கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 26, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2026. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

26-03-2026. வியாழன்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: நட்பியல் ;

அதிகாரம் : புல்லறிவாண்மை ;

குறள் எண் : 843.

குறள் :

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.

உரை :

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

பழமொழி :

> போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

A contended mind is a continual foot.

இரண்டொழுக்க பண்புகள்:

1. போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2. என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

நீங்கள் ஒருவருக்கு நன்மை செய்தால், அது உங்களுக்கே நன்மை செய்தது போன்றது. ஒருவருக்கு தீமை செய்தால், அது உங்களுக்கே தீமையாகும். அல்குர்ஆன்.

பொது அறிவு :

01. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?

ராகேஷ் சர்மா -Rakesh Sharma

02.காந்தி அமைதிப் பரிசு பெற்ற முதல் இந்திய அமைப்பு எது?

ராமகிருஷ்ணா மிஷன் Ramakrishna Mission

English words :

Debate - Discussion between candidates.

Secret Ballot - Voting privately.

தமிழ் இலக்கணம்:

- அறிவோம் தமிழ்

இல்லை, அல்ல, அன்று

இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே பொருள் தருவது போல் தோன்றினாலும்

அப்படி அல்ல. இவைகளை நாம் பயன்படுத்தும் இடம் வேறுபடும்.

இல்லை என்பது ஒரு பொருள் அல்லது நபர் இல்லாததைக் குறிக்கும்.

1. என்னிடம் பணம் இல்லை

2. என் தகப்பனார் இங்கு இல்லை

அல்ல என்பது "ஒன்று வேறு ஒன்றாக இல்லை என்று சொல்ல"

1. இது என் புத்தகம் அல்ல

அன்று என்பதும் மேலே குறிப்பிட்ட அதே பொருள் தான் தரும்

ஆனால் இது உயர்ந்த இலக்கிய நடை ஆக பயன்படுத்தப் படும்

1. இது உண்மை அன்று

2. இது நன்மை அன்று

அறிவியல் களஞ்சியம் :

ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்திலும், அதற்கு மூன்று இதயங்களும் உள்ளன.

மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன்

அவர்களின் நினைவுநாள்

லூடுவிக் வான் பேத்தோவன் - Ludwig van Beethoven

பிறப்பு 1770 இறப்பு மார்ச் 26, 1827

இவர் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார்.

அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

நீதிக்கதை

நரி சொன்ன பொய்

ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறை கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்த பசியுடன் இருந்ததால் அந்த சேவலைப் பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.

சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதைப் பற்றித் தெளிவாகப் பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.

சேவல், அருமை சகோதரா, போகாதே. நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.

நீதி : புத்திசாலிகளை யாரும் சீக்கிரத்தில் ஏமாற்ற முடியாது.

இன்றைய செய்திகள்

26.03.2026

* ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்; 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது

* கொலம்பியாவில் ராணுவத்தின் C-130 ஹெர்குலிஸ் ரக விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துள்ளது. இதில் 66 பேர் வரை பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்

* போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது

விளையாட்டுச் செய்திகள்

*5வது டி20: நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா

33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.

Today's Headlines

26.03.2026

* Shocking news for train passengers: No refund will be given if tickets are cancelled within 8 hours before departure comes into effect. new rule

* In Colombia, a military C-130 Hercules aircraft has crashed and broken apart. Around 66 people have died, and 70 others have been injured.

* Iran has officially agreed to hold talks with the United States to bring an end to the war.

Sports News

5th T20: South Africa defeated New Zealand and won the series.

They won by 33 runs and secured the series 3-2

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, March 25, 2026

தபால் வாக்கு வழிமுறைகள் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு

POSTAL VOTE METHOD INDIAN ELECTION COMMISSION 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 திருக்குறள் இசையுடன் பாடலாக 8th tamil memory poem THIRUKKURAL unit 7


8th tamil memory poem THIRUKKURAL unit

 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 திருக்குறள் இசையுடன் பாடலாக 8th tamil memory poem THIRUKKURAL unit 4

 

8th tamil memory poem THIRUKKURAL unit 4

ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் பெயர்ச்சொல் அறுவகைப் பெயர்கள் 6th tamil ilakkanam peyarchol


 

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் மனப்பாடப்பாடல் இசையுடன் 8th tamil unit 2 thirukkural memory poem song with music

 


8th tamil unit 2 thirukkural memory poem song with music

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

25-03-2026. புதன் 

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: நட்பியல் ;

அதிகாரம் : புல்லறிவாண்மை ;

குறள் எண் : 842.

குறள் :

அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.

உரை :

அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை, அப்பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

பழமொழி :

பேராசை பெரு நஷ்டம்.

Grasp all lose all.

இரண்டொழுக்க பண்புகள் :

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

* முடியும் என்று நம்பினால் வாய்ப்புகளைக் காண்பீர்கள். முடியாது என்று நினைத்தால் தடைகளே கண்களுக்குத் தெரியும்.

பொது அறிவு :

01.தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூல் எது?

தம்பிரான் வணக்கம் - Thambiran Vanakkam

02.உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் எங்குள்ளது?

இந்தியா - சென்னை உயர் நீதிமன்ற வளாகம்

India- Chennai high court complex

English words :

+ Canvassing - Asking people for votes

Rally - Public meeting to support a candidate

தமிழ் இலக்கணம்:

கற்போம் தமிழ்

நேற்று காற்று வீசும் திசையின் அடிப்படையில் காற்றின் பெயர்கள் பார்த்தோம். இன்று வேக அடிப்படையில் அதன் பெயர்களைப் பார்ப்போம்.

0-6 கி.மீ

மென்காற்று

6-11 கி.மீ

இளந் தென்றல்


11-19 கி.மீ

தென்றல்

20-29 கி.மீ

புழுதிக் காற்று

30-39 கி.மீ

ஆடிக் காற்று

40 - 100 கிமீ

கடும் காற்று

101 கிமீ மேல்

புயல் காற்று

அறிவியல் களஞ்சியம் :

கரப்பான் பூச்சி தலை துண்டிக்கப்பட்டாலும் ஒரு வாரம் வரை உயிர்வாழும்.

மார்ச் 25 - வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள

- William Damian "Will" Colgate:

பிறப்பு ஜனவரி 25, 1783 -இறப்பு மார்ச்சு 25, 1857.

இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை -இரண்டு நண்பர்கள்

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றத்தார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்" "என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?"

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: "நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வர முடியும்"

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்.

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தைச் சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது.

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

25.03.2026

* கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

* இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க, தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் அளவை 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன.

*ஈரான் மீதான போர் 5நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்

விளையாட்டுச் செய்திகள்

*சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா கோலாகலமாக நடை பெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

Today's Headlines 25.03.2026

* School children get an opportunity to learn Japanese during the summer holidays: Organized by the Indo-Japan Chamber of Commerce..

* To address the cooking gas shortage in India, oil companies have suggested reducing the size of domestic LPG cylinders from 14.2 kg to 10 kg.

* U.S. President Donald Trump has announced a 5-day pause in the war against Iran.

SPORTS NEWS

The Chennai Super Kings (CSK) reunion event was held grandly at the Chepauk Stadium in Chennai. A large number of CSK fans enthusiastically attended and enjoyed the celebration.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Tuesday, March 24, 2026

யாருக்கு உதவி ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Whom to help? kutty kathai

 


tamil short story Whom to help? kutty kathai

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24.03.2026. செவ்வாய் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

24.03.2026. செவ்வாய் .

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ;

இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : புகழ் ;

குறள் எண் : 238.

குறள் :

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.

உரை :

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால்

உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

பழமொழி :

வல்லவர் கை பட்டால் உதவா குப்பையும் உயர் மதிப்படையும்.

Even a trash becomes worthy in a dexterous hand.

இரண்டொழுக்க பண்புகள்:

1. போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.

பொது அறிவு:

01.சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) எங்கு
அமைந்துள்ளது?

நெதர்லாந்து -ஹேக் நகர் (Netherland -Hague)

02. தமிழின் முதல் காப்பியம் எது?

சிலப்பதிகாரம்-Silappatikaram

English words:

Campaign - Activities to win votes.

Manifesto - Promises made by a party.

தமிழ் இலக்கணம்

காற்றுக்கு பொருளோடு வைக்கப் பட்டுள்ள பெயர்கள் குறித்து இன்று பார்ப்போம்

தெற்கில் இருந்து வீசும் இதமான காற்று - தென்றல்

வடக்கிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று வாடை

கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல்

மேற்கிலிருந்து வீசும் காற்று - கச்சான்/மேலைக் காற்று

தொடரும் 

அறிவியல் களஞ்சியம் :

தட்டான் பூச்சிகளுக்கு (Grasshoppers) அவற்றின் வயிற்றுப் பகுதியில் காதுகள் உள்ளன.

மார்ச் 24 - உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.

நீதிக்கதை -அழுக்கு சட்டை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். "ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. “நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். "ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?" என்று ரகசியமாக அவனிடம் கேட்டார். "மறந்திட்டேன் சார்" சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், "யானை பல் விளக்குகிறதா" என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை "அழுக்குமாமா" என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

"டேய் குளிச்சிட்டுப் போய் படிடா" இது அப்புவின் அம்மா. "குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா" என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. "பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து" என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். "தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர். அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. "முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். "சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு "பளிச்" என்று வந்தான்.

"அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா" என்று ஒருவன் சொல்ல பையன்கள் "கொல்" லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள் -24.03.2026

* ஈரானில் உள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது. "இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என ஈரான் கூறியுள்ளது.

*அமெரிக்க - ஈரான் போரில் ஈரான் மிக பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளது.

இந்த போரால் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

வளைகுடா நாடுகள் குடிநீருக்கு 90% கடல் நீரை தான் நம்பியிருக்கின்றன.

கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் பல நாடுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

விளையாட்டுச் செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்

மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ)அறிவித்துள்ளது.

Today's Headlines - 24.03.2026

* In a situation where several lakh people in Iran are affected, India has been continuously sending aid. Iran has stated, We will never forget India's compassion and humanity.

* In the US-Iran war, Iran has suffered massive damage. More than 5,000 people have lost their lives due to this conflict.

* Gulf countries depend on seawater for about 90% of their drinking water. If desalination plants are attacked, many countries could face severe drinking water shortages.

SPORTS NEWS

In the 4th T 20 match against New Zealand, South Africa won by 19 runs.

Cricket Australia (CA) has announced that the Test series between India and Australia will begin in January next year.

Prepared by Covai women ICT போதிமரம் 

Monday, March 23, 2026

2026 வகுப்பு 9 தமிழ் மொழிபெயர்ப்பு வினாவிடை 9th TAMIL MOLIPEYARPU QUESTION AND ANSWER TRANSLATION

 


9th TAMIL MOLIPEYARPU QUESTION AND ANSWER TRANSLATION


ஒன்பதாம் வகுப்பு தமிழ் மொழிபெயர்க்க வினாவிடை முழுவதும் புதிய பாடத்திட்டம் pdf 9th Tamil molipeyarkka

9th Tamil new syllabus 2025 - 2026 molipeyarkka all units pdf

மொழிபெயர்ப்பு

Molipeyarppu - Translation 


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23.03.2026.திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

23.03.2026.திங்கள்

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ;

இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : புகழ் ;

குறள் எண் : 236.

குறள் :

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

உரை :

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

பழமொழி :

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

Beat after beat will make even a stone move.

இரண்டொழுக்க பண்புகள்:

1. போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி :

ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம்.

ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு எச்சரிக்கை .கவிஞர் கண்ணதாசன்.

பொது அறிவு :

01.அமெரிக்க அதிபர் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?

நான்கு ஆண்டுகள்

02.இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த மற்றும் பழமையான இலக்கிய விருது எது?

ஞானபீட விருது -Jnanpith Award

English words :

Ballot - The vote itself (paper or electronic)

Polling - The act of voting

தமிழ் இலக்கணம்:

இன்று இறந்த கால இடைநிலைகள் என்றால் என்ன என்று பார்ப்போம் தமிழ் இலக்கணத்தில், ஒரு செயல் ஏற்கனவே முடிந்துவிட்டதைக் காட்டும் இடைநிலைகள் இறந்தகால இடைநிலைகள் (Past Tense Markers) எனப்படும்.

இவை த், ட், ற், இன் ஆகிய நான்கும் ஆகும். இவை பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் உணர்த்துகின்றன.

முக்கியமான இறந்தகால இடைநிலைகள்:

த் : படித்தான் (படி+த்+த்+ஆன்)

ட்: உண்டான் (உண்+ட்+ஆன்)

ற் : பெற்றான்

இன் : ஓடினான் (ஓடி+ன்+ஆன்)

இன்னும் சில எ.கா :

சென்றான் : செல் + ற் + ஆன் (ற் - இறந்தகால இடைநிலை)

கற்றாள் : கல் + ற் + ஆள் (ற் - இறந்தகால இடைநிலை)

பார்த்தான்: பார் + த் + ஆன் (த் இறந்தகால இடைநிலை)

அறிவியல் களஞ்சியம் :

பிறக்கும்போது குழந்தைகளின் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வளர வளர அவை இணைந்து பெரியவர்களில் 206 எலும்புகளாக மாறுகின்றன.

மார்ச் 23 உலக வானிலை நாள் 

 (World Meteorological Day);

23rd March

WORLD METEOROLOGICAL DAY

The Future of Weather, Climate and Water across Generations

 (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.

மார்ச் 23 - பகத் சிங், சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார்,

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்

பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.

நீதிக்கதை -ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

23.03.2026

* இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

* குஜராத்தில் யோகா மையம் நடத்தி, கள்ள நோட்டுகளை அச்சிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

*பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சுகிறது.

விளையாட்டுச் செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'ரோர் 26' என்ற பெயரில் பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நேற்று சென்னையில் நடத்தியது.

இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

Today's Headlines 23.03.2026

* In response to attacks by Israeli and American forces, Iran has announced that it will carry out attacks targeting public places around the world.

* In Gujarat, a gang of six people who were running a yoga center and printing counterfeit currency has been arrested.

* Pakistan is facing a potential water crisis. Meanwhile, it has urged India to release water by implementing the Indus Water Treaty.

SPORTS NEWS

The Chennai Super Kings (CSK) management organized a grand reunion event in Chennai yesterday called Roar 26, bringing together former and current players.

The Indian team has decided to tour Ireland and play two T20 matches.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, March 22, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெயர்ச்சொல்

 6th tamil model notes of lesson

lesson plan March 30

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

பெயர்ச்சொல்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

அறுவகைப் பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்.

9.நுண்திறன்கள்

கேட்ட தலைப்புகள் பற்றிச் சொந்த நடையில் பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_90.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_11.html

https://tamilthugal.blogspot.com/2022/01/3-2-peyarchol-tamil-ilakkanam-6th-q.html

https://tamilthugal.blogspot.com/2020/09/6th-tamil-matching-game-peyarchol.html

https://tamilthugal.blogspot.com/2020/09/match-peyarchol-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-2-6th-tamil-unit-2-term-3-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_22.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_96.html

11.ஆயத்தப்படுத்துதல்

அறிந்த பெயர்ச்சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

பெயர்ச்சொல் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பெயர்ச்சொல் வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இடுகுறிப்பெயர், காரணப்பெயர் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா செய்யாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை பற்றிக் கூறுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

பெயர்ச்சொல் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – காரணப்பெயர் என்றால் என்ன?

          ந.சி.வி – அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

உ.சி.வி – அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ அறிந்த காரணப்பெயர்களைக் கூறு.

எட்டாம் வகுப்பு தமிழ் படிப்போம் பயன்படுத்துவோம் வினா விடை 8th Tamil new syllabus kalaichol arivom

 


8th Tamil new syllabus kalaichol arivom


எட்டாம் வகுப்பு தமிழ் - படிப்போம் பயன்படுத்துவோம் புதிய பாடத்திட்டம் pdf 8th Tamil kalaichol arivom

8th Tamil new syllabus 2025 - 2026 padipom payanpaduthuvom all units pdf

கலைச்சொல் அறிவோம்

kalaichol arivom 


பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் படிப்போம் பயன்படுத்துவோம் வினா விடை 9th Tamil new syllabus padipom payanpaduthuvom

 


9th Tamil new syllabus kalaichol arivom


ஒன்பதாம் வகுப்பு தமிழ் - படிப்போம் பயன்படுத்துவோம் புதிய பாடத்திட்டம் pdf 9th Tamil kalaichol arivom

9th Tamil new syllabus 2025 - 2026 padipom payanpaduthuvom all units pdf

கலைச்சொல் அறிவோம்

kalaichol arivom 


பதிவிறக்கு/DOWNLOAD

Saturday, March 21, 2026

என் மனம் கவர்ந்த பெண் ஆளுமை அன்னை தெரசா தமிழ்ப் பேச்சுப் போட்டி உரை

 


 Mother Teresa, the woman who inspired me, Tamil speech

என் மனம் கவர்ந்த பெண் ஆளுமை அன்னை தெரசா தமிழ்ப் பேச்சுப் போட்டி உரை pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


Mother Teresa, the woman who inspired me, Tamil speech competition speech


ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 2026

6th tamil third term exam question paper summative assessment annual exam question 2026

எட்டாம் வகுப்பு தமிழ் பாடறிந்து ஒழுகுதல் மனப்பாடப் பாடல் 8th tamil padarinthu olukuthal memory song

 


 8th tamil padarinthu olukuthal memory song

எட்டாம் வகுப்பு தமிழ் நோயும் மருந்தும் மனப்பாடப் பாடல் 8th tamil noyum marunthum memory song நீலகேசி

 


8th tamil noyum marunthum memory song நீலகேசி

வகுப்பு 8 தமிழ் இயற்கையைப் போற்றுவோம் மனப்பாடப் பாடல் சிலப்பதிகாரம் 8th tamil memory poem mamalai

 


 8th tamil memory poem mamalai

தமிழ்த்துகள்

Blog Archive