கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 25, 2024

கிருஷ்ண ஜெயந்தி கோகுலாஷ்டமி தகவல்கள்

Krishna jeyanthi
Kokulastami

கிருஷ்ண ஜெயந்தி
ஆண்டு தோறும் தமிழ் மாதம் ஆவணி, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ணன் பிறப்பு பண்டிகை.

தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.
அனைத்து சமுதாய பண்டிகையாக நடைபெறுகிறது.

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருட்டிண செயந்தி. கிருட்டிண செயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. 1982 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.

வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி

ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு) அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான சிறப்பு அம்சங்கள் தமிழ்க் கட்டுரை Tamil Essay

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான சிறப்பு அம்சங்கள் தமிழ்க் கட்டுரை

 Special Aspects of Social Justice in Indian Constitution tamil essay

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான சிறப்பு அம்சங்கள்

முன்னுரை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கான சிறப்பு அம்சங்கள் பல உள்ளன. இவை இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கே சில முக்கிய அம்சங்களை விரிவாகக் காணலாம்.

அறிமுகம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இது உலகின் மிக நீளமான எழுத்துப்பூர்வ அரசியலமைப்பாகும். சமூக நீதி, பொருளாதார சமத்துவம், அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக பல விதிமுறைகள் இதில் உள்ளன.

அடிப்படை உரிமைகள்

அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. இவை சமூக நீதியை உறுதி செய்யும் முக்கிய அம்சங்களாகும்:

1. **சமத்துவ உரிமை**: அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமம். எந்த வித பாகுபாடுமின்றி சம உரிமைகளைப் பெறுவர்.

2. **சுதந்திர உரிமை**: சொல் சுதந்திரம், அமைதியான கூட்டம், சங்கம் அமைத்தல், இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்லுதல், எந்த தொழிலையும் செய்யுதல் ஆகிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

3. **சுரண்டலுக்கு எதிரான உரிமை**: எந்தவொரு வடிவிலும் அடிமைத்தனம் அல்லது சுரண்டல் அனுமதிக்கப்படாது.

அரசின் நெறிமுறைப்படுத்தும் கொள்கைகள்

அரசியலமைப்பின் நான்காவது பகுதி அரசின் நெறிமுறைப்படுத்தும் கொள்கைகளை (Directive Principles of State Policy) உள்ளடக்கியது. இவை சமூக மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்யும் விதமாக அரசின் கொள்கைகளை வழிநடத்துகின்றன:

1. **சமூக மற்றும் பொருளாதார நலன்**: அனைத்து குடிமக்களுக்கும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும்.

2. **சமூக சமத்துவம்**: அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

சமூக நீதிக்கான சிறப்பு அம்சங்கள்

1. **தனித்துவமான கூட்டாட்சி**: மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரங்களைப் பிரித்து வழங்குகிறது. இது சமூக நீதியை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசுக்கு சில விசேஷ அதிகாரங்களை வழங்குகிறது.

2. **சமயச் சார்பற்ற நாடு**: இந்தியா எந்த ஒரு மதத்தையும் ஆதரிக்காது. அனைத்து மதங்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

3. **சுதந்திரமான நீதித்துறை**: நீதித்துறை அரசின் பிற கிளைகளிடமிருந்து சுதந்திரமாக செயல்படுகிறது. இது சமூக நீதியை உறுதி செய்யும் விதமாக முக்கியமானது.

 

முடிவுரை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமூக நீதியை உறுதி செய்யும் விதமாக பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

 

2024 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1 10th tamil Quarterly exam model question


பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 1 காலாண்டுத் தேர்வு pdf விருதுநகர் மாவட்டம்

 10th Tamil Quarterly Exam Model Question Paper 1 Pdf 

Tenth SSLC september 2024 Virudhunagar District

பதிவிறக்கு/DOWNLOAD

பூச்சி உண்ணும் தவளை Insectivorous frog

Saturday, August 24, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் ஆகஸ்ட் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 5, 6 tamil monthly test 10


பத்தாம் வகுப்பு தமிழ் ஆகஸ்ட் மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 5, 6 pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


 Tenth 10th tamil August month test unit 5, 6 virudhunagar district

50 marks sslc exam question paper pdf 

நீர் நடனம் water dance

சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஓவியம்

Environmental protection is everyone's responsibility painting

பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 3,4 tamil july month test 10



பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை மாதத் தேர்வு 50 மதிப்பெண்கள் வினாத்தாள் இயல் 3, 4 pdf

 Tenth 10th tamil july month test unit 3, 4 virudhunagar district

50 marks sslc exam question paper pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

Friday, August 23, 2024

தென்னை ஓலையில் நடக்கும் மைனா A myna walking on a coconut leaf

இலக்கணம் பொது தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tamil important notes tnpsc tet trb ttse sslc grammar

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் 23.08.2024

*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு* 

 நாள்: 23-08-2024
*கிழமை: வெள்ளிக்கிழமை* 

*திருக்குறள்*

பால் :அறத்துப்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: காலம் அறிதல் 

 *குறள் : 489*

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

பொருள் : கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும்.

 *பழமொழி :* 

Better an open enemy than a false friend
போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்

 *ஈரொழுக்கப் பண்புகள் :*  

1. எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .     

2. எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.

 *பொன்மொழி :* 

கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். –ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்

 *பொது அறிவு :* 

1. முட்டையில் உள்ள செல்களின் எண்ணிக்கை 
விடை: ஒரு ஹேப்பிளாய்டு செல்( one haploid cell)

2. தேசிய நலவாழ்வு மற்றும் குடும்ப நல நிறுவனம் அமைந்துள்ள இடம்
விடை: டெல்லி 

 *English words & meanings :* 

bang-இடி,
tinkle-மணியின் ஒலி 

 *வேளாண்மையும் வாழ்வும் :* 

இது நவீன கால படைப்பு. அந்த காலத்தில் எப்படி மழையைக் கணக்கிட்டு இருப்பார்கள்?? நாமும் ஒரு மழை மானி வைத்து இருந்தோம். அது என்ன என்று தெரியுமா?

 *ஆகஸ்ட் 23* 

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம்  குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நீதிக்கதை

 *சக்கரம் தாங்கி* 

ஒருநாள் நான்கு சீடர்கள் காட்டு வழியாக ஒன்றாக பயணம் செய்து  ஆசிரமத்திற்கு சென்றார்கள். சுவாமி பைரவா நந்தா அந்த நான்கு சீடர்களிடம் கேட்டார், “நீங்கள் யார் எதற்காக இங்கே வந்துள்ளீர்கள்?”.  அதற்கு அந்த சீடர்கள் சொன்னார்கள், “சுவாமி, உங்களுடைய அதிசய சக்தி பற்றி நாங்கள் கேள்வி பட்டு இருக்கிறோம். உங்களை பார்த்த நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறோம்”.

“நாங்கள், உங்களுடைய சீடர்களாக இருக்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவை” என்றனர். அதைக்கேட்ட சுவாமி பைரவா நந்தா அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அவர் ஆசிரமத்திற்கு உள்ளே சென்று நான்கு மண் வாரி எடுத்துக் கொண்டு வந்தார்.

அந்த நான்கு மண்  வாரியை சீடர்களுக்குக் கொடுத்து சொன்னார், “கிராமத்திற்கு அருகில் ஒரு பெரிய குளம் உள்ளது, அந்த குளத்தின் கரையில் ஒரு பெரிய மரம் உள்ளது அந்த மரத்தின்  அருகே உள்ள செம்மண்ணை இந்த மண்வாரி வைத்து தோண்டுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ளதா என்று பார்க்கலாம்“ என்றார்.

அந்த நான்கு சீடர்களும் மண் வாரியை எடுத்துக்கொண்டு குளத்திற்கு அருகில் உள்ள செம்மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு சீடர் அங்கே  தோண்டிய இடத்தில்செம்பு இருப்பதை பார்த்து ஆச்சரியம் உற்றார். அவர் மற்ற சீடர்களிடம் சொன்னார் “நமக்கு நிறைய செம்பு கிடைத்துள்ளது. நாம் இதை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக்கொள்ளலாம்” 

என்றார். ஆனால்,  மற்றொரு சீடர் சொன்னார், “நாம் இங்கே தங்கத்தை தேடி தான் வந்துள்ளோம். அதனால் நீ வேண்டுமென்றால் இதை எடுத்துக் கொண்டு செல் “.

அந்த செம்பை கண்டுபிடித்த முதல் நபர் அதை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். மற்ற மூன்று பேரும் திரும்ப தோண்ட ஆரம்பித்தார்கள். அப்போது மற்றொரு சீடருக்கு வெள்ளி கிடைத்தது. அவர் சந்தோஷத்தில், “ஐயோ கடவுளே! நான் மிகவும் அதிர்ஷ்டம் உள்ளவன் எனக்கு  வெள்ளி கிடைத்துள்ளது, என்று சொல்லிக்கொண்டு மற்ற இரண்டு பேரிடம் நாம் இந்த வெள்ளியை எடுத்துக்கொண்டு பங்கிட்டுக் கொள்ளலாம் வாங்க” என்றார்.

ஆனால் மற்ற இருவரும் தங்கம் qகிடைக்கும் வரை  தோண்டி பார்க்கலாம், நீ வேண்டும்  என்றால் அந்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு செல் என்றனர். அந்த இரண்டாவது சீடரும் கிடைத்த  வெள்ளியை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக சென்றார். மற்ற இரண்டு சீடர்களும் மீண்டும் மண் வாரி எடுத்து தோண்ட ஆரம்பித்தார்கள்.

அப்போது மூன்றாவது சீடர் அங்கே தங்கம் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அவர் மற்ற சீடரிடம் நாம் இந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு இங்கிருந்து செல்லலாம் என்றார். ஆனால் அவரோ, “இல்லை இங்கே  செம்பு, வெள்ளி, மற்றும் தங்கம் கிடைத்துள்ளது, எனவே இன்னும் தோண்டினால் வைரம் கிடைக்கும்” என்று சொன்னார்.

தங்கம் கிடைத்த சீடர் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக திரும்பினார். அந்த நான்காவது சீடர் மண்வாரி எடுத்து மீண்டும் தோண்ட ஆரம்பித்தார். தோண்டிக் கொண்டே இருக்கும்போது ஒரு பெரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டு அந்த ஓட்டைக்குள் அவர் கீழே போய் விழுந்தார். அந்த நான்காவது சீடர் எழும்பி பார்த்தபோது அங்கே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். அவர் தலையில் ஒரு  சக்கரம் சுற்றிக் கொண்டே இருந்தது. அதை பார்த்த இந்த சீடர் கேட்டார், “நீங்கள் யார்? அந்த சக்கரம் ஏன் உங்கள் தலையில் சுற்றிக் கொண்டு உள்ளது?” என்றார்.

அப்படி கேட்டவுடனே அந்த சக்கரம் இந்த சீடர் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. பேராசை பிடித்த அனைவரும் கடைசியில் இங்கே தான் வருவார்கள். பேராசையால், வைரத்திற்கு ஆசைப்பட்டு, இந்த குழியில் வந்து விழுந்தேன். அந்த சக்கரம் என் தலையில் வந்து சுற்ற ஆரம்பித்தது. இனி ஏதாவது ஒரு பேராசை பிடித்தவன் வந்து  இங்கே விழும்போது போது அந்த சக்கரம் உன்னை விட்டு அகன்று விடும்”, என்று கூறிக்கொண்டு அந்த சீடர் வந்த ஓட்டை வழியாக  இந்த மனிதன் மேலே சென்றார்.

நீதி: பேராசை பெரும் நஷ்டம்.

 *இன்றைய செய்திகள்* 

 *23.08.2024* 

* 50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறை தேர்வு எழுதுவதில் விலக்கு: தமிழக அரசு ஆணை பிறப்பிப்பு.

* ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் மின்கட்டண தொகையை இனி காசோலை அல்லது டிடி மூலம் மட்டுமே செலுத்த முடியும்: தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்.

* மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்து நூல்களையும் தமிழக அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது 700 மெகாவாட் அணு உலை நேற்று முழு திறனுடன் உற்பத்தியை தொடங்கியது.

* பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மாஸ்கோ மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் அனுப்பிய 11 ட்ரோனை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா.

* சென்னையில்  டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகள் தொடங்கியது.

* பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா மாநில அரசு பரிசுத்தொகை வழங்கி கவுரவிப்பு.

* இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்ட பி.சி.சி.ஐ.

 *Today's Headlines* 

* Exemption from re-writing departmental exam for differently abled government employees those who have crossed 50 years : Tamil Nadu Govt issued order.* 

The payment should be paid only by cheque or DD if the Electricity bill exceeds more  than 5000/- 
Tamil Nadu Electricity Board Informed.

*Tamil Nadu Chief Minister M. K. Stalin ordered to nationalize all the books of the late former Chief Minister Karunanidhi without any royalty.

* The 2nd indigenously built 700 MW nuclear reactor started production at full capacity yesterday.

* The Union Home Ministry announced that applications for the Padma Awards 2025 can be submitted till September 15.

* Russia shoots down 11 drones sent by Ukraine to attack Moscow

   .  Table Tennis League starts in Chennai.

* The Odisha State Government felicitated the Indian hockey team who won the bronze medal in the Paris Olympics.

* BCCI released the schedule for 5 Test matches against England.

Thursday, August 22, 2024

மன்றச் செயல்பாடுகள் club activities

club activities 2024 2025

விண்ணைத்தாண்டிய தன்னம்பிக்கை தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tamil important notes tnpsc tet trb ttse

11, 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு பாடத்திட்டம் 2024 விருதுநகர் மாவட்டம்

Quarterly exam syllabus 11th 12th hsc +1,+2 virudhunagar district 

முதல் பரிசு ₹ 1 இலட்சம் தமிழ்க் கட்டுரைப் போட்டி

Tamil essay competition 
First prize 1 lakh rupees 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22.08.24

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 

22.08.24
*திருக்குறள்:*

பால் :பொருட்பால்
அதிகாரம்:காலம் அறிதல்

*குறள் எண்488*

செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்காம் தலை.

*பொருள்:*

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப்பகைவர்க்கு முடிவு காலம் வந்தபோது அவருடைய தலை கீழே விழும்.

*பழமொழி :*

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கலாம்.

Venture a small fish to catch a big one.

*பொன்மொழி :*

கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும். –சாணக்யா

*பொது அறிவு :*

1. இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலம்

தமிழ்நாடு ( மெரினா)

2. இந்தியாவின் முதலாவது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலம்

குஜராத்

*English words & meanings :*

dash - கோடு,

pinch - சிறிய

*வேளாண்மையும் வாழ்வும் :*

ஓரிடத்தில் பெய்கின்ற அப்போதைய மழையின் அளவினை அளப்பதற்கு மழை மானி பயன்படுகின்றது.

*சிறுகதை*

*ஒரு காளையின் அறிவுரை*

ஒரு விவசாயிக்கு விசுவாசமான காளைமாடு ஒன்னு இருந்தது. அது எல்லா விதத்திலும் அவருக்கு உதவியாய் இருந்தது. ஒரு நாள் அது பக்கத்துல கொசு ஒன்னு வந்தது. 

அந்த கொசு காளையிடம் , “நீ தினமும் அந்த விவசாயிக்கு நிறைய உதவி பண்ணுற, நீ தினமும் அந்த விவசாயியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போற. அதுக்கு பதில் உனக்கு என்ன தான் கிடைக்குது வெறும் புல் மட்டும்தான் சாப்பிடக் கொடுக்கிறார்கள்”.

அதுக்கு அந்த காளை மாடு சொல்லியது, “இங்க பாரு நண்பா அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. மனிதர்களுக்கு உதவி பண்றது எனக்கு ரொம்பவே பிடிக்கும், அவங்க என்ன ரொம்பவே நல்லா பார்த்துக்குறாங்க”. அதுக்கு அந்த கொசு  சொல்லியது, 

“இந்த மனிதர்கள் அவர்களோட தேவைக்காக தான் உன்னை பயன்படுத்துறாங்க அதனால தான் நான் இந்த மனிதர்களுக்கு உதவி பண்றது இல்லை.

அதுக்கு பதில் அவர்களோட ரத்தத்தை நான் உறிந்து விடுவேன், ஆனால் நீ ரொம்ப பெரிய உருவமாக இருந்தும், இந்த மனிதர்களுக்கு நீ அடிமையாய் இருக்கிறாய். ஆனா என்ன பாரு நான் ரொம்ப சின்னதா இருக்கேன் ஆனாலும் அவர்களுடைய ரத்தத்தை  உரிந்து கொண்டு இருக்கிறேன்”.

அந்த காளை மாடு சொல்லியது, “நான் மனிதர்களுக்கு ஏன் உதவி பண்ணுவேன் தெரியுமா, அவங்க எனக்கு சாப்பாடு கொடுக்குறாங்க, தங்க இடம் கொடுத்து இருக்காங்க, உடம்பு சரி இல்லனா ரொம்ப நல்லா கவனிக்கிறார்கள், நான் வேலை செய்தால் பாசத்தோட தட்டிக் கொடுக்கிறார்கள்.  அதனால தான் நான் அவங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கிறேன்” என்றது.

அதற்கு கொசு சொல்லியது              “ஆனா நீ பண்ற வேலைக்கு இது ரொம்ப கம்மியா தெரியலையா? நீ ராத்திரியும் பகலும் வேலை செய்தால் உனக்கு அன்பு மட்டும்தான் கொடுக்குறாங்க. 

ஆனால் நான் உன்னை விட ரொம்பவும் பரவாயில்லை, பார்க்க ரொம்ப குட்டியா இருந்தாலும் ஒருநாளும் அவர்களுக்கு நான் அடிமையாக இருந்ததில்லை” என்றது கொசு.

அதற்கு காளை மாடு சொல்லியது, “நீ ரொம்பவே முட்டாளா இருக்க,  இதுக்கெல்லாம் நீ பெருமை படவே கூடாது. மனுஷங்களுக்கு ஏன் உன்னை பிடிக்கலைன்னா நீ அவங்களோட ரத்தத்தை உறியுறதுனால, அவங்களுக்கு எந்த உதவியும் பண்ண மாட்டேங்குற, நீ ஒரு பூச்சியாக மட்டும்தான் அவங்களுக்கு தெரியுற” என்றது.

“அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை”என்றது கொசு. மாடு சொன்னதை கேட்காமல் அந்த கொசு அங்கிருந்து பறந்து போனது. எப்பவும் போல ஒரு நாள் அந்த விவசாயி மேல் போய் உட்கார்ந்து கொசு அவரோட இரத்தத்தை உறிய தொடங்கியது. விவசாயி அந்த கொசுவை ஒரே அடி அடித்து விட்டார்,  கெட்டது செய்தால் கெட்டதே விளையும்.

*நீதி : எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய நேரிடும்.*

*இன்றைய செய்திகள்*
22.08.24

* மின்வாகனங்களுக்கான சார்ஜர் தயாரிக்கும் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு தேசிய தரச்சான்று.

* தமிழகத்தில் இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால்  காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது.

* சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 26 வரை அவகாசம்: மாநில சுற்றுலாத் துறை ஆணையர் அறிவிப்பு.

* திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும்  இனி தத்தெடுக்கலாம்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்.

* டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக பரிந்துரை வழங்க 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை அமைத்தது சுப்ரீம் கோர்ட்.

* பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு.

* வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சுரேஷ் இணை.

* மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது: இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திற்கு முன்னேற்றம்.

*Today's Headlines*

* National Certification is given to an IIT Chennai start-up company, that manufactures chargers for electric vehicles.

* In Tamil Nadu this year, the wind speed has decreased, so the wind power generation has decreased.

* Deadline to apply for tourism award till August 26: State tourism commissioner notified.

* Unmarried, widowers, Divorcees, Legally Separated also can now adopt: New Guidelines for adoption is issued by Central Govt 

* The Supreme Court constituted a 10-member National Task Force to make recommendations for the welfare of medical workers including doctors.

* In Pakistan sequenced earthquake: Record of 5.1hz on Richter scale.

* Winston Salem Open Tennis: India's Suresh Pair movedup to quarterfinals.

* ICC released women's ODI batting rankings: India's Smriti Mandana moves up to 3rd place.

Wednesday, August 21, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா விடை TENTH TAMIL CHOOSE ONE WORD QUESTION WITH ANSWER




பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாத்தாள் திறன் அறிவோம் முழுவதும் புதியது pdf

  பதிவிறக்கு/DOWNLOAD

10th Tamil palavul therika sariyana vidaiyai therntheduthu eluthuka full questions new pdf

choose the best answer one mark one word book back 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா விடை முழுவதும் புதியது pdf

 பதிவிறக்கு/DOWNLOAD

10th Tamil palavul therika sariyana vidaiyai therntheduthu eluthuka full questions with answers new pdf

choose the best answer one mark one word book back 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

பரிபாடல் தமிழ் முக்கியக் குறிப்புகள் 10th tamil important notes tnpsc tet trb ttse sslc paripadal

தமிழ்த்துகள்

Blog Archive