கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 31, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் Tamil question paper 7th

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் pdf Tamil question paper 9th

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் Tamil question paper 6th

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் pdf Tamil question paper 8th

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் pdf Tamil question paper 10th

Sunday, July 30, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம் 7th tamil answer key

 ஏழாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

 8x1=8

1 அ) வழி

2 (ஈ) இரண்டு+அல்ல.

3. ஆ உலக.

4. இ ஆறு.

5. (அ) ஈன்றது.

6 (அ) மண் ஒட்டிய பழங்கள்

7 இ முண்டந்துறை.

8 (அ) நேரமாகி,

 

3x2=6

9.  

தமிழ்நாட்டில் வீசுகின்ற தென்றலில் தேன் மணம் கமழும்.

சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.

 தமிழ்நாட்டின் நன்செய் நில வளம் ஒன்று அல்ல இரண்டு அல்ல பலவாகும்.

 

10. மொழியின் உயிர்நாடியாக விளங்குகிறது.

உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்துகிறது:

கருத்தை வெளிப்படுத்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

 

11.  குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.

 

12. காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்.

 

13. சருகுமான், மிளாமான், வெளிமான்

 எல்லாவகை மான்களிலும் நம்நாட்டுப் புள்ளிமான்களே அழகில் சிறந்தவை

 

1x3=3

14. பேச்சுமொழி உலகவழக்கு என்றும், எழுத்துமொழி இலக்கிய வழக்கு என்றும் கூறப்படும்.

          பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும், எழுத்துமொழியில் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

          உணர்ச்சிக்கூறுகள் பேச்சுமொழியில் அதிகமாகவும் எழுத்துமொழியில் குறைவாகவும் இருக்கும்.

          பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும் இடம்பெறும், எழுத்துமொழியில் உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு போன்றவற்றிற்கு எழுத்துமொழியில் இடமில்லை.

 

15. தாத்தாவின் தாத்தா காலத்தில் நட்டு வளர்த்த மரமாகும்,

 ஊரின் வடகோடியில் உள்ள நாவல்மரம் ஐந்து வயதில் பார்த்தது போலவே ஐம்பதையும் தாண்டி அப்படியே இருக்கிறது.

பச்சைக்காய்கள் நிறம்மாறி செங்காய்த் தோற்றம் அடைந்ததைப் பார்த்த சிறுவர்களின் மனங்களில் பரவசம் பெருகின.

 காக்கை, குருவி, மைனா, கிளிகள், அணில்கள், காற்று முதலியவை உதிர்த்திடும் சுட்ட பழங்கள் பொறுக்குவதற்கு சிறுவர்கள் கூட்டம் அலைமோதின

 

1×4-4

மனப்பாடப் பாடல்

16.

அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்

பொருள்பெற யாரையும் புகழாது

போற்றா தாரையும் இகழாது

கொல்லா விரதம் குறியாகக்

கொள்கை பொய்யா நெறியாக

எல்லா மனிதரும் இன்புறவே

என்றும் இசைந்திடும் அன்பறமே.

- வெ. இராமலிங்கனார்.

 

3x2=6

17.

(அ) ஆறு.

(ஆ) அரசு.

 

18.

(அ) முக்கனி = மூன்று + கனி மா, பலா, வாழை,

ஆ) முத்தமிழ் : மூன்று+தமிழ் இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

 

19.

அ) மொழி

ஆமொழி.

 

20 Media ஊடகம்.

ஆ) Magazine - பருவ இதழ்.

 

1x3=3

21. உயர்திணை: முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர், சுரதா,

அஃறிணை: வயல், குதிரை, கடல், புத்தகம், மரம்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 9th tamil answer key

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு

விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

1 8 × 1-8

1. (இ) சிற்றிலக்கியம்

2. (அ) கீழே.

3 (ஈ) புலி

4 (ஈ) அ, இ.

5 (ஆ) வளம்.

6 (அ) ஆறு

7 (ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

8 (இ) ஔவையார்.

 

3 x 2 = 6

9 நான் பேசும் மொழி தமிழ் மொழி.

அது தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

 

10 தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி.

 

11. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது, உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

 

12.    1.        அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.

2.       அதனால் அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.

3.       இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லின் காட்சிக்கு ஒப்பிடப்படுகிறது.

 

2x2 =4

13 அ நீர் மேலாண்மை

ஆ ஒலியன்

 

14. அ திகழ்கிறது

ஆ திருத்தினான்

 

15. அ) ஆறு, கரை, ஓரம்

ஆ. பாய், மரம், கப்பல், பல், கல், பால்.

 

3x3=9

16.

1.மரபுக் கவிதை தற்போது புதுக்கவிதை ஆக ஆகிவிட்டது.

2.காப்பியங்கள் புதினங்கள் ஆகி அவை நாவல்கள் ஆகி சிறுகதை ஒரு நிமிடக் கதை என்பதுவரை புதுமைகள் படைத்த வண்ணம் தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது.

3.கணினிக் காலத்திற்கு ஏற்ப தொலை அச்சு, திறன்பேசி, தொடர்வண்டி, மகிழுந்து, மடிக்கணினி என தற்போதுள்ள கண்டுபிடிப்புகளுக்கேற்ப தமிழ்ச் சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் மொழி.

4.கன்னித்தமிழ் கணினித் தமிழாய் இன்னும் பல சாதனைகள் புரியக் காத்திருக்கிறது..

 

17

தன்வினை :

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை எனப்படும்.

எடுத்துக்காட்டு - பந்து உருண்டது.

அவன் திருந்தினான்.

பிறவினை :  

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிற வினை எனப்படும்.

எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான்.

அவனைத் திருந்தச் செய்தான்.

 

18 

1.வெட்டப்படும் நாள் வருமென பட்டமரம் வருத்தப்பட்டது.

2.இலை வெந்து கருகியதால், கட்டையெனும் பெயர் பெற்றதால் வருத்தப்பட்டது.

3.பட்டை உடை கிழிந்து அழகு இழந்ததால் வருத்தப்பட்டது.

 

19 

1.தண்ணீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.

2.நம் முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

3.நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.

 

20

1.திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2.நடுத் திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்கு 'சுந்தரத் தெலுங்கு' எனப்படுகிறது.

3.மலையாளத்தில் பல்வேறு இலக்கியங்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்பட்டன.

4. கன்னட எழுத்தாளர்கள் ஏழுபேர் ஞானபீட பரிசு பெற்றுள்ளார்கள்.

 

 

2 × 5=10

21

அ,

ஆ,

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

22

அ, வரவேற்பு மடல்

ஆ, நண்பனுக்குக் கடிதம்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

 

1 × 8=8

22 அ, ஆ

(பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

 

அடிபிறழாமல் எழுதுக: 1 X 5-5

25. புறநானூறு

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம் ;

உணவெனப்படுவது    நிலத்தொடு நீரே!

நீரும் நிலமும் புணரியோர் , ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்தசினோரே!                                   

                                           -   குடபுலவியனார்

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம் 6th tamil answer key

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

 8x1=8

1. (ஆ) மேன்மை

2. ஆ நிலவென்று,

3. இ) விலங்கு,

4 இ) எலி

5 (ஆ) வெண்மை+குடை,

6 (ஆ) கேணி.

7. (அ) துருவப் பகுதி,

8 ஆ) பாரதியார்,

 

4x1=4

9. விளைவுக்கு - நீர்.

10 அறிவுக்கு - தோள்

11 இளமைக்கு - பால்

(12) புலவர்க்கு – வேல்

 

3x2=6

13. எட்டுத் திசைகளிலும் பரவ வேண்டும்.

 

14 சிலப்பதிகாரம். * மணிமேகலை சீவகசிந்தாமணி. வளையாபதி,

குண்டலகேசி.

 

 

15 5 வகைப்படும்.

அவை,

1. எழுத்து இலக்கணம்

2 சொல் இலக்கணம்.

3 பொருள் இலக்கணம்.

4 யாப்பு இலக்கணம்,

5 அணி இலக்கணம்

 

16. காணி நிலம் வேண்டும் - மாளிகை கட்டித்தர வேண்டும் - தூண், மாடங்கள் வேண்டும் - நீருடைய கிணறு - தென்ணை மரங்கள் வேண்டும்,  

முத்துப் போல நிலவொளி வீசவேண்டும்- குயிலின் குரலோசை கேட்க வேண்டும்-

இளந்தென்றல் தவழ வேண்டும்.

 

17. தலையில் சிறகு வளர்தல்

* இறகுகளின் நிறம் மாறுதல்.

* உடலில் கற்றையாக முடி வளர்தல் .

* வேறுவகைப் பறவை எனக் கருதும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்படும்.

 

1×3-3

18. " நீரின்றி அமையாது உலகு" என்பது வள்ளுவர் வாக்கு. நல்ல விளைச்சலைப் பெற நீர் அவசியம்.

 உலக உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீராகும்.

 இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது.

 

19.  அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்று.

கூடுகட்டி வாழும் பறவை இனத்தைச் சேர்ந்தது.

கூடு கட்டும் போது சத்தமிட்டுக்கொண்டே இருக்கும்.

3 முதல் 6 முட்டை வரை இடும்.

14 நாட்கள் அடை காக்கும்.15ஆம் நாள் குஞ்சுகள் வெளிவரும்.

 துருவப் பகுதி தவிர, மற்ற இந்தியா முழுவதும் காணலாம்.

4 ஆயிரம் கி.மீ உயரத்தில் கூட இவை வாழ்கின்றன. (இமய மலை]

 உணவுகளாக தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், தேன்

இளந்தளிர்கள் போன்றவற்றை உண்ணுகின்றன.

தாய்க்குருவி தம்குஞ்சுகளுக்கு புழு பூச்சிகளைப் பிடித்து ஊட்டும்.

வாழ்நாள் 10முதல் 13 ஆண்டுகள் மட்டுமே,

உருவத்தில் சிறியது: ஆனால், வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது.

 

கட்டுரை வினா:

1x6=6

20. விடுப்பு விண்ணப்பம்

அனுப்புநர் –

பெறுநர் –

விளித்தொடர் –

பொருள்—

கருத்துரை-

இப்படிக்கு –

இடம்,நாள்,

 

21. பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

 மனப்பாடப் பகுதி

1x3=3

"தமிழுக்கும் அமுதென்று பேர்! -அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்குநீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

—பாரதிதாசன் .

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு சூலை 2023 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம் 8th tamil answer key

 எட்டாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு

விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

1 5×1-5

1. (இ) என்றும் + என்றும்

2. (அ) மரபு.

3 (அ) தாயாக  

4 (ஆ) காலனை

5 (இ) நெடுந்தேர்.

 

2x1 =2

6 அச்சுக்

7 கண்ணெழுத்துகள்.

 

3x1 =3

8 வல்லின மெய்யெழுத்துகள் - (ஆ) மார்பு,

9. மெல்லின மெய்யெழுத்துகள் - இ) மூக்கு

10. இடையின மெய்யெழுத்துகள் -அ) கழுத்து.

 

6x2=12

11. தமிழ் வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன் மேலும் வளர்கிறது.

 

12 செய்யுளில் மரபுகளை மாற்றினால் செய்யுளின் பொருள் மாறிவிடும்.

 

13  சித்தர்கள் வாழும் மலையே கொல்லிமலை.

அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் புயல் அடித்தது என்று பாடல் கூறுகிறது.

 

14  இந்தப் பூமிக்கு அணுக்கமாய் உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு ஆகிய அனைத்தும் யாருக்கும் சொந்தமானவை அல்ல.

 

15 எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை

வீரமாமுனிவர் களைந்தார்.

'' என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு '' என்னும் எழுத்தை நெடிலாகவும்,

'' என்னும் எழுத்திற்குச் சுழிஇட்டு '' என்னும் எழுத்தை நெடிலாகவும் உருவாக்கினார்.

 

16 சான்றோர்க்கு அழகாவது தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவு நிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ஆகும்.

 

17. ழகரம் - மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றது.

லகரம் - மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து - நெருங்குவதால் பிறக்கிறது.

ளகரம் - மேல் வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.

 

18) வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய, இயர், அல்.

 

 2×4=8

19 நன் செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

உள்ளத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு அயராது ஓடித் தன் உழைப்பினைக் கொடையாகத் தருகிறது.

 

20 எக்காலத்தும் நிலைபெற்றது.

வளமான தமிழ் மொழி

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் - இலக்கிய மணம் - புகழ்.

உலகம் உள்ள வரையிலும் வாழும் மொழி.

அறியாமை இருள் நீங்கி மேன்மையும் சிறப்பும் அடைதல்.

பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு வாழ்க

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க.

 

21 நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்; இந்த மண்ணும் எமக்குரியதாகும்.

நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.

மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் சகோதரர்கள்.

மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.

 

1×5=5

22 முன்னுரை - வெட்டுக்கிளியும் சருகுமானும் -வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்- சருகுமானும் வெட்டுக்கிளியும் - முடிவுரை.

23. (பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்) சிந்தனை வினா

 

அடிபிறழாமல் எழுதுக: 1X3-3

24. ஓடை ஆட உள்ளம் தூண்டுதே!- கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும் (ஓடை ஆட)

பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி!

ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போரா ரோடி! (ஓடை ஆட..) வாணிதாசன்.

2 X2=4

(25 அ) TRIBES -பழங்குடியினர். (ஆ)LOCUST-வெட்டுக்கிளி.

 

26. (அ) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும். ஆ.பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

 

27 அ) உணர்ச்சித் தொடர். (ஆ) வினாத் தொடர்.

1×8=8

 

28 பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

29. முன்னுரை - பிறப்பு- விளையும் பெயர் - சமுதாயத் தொண்டு மொழிப்பற்று- விடுதலை வேட்கை- முடிவுரை.

தமிழ்த்துகள்

Blog Archive