கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, March 14, 2026

2026 வகுப்பு 6 தமிழ் மாதிரி வினாத்தாள் 2 பருவம் 3 MODEL QUESTION PAPER 6TH TAMIL Annual Exam vnr

 


MODEL QUESTION PAPER 6TH TAMIL Annual Exam vnr

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 தொகுத்தறித் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 pdf முழு ஆண்டுத் தேர்வு 2026 விருதுநகர்

  பதிவிறக்கு/DOWNLOAD


6th tamil annua exam model question paper

sixth third term summative assessment question 2

Virudhunagar district 2026 

2026 வகுப்பு 6 தமிழ் மாதிரி வினாத்தாள் 1 பருவம் 3 MODEL QUESTION PAPER 6TH TAMIL Annual Exam vnr

 


MODEL QUESTION PAPER 6TH TAMIL Annual Exam vnr


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 தொகுத்தறித் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 pdf முழு ஆண்டுத் தேர்வு 2026 விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


6th tamil annua exam model question paper

sixth third term summative assessment question 1

Virudhunagar district 2026 

2026 வகுப்பு 7 தமிழ் மாதிரி வினாத்தாள் 2 பருவம் 3 MODEL QUESTION PAPER 7TH TAMIL Annual Exam vnr

 


MODEL QUESTION PAPER 7TH TAMIL Annual Exam vnr


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 தொகுத்தறித் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 pdf முழு ஆண்டுத் தேர்வு 2026 விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


7th tamil annua exam model question paper

third term summative assessment question 2

Virudhunagar district 2026 

2026 வகுப்பு 7 தமிழ் முழு ஆண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 பருவம் 3 MODEL QUESTION PAPER 7TH TAMIL Annual Exam vnr

 


MODEL QUESTION PAPER 7TH TAMIL Annual Exam vnr

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 தொகுத்தறித் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 pdf முழு ஆண்டுத் தேர்வு 2026 விருதுநகர்

பதிவிறக்கு/DOWNLOAD


7th tamil annua exam model question paper

seventh third term summative assessment question 1

Virudhunagar district 2026 

Friday, March 13, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாவிடை முழுவதும் 9th Tamil Book back all One Mark material

 


9th Tamil Book back all One Mark material


ஒன்பதாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக புத்தக ஒரு மதிப்பெண் வினா விடை முழுவதும் pdf

  பதிவிறக்கு/DOWNLOAD


9th Tamil Book back all One Mark Questions and answers MCQ Question paper with answer pdf

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-03-2026. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

13-03-2026. வெள்ளி

திருக்குறள் :

பால்: பொருட்பால் ;

இயல்: நட்பியல்

அதிகாரம் : தீ நட்பு ;

குறள் எண்: 811.

குறள்:

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 
பெருகலிற் குன்றல் இனிது.

உரை :

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

பழமொழி:

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

All is well that ends well.

இரண்டொழுக்க பண்புகள்:

1. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பொன்மொழி :

* வெற்றி மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல மகிழ்ச்சியே வெற்றிக்கு திறவுகோல்.

பொது அறிவு :

01.இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய காய்கறி எது?

வெங்காயம் - Onion

02. மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை பட்டத்தை வழங்கியவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Netaji Subhas Chandra Bose

English words:

Carry on - continue to do something

Carry out - perform or complete task

தமிழ் இலக்கணம்:

வயிறு + இல் = வயிறில் அல்ல

*வயிற்றில்*

கயிறு + இல் = கயிறில் அல்ல

*கயிற்றில்*

கயிறு + ஐ = கயிறை அல்ல

*கயிற்றை*

வீடு + ஐ = வீடை அல்ல

*வீட்டை*

ஆறு + பக்கம் = ஆறுபக்கம் அல்ல

*ஆற்றுப்பக்கம் *

இப்போது நீங்கள் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் று, டு ஆகிய எழுத்துகள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்.

அறிவியல் களஞ்சியம் :

மனித மூளையானது ஒரு சிறிய மின்விளக்கை ஒளிரச் செய்யக்கூடிய மின்சாரத்தை (சுமார் 12-25 வாட்ஸ்) உருவாக்குகிறது.

நீதிக்கதை - கருத்துடன் செயல்படு

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை. அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தினமும் கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான். அங்கு காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது. ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

13.03.2026

* அமராவதி, காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து கரூர், அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட 7 தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரைக் கொண்டுவர ரூ.5,400 கோடி புதிய திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதால் ஸ்விக்கி மற்றும் ஸோமாடோ போன்ற பார்ட்னர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் டிரோன்கள், ஏவுகணைகளை வீசியது. பக்ரைனில் உள்ள முக்கிய எண்ணை சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

விளையாட்டுச் செய்திகள்

இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியைப் புகழ்ந்து உள்ளார்.

Today's Headlines

13.03.2026

* The Tamil Nadu government has approved a new project worth 25,400 crore to bring water to lakes and ponds in 7 constituencies including Karur, Aravakurichi, Ottanchathiram, Athur, and Dindigul from the point where the Amaravathi and Kaveri rivers meet.

* Many restaurants are being temporarily closed, which has affected partners such as Swiggy and Zomato.

* Iran launched drones and missiles toward the United Arab Emirates. Attacks were also carried out on major oil storage facilities in Bahrain.

SPORTS NEWS

The Indian team is receiving widespread praise not only from former Indian players but also from international personalities. In that line, former West Indies cricket team captain and legendary batsman Vivian Richards has praised the Indian team.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Thursday, March 12, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் முழுவதும் 9th Tamil Book back all One Mark Questions

 


9th Tamil Book back all One Mark Questions


ஒன்பதாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


9th Tamil Book back all One Mark Questions Test MCQ Question paper pdf

10th english centum answer paper 100 marks sslc exam paper presentation வகுப்பு 10 ஆங்கிலம் 100

 


10th english centum answer paper 100 marks sslc exam paper presentation


10th english centum answer paper 100 marks paper presentation pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் 100 மதிப்பெண்கள் விடைத்தாள் pdf




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-03-2026. வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-03-2026. வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : ஆள்வினையுடைமை ; 

குறள் எண் : 618.

குறள் :

பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை இன்மை பழி.

உரை :

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

பழமொழி :

நுணலும் தன் வாயால் கெடும்.

A closed mouth catches no flies.

இரண்டொழுக்க பண்புகள்:

1.திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பொன்மொழி :

பேச்சினில் தீமை கலந்து விட்டால் மனதிலும் தீமை கலந்து விடும்.

செனெகா.

பொது அறிவு:

01.எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?

நீர்யானை - Hippopotamus

02.உலகில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

சீனா -China

English words:

Ancestral - related to

Bifurcated - divided into two parts

தமிழ் இலக்கணம்:

று, டு ஆகிய எழுத்துகள் உடன் வேற்றுமை உருபு அல்லது மற்ற சொற்கள் சேர்ந்து வரும் போது இந்த எழுத்துகளுக்கு முன்னாடியும் வல்லினம் மிகுந்து வரும்

எ.கா

1.அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

தவறு

அடையாறு + இல் = அடையாற்றில்

அடையாறில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

சரி

2.கயிறைப் பிடித்து கரை ஏறினர்.

தவறு

கயிற்றைப் பிடித்து கரை ஏறினர்.

சரி

நீதிக்கதை - சிட்டுக்குருவியின் பேராசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. "போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து  போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து "அப்படிப்போடு......அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியைக் கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

இன்றைய செய்திகள் 12.03.2026

* தமிழகத்தில் நாளை முதல் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

* பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

* ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கடற்படையை உருவாக்க உலக நாடுகள் முன் வந்துள்ளன.

விளையாட்டுச் செய்திகள்

ICC Rankings /

முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் சாதனை

ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Today's Headlines 12.03.2026

* The Meteorological Department has informed that the temperature will increase in Tamil Nadu from tomorrow.

* PM Narendra Modi has inaugurated 5 new train services for Tamil Nadu.

* Countries around the world have come forward to form a massive naval force under the leadership of France to reopen the Strait of Hormuz and ensure the safety of oil and gas supplies.

SPORTS NEWS

In the International Cricket Council (ICC) rankings Abhishek Sharma and Ishan Kishan have achieved the milestone of securing the top two positions.

The Indian Premier League (IPL)will be held from March 28 to May 31.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Wednesday, March 11, 2026

பொதுத்தேர்வு 2026 பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள் SSLC PUBLIC EXAM TAMIL GOVT QUESTION ORIGINAL

 



SSLC PUBLIC EXAM TAMIL GOVT QUESTION ORIGINAL

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் pdf 2026

SSLC PUBLIC EXAM TAMIL QUESTION PAPER PDF 2026
Tenth tamil 

பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு 2026 பலவுள் தெரிக


Sslc TAMIL ANSWER KEY public exam 2025

 

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத் தேர்வு 2026 விடைக்குறிப்பு பலவுள் தெரிக

 10th tamil public exam answer key 2026
Choose the correct answer 

1  ஈ. செப்பலோசை
2 ஆ வங்காள, ஆங்கில 
3 ஆ அதியன், பெருஞ்சாத்தன்
4 அ வேற்றுமை உருபு 
5 அ இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
6 ஈ செய்தி 1, 3 ஆகியன சரி
7 ஈ காற்றின் பாடல்
8 ஈ குழந்தையே வா
9 இ சேரநாடு, சோழ நாடு
10 ஈ பாடல், கேட்டவர்
11 ஈ எ
12 ஆ காசிக்காண்டம்
13 இ அதிவீரராம பாண்டியர் 
14 ஈ கூறுதல்
15 ஈ திருந்துற - வருக

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-03-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

11-03-2026. புதன் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : ஆள்வினையுடைமை ;

குறள் எண் : 617.

குறள் :

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்.

உரை :

ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

பழமொழி :

வாழு வாழ விடு.

Live and let live.

இரண்டொழுக்க பண்புகள்:

1. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

2.எனவே ஒரு செயலைத் தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

பொன்மொழி :

* எல்லோரையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவரால் எந்த நிலையையும் கடந்து முன்னேற முடியும். அன்னை தெரசா .

பொது அறிவு :

01.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 
Dr. Muthulakshmi Reddy

02.இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர் விக்ரம் சாராபாய் - 
Dr.Vikram Sarabhai

English words :

+ Skippered - actors a captain of a boat or a ship

+ Exhausted - completely tired

அறிவியல் களஞ்சியம் :

புவியியல் துருவங்கள் (geographic poles) என்பவை பூமியின் சுழற்சி அச்சில் உறுதியாக நிலைத்திருப்பவை. ஆனால் காந்தத் துருவங்கள் அப்படியல்ல; அவை காலப்போக்கில் மெதுவாகவும், சில சமயங்களில் வேகமாகவும் இடம் மாறிக்கொண்டே  (navigation), இருக்கின்றன. இந்த நகர்வு, (geophysical surveys), அறிவியல் ஆராய்ச்சிகள் எனப் பல துறைகளில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மார்ச் 11 - சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அவர்களின் நினைவுநாள்


 சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் - Sir Alexander Fleming.

பிறப்பு ஆகஸ்ட் 6, 1881 - இறப்பு மார்ச் 11, 1955.

நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

நீதிக்கதை -சிங்கமும் கழுதைப்புலியும்

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்". அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. ஏன் இங்கே வந்தாய்?” -கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்". குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?".

"மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிந்து வைத்திருப்பவன் புத்திசாலி.

இன்றைய செய்திகள் - 11.03.2026

* மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

* இந்தியாவிற்கு 700 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பால் வருங்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

* இந்தியா சுமார் 10 மில்லியன் டன் யூரியா மற்றும் 6.5 மில்லியன் டன் டி.ஏ.பி உரங்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் 75% நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது

*விளையாட்டுச் செய்திகள்

* ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியீடு..!

ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்படுகிறது.முதல் 20 நாட்களுக்கான அட்டவணை வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.

Today's Headlines - 11.03.2026

* Approval from the Union Cabinet to upgrade Madurai Airport into an international airport..

* India requires about 700 million cubic meters of water, out of this, 85% is used for food production, due to the increasing population, there is a possibility of water shortage in the future.

* India imports around 10 million tons of urea and 6.5 million tons of DAP (Di-Ammonium Phosphate) fertilizers, About 75% of these fertilizers are imported from other countries.

SPORTS NEWS

IPL match schedule to be released tomorrow. The IPL schedule will be released in two phases and the schedule for the first 20 days will be announced initially.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Tuesday, March 10, 2026

சிறப்புத் தேர்வு ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story special test kutty kathai

 


tamil short story special test kutty kathai

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026. செவ்வாய்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

10-03-2026. செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால்

; இயல்: அரசியல் ;

அதிகாரம் : ஆள்வினையுடைமை ;

குறள் எண் : 613.

குறள்:

தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.

உரை :

பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.

பழமொழி :

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

The childhood shows the man.

இரண்டொழுக்க பண்புகள்:

1. திட்டமிட்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்.

2. எனவே ஒரு செயலை தொடங்கும் முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

பொன்மொழி :

உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள்- பசி. ஆம். பசி இருந்தால் உணவு சுவையாக இருக்கும் .- சாக்ரடீஸ்.

பொது அறிவு :

01.உலகின் மிக வேகமான பறவை எது?

பெரெக்ரின் ஃபால்கன் - Peregrine Falcon

02. அறை வெப்பநிலையில் (சுமார் 20-25°C) திரவமாக இருக்கும் ஒரே உலோகம் எது?

பாதரசம் - Mercury

English words:

+ Grave-serious

Put up with-tolerate

தமிழ் இலக்கணம்:

தவறான பேச்சு மொழியும் சரியான எழுத்து மொழியும் 2

1. மல்லிகை மணம் வீசுகிறது (வீசி எறிகிறோமா என்ன) மல்லிகை மணம் கமழ்கிறது - சரி

2. மாறன் கண் முழித்தான் (திரு திரு என்றா) மாறன் கண் விழித்தான்

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்தப் புலம் என்பது ஒரு நிலைத்த அமைப்பு அல்ல. உருகிய நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதியில் (outer core) நடைபெறும் மிகச் சிக்கலான இயற்பியல் செயல்முறைகளால் அது இடையறாது மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களின் மிக வெளிப்பாடுதான் காந்தத் துருவங்களின் நகர்வு ஆகும். வெளிப்படையான

மார்ச் 10

சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்

 Savitribai Jyotirao Phule.

பிறப்பு 3 சனவரி 1831 - இறப்பு 10 மார்ச் 1897.

ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.

இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று கூகுள் டூடுள் கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

நீதிக்கதை -வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும். அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் "இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்" என்றார். மற்றவரும் "ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே" என்றார்.

இவர்கள் பேசுவதைக் கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது. ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமுதாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது. மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களைக் காணவில்லை, சும்மா சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு "அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே" என்று புலம்பியது. ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்து கொள்ளலாம்" என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமு ஓடி ஒளிந்து கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது. இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்து கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது. சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும்.

தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு முன் அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.



இன்றைய செய்திகள் - 10.03.2026

*தமிழகத்தில் ஜூலை 17 முதல் ஆக.30 வரை டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

உடுமலையில் 3,000 ஆண்டு கால அதிசயம்: கல்லாபுரத்தில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட கற்திட்டை!

* இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்குமாறு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

* அமெரிக்கா & ஈரான் தேசத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது

விளையாட்டுச் செய்திகள்

இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையைத் தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி.

Today's Headlines - 10.03.2026

* In Tamil Nadu digital population census will be conducted from July 17 to August 30

* A 3,000-year-old wonder discovered in Udumalai A massive stone structure has been identified at Kallapuram

* To prevent a cooking gas shortage in India the Central Petroleum Ministry has instructed to increase the production of cooking gas

* Due to the war between the United States and Iran there is a risk of food shortage in the United Arab Emirates (UAE)

SPORTS NEWS

The Indian team has achieved many honors in this T20 World Cup series, including being the three-time champion, the team that retained the T20 World Cup, and the first team to win the T20 World Cup domestically.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, March 09, 2026

வகுப்பு 10 தமிழ் மிகவும் முக்கிய நெடுவினாக்கள் 2026 sslc tamil exam very important 8 marks questions

 


2026 sslc tamil exam very important 8 marks questions

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய நெடுவினாக்கள்

43 
1 காற்று மாசுபாடு 
2 சங்க கால விருந்தோம்பல் 
3 மொழிபெயர்ப்புக் கலை
4 மேடை உரை 
5 கலைஞர் 


44
1 பிரும்மம் 
2 புயலிலே ஒரு தோணி 
3 கோபல்லபுரத்து மக்கள் 
4 பாய்ச்சல் 
5 இராமானுசர் 


45
1 சான்றோர் வளர்த்த தமிழ் 
2 கலைத் திருவிழா சென்று வந்த நிகழ்வு 
3 மதிப்புரை 
4 சாலைப் பாதுகாப்பு 


தமிழ்த்துகள்

Blog Archive