கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 12, 2026

10th Science question tamil english medium 10 அறிவியல் வினாத்தாள் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2026

 


10th Science question tamil english medium 


பத்தாம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026

   பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth science second revision exam question paper pdf virudhunagar district tamil and English medium 2026 sslc

போதை விழிப்புணர்வு ஓவியம்


Suicide Prevention Drug Awareness Painting
Drawing  say no to drugs

போதை விழிப்புணர்வு ஓவியம்


Suicide Prevention Drug Awareness Painting
Drawing 

தற்கொலைத் தடுப்பு போதை விழிப்புணர்வு ஓவியம்


Suicide Prevention Drug Awareness Painting
Drawing 

தற்கொலைத் தடுப்பு போதை விழிப்புணர்வு ஓவியம்


Suicide Prevention Drug Awareness Painting
Drawing 

தற்கொலைத் தடுப்பு போதை விழிப்புணர்வு ஓவியம்


Suicide Prevention Drug Awareness Painting
Drawing 

தற்கொலைத் தடுப்பு போதை விழிப்புணர்வு ஓவியம்

Suicide Prevention Drug Awareness Painting
Drawing 


சார்லஸ் டார்வின் பிறந்த நாள் பரிணாம வளர்ச்சி நாடகம்


charles darwin birthday drama

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-02-2026.வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-02-2026.வியாழன்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

; இயல்: துறவறவியல் ;

அதிகாரம்: வெகுளாமை ;

குறள் எண் : 303.

குறள் :

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய

பிறத்தல் அதனான் வரும்.

உரை :

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

பழமொழி :

> நேரத்தை மதிப்பவர்களை நேரமும் மதிக்கும்.

Time respects those who value it.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

* கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு இரகசியம் வேறு இல்லை. டர்னர்.

பொது அறிவு :

01. தலையில் இதயம் கொண்ட விலங்கு எது?

இறால் -Shrimp

02. உலகின் மிக நீளமான கடற்கரையாக கருதப்படுவது எது?

பிரயா டோ காசினோ-பிரேசில்

Praia do Cassino-Brazil

English words:

surge-a sudden strong movement of people or things in a particular direction.

பெரும் எண்ணிக்கையிலான ஆட்களின் அல்லது பொருள்களின் குறிப்பிட்ட திசையிலான இயக்கம்

தமிழ் இலக்கணம் :

நாம் எழுதும்போது முற்றுப் புள்ளி, கால் புள்ளி, அரைப் புள்ளி போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்துவது உண்டு.

இதை நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள் என்று நாம் அழைப்பது உண்டு. இன்று நிறுத்தக்குறிகள் / நிறுத்தற்குறிகள்

இவற்றில் எது சரி ? என்று பார்ப்போம் வாருங்கள்

நிறுத்தக்குறிகள் = நிறுத்தம் + குறிகள் என்று பிரிக்கலாம். நிறுத்தம் என்றால் சென்று கொண்டிருக்கும் ஒன்றை நிறுத்துவது ஆகும்

நிறுத்தற்குறிகள் = நிறுத்தல் + குறிகள் என்று பிரிக்கலாம் நிறுத்தல் என்றால் ஒரு பொருளை நிறுப்பது என்று பொருள் படும்.

எனவே நிறுத்தக்குறிகள் என்பதே சரியானது.

அறிவியல் களஞ்சியம் :

பார்சனின் நோய் (Parkinson's disease) பரவலில் குடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் பங்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பல் எனாமலை மீண்டும் உருவாக்கும் புதிய ஜெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 12 - டார்வின் நாள் - Darwin day

டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிணாமத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார்.

அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூருகிறார்கள்.

நீதிக்கதை ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

ஒரு நாள் ஓநாய் ஒன்று அதிகமான தாகத்துடனும், பசியுடனும் தவித்துக் கொண்டு இருந்தது. அதனால் அது தண்ணீர் குடிக்க ஒரு ஓடைக்குச் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டுக்குட்டி தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அதனை கண்டு ஓநாய்க்கு கோபம் வந்தது. அது ஆட்டுக் குட்டியைப் பார்த்து டேய் முட்டாள்! நான் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவில்லையா! ஓடையைக் கலக்குகிறாயே என்றது. ஆட்டுக்குட்டி மிகுந்த பயத்துடன் நான் உங்களுக்குக் கீழ்ப் பாகத்தில் உள்ள தண்ணீரைக் குடிக்கிறேன். நீங்களோ மேல் பாகத்தில் உள்ள தண்ணீரைக் குடிக்கிறீர்கள். அப்படியிருக்க தண்ணீர் எப்படி கலங்கும் என்றது.

ஆறு மாதத்திற்கு முன்னால் உன் தந்தை இப்படித்தான் என்னிடம் வாயாடினார். வாயாடியதற்காக அவருடைய தோல் அன்று உரிக்கப்பட்டது. அது போல் உன் தோலையும் உரித்தால் தான் நீ வாயாடுவதை நிறுத்துவாய் என்று கோபமாகச் சொல்லியது ஓநாய், ஆட்டுக்குட்டியோ மிகவும் பயந்தது. ஐயா! நான் சொல்வதை நம்புங்கள். நான் பிறந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை என்று மிகப் பணிவாகச் சொல்லியது.

ஓநாய் கோபமாகப் பற்களைக் கடித்துக் கொண்டு எங்கள் இனத்தாரிடம் விரோதம் காட்டுவதே உங்கள் இனத்தாருக்கு வழக்கமாகி விட்டது. இப்போது நீ உன் முன்னோர்கள் செய்த கொடுமைகளுக்கு எல்லாம் சேர்த்து தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஆட்டுக் குட்டியின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டியைக் கொன்றுத் தின்றது ஓநாய்.

நீதி : தீயோர்களைக் காண்பதும் கூட தீதே...

இன்றைய செய்திகள்

12.02.2026

* ஊழலை ஒழிப்பதில் பிற நாடுகளை விட இந்தியா மிக பின்தங்கியுள்ளதாக குளோபல் டிரான்ஸ்பரன்சி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

* பிப்ரவரி 22 ல் TNPSC குரூப்- 2 க்கான ஹால் டிக்கெட் தகவல் வெளியிடப்படும்.

* ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கும் மக்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது

விளையாட்டுச் செய்திகள்

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில், முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Today's Headlines 12.02.2026

* A report released by Global Transparency has revealed that India lags far behind other countries in eradicating corruption.

* Hall ticket information for TNPSC Group-2 will be released on February 22.

* In Iran, there is a sharp conflict between the government and the people due to rising prices and economic crisis.

SPORTS NEWS

The 10th T20 World Cup series is being played in India and Sri Lanka starting from the 7th. Chasing a target of 24 runs, Afghanistan lost by just 18 runs.

In the annual contract list of players for 2025-26 released by the Board of Control for Cricket in India (BCCI), 5 key players, including Mohammed Shami and Ishan Kishan, have been abruptly removed.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, February 11, 2026

தற்கொலைத் தடுப்பு போதை விழிப்புணர்வு போட்டிகள் JRC GHSS Avudaiyapuram Students Awareness competition

 



JRC GHSS Avudaiyapuram Students Awareness competition

பத்தாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையேடு விழுப்புரம் new 10th tamil slow learner guide

 



10th tamil slow learner guide


PDF Link

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு விழுப்புரம் மாவட்டம் 2026 pdf

   பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth tamil slow learner's guide material for focused learners sslc exam preparation Villuppuram district 2026

10th maths question tamil and english medium 10 கணக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கணிதம்


10th maths question tamil and english medium


 

பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth maths second revision exam question paper pdf virudhunagar district tamil and English medium 2026 sslc

வகுப்பு 10 தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2026 கோவை 10th tamil model question covai

 


10th tamil model question covai


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-02-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

11-02-2026. புதன்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : தெரிந்து தெளிதல் : 

குறள் எண் : 503.

குறள் :

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு.

விளக்கம் :

அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

பழமொழி :

> கனிவு இருக்கும் இடத்தில் பாசம் வாழ்கிறது.

Affection lives where kindness stays.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும்.

முகம்மது நபி

பொது அறிவு :

01. சீனப் பெருஞ்சுவரை முதன்முதலில் இணைத்து கட்ட உத்தரவிட்டவர் யார்?

சின் வம்சத்தின் முதல் பேரரசர் சின் சி ஹுவாங் - Qin Shi Huang

02. தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைச் சமவெளி எப்பெயரால் குறிப்பிடப்படுகிறது?

சோழமண்டலக் கடற்கரை 
Coromandel Coast

English words:

+ concordance to collect all the words used in a book or a writer's work into a book or list in alphabetical order, with information about where the words can be found and in which sentences:

தமிழ் இலக்கணம்:

சுற்றுமா? சுழலுமா?

வாருங்கள் பார்ப்போம்

1. பம்பரம் சுழல்கிறது

2. பூமி சூரியனை சுற்று கிறது.

ஏன் முதல் வாக்கியத்தில் சுழல்கிறது இரண்டாம் வாக்கியத்தில் சுற்றுகிறது?

ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றும் போது சுழல்கிறது என்று சொல்ல வேண்டும்

வேறு பொருளை சுற்றும் போது சுற்றுகிறது என்று சொல்ல வேண்டும்

இன்னும் சில எடுத்துக் காட்டுகள் பார்ப்போம்

1. மின்விசிறி சுழல்கிறது

2. பூமி தன் அச்சில் சுழல்கிறது

3. மாலா பூந்தோட்டத்தை சுற்றி வந்தாள்

4. முகமது தன் வீட்டைச் சுற்றி சுற்றி விளையாடினான்.

அறிவியல் களஞ்சியம் :

500 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிமங்களில் உள்ள கலவை பூமியின் கார்பன் சுழற்சி குறித்த புதிய பார்வையை வழங்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மரபணுக்களை முடக்க, புதிய CRISPR கருவி பாக்டீரியாக்கள் முழுவதும் பரவுகிறது.

பிப்ரவரி 11 - தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் பிறந்தநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் Thomas Alva Edison, பிறப்பு பெப்ரவரி 11, 1847 - இறப்பு அக்டோபர் 18, 1931.

ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நீதிக்கதை -தங்கமா? வெள்ளியா?

ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த ஒரு முக்கியமான காரியத்தை செய்வதாக இருந்தாலும், அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே செய்வார். அவரின் புகழ் மற்ற நாடுகளுக்கும் பரவியது.

ஒரு நாள் பொருளாதார நிபுணரை, அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்து, நீ நாட்டுக்கே பொருளாதார விஷயங்களில் ஆலோசனை வழங்குகிறாய். ஆனால் உன் மகனை கவனிக்காமல் விட்டுவிட்டாயே. அவனுக்கு உலோகத்தில் அதிக விலை மதிப்பானது தங்கமா? அல்லது வெள்ளியா என்று கூட தெரியவில்லையே. நாட்டு விஷயங்களை கவனித்தது போதும், வீட்டையும் கொஞ்சம் கவனி என்று கூறினார்.

வீட்டிற்கு வந்த நிபுணர், தனது மகனை அழைத்து, மகனே.. உலோகத்தில் விலை மதிப்பானது தங்கமா? வெள்ளியா? என்று கேட்டார். அதற்கு அந்த மகன் தங்கம் என்று பதிலளித்தான். உடனே, தந்தை பிறகு ஏன் இந்த ஊர் பெரியவர்கள் உன்னைப் பற்றி என்னிடம் புகார் கூறினார்கள். உன்னை நான் சரியாக வளர்க்கவில்லை என்றும், தங்கத்திற்கும், வெள்ளிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை என்று என்னிடம் சொன்னார்கள் என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்கு அந்த மகன், தந்தையே, தினமும் நான் பள்ளிக்குச் செல்லும் போது, உங்களிடம் என்னைப் பற்றி சொல்லிய பெரியவர்கள், என்னை அழைத்து ஒரு கையில் வெள்ளி நாணயங்களையும், ஒரு கையில் தங்க நாணயத்தையும் வைத்துக் கொண்டு, இதில் எது பெரியதோ அதை நீ எடுத்துக் கொள் என்று கூறுவார்கள்.

நான் உடனே வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொள்வேன். அவர்கள் கலகலவென்று சிரிப்பார்கள். நான் வெள்ளி நாணயத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்று விடுவேன் என்றான். இதைக் கேட்டு அதிர்ந்த நிபுணர், வெள்ளியை விட தங்கம்தான் விலை உயர்ந்தது என்று உனக்குத் தெரிந்திருந்தும் ஏன் வெள்ளியை எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு அந்த மகன், தந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு பெட்டியைத் திறந்து காண்பித்தான். அந்த பெட்டி நிறைய வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போது மகன் சொன்னான், தந்தையே, ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னிடம் தங்க, வெள்ளி நாணயங்களை காண்பிக்கும் போதும் நான் வெள்ளி நாணயங்களையே எடுத்துக் கொள்வேன். அதனால்தான் என்னிடம் இவ்வளவு வெள்ளி நாணயங்கள் இருக்கின்றன. நான் எப்போது தங்க நாணயத்தை தேர்வு செய்கிறேனோ அன்றுடன் இந்த ஆட்டம் நின்று போகும். அவர்களை ஆட்டத்தில் வெற்றி பெற விட்டு விட்டு, நான் நிஜத்தில் ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான். இந்த பதிலைக் கேட்டதும் ஆனந்தம் அடைந்தார் தந்தை.

நீதி : புத்திசாலிகளுக்கு என்றுமே வெற்றிதான்.

இன்றைய செய்திகள் 11.02.2026

*தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்-வானிலை ஆய்வு மையம் தகவல்

* வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு

* கேரளாவின் மாற்றுத் திறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து 10-வது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதவுள்ளனர்.

Today's Headlines - 11.02.2026

* The Meteorological Department has informed that dry weather is likely to prevail in Tamil Nadu till the 16th.

*The US government has decided to provide full duty exemption on garments and textile products manufactured in Bangladesh

* 24-year-old Tanya Nathan has been named Kerala's most physically challenged civil judge.

SPORTS NEWS

India and Sri Lanka are jointly hosting the 10th T20 World Cup. Australia and Ireland will face each other in the 14th league match of the series today.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Tuesday, February 10, 2026

அழகு ஆபத்தானது ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Beauty is dangerous kathai



 tamil short story Beauty is dangerous kathai
 

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf கோவை மாவட்டம் 10TH TAMIL second revision exam 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


SSLC TENTH 10TH TAMIL second revision exam question paper pdf Covai district 2026

11 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு விருதுநகர் +1 11th tamil slow learners guide mlm vnr

 



+1 11th tamil slow learners guide mlm vnr


11 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கையேடு pdf விருதுநகர் +1 11th tamil slow learners guide

 பதிவிறக்கு/DOWNLOAD


+1 11th tamil slow learners guide

minimum level material pdf virudhunagar district

12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கையேடு விருதுநகர் hsc +2 12th tamil slow learners guide

 



 hsc +2 12th tamil slow learners guide


12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கையேடு pdf விருதுநகர் hsc +2 12th tamil slow learners guide

பதிவிறக்கு/DOWNLOAD


hsc +2 12th tamil slow learners guide

minimum level material pdf virudhunagar district

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.2026 செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.2026 செவ்வாய் 

திருக்குறள்:

குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.

விளக்க உரை:

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி:

Knowledge is the real wealth.

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி:

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே -வெப்ஸ்டர்

பொது அறிவுட்

01.இந்திய தத்துவம்" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

Dr. S. Radhakrishnan

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள அதிக வெப்பநிலையை அளவிடப் பயன்படுவது எது?

பைரோமீட்டர்

Pyrometer

English words:

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்:

தோப்பா தோட்டமா?

எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம். மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்

எ.கா: தென்னந் தோப்பு -நீண்ட கால பயன் தரும் மரம்

வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.

மாந்தோப்பு

பூந்தோட்டம்

சவுக்குத் தோப்பு

மல்லிகைத் தோட்டம்

அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.

ஒருநாள் மாலை அவன் ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி ல் தாங்கி விட்டான்.

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான்.
பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

அது வானில் ஒரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது-இஸ்ரோ தகவல்

டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

விளையாட்டுச் செய்திகள்

டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே. முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

ISRO has Informed that the Landing Site for Chandrayaan-4 Lander has been found.

TNPSC has announced that the postponed Group 2, 2A exams will be held on March 15th.
★Central government has allocated ₹7,611 crore for Tamilnadu rail projects in the budget.

*SPORTS NEWS*

T20 World Cup: Zimbabwe beat Oman easily. Batting first, Oman were bowled out for 103. Zimbabwe chased down the target in 13.3 overs.

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive