கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, February 24, 2026

9th english third mid term exam question paper virudhunagar district 2026

ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

8th english third mid term exam question paper virudhunagar district 2026

எட்டாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

7th english third mid term exam question paper virudhunagar district 2026


ஏழாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

6th english third mid term exam question paper virudhunagar district 2026


ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

வகுப்பு 8 தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு 2026

 



8th tamil third mid term exam question and answer key virudhunagar


வினாத்தாள் PDF link


விடைக்குறிப்பு PDF link

எட்டாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்

8th tamil third mid term exam answer key pdf 2026 Virudhunagar district 

பதிவிறக்கு/DOWNLOAD

வகுப்பு 9 தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைக்குறிப்பு


9th tamil third mid term exam question and answer key virudhunagar



 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்

  9th tamil third mid term exam answer key pdf 2026 Virudhunagar district 

பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அஞ்சலகம் பணம் செலுத்தும் படிவம் 9th Tamil Post Office model filled form

 



 9th Tamil Post Office model filled form


ஒன்பதாம் வகுப்பு தமிழ் அஞ்சலகம் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


9th tamil post office form pdf empty form and filled form

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-02-2026. செவ்வாய் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

24-02-2026. செவ்வாய் .

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

; இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : ஒப்புரவறிதல் ;

குறள் எண்:215.

குறள்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.

உரை :

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

பழமொழி :

அகம்பாவம் அழிவைத் தரும்.

Pride goes before a fall.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.

நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.

சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு :

01. அடால்ஃப் ஹிட்லர் பிறந்த நாடு எது?

ஆஸ்திரியா-Austria

02. தமிழ்நாட்டின் முதல் கல் கோவில் (குடைவரைக் கோவில்) எது?

திரிமூர்த்தி கோவில் மண்டகப்பட்டு விழுப்புரம்

Tirumurti Temple Mandagapattu

Villuppuram

English words :

bountiful

abundant.

அபரிதமான அளவு 

+ bonanza

a situation which creates a great profit

செல்வச்செழிப்பு

தமிழ் இலக்கணம் :

விலங்குகளின் சரியான ஒலிக்கான வார்த்தை

ஆந்தை - அலறும்

யானை - பிளிறும்

மயில் - அகவும்

குயில் கூவும்

புலி உறுமும்

சிங்கம் கெர்ச்சிக்கும்

அறிவியல் களஞ்சியம்:

பூமி உருவானபோது ஒரு நாளின் நேரம்(6 மணி): பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, ஒரு நாள் என்பது சுமார் 6 மணி நேரம் மட்டுமே. சந்திரன் மிக நெருக்கமாக இருந்ததாலும், வேகமான கோளின் சுழற்சியாலும், பூமி இன்று இருப்பதைவிட கணிசமாக வேகமாகச் சுழன்றது. பில்லியன்கணக்கான ஆண்டுகளில், சந்திரனில் இருந்து வரும் அலை சக்திகள் படிப்படியாக இந்த சுழற்சியைக் குறைத்தன.

பிப்ரவரி 24 - ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- இறப்பு அக்டோபர் 5, 2011)

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை ஸ்டீவ் ஜொப்ஸ் உயிரிழந்தார்.

நீதிக்கதை

பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார்.  தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியைப் பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்குத் தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்குப் பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

நீதி : கேடு நினைப்பவன் கெடுவான்.

இன்றைய செய்திகள்

24.02.2026

*தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

* ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் பெஹ்சுத் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.

*ஈரானை விட்டு வெளியேறுங்கள்.இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.

விளையாட்டுச் செய்திகள்

* டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Today's Headlines - 24.02.2026

* As cold weather continues in Tamil Nadu, the spread of the lung infection called pneumonia has increased.

* In Afghanistan, 17 members of the same family were killed in an attack carried out by Pakistani warplanes in the Behsood district.

* "Leave Iran." The central government has strongly urged Indians.

Sports News

In the Super 8 round of the T20 World Cup series, the Indian team faced the South African team yesterday. In this match, the Indian team lost by a margin of 76 runs.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, February 23, 2026

பிச்சைக்கார அரசன் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story The beggar king kathai


tamil short story The beggar king kathai

 

ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர்

 6th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district 

ஆறாம் வகுப்பு            தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2026     

விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. அ.சிற்பக்கூடம்

2. ஆ.மதுரை

3. இ.சுறுசுறுப்பு

4. இ.இனிமை+ஓசை

5. ஈ.குற்றம்

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

தமிழ்த்துகள்

6.       சோலைகளில் குயில்கள் கூவும்.

         மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

 

7.       மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி இல்லை.

எனவே காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் நுழையவில்லை.

 

8.       ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

, , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.

 

9.       அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும்        கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய        வேண்டும்.

தமிழ்த்துகள்

10.    செவ்விந்தியர்கள் நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.

 ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின் தாயாகும்.

அவர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்.

 இந்த மண்ணும் அவர்களுக்கு உரியது.

          தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

ஏதேனும் 1 மட்டும்

 

11.  1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

மதுரை செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல்சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள், தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா என்று சிந்தித்தார்.

அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

 

12.      1.அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

2.அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை

ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

3.எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர,

வேறு எதையும் நினைக்க மாட்டேன்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

IV. மனப்பாடப்பகுதி.                                                                            3+2=5

13. பாரதம் அன்றைய நாற்றங்கால்

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள் பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்றுகோலாக

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது.                          -         தாராபாரதி.

 

14. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.

-        திருவள்ளுவர்

தமிழ்த்துகள்

V. எவையேனும் 2.                                                          2 X 2 = 4

 

15. பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து.

தமிழ்த்துகள்

16.அ. நிலவு, மாதம்.

ஆ. அணிகலன், சிரிப்பு.

தமிழ்த்துகள்

17. அ. குடியரசுத்தலைவர்

ஆ. நாட்டுப்பற்று

தமிழ்த்துகள்

VI. கட்டுரை                                                                                  1 X 6 = 6

 

ஏதேனும் 1 மட்டும்

 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

18. தேசிய ஒருமைப்பாடு

19. பாதம்                                    தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

ஆறாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


6th tamil third mid term exam question paper pdf 2026 Virudhunagar district 

ஏழாம் வகுப்பு தமிழ் 2026 மூன்றாம் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர்

 9th tamil third mid term exam answer key 2026 Virudhunagar district 

ஏழாம் வகுப்பு                          தமிழ்

மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2026

விருதுநகர் மாவட்டம்              விடைக்குறிப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

 

1. ஈ தாமிரபரணி

2. அ துன்பம்

3. ஆ பாரதிதாசன்

4. அ.இரட்டைக்கிளவி  

5. இ நாடு+என்ப

 

 

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

 

6.       1.அங்கவை    2.சங்கவை

தமிழ்த்துகள்

7.       1.பச்சையாறு           2.மணிமுத்தாறு        3.சிற்றாறு

4.காரையாறு           5.சேர்வலாறு           6.கடனாநதி.

தமிழ்த்துகள்

8. 1.   இடக்கரடக்கல்

2.       மங்கலம்

3.       குழூஉக்குறி.

தமிழ்த்துகள்

9. பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

தமிழ்த்துகள்

10.      வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை, உரிய இடம் இவற்றையெல்லாம் ஒரு செயலைச் செய்ய ஆராய வேண்டும்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

 

11.    திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது உழவுத் தொழில்.

தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத் தொழில் நடைபெறுகின்றது.

இங்குக் குளத்துப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன.

இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.

மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன..

தமிழ்த்துகள்

12.      1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

2.ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    5

13.

அறம் என்னும் கதிர்

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.                                  -         முனைப்பாடியார்  

தமிழ்த்துகள்

14. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.       

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

V. எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.                                            2 X 2 = 4

 

தமிழ்த்துகள்

15. அ. நகமும் சதையும் போல.

ஆ. பசுமரத்தாணி போல.

தமிழ்த்துகள்

16. அ.சிறுமி.

ஆ.அரசி.    தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

17. அ. வேளாண்மை.

ஆ. செல்வம்.                              தமிழ்த்துகள்

 

VI. விடையளி                                                                                1 X 6 = 6

18 அ. என்னைக் கவர்ந்த நூல்

அல்லது

ஆ. உண்மை ஒளி

 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive