கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, December 05, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 3 கவிதை unit 3 Tamil Kavithai 10th Toppers


unit 3 Tamil Kavithai 10th Toppers

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 2 கவிதை unit 2 Tamil Kavithai 10th Toppers


unit 2 Tamil Kavithai 10th Toppers

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2025. வெள்ளி 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: குடியியல் ;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 999.

குறள் :

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன் றிருள்

உரை :

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

பழமொழி :

நம்பிக்கை தான் ஒவ்வொரு உறவின் வேர்.

Trust is the root of every strong bond.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

கடவுளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி எல்லாவற்றிடமும் அன்பு செலுத்துதலே ஆகும். -வின்சென்ட் வான்காக்.

பொது அறிவு :

01."எண்கணித ஏந்தல்" என்று அழைக்கப்படும் இந்திய கணித மேதை யார்?

ஸ்ரீனிவாச ராமானுஜம் 

Srinivasa Ramanujam

02.தமிழ்நாட்டின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எது?

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

Mother Teresa Women's University

English words :

Startled - felt sudden shock

Vibrant - lively

தமிழ் இலக்கணம்: 

சொல்லின் முதலில் வரா எழுத்துகள்

1. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரா

2. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது.

3. ஞ, ய, வ வரிசையில் குறிப்பிட்ட மெய்யெழுத்துகள் தவிர வேறு எதுவும் முதலில் வராது.

அறிவியல் களஞ்சியம் :

உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.

டிசம்பர் 05 கல்கி அவர்களின் நினைவுநாள்

கல்கி, பிறப்பு 9 செப்டம்பர் 1899 - இறப்பு 5 திசம்பர் 1954.

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

டிசம்பர் 05 நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்

- Nelson Rolihlahla Mandela,

பிறப்பு 18 சூலை 1918 இறப்பு 5 திசம்பர் 2013

தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார்.

அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்

நீதிக்கதை எறும்பின் தன்னம்பிக்கை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

இன்றைய செய்திகள்

05.12.2025

* கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது என்றும், புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

*தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

* இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.

மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விளையாட்டுச் செய்திகள்

ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

Today's Headlines 05.12.2025

* A survey conducted by the Union Health Ministry has revealed that the number of deaths from AIDS has decreased by 81% and the number of new HIV infections has decreased by 49% in the last 15 years.

* At present, 5.7 million electric vehicles are registered in India. And the sales of electric cars increased in 2024-25.

* IndiGo airline cancels flights to 3 major cities on one single day, and 86 flights are cancelled at Mumbai airport.

SPORTS NEWS

This is the 44th time that two Indian players have scored centuries in the same innings in ODIs. This is the 8th time India has lost despite Virat Kohli scoring a century.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Thursday, December 04, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 1 கவிதை unit 1 Tamil Kavithai 10th Toppers


 unit 1 Tamil Kavithai 10th Toppers 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-12-2025. வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

04-12-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: குடியியல் ;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 997.

குறள் :

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

உரை :

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

பழமொழி :

நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் மறையும்.

where trust lives, fear fades.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

இறைவன் ஒருவனே. இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் ஆனால் உங்கள் கடமையைச் செய்யத் தவறாதீர்கள். - வள்ளலார்.

பொது அறிவு :

01.இந்தியாவிற்கு வணிகத்திற்காக வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?

போர்த்துகீசியர்கள்-The Portuguese

02. இந்தியாவின் முதல் நினைவு தபால் தலையில் யாருடைய உருவப்படம் இடம்பெற்றிருந்தது?

மகாத்மா காந்தி 

Mahatma Gandhi

English words :

+ Clueless - no idea

+ Aboriginal - native

தமிழ் இலக்கணம் :

தமிழ் குறிப்பு

சொல்லின் முதலிலும் கடையிலும் இறுதியிலும் வரும் சொற்களை நாம் அறிந்து கொண்டால் நாம் தமிழ் நன்கு பேசி எழுத முடியும் முதல் எழுத்துகள்

1. உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் முதலில் வரும்.

2. க, ச, ந, த, ப, ம ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் முதலில் வரும்.

3. ஞ, ய, வ வரிசையில் சில உயிர் மெய் எழுத்துகள் மட்டுமே முதலில் வரும்.

4. ஞ வரிசையில் ஞா மட்டுமே முதல் எழுத்தாக வரும்

5. ய வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ மட்டுமே முதல் எழுத்தாக வரும்.

6. வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகியவை மட்டுமே முதல் எழுத்தாக வரும்.

அறிவியல் களஞ்சியம் :

நெருப்பு எரியும் சமயம் உண்டாகும் அதிதவெப்பம் அதன்மேலிருக்கும் காற்றினையும் சூடாக்கும். அப்படியாக சூடாக்கப்பட்ட காற்று வளிமண்டல, மற்றும் இயற்பியல் விதிகளின் படி மேலெழும்பும்.

04 டிசம்பர்

இந்திய கடற்படை தினம்

1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு. இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது இந்த படை நடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது.

டிசம்பர் 04 - ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்

I. K. GUJRAL

Former Prime Minister of India

இந்திர குமார் குஜ்ரால்

பிறப்பு டிசம்பர் 4 1919 - இறப்பு நவம்பர் 30 2012.

இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது.

தேர்தலைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவியேற்றார்.

நீதிக்கதை -முயற்சி வேண்டும்

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை.

கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான்.

கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

இன்றைய செய்திகள்

04.12.2025

*புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை.

*மழை வெள்ளத்தால் பாதிப்பு: இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா.

*தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிப்பு- மத்திய அரசு.

* பெங்களூருவில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல். வெளிநாட்டினர் மூவர் கைது!

விளையாட்டுச் செய்திகள்

*பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.

பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

Today's Headlines 04.12.2025

* Increased water release from Puzhal Lake- Flood warning.

* Rain-Flood damage: India sends medical team to Sri Lanka.

* Up to 2500 people in Tamil Nadu are affected by cancer every year- Central Government.

* Drugs worth Rs. 28 crore seized in Bengaluru, Three foreigners arrested.

SPORTS NEWS

Rohit continues to be at the top of the batting rankings. Indian bowler Kuldeep Yadav is in 6th position in the bowling rankings.

Prepared by

Covai women ICT போதிமரம்

Wednesday, December 03, 2025

திருக்கார்த்திகை தீபம் விளக்குத் திருவிழா வாழ்த்துகள் thirukarthigai deepam light festival

 


பத்தாம் வகுப்பு தமிழ் 2025 மனப்பாடப் பாடல்கள் முழுவதும் 10TH TAMIL ALL MEMORY SONGS WITH MUSIC


10TH TAMIL ALL MEMORY SONGS WITH MUSIC

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-12-2025. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

03-12-2025. புதன் 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல் : அரணியல் ;

அதிகாரம் : நாடு

; குறள் எண் : 738.

குறள் :

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

உரை :

நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

பழமொழி :

இன்று சிந்தும் வியர்வை, நாளை ஒளியாக மாறும்.

Sweat today, shine tomorrow.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் யாரும் தனக்கு எஜமானனாக முடியாது. எனவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள் பரூச் ஸ்பினோஸா.

பொது அறிவு :

01. மிகப் பழமையான கணிதம் பற்றிய தமிழ் நூல் எது?

கணக்கதிகாரம்- Kanakathikaram

02. பரத்பூர் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?

ராஜஸ்தான்-Rajasthan

English words:

Bill - total amount you need to pay

receipt-the paper that proves you paid

தமிழ் இலக்கணம் :

ஓர், ஒரு எது எங்கே வரும்?

உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் ஓர் பயன்படுத்த வேண்டும்.

எ.கா:

1. ஓர் அரசன்

2. ஓர் ஏணி

3. ஓர் ஆடு

4. ஓர் உரல்

5. ஓர் ஒட்டகம்

உயிர்மெய் எழுத்துக்களுக்கு பின்னால் வரும் சொற்களுக்கு முன்னால் ஒரு பயன் படுத்த வேண்டும்

எ.கா:

1. ஒரு பறவை

2. ஒரு தாமரை

3. ஒரு மண்டபம்

4. ஒரு வேடன்

5. ஒரு மலர்

அறிவியல் களஞ்சியம் :

மூளையானது முள்ளந்தண்டு வடம் மூலம் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது, முள்ளந்தண்டு நரம்புகள் மூளையிலிருந்து தூண்டுதல்கள் மற்றும் செய்திகளை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது. இருப்பினும், உடலுடன் நேரடியாக இணைக்கும் பன்னிரண்டு மண்டை நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் தலை மற்றும் கழுத்தின் தசை மற்றும் உணர்திறன் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளன. இவற்றில் ஒன்று ட்ரைஜெமினல் நரம்பு

டிசம்பர் 03

பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்

3 December International Day of People with Disability

உலக அனைவரும் மக்கள் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகல் அரசு நிறுவனங்கள்,மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நீதிக்கதை -மாறுதல் முக்கியம்

ஒரு கிராமத்தில் ஓர் அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்து கேட்டார். தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?பையன் சொன்னான் தங்கம் என்று. அவர் கேட்டார் பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்? பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்.

நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள் 03.12.2025

* வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் தடுப்பணையில் வெள்ளம்-பொதுமக்களுக்கு எச்சரிக்கை

*தமிழகத்தின் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

*தண்டையார்பேட்டையில் அரசு அச்சகப் பணியாளர்களுக்கு புதிய குடியிருப்புகள் முதலமைச்சர் திறந்து வைத்தார்

விளையாட்டுச் செய்திகள்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

Today's Headlines 03.12.2025

* The District Collector has warned the public that there is a risk of flooding at the check dam due to the increase in water inflow to the Vaigai Dam.

* The Tamil Nadu government has signed 158 agreements to improve Tamil Nadu's industry.

* The Chief Minister inaugurates new residences for government printing staff in Thandaiyarpet.

SPORTS NEWS

The 2nd test match between Australia and England begins on the 4th. The Australian team won the first test match.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, December 02, 2025

திருக்கார்த்திகை பரணி தீபம் ஏற்ற நல்ல நேரம் thiru karthigai barani theepam nalla neram


 

Half yearly exam syllabus 2025 +1, +2


11th 12th half yearly exam syllabus 2025

வகுப்பு 10 தமிழ் 50 குறுவினாக்கள் 100 மதிப்பெண்கள் தேர்வு வினாத்தாள் 10th tamil 2 mark question 2025


10th tamil 2 mark question 2025

பத்தாம் வகுப்பு தமிழ் 50 குறுவினாக்கள் 100 மதிப்பெண்கள் தேர்வு வினாத்தாள் 2025 pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


10th Tamil 50 short questions 100 marks exam question paper pdf new 2025 - 2026

12 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு 2025 வினாத்தாள் +2 Tamil model exam question paper 12th hsc


 +2 Tamil model exam question paper 12th hsc

12 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் pdf hsc 12th +2 Tamil model question for half yearly exam

 பதிவிறக்கு/DOWNLOAD


மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ் வினாத்தாள்

hsc 12th +2 Tamil model question for half yearly exam 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2025. செவ்வாய்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

02-12-2025. செவ்வாய்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: அமைச்சியல் ;

அதிகாரம் : தூது

; குறள் எண் : 685.

குறள் :

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது.

உரை :

பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.

பழமொழி :

ஒருவன் தனது இயல்பை மாற்ற முடியாது.

A leopard cannot change its spots.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

எப்படி மக்களுக்கு சேவை செய்வது என்று தெரிந்தவனுக்குத்தான் எப்படி ஆட்சி செய்வது என்பது தெரியும் - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

01.வரலாற்று புகழ்பெற்ற பாடலிபுத்திரம் நகரின் தற்போதைய பெயர் என்ன?

பாட்னா - Patna

02. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களின் ஆபரணம் என்று அழைக்கப்படும்

மாநிலம் எது?

மணிப்பூர்- Manipur

English words:

1. பரிதாபம்

Remorse or regret

2. பொறுமை

Modesty or humility

3. மகிமை

Greatness or magnificence

தமிழ் இலக்கணம் :

வினை மரபுச் சொற்கள்

நடனம் ஆடு

வண்ணம் தீட்டு

வெற்றிலை தின்

கூடை முடை

பானை வனை

அறிவியல் களஞ்சியம் :

குழந்தை உருவாவது முதல், நுரையீரலின் சுவாசக் குழாய் மூடியபடி ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். ஏனெனில் அங்கே வெற்றிடம் தான் இருக்கும். இதனால் காற்றழுத்தத் தாழ்வு உண்டாகி மூடிக்கொள்ளும். எப்படியெனில், நீங்கள் ஒரு உறிஞ்சு குழாயை (குளிர்பான ஸ்ட்ரா) எடுத்து, ஒரு முனையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு மறுமுனையில் வாய் வைத்து உள்ளிருக்கும் காற்றை உறிஞ்சினால், குழாயின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு தட்டையாகிவிடும். இப்படித்தான் சுவாசக் குழாய்களும் அழுத்தக் குறைவினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது சுமார் பல மாதங்கள் அப்படியே இருக்கும்.

டிசம்பர் 02 -

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்

சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை பூவா தலையா

ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.

அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர்க்கு செல்லும் வழியில், அவர்கள் தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம் என்று துறவி சொன்னதைச் சொன்னார்.

வீரர்களிடம் நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள். யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார்.

நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.

இன்றைய செய்திகள் 02.12.2025

*நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* டிட்வா புயலால் பெய்த கனமழையில் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

*கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை அண்ணா பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

விளையாட்டுச் செய்திகள்

*டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.

Today's Headlines 02.12.2025

* As the winter session of the Parliament, the central government plans to introduce 14 bills.

*The heavy rains caused by Cyclone Titva have submerged 1.35 lakh acres of paddy crops in the delta districts of Nagapattinam, Thanjavur, Mayiladuthurai and Thiruvarur.

* Due to heavy rain Chennai, Anna University exams have been postponed.

SPORTS NEWS

South Africa created history by defeating India 2-0 in the Test series on their home soil.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Monday, December 01, 2025

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு வெற்றியாளர்கள் TTSE RESULT SELECTION LIST PDF

பதிவிறக்கு/DOWNLOAD 

TTSE RESULT SELECTION LIST 

பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 தேர்வு Tenth tamil exam one mark test question


Tenth tamil exam one mark test question

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு வினாத்தாள் 2025 pdf

 பதிவிறக்கு/DOWNLOAD



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-12-2025. திங்கள்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-12-2025. திங்கள்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல் : அமைச்சியல் ;

அதிகாரம் : தூது

; குறள் எண் : 684.

குறள் :

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு

உரை :

இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

பழமொழி :

அலைகள் நிறைந்த கடல் தான் தைரியமான மாலுமிகளை உருவாக்கும்.

Rough seas make brave sailors.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப் பெறுதல் மேலானது. - அரிஸ்டார்ட்டில்.

பொது அறிவு:

01. மசாலா பொருட்களின் ராஜா என்று எதை கூறுவார்கள்?

கருமிளகு - Black pepper

02. உலகின் மிக நீண்ட மண்டபம் கொண்ட கோவில் எது?

இராமேஸ்வரம் - Ramseshwaram

English words :

+ vigorous-strong, healthy, and full of energy.

அதிக சக்தி மற்றும் ஆற்றல் நிறைந்த

தமிழ் இலக்கணம்:

வினை மரபுச் சொற்கள் என்பவை, ஒரு செயலைச் செய்யும்போது அதற்குப் பயன்படுத்த வேண்டிய சரியான வினைச்சொல் ஆகும். முன்னோர் பயன்படுத்திய வழக்கத்தின்படியே, தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மரபுச் சொற்களில் இதுவும் ஒன்று

எ.கா:சோறு உண் 

நீர் குடி

பால் பருகு

 கவிதை இயற்று

மலர் கொய்

இலை பறி

அறிவியல் களஞ்சியம் :

இதய சுவர்கள் விரிவடையும் போது, இதய அறைகளில் வெற்றிடம் உருவாகிறது. அதனால் தாழ்வழுத்த மண்டலம் உருவாகி, அதனை நிரப்ப, உடலெங்கும் குருதி இழுக்கப்படுகிறது. இதனால் அறைகளில் உயர் அழுத்தம் உருவாகி, மீண்டும் வெளி அனுப்பப்படுகிறது. இப்படித்தான் இதயம் குருதி சுற்றோட்டத்தினை தொடர்ந்து அனிச்சையாகச் செய்கிறது. இந்த மாறுதலுக்கு அழுத்தமும்,இதயச் சுவர்களில் ஏற்படும் மின் தூண்டலும் தான் காரணம்.

டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் நாள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது.

நீதிக்கதை - தேவதைக் காட்டிய வழி

ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும். அதற்கு மலை அடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும். அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது. என

நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது.

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச் சென்றது. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். இரண்டாமவன் கிளம்புகிறான். கிட்டதட்ட நிபந்னைகளுக்கு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது. கற்சிலையாகிவிடுகிறான். அடுத்து உட்பட்டு

ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான்.

மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.

பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.

இன்றைய செய்திகள்

01.12.2025

* டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது முதலமைச்சர்.

*உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இந்தியாவுக்கு 3-வது இடம்: பொருளாதாரம், ராணுவத்தில் முன்னேற்றம்.

*வெனிசுலாவில் எந்த விமானமும் பறக்கக் கூடாது அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்காவில் போதைப்பொருள் புழங்குவதற்கு வெனிசுலாதான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

விளையாட்டுச் செய்திகள்

*இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.

Today's Headlines - 01.12.2025

* The Chief Minister announced that Tamil Nadu is ready to support Sri Lanka, which has been affected by Cyclone Titva.

* India ranks 3rd among the world's most powerful countries, with notable progress in its economy and military.

* US President Trump warns that no flights should fly over Venezuela. Trump has accused Venezuela of being responsible for drug trafficking in the United States.

SPORTS NEWS

Pakistan beat Sri Lanka to win the T20 tri-series

The ODI series between India and South Africa is going to be held. The first ODI between the two teams will be held in Ranchi, Jharkhand.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Sunday, November 30, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

10th tamil model notes of lesson

lesson plan December 8

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

கட்டுரை படித்த - இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.

மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக;

தொடரில் அமைக்க.

நச்சப் படாதவன்’ செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.


செல
வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

“கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” -

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?

காதல்மிகு கேண்மையினான் யார்?

மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்

இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

அயற்கூற்றாக எழுதுக.

"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.

உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்?

எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

9th tamil model notes of lesson

lesson plan December 8

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 5

3.பாடத்தலைப்பு

5 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/blog-post_90.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_23.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025-9.html

4.திருப்புதல் வினாக்கள்

நிலம் போல யாரிடம் பொறுமை காக்கவேண்டும்?

இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும் என்பதைக் 'குடும்ப விளக்கு' கருத்தின் வழி எழுதுக.

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?   

முழு உருவச் சிற்பங்கள் – புடைப்புச்சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.

குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

அளவையாகுபெயர்களின் வகைகளை விளக்குக.

ஒற்றளபெடையை விளக்குக.

ஏகதேச உருவக அணியை விளக்குக.

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.

காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தமிழின் தனித்தன்மைகள் பற்றி எழுதுக.

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் ‘செய்தி’ கதையின் மூலமாக விளக்குக.                    

புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.

பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

8th tamil model notes of lesson

lesson plan December 8

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.அலகு

1 - 5

3.பாடத்தலைப்பு

5 இயல்கள்

அரையாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/1_24.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_24.html

https://tamilthugal.blogspot.com/2025/11/8_27.html

4.திருப்புதல் வினாக்கள்

பிறிதுமொழிதல் அணி என்பது யாது?

பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?                          

தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

இயற்கை போற்றத்தக்கது ஏன்?                        

தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

சேரநாடு - குறிப்பு வரைக.                     

தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?              

ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.

மயங்கொலி எழுத்துகள் யாவை?

மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக்கொண்டு பிறக்கின்றன?           

ஏற்றினான் என்பது எவ்வகை வினை என்பதை விளக்குக.

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?

தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு டிசம்பர் 8

7th tamil model notes of lesson

lesson plan December 8

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-12-2025 முதல் 12-12-2025

2.பருவம்

2

3.அலகு

1,2

4.பாடத்தலைப்பு

இரண்டாம் பருவம் முழுவதும்

இரண்டாம் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/7.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2025_25.html

5.திருப்புதல் வினாக்கள்

இந்திய நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?

குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?                

பூவின் சிரிப்பைப் பற்றிக் கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?

எடுத்துக்காட்டு உவமையணி என்றால் என்ன?

செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?                 

கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.  

கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.       

கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

மக்கள் குறையில்லாமல் வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?

திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.                       

அ. பா                                                  ஆ. வை

பின்வரும் தொடர்களில் பொருத்தமான இடங்களில் ஆல் என்னும் உருபைச் சேர்த்து எழுதுக.                

அ. திருக்குறள் குறள்வெண்பா என்னும் பாவகை ஆன நூல்.

ஆ. அவர் களிமண் பானை வனைந்தார்.

உன் பொறுப்புகள் 2 எழுதுக.  

மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் வள்ளுவர் கோட்டம்/ திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத் தர வேண்டி பொது நூலக இயக்குநருக்குக் கடிதம் எழுதுக.

கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.      எங்கள் ஊர்

முன்னுரை - அமைவிடம் - பெயர்க் காரணம் - தொழில்கள் - சிறப்புமிகு இடங்கள் - திருவிழாக்கள் - மக்கள் ஒற்றுமை - முடிவுரை.                         

தமிழ்த்துகள்

Blog Archive