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

 

41.      படிவம் சரியாக நிரப்பியிருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                       5

 

தமிழ்த்துகள்

42. அ. மொழிபெயர்ப்பு

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     சமூகத்திற்குப் பணிகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

 

43. அ. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் வலியுறுத்திய சீரமைப்புகள்.    8

அல்லது                           தமிழ்த்துகள்

. சாதனைப் பெண்கள்                                                                                 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

44. அ. தண்ணீர்                                                                                    8

அல்லது                           தமிழ்த்துகள்

. இந்திய விண்வெளித்துறை             

 

(தலைப்பை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

 

 

45. அ. நிகழ்ச்சித் தொகுப்புரை                                                                8

அல்லது                           தமிழ்த்துகள்

. எனது பயணம்                                                            

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive