கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 19, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் 22 நெடுவினாக்கள் தேர்வு வினாத்தாள் 8th Tamil Book back all big questions 22

 


8th Tamil Book back all big questions 22


எட்டாம் வகுப்பு தமிழ் 24 நெடு வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf 8th Tamil Book back all 8 Mark Questions

      பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all 8 Mark Questions Test 24 big Questions exam paper pdf


எட்டாம் வகுப்பு தமிழ் 22 சிந்தனை வினாக்கள் தேர்வு வினாத்தாள் 8th Tamil Book back all sinthanai vina

 


8th Tamil Book back all sinthanai vina


எட்டாம் வகுப்பு தமிழ் 22 சிந்தனை வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf 8th Tamil Book back all 5 Mark Questions

     பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all 5 Mark Questions Test 22 Sinthanai Questions exam paper pdf


எட்டாம் வகுப்பு தமிழ் 51 சிறுவினாக்கள் தேர்வு வினாத்தாள் 8th Tamil Book back all 4 Mark Questions

 


 8th Tamil Book back all 4 Mark Questions 51


எட்டாம் வகுப்பு தமிழ் 51 சிறுவினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf 8th Tamil Book back all 4 Mark Questions

    பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all 4 Mark Questions Test 51 Short Questions exam paper pdf


எட்டாம் வகுப்பு தமிழ் 67 குறுவினாக்கள் தேர்வு வினாத்தாள் 8th Tamil Book back all 2 Mark Questions 67

 


8th Tamil Book back all 2 Mark Questions 67

எட்டாம் வகுப்பு தமிழ் 67 குறுவினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf 8th Tamil Book back all 2 Mark Questions

   பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all 2 Mark Questions Test 67 Short Questions exam paper pdf


எட்டாம் வகுப்பு தமிழ் 47 பொருத்துக ஒரு மதிப்பெண் வினாவிடை 8th Tamil Book back all Match with answer

 


8th Tamil Book back all Match with answer


PDF Link

எட்டாம் வகுப்பு தமிழ் 47 பொருத்துக புத்தக ஒரு மதிப்பெண் வினாவிடை pdf

    பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all One Mark MATCH Questions with answer one word Question answer pdf

TET TRB TNPSC material one word 2026

Wednesday, March 18, 2026

எட்டாம் வகுப்பு தமிழ் 118 ஒரு மதிப்பெண் வினாவிடை 8th Tamil Book back all One Mark Question answer

 


8th Tamil Book back all One Mark Question answer


எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக புத்தக ஒரு மதிப்பெண் வினாவிடை 118 pdf

   பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all One Mark Questions with answer MCQ Question answer pdf

TET TRB TNPSC material one word

எட்டாம் வகுப்பு தமிழ் 118 ஒரு மதிப்பெண் வினாக்கள் 8th Tamil Book back all One Mark Questions exam

 


8th Tamil Book back all One Mark Questions exam


எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் 118 தேர்வு வினாத்தாள் pdf

  பதிவிறக்கு/DOWNLOAD


8th Tamil Book back all One Mark Questions Test MCQ Question paper pdf

TET TRB TNPSC

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத் தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாக்கள் 10th social science important questions


 

Sslc social science important questions for slow learner public exam expected questions

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18.03.2026. புதன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18.03.2026. புதன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : அரசியல்

அதிகாரம்: கண்ணோட்டம் ; 

குறள் எண் : 571.

குறள் :

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.

உரை :

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

பழமொழி :

அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் போது அணைத்துக் கொள்.

When fortune smiles embrace her.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

* தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் பொழுது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான். - டாக்டர் அம்பேத்கர்.

பொது அறிவு :

01. இந்தியக் காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

தேக்கு மரம் -Teakwood

02.இந்தியாவில் முந்திரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா -Maharastra

English words :

+ opportunity 

a chance to do something that you would like to do, 

செய்ய விரும்பும் ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு

opponent

a person who disagrees with somebody's actions,

எதிராளி

தமிழ் இலக்கணம்:

அன்று என்பது ஒருமைக்கும் 

அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

எ.கா. 1. இது பழம் அன்று

இவை பழங்கள் அல்ல.

2. இது காகம் அன்று.

இவை காகங்கள் அல்ல

அறிவியல் களஞ்சியம் :

தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது; 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கூட உண்ணக்கூடிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 18 ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள் ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்

பிறப்பு மார்ச் 18, 1858 - இறப்பு செப்டம்பர் 29, 1913

ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நீதிக்கதை - பொய்

நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் பாண்டியனும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்க்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான். அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டியன் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார். ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

"பாஸ் பண்ணிட்டியாப்பா" என்றாள் அம்மா

"ஆமாம்மா பாஸாயிட்டேன்" ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

"என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?"

"ஆமாம்"

"டாக்டருக்குப் படிக்கப் போறியாமே"

"ஆமாம்"

"இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?" இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். "ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்" என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்.

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டியன் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டியன் வசதியானவர் என்று சொல்ல முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு. "என்ன என்ன?" என்று பதட்டம் அடைந்தார் பாண்டியன். "நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டியன் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

"பாண்டியன் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்" என்றார்.

"இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்" என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு. பாண்டியனுக்குப் பெருமையாக இருந்தது. அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இன்றைய செய்திகள்

18.03.2026

* நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்... 11000 கி.மீ. நீள சோலார் பெல்ட் அமைக்கும் ஜப்பானிய நிறுவனம்! உலகிற்கே தடையற்ற மின்சாரம் வழங்க நிலவைச் சுற்றி 11,000 கி.மீ நீளத்திற்கு சோலார் வளையத்தை உருவாக்கும் ஜப்பானின் பிரம்மாண்ட 'லூனா ரிங்' திட்டம்.

* மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போர், இந்தியாவின் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என (GJEPC) எச்சரித்துள்ளது.

*ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், வரும் ஐபிஎல் தொடரில் அந்த கோப்பையைத் தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளார்.

Today's Headlines 18.03.2026

* A Japanese company has proposed a massive "Luna Ring" project to generate 13,000 terawatts of electricity from the Moon. The plan involves building an 11,000 km-long solar belt around the Moon to provide uninterrupted power to the entire world.

* The ongoing Israel-Iran conflict in the Middle East is expected to significantly impact India's $2 billion gem and jewellery exports, according to the Gem & Jewellery Export Promotion Council (GJEPC).

* The United States Commerce Secretary Scott Bessent has stated that Iranian oil tankers are being allowed to pass through the Strait of Hormuz.

SPORTS NEWS

In the IPL tournament, Virat Kohli is set to return to play for Royal Challengers Bangalore. After playing a key role in helping the team win their first-ever title last season, he will aim to defend the championship in the upcoming IPL season.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 17, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17.03.2026. செவ்வாய் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

17.03.2026. செவ்வாய் .

திருக்குறள் :

பால்: பொருட்பால் ;

இயல் : அரசியல் ;

அதிகாரம் : வெருவந்த செய்யாமை ;

 குறள் எண்: 561.

குறள்:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங் கொறுப்பது வேந்து,

உரை :

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :

அதிகமாக கேள்,குறைவாகப் பேசு.

Hear more, but talk less.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

வெற்றியோ, தோல்வியோ எது வரினும் நம் கடமையைச் செய்வோம்.

பிறர் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.

அண்ணல் அம்பேத்கர்.

பொது அறிவு:

01.உலகின் மிக அதிகமான எரிமலைகள் எந்தப் பெருங்கடலில் உள்ளன?

பசிபிக் பெருங்கடல் - Pacific Ocean

02. மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரிகோர் மெண்டல் -Gregor Mendel

English words:

Election-The process where people vote to choose their representatives or leaders.

Candidate - A person who contests in an election to win a position.

தமிழ் இலக்கணம்:

முன்னாள் அமைச்சர்

முந்நாள் அமைச்சர்

முன்னால் அமைச்சர்

இவற்றில் எது சரி ?

எல்லாமே சரி தான். நாம் உபயோகப் படுத்தும் இடத்தைப் பொறுத்து அமையும்.

முன்னாள் அமைச்சர் என்றால் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முந்நாள் அமைச்சர் என்றால் மூன்று நாட்கள் மட்டும் அமைச்சராக இருந்தவர் என்று பொருள்

முன்னால் அமைச்சர் என்றால் நமக்கு முன்னால் அமைச்சர் இருக்கிறார் என்று பொருள். ஆக மூன்று வார்த்தைகளும் சரியே

அறிவியல் களஞ்சியம் :

சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

மார்ச் 17 சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்

சாய்னா நேவால் (Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார், உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

நீதிக்கதை - ஆசை

மணிவண்ணனுக்கு சந்தோஷமாக இருந்தது. மதுரையிலிருந்து வந்த அவன் மாமா அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மணிவண்ணன் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது கூட கிடையாது. இவன் வகுப்பில் படிக்கும் எம்.எல்.ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபள வென்றிருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டினான். மாமா இவன் மீது மிகவும் அன்பு வைத்திருந்தார்.

 வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய மணிவண்ணனை உற்சாகப்படுத்த விரும்பினார் அவன் மாமா. "நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய்" என்று கேட்டார் அவன் மாமா. "நான் படித்து கலெக்டராக வருவேன்" என்றான் மணிவண்ணன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவன் அப்பா "தம்பி விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயியின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும்" என்றார். மணிவண்ணனின் சந்தோஷம் மணலில் பாய்ந்த தண்ணீராய் மறைந்து போனது.

"ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா?" என்று நினைத்தான். வகுப்பில் மணிவண்ணன் உற்சாகமின்றி உட்கார்ந்திருந்தான். பாடங்களில் அவன் மனம் கவனம் செல்லவில்லை. வகுப்பு ஆசிரியர் அவனைக் கவனித்து விட்டார். ஆசிரியர் அவனைத் தனியாக அழைத்து விசாரித்தார். ஒரு ஏழையின் மகன் கலெக்டராக ஆசைப்படுவது பேராசையா" என்றான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் கலகலவென்று சிரித்தார். "இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய்" என்றார்.

அன்று மாலை பள்ளியின ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது மாணவர்கள் நன்றாகப் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் உட்கார்ந்திருந்த மணிவண்ணனிடம் வந்த ஆசிரியர், "உன் சந்தேகத்தை அவரிடமே கேள்" என்றார். முதலில் தயங்கிய மணிவண்ணன் தைரியமாக எழுந்து கலெக்டரிடம் கேட்டான். "ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்டராக வர ஆசைப்படுவது பேராசையா?

"நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை" என்று பளிச்சென்று கூறினார் கலெக்டர். "நானும் ஒரு சாதாரண ஏழை விவசாயியின் மகன் தான். "உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர்.

இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவண்ணன் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். "நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது" என்று கலெக்டர் மணிவண்ணன் சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இன்றைய செய்திகள் -17.03.2026

*அசாம் & புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப்ரல் 9ம்தேதி நடைபெறவுள்ளது.

* எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்களுக்கு சாகித்திய அகாடமி 2025-விருது அறிவிப்பு .

* போதுமான அளவு பெட்ரோல் எரிபொருள் கையிருப்பு உள்ளது என மத்திய பெட்ரோலியத் துறை தகவல்.

விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்திடம் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

Today's Headlines 17.03.2026

* Voting for the Assam & Puducherry Legislative Assembly elections will be held on April 9.

* Writer Tamil Selvan has been announced as the recipient of the Sahitya Akademi Award 2025.

* The Union Petroleum Ministry has stated that there is sufficient stock of petrol fuel available.

Sports News

The South African team, which is touring New Zealand, is playing a 5-match T20 series. In the first T20 match, South Africa defeated New Zealand.

Prepared by

Covai women ICT போதிமரம்

Monday, March 16, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு முடிவில் ஒரு தொடக்கம்

6th tamil model notes of lesson

lesson plan March 23

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

முடிவில் ஒரு தொடக்கம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.கற்றல் நோக்கங்கள்

உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிதல்.

9.நுண்திறன்கள்

உறுப்புக்கொடையின் உண்மை நிகழ்வு குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_74.html

https://tamilthugal.blogspot.com/2020/07/6th-tamil-kattur.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_89.html

https://tamilthugal.blogspot.com/2020/03/3-3-sixth-tamil-term-3-unit-3-mudivil.html

11.ஆயத்தப்படுத்துதல்

உறுப்பு தானம் குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கண்ணப்பன் கதை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          முடிவில் ஒரு தொடக்கம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஹிதேந்திரன், அவனின் பெற்றோர் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். இதய மாற்றம் பற்றிக் கூறி கண்தானம் குருதி தானம் செய்ய உறுதி எடுத்தல்.

          மனிதநேயம் வெளிப்பட்ட மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். கொடை பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல். முதலுதவி பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல். இயன்றவரை கொடை கொடுத்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஹிதேந்திரனின் பெற்றோர் பெயர் ..............................

          ந.சி.வி – முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.

உ.சி.வி – உறுப்பு தானம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.

உறுப்பு தானம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வினா, விடை வகைகள்

7th tamil model notes of lesson

lesson plan March 23

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

மானுடம் வெல்லும் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

வினா, விடை வகைகள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்

9.நுண்திறன்கள்

வினா, விடை வகைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2024/08/5.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_95.html

https://tamilthugal.blogspot.com/2021/07/4-10th-tamil-online-test-vina-vidai.html

https://tamilthugal.blogspot.com/2021/03/tamil-ilakkanam-tenth-vina-vakaikal.html

https://tamilthugal.blogspot.com/2021/04/10-tenth-tamil-ilakkanam-vidai-vakaikal.html

https://tamilthugal.blogspot.com/2019/09/56.html

11.ஆயத்தப்படுத்துதல்

வினாக்கள் பயன்படும் சூழல்கள் பற்றிக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

வினா, விடை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          வினா, விடை வகைகளை விளக்குதல். எடுத்துக்காட்டுகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். வெளிப்படை விடைகள், குறிப்பு விடைகள்  பற்றி அறியச் செய்தல்.

          விடை வகைகள் குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் வினா, விடைகளைப் பட்டியலிடுதல்.

          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வினா விடைகள் குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வினா ............. வகைப்படும்.

          ந.சி.வி – நேர்விடை என்பது யாது?

உ.சி.வி – கொளல் வினாவையும் கொடை வினாவையும் வேறுபடுத்துக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

விளையாட வருவாயா? என்னும் வினாவிற்குப் பலவகை விடைகளை எழுதிப்  பழகுதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புணர்ச்சி

8th tamil model notes of lesson

lesson plan March 23

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

8

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

புணர்ச்சி

6.பக்கஎண்

167 - 169

7.கற்றல் விளைவுகள்

T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)

8.கற்றல் நோக்கங்கள்

புணர்ச்சி விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதுதல்.

9.நுண்திறன்கள்

இயல்பு புணர்ச்சிக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் தயாரித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/6-8th-tamil-mindmap-unit-6_7.html

https://tamilthugal.blogspot.com/2021/10/6-punarchi-8th-std-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2021/05/punarchi-vithikal-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/07/punarchi-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-2-3.html

https://tamilthugal.blogspot.com/2019/12/punarchi-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_51.html

11.ஆயத்தப்படுத்துதல்

புணர்ச்சி பற்றிக் கூறுதல்.

12.அறிமுகம்

புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி குறித்து அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

மாணவர்கள் அறிந்த புணர்ச்சி குறித்துக் கூறச்செய்தல். நெசவின் அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த பிரித்தெழுதுக, சேர்த்தெழுதுக பற்றிக் கூறச்செய்தல். புணர்ச்சி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் கதையை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புணர்ச்சி வகைகள், விதிகள் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – விகாரப் புணர்ச்சி .............................. வகைப்படும்.

                   பாலாடை – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி .....................................

          ந.சி.வி – இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

          உ.சி.வி –      விகாரப் புணர்ச்சிகளுக்கு உதாரணங்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

இயல்பு புணர்ச்சி உதாரணங்களைப் பட்டியலிடுக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 23

9th tamil model notes of lesson

lesson plan March 23

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-03-2026 முதல் 27-03-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

முழு ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்கள்

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-1.html

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-2.html

https://tamilthugal.blogspot.com/2026/02/2026-9-3.html

4.திருப்புதல் வினாக்கள்

பிழை நீக்கி எழுதுக.

அ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.   

ஆ. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

படிப்போம்; பயன்படுத்துவோம்!.                         

Archaeology                                      Hero Stone

இடவாகுபெயர் – குறிப்பு தருக.               

தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.

சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

பொருள் எழுதித் தொடரமைக்க.            
அ.
குளவி, குழவி                                 ஆ. பரவை, பறவை       

பரப்புமின் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

தோழியை எழுப்பும் நிகழ்வைத் திருவெம்பாவை எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?

தமிழ்விடு தூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக.

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.          

          தொன்மையும் தனித்தன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ் மொழி. திராவிட மொழிகளில் பிற மொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. ஒரே பொருளைக் குறிக்க பல சொற்கள் அமைந்த சொல் வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழே ஆகும்.

அ. திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படும் மொழி எது?

ஆ. தமிழின் சொல் வளமும் சொல்லாட்சியும் குறித்து எழுதுக.           

இ. உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் 34 நெடுவினாக்கள் தேர்வு வினாத்தாள் 9th Tamil Book back all 5,8 Mark Questions

 


9th Tamil Book back all 5,8 Mark Questions


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 34 நெடுவினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf 9th Tamil new Book back all 5, 8 Marks 34 Questions

    பதிவிறக்கு/DOWNLOAD


9th Tamil new Book back all 5, 8 Marks 34 Questions Test BIG Questions Exam paper pdf

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16.03.2026. திங்கள் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

16.03.2026. திங்கள் .

திருக்குறள் :

பால் : பொருட்பால் ;

இயல் : நட்பியல் ;

அதிகாரம் : தீ நட்பு ;

குறள் எண் : 815.

குறள் :

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை

எய்தலின் எய்தாமை நன்று.

உரை :

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி:

அறிவுரை நல்லதாய் இருப்பின் யார் கூறினாலும் கேள்.

Accept if the counsel is good, no matter who gave it.

இரண்டொழுக்க பண்புகள்:

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் முன்னேறுங்கள். - டாக்டர் அம்பேத்கர்.

பொது அறிவு:

01. அரசியல் தத்துவத்தின் தந்தை (Father of Political Philosophy) என்று அழைக்கப்படுபவர் யார்?

கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ- Plato

02. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற உள்ளது?

ஏப்ரல் 23, 2026

English words:

Brittle - breakable;

உடையக்கூடிய

Baffle - Astound;

குழப்பம் 

தமிழ் இலக்கணம் கேளிர், கேளீர்

இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருமா இல்லாவிட்டால் வேறு வேறு பொருளைத் தருமா? வாருங்கள் பார்ப்போம் இரண்டும் வேறு வேறு சொற்கள் தான்.

கேளிர் என்பது உறவினரைக் குறிக்கும்.

எ.கா - யாதும் ஊரே யாவரும் கேளிர்

கேளீர் என்பது கேளுங்கள் என்பதைக் குறிக்கும்.

எ.கா நான் சொல்வதைக் கேளீர்

அறிவியல் களஞ்சியம்:

நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

மார்ச் 16 அழ. வள்ளியப்பா அவர்களின் நினைவு நாள்

அழ. வள்ளியப்பா, பிறப்பு நவம்பர் 7, 1922 - இறப்பு மார்ச் 16, 1989. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

அழ வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

நீதிக்கதை

கைமேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மனை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.

இன்றைய செய்திகள்

16.03.2026

*தமிழகத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு.

* மாணவர்கள், கப்பல் மாலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் என சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

* மேகாலயாவின் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மேகாலயாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

* ஈரானின் தொடர் தாக்குதல்களால் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

ஓய்வு முடிவை அறிவித்தார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது. இவர் பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Today's Headlines

16.03.2026

* Voting for Tamil Nadu will be held in a single phase on April 23

* India's Ministry of External Affairs has confirmed that about 9,000 Indians, including students, ship sailors, professionals, and businesspeople, are currently safe in Iran

* Tension has arisen in Meghalaya after clashes between tribal groups and other communities in the Garo Hills district

* Due to continuous attacks by Iran, several Arab countries that are allies of the United States have been affected.

SPORTS NEWS

Former Pakistan captain Sarfraz Ahmed has announced his retirement

He played 54 Test matches, 117 One-Day Internationals, and 61 T-20 matches for the Pakistan national cricket team.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive