கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 18, 2024

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-10-2024.வெள்ளி

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18-10-2024.வெள்ளி

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 
இயல்: நட்பியல் ;

அதிகாரம் : பழைமை ; 
குறள் எண் : 804.

குறள் :

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால் கேளாது நட்டார் செயின்.

பொருள்:

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

பழமொழி :

நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம்.

A good beginning is half the battle.

இரண்டொழுக்க பண்புகள் :

1) எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.

2) பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

பொன்மொழி :

* உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டப்படி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளார் தான். ஆப்ரகாம் லிங்கன்.

பொது அறிவு:

1. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு எது?

இதயம்

2. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு?

1870

English words & meanings:

Stove - அடுப்பு,

Strainer - வடிகட்டி 

வேளாண்மையும் வாழ்வும் :

"டிசம்பர் 23, இந்திய விவசாயிகள் தினம். இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது"

அக்டோபர் 18

சார்ல்ஸ் பாபேஜ் அவர்களின் நினைவுநாள்

✓சார்ல்ஸ் பாபேஜ் அல்லது சார்லஸ் பாபேஜ் - Charles Babbage

✓பிறப்பு டிசம்பர் 26, 1791 - இறப்பு அக்டோபர் 18, 1871. ✓பிரித்தானிய பல்துறையறிஞர் . இங்கிலாந்து நாட்டிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார். இவர் கணிதத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், பகுப்பாய்வுத் தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர். வித்தியாச பொறி 1882ல் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

✓ இதுவே இண்றைய கணினியின் அடிப்படைத் தத்துவம். இன்றைய கணினிகள் பயன்படுத்தும் எந்திரக் கணக்கியல் இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்.1991 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் இவர் திட்டமிட்டபடி வித்தியாசப் பொறியினை (difference engine) வடிவமைத்தனர். அது சரியாக இயங்கியமை இவரது திறமையை நிரூபித்தது.

அக்டோபர் 18 -தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நினைவுநாள்

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison)

✓பிறப்பு பிப்ரவரி 11, 1847 - இறப்பு அக்டோபர் 18, 1931.

ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

நீதிக்கதை ஊக்கமது கைவிடேல்

மருங்கூர் என்னும் ஊரில் மாதவன் என்ற மரம் ஏறும் தொழிலாளி வாழ்ந்து வந்தார்.சுற்றுவட்டார கிராமங்களில் தென்னந்தோப்பில் தேங்காய்களை பறித்துக் கொடுத்து, அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை ஏழ்மையில்லாதவாறு நடத்தி வந்தார் மாதவன். ஒரு சமயம் தேங்காய்களை அறுக்கின்ற காலத்தில் மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. தென்னந்தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனை வரும்படி அழைத்து, தேங்காய்கள் அறுப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள்.

மாதவனுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்தான். பத்து வயது கூட

நிரம்பாத சிறுவன் மகேந்திரன் படிப்பிலும், பேச்சு சாதுர்யத்திலும் படு சுட்டியாக

இருந்தான் சிறு வயதிலேயே நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் நிறைய

காணப்பட்டன. மகேந்திரனால் தன் தந்தைப்படுகின்ற வேதனையைத் தாங்கிக்

கொள்ள முடியவில்லை. அதே நேரம் தேங்காய்களைப் பறிப்பதற்காக, தன் தந்தை

ஒத்துக்கொண்ட வேலையையும் செய்ய முடியாமல், மனக்கஷ்டப் படுவதை

நினைத்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டான்.

தோப்புக்காரர்கள் எல்லோரும் மாதவனின் வருகையை ஆவலோடு எதிர்

பார்த்திருந்தார்கள். ஆனால் மாதவனின் மகன் மகேந்திரன் வருவது அவர்களுக்கு

ஆச்சர்யத்தை அளித்தது.

தோப்புக்காரர்களை நெருங்கிய மகேந்திரன் "ஐயா! எல்லோரும் மன்னிக்க வேண்டும். இன்று என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரால் குறிப்பிட்ட நாளில் தேங்காய் அறுப்பதற்கு வர முடியவில்லை. அதனால் அவர் செய்கின்ற வேலையை நானே செய்வதாக முடிவெடுத்து வந்துள்ளேன்" என்றான். அதனைக் கேட்ட தோப்புக்காரர்கள் ஆச்சர்ய மடைந்தனர். "சிறுவனே! உன்னால் எப்படி உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களைப் பறிக்க முடியும்? என்று கேட்டனர்.

உடனே மகேந்திரன் "ஐயா! நீங்கள் இப்படிச் சொல்வீர்கள் என்று

தான் நானும் எதிர்பார்த்தேன். ஆனால், என் தந்தையின் உடல்நிலையோ மிகவும்

மோசமாக உள்ளது. மருத்துவரிடம் செல்லவே பணம் இல்லாமல் மிகவும்

அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். அதனால் நான் மரம் ஏறி தேங்காய்களை

அறுத்துத் தருகிறேன்" என்று கூறியபடி கொண்டு வந்த வெட்டரிவாளினை

இடையில் சொருகிக் கொண்டு வேகமாகத் தென்னை மரத்தின் மீது ஏறத்

தொடங்கினான் மகேந்திரன்.

சிறுவயதிலேயே மரம் ஏறுவதில் தன் தந்தையுடன் பயிற்சி செய்தது சரியான நேரத்தில் உதவி செய்கிறதே! என்று மனதுள் நினைத்தபடியே மர உச்சிக்கு சென்று விட்டான் மகேந்திரன். தோப்புக்காரர்கள் எல்லோரும் மகேந்திரனை வியப்புடன் பார்த்து அவனின் வீரத்தைப் பாராட்டினார்கள். மகேந்திரன் தன் கடமையையே கருத்தில் கொண்டவனாக அரிவாளினால் தேங்காய்களை அறுக்கத் தொடங்கினான். பின்னர் மரத்தைவிட்டு கீழிறங்கி அடுத்த மரத்தில் ஏறத் தொடங்கினான். தன் தந்தையைப் போலவே, நன்கு விளைந்த தேங்காய்களை எல்லாம் இனம் கண்டுபிடித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுத்து முடித்து விட்டான்.

அந்த தோப்புக்காரரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அருகிலிருக்கும்

மற்றொரு தென்னந்தோப்புக்குள் நுழைந்து தேங்காய்களை அறுக்கலானான் தனது

தந்தையார் ஒத்துக்கொண்ட எல்லாத் தோப்புக்காரர்களின் தோப்புகளிலும் மரம் ஏறி

தேங்காய்களை அறுத்துக் கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை

அடைந்தான் மகேந்திரன். தான் வாங்கி வந்த பணத்தையெல்லாம் தந்தையிடம்

கொடுத்து, தான் செய்து வந்த வேலைகளைப் பற்றிக் கூறினான் மாதவன்

அதனைக்கேட்டு வியப்பில் ஆழ்ந்தார். பயமில்லாமல் உயரமான மரங்களில் ஏறி

எப்படி நீ தேங்காய்களை அறுத்தாய்? என்று மகேந்திரனிடம் ஆச்சர்யத்துடன்

கேட்டார்.

அதற்கு மகேந்திரன் "அப்பா! தன்னம்பிக்கையும், உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும், விடா முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்ற மனத்துணிவும் தான் இக்காரியத்தில் எனக்கு வெற்றியைத் தேடி தந்தது. இனிமேல் நீங்கள் கவலையுடன் நோயினால் படுத்திருக்க வேண்டாம். இப்போதே வைத்தியர் வீட்டிற்குச் செல்லலாம்," என்று கூறினான். மாதவனோ தன் மகனை அன்போடு தழுவிக் கொண்டார்.

நீதி : மன உறுதியை இழந்து விடாமல் துணிவோடு செயல்களை செய்ய

வேண்டும்.

இன்றைய செய்திகள் 18.10.2024

தமிழகம் முழுவதும் கனமழையால் 891 குளங்கள் நிரம்பின: 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 60 சதவீதம் நீர்இருப்பு.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால வரம்பு 120 நாளில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட உள்ளது. இது வரும் நவ.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

12 அணிகள் பங்கேற்கும் 'புரோ கபடி லீக்' நாளை தொடக்கம்.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; ஹாரி புரூக் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்.

Today's Headlines 18.10.2024

Heavy rain across Tamil Nadu filled 891 ponds: 90 dams and reservoirs have 60 per cent capacity of water.

Over 200 snakes were caught by the fire department and snake catchers, in the rain that fell across Tamil Nadu yesterday.

The time limit for booking train tickets will be reduced from 120 days to 60 days. Indian Railways has said that this will come into effect from November 1.

Pro Kabaddi League' will start tomorrow with 12 teams in participation.

Test Cricket Rankings; Harry Brooke advances to 2nd place.

Thursday, October 17, 2024

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி எதிர்காலத்தில் விவசாயம் தமிழ்ப் பேச்சு


 Tamil Literary Forum Competition Future Agriculture Tamil Speech

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி எதிர்காலத்தில் விவசாயம் தமிழ்ப் பேச்சு pdf

 Tamil Literary Forum Competition Future Agriculture Tamil Speech

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி பள்ளிகளில் கழிவு மேலாண்மை தமிழ்ப் பேச்சு


 Tamil literature forum competition waste management in schools tamil speech

தமிழ் இலக்கியமன்றப் போட்டி கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் தமிழ்க் கட்டுரை


 Tamil literature forum competition importance of waste management tamil essay

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி பள்ளிகளில் கழிவு மேலாண்மை தமிழ்ப் பேச்சு pdf

 Tamil literature forum competition waste management in schools tamil speech


பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் தமிழ்க் கட்டுரை pdf

 Tamil literature forum competition importance of waste management tamil essay


பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி நீர் மாசுபாட்டின் காரணங்கள் மற்றும் விளைவுகள் தமிழ்ப் பேச்சு


 Tamil Literary Forum Competition Causes and Effects of Water Pollution Tamil Speech

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி நீர் மாசுபாட்டின் காரணங்கள் மற்றும் விளைவுகள் தமிழ்ப் பேச்சு pdf

 Tamil Literary Forum Competition Causes and Effects of Water Pollution Tamil Speech

பதிவிறக்கு/DOWNLOAD

அழகிய ஆற்றின் அழுகை கதை சொல்லுதல் போட்டி தமிழ் இலக்கிய மன்றம்


Tamil Literary Club competition story Telling

தமிழ் இலக்கிய மன்றப் போட்டி கதை சொல்லுதல் அழகிய ஆற்றின் அழுகை pdf

 Tamil Literary Club competition 

Tamil Ilakkiya mandra potti kathai solluthal

பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 5 சேலம் மாவட்டம்


+1 talent exam question paper 5

தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 4 சேலம் மாவட்டம்


+1 talent exam question paper 4

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு மாதிரி வினாத்தாள் 2024 சேலம் பயிற்சித் தேர்வு 5

பதிவிறக்கு/DOWNLOAD 

11th standard students scholarship exam tamil Moli ilakkiya thiranari thervu vinathal 5 tamil talent exam model question paper 2024 salem 5 pdf


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு மாதிரி வினாத்தாள் 2024 சேலம் பயிற்சித் தேர்வு 4

பதிவிறக்கு/DOWNLOAD 

11th standard students scholarship exam tamil Moli ilakkiya thiranari thervu vinathal 4 tamil talent exam model question paper 2024 salem 4 pdf

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 17.10.2024 வியாழன்

*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடு* 

 நாள்: 17-10-2024
*கிழமை: வியாழக்கிழமை* 
*திருக்குறள்*

பால் : பொருட்பால்
அதிகாரம்: பழைமை

 *குறள் : 803*

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?

பொருள்:பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?

 *பழமொழி :* 

A useful trade is a mine of gold
கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.

 *ஈரொழுக்கப் பண்புகள் :* 

1. எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  
2. பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.

 *பொன்மொழி :* 

உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும்.
-அரிஸ்டாட்டில்

 *பொது அறிவு :* 

1. Vermiculture என்பது

விடை: மண்புழு வளர்த்தல்

2. பொருட்களின் நீளத்தை 1 மி.மீ அளவு துல்லியமாக அளக்கப் பயன்படும் கருவி 

விடை: வெர்னியர்

 *English words & meanings :* 

 Pot-பானை,
Spoon-கரண்டி

 *வேளாண்மையும் வாழ்வும் :* 

மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம், மீண்டவர்கள் குறைவு.

இவர்கள்தான் "மடையர்கள்" என அழைக்கப்பட்டார்கள்.

 *அக்டோபர் 17* 

 *உலக வறுமை ஒழிப்பு நாள்* 

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.

 *நீதிக்கதை* 

 *அறிவில் சிறந்தவர் யார் ?* 

விஜயநகரத்து மகாராணி அப்பாஜியை மந்திரி பதவியிலிருந்து நீக்க விரும்பினார். திட்டபடி ஒரு சாஸ்திரம் அறிந்த பண்டிதனை வரவழைத்துத் தனது கணவரிடம் “அரசர்க்கரசே ! அப்பாஜிக்குப் பதிலாக இந்த அறிஞனைப் பிரதம மந்திரியாக நியமித்தால் அதிக நன்மை பிறக்கும். இவர் சகல சாஸ்திரங்களையும் படித்துக் கரை கண்டவராதலால் அரச சபைக்கு மிகச் சிறந்தவராக விளங்குவார்” என்றாள். 

ராயருக்கு அரசியின் நோக்கம் புரிந்தது என்றாலும் “ராணி இருவரில் யார் வல்லவர் என்பதை நாளை அரச சபையில் பரீட்சித்துப் பார்ப்போம் வெல்பவருக்கே பிரதம மந்திரி பதவி” என்றார்.

மறுநாள் அரசவையில் ராயரும் மகாராணியும் கொலு வீற்றிருக்கும் போது இராயர் சபையோரை பார்த்து “நான் நேற்றிரவு அந்தப்புரத்தின் நிலா மாடத்தில் இருக்கும்போது ஒருவன் எனது மார்பில் காலால் எட்டி உதைத்து எனது முகத்தில் எச்சிலை உமிழ்ந்து விட்டான். அவனை என்ன செய்யலாம் ?” எனக் கேட்டார். 

உடனே மகாராணியால் சிபாரிசு செய்யப்பட்ட சாஸ்திர பண்டிதர் எழுந்து “உலகத்தில் ராஜாதிராஜனாக விளங்கும் தங்களை அலட்சியம் செய்து தங்கள் முகத்தில் எச்சிலை உமிழ்ந்த அவன் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், தங்கள் மார்பில் எட்டி உதைத்த அவன் கால்களையும் வெட்டி எறிய வேண்டும் !” என்றார். 

இராயர் அப்பாஜியை பார்த்து நீ என்ன சொல்கிறாய் என்றார். அதற்கு அப்பாஜி “உங்களை எட்டி உதைத்த கால்களுக்குப் பொற்சலங்கையும், தண்டை கொலுசும் போட்டு உங்கள் முகத்தில் எச்சில் உமிழ்ந்த வாயை முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும். ஏனெனில் தங்களுடைய அந்தப்புரத்தின் நிலா மாடத்துக்கு வந்து தங்கள் வீர மார்பில் எட்டி உதைத்துத் தங்கள் திருமுகத்தில் எச்சிலை உமிழக் கூடியவன் தங்களுடைய பச்சிளம் பாலகனான இளவரசனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?” என்றார். 

ராயர் மனம் மகிழ்ந்து “அப்பாஜி நீ சொல்வது சரிதான்” என்றார். 

பின்பு இராணியின் பக்கம் திரும்பி “பார்த்தாயா ? யார் அறிவில் வல்லவர் என்பதை ?” எனக் கேட்பவர் போல் பார்த்தார். 

நீதி: எப்போதும் சமயோசித புத்தியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

 *இன்றைய செய்திகள்* 

 *17.10.2024* 

* பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை பெற்று தருவதாகக் கூறி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

* வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* 45% பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளவர்களும் எம்பிபிஎஸ் படிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

* இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை: ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திட்டவட்டம்.

* உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல். அர்ஜென்டினா வெற்றி.

* இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

 *Today's Headlines* 

* The school education department has warned to be careful with gangs that extort money from parents by claiming to give incentives to school students.

 * Cyclone No. 1 has been activated in Pampan due to the presence of a low pressure zone in the Bay of Bengal.

 * People with 45% speech and language impairment can also study MBBS: Supreme Court judgement.

 * 3% hike in dearness allowance for central government employees. The approval was given in the Union Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi.

* Pakistan has no right to interfere in India's internal affairs: Indian Ambassador to UN

 * World Cup Soccer Qualifiers: Messi Scores Hat-trick goal .Argentina wins.

* The first day of the first Test match between India and New Zealand has been cancelled.

Wednesday, October 16, 2024

நீர்நிலைகளைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஒரு கதை அழகிய ஆற்றின் அழுகை

 A story of trying to protect water bodies is the cry of the beautiful river

அழகிய ஆற்றின் அழுகை

முன்னொரு காலத்தில், ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தின் நடுவே ஒரு அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆறு கிராமத்தின் உயிர் நாடி போன்றது. ஆற்றின் நீரில் கிராம மக்கள் குளிப்பார்கள், துணி துவைப்பார்கள், பாட்டிகள் கதை சொல்லும் இடமாக அது இருக்கும். ஆற்றின் கரையில் குழந்தைகள் விளையாடுவார்கள். அந்த ஆறு எவ்வளவு தெளிவாக இருந்ததென்றால், ஆற்றின் அடிப்பகுதியில் உள்ள கற்கள் தெரியும் அளவிற்குக் கண்ணாடி போல.

ஆனால், காலங்கள் மாறின. கிராம மக்களின் வாழ்க்கை முறை மாறியது. தொழிற்சாலைகள் வந்தன. அந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த ஆற்றில் கலந்தது. விவசாயிகள் பயிர்களுக்கு இரசாயன உரங்களை அதிகமாகப் பயன்படுத்தினர். அந்த உரங்கள் மழைநீரில் கலந்து ஆற்றை அடைந்தது.

ஆறு இனி அழகாக இல்லை. அதன் நீர் நிறம் மாறிவிட்டது. மீன்கள் அனைத்தும் இறந்து போயின. ஆற்றின் கரையில் துர்நாற்றம் வீசியது. கிராம மக்கள் அந்த ஆற்றைப் பயன்படுத்த முடியாமல் போனார்கள். தன்னை நினைத்து ஆறு அழுதது. இயற்கையின் அழுகை இறைவனுக்குக் கேட்டது.

ஒரு நாள் ஒரு சிறுமி, அந்த ஆற்றின் கரையில் அமர்ந்து அழுதாள். அவளுக்கு அந்த ஆறு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது அது இப்படி மாறிப்போனதை நினைத்து அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

அவள் தன் நண்பர்களிடம், ஆசிரியரிடம், பெரியவர்களிடம் இதைப் பற்றிச் சொன்னாள். அவர்கள் அனைவரும் சிறுமியின் பேச்சைக் கேட்டு கவலைப்பட்டார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து ஆற்றைப் பாதுகாக்க முடிவு செய்தார்கள்.

அவர்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்று, கழிவுநீரை ஆற்றில் கலக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். விவசாயிகளிடம் இயற்கை உரங்களைப் பயன்படுத்தும்படி கூறினார்கள். அவர்கள் ஆற்றின் கரையில் மரங்களை நட்டு, குப்பைகளைப் போடாமல் இருக்க எச்சரிக்கைப் பலகைகள் வைத்தார்கள்.

கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால், ஆறு மெல்ல மெல்ல சுத்தமாகத் தொடங்கியது. மீன்கள் மீண்டும் ஆற்றில் திரிந்தன. ஆற்றின் கரையில் பறவைகள் கூடின. கிராம மக்கள் மீண்டும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்தக் கதை நமக்கு சொல்லும் பாடம் என்னவென்றால், நாம் வாழும் இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் இயற்கையை அழித்தால், இயற்கை நம்மை அழிக்கும். எனவே, நாம் இன்று முதல் நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்போம்.

இந்தக் கதை மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்:

  • நீர்நிலைகள் நம் வாழ்விற்கு மிகவும் முக்கியம்.
  • நீர் மாசுபாட்டின் விளைவுகள் மிகவும் கடுமையானவை.
  • நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • இயற்கையைப் பாதுகாப்பது நம் கடமை.

பள்ளிகளில் கழிவு மேலாண்மை தமிழ்ப் பேச்சு கட்டுரை

 Pallikalil kalivu melanmai tamil speech katturai pechu

பள்ளிகளில் கழிவு மேலாண்மை

அன்புள்ள ஆசிரியர்களே, மாணவ, மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு மிகவும் முக்கியமானது. அதுதான் பள்ளிகளில் கழிவு மேலாண்மை. நாம் அனைவரும் பள்ளியில் படித்திருக்கிறோம். கேடில் விழுச்செல்வமான கல்வியைத் தருவது பள்ளி. பள்ளி என்பது நமக்குக் கல்வியை மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களையும் கற்றுத்தரும் ஒரு இடம். அந்த வகையில், பள்ளியில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.

ஏன் பள்ளிகளில் கழிவு மேலாண்மை?

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு: பள்ளிகள் ஒரு சிறிய சமுதாயம். பள்ளிகளில் கழிவுகளை சரியாகக் கையாள்வதன் மூலம், நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
  • மாணவர்களுக்கு விழிப்புணர்வு: பள்ளிகளில் கழிவு மேலாண்மை குறித்த செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், மாணவர்களுக்கு சிறிய வயதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
  • பள்ளியின் முகம் மாறும்: கழிவுகள் இல்லாத சுத்தமான பள்ளிச் சூழல், பள்ளியின் முகத்தை மாற்றி, அழகாகக் காட்டும்.

பள்ளிகளில் கழிவு மேலாண்மை எப்படி?

  • குப்பை வகைப்படுத்தல்: பள்ளியில் உற்பத்தியாகும் கழிவுகளை உலோகம், பிளாஸ்டிக், காகிதம், உணவுக் கழிவுகள் என வகைப்படுத்த வேண்டும்.
  • மறுசுழற்சி: வகைப்படுத்தப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்ப வேண்டும்.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: மாணவர்களிடையே கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தலாம்.
  • சுவர்ப் பத்திரிகைகள்: கழிவு மேலாண்மை குறித்த தகவல்களை சுவர்ப் பத்திரிகைகள் மூலம் பரப்பலாம்.
  • சுற்றுலா: அருகிலுள்ள மறுசுழற்சி மையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று, மறுசுழற்சி செயல்முறையை நேரில் காண்பிக்கலாம்.

பள்ளியில் கழிவு மேலாண்மை செய்வதன் நன்மைகள்:

  • இயற்கை வளங்களைச் சேமிக்க முடியும்.
  • மறுசுழற்சி மூலம் வருவாய் ஈட்ட முடியும்.
  • சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும்.
  • பள்ளியின் நற்பெயர் அதிகரிக்கும்.

பள்ளிகளில் கழிவு மேலாண்மை என்பது ஒரு சிறிய தொடக்கம். ஆனால், இந்த சிறிய தொடக்கம் நம்மை ஒரு பசுமையான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும். எனவே, நாம் அனைவரும் இணைந்து பள்ளிகளில் கழிவு மேலாண்மை முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.

நன்றி!

நீர் மாசுபாட்டின் காரணங்கள் மற்றும் விளைவுகள் தமிழ்ப் பேச்சு கட்டுரை

 neer masupattin karanankal matrum vilaivukal tamil pechu speech katturai

நீர் மாசுபாடு: நம் வாழ்வின் அச்சுறுத்தல்

அன்புள்ள தலைவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று நான் பேசவிருக்கும் தலைப்பு, நம் அனைவருக்கும் நெருங்கிய தொடர்புடையது. அதுதான் நீர் மாசுபாடு. நீர் - உயிரின் ஊற்றுமூலம். இன்றைய உலகில், இந்த அரிய வளம் பல்வேறு காரணங்களால் மாசுபட்டு வருகிறது. நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர்.

நீர் மாசுபாட்டின் காரணங்கள்:

  • தொழிற்சாலைக் கழிவுகள்: தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருள்கள், கன உலோகங்கள், இரசாயனங்கள் ஆகியவை நீர்நிலைகளில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன.
  • விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள்: பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்றவை மழைநீரில் கலந்து நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன.
  • கழிவுநீர்: நகர்ப்புறங்களில் உற்பத்தியாகும் கழிவுநீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலக்கிறது.
  • பிளாஸ்டிக்: பிளாஸ்டிக் பொருட்கள் நீரில் கலந்து சிறு துண்டுகளாக உடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.
  • எண்ணெய் கசிவு: கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவுகள் கடல்வாழ் உயிரினங்களையும் கடற்கரையோரப் பகுதிகளையும் பாதிக்கின்றன.

நீர் மாசுபாட்டின் விளைவுகள்:

  • உயிரினங்களின் அழிவு: மாசுபட்ட நீரை உட்கொள்ளும் உயிரினங்கள் நோய்கள், மரணம் அடைகின்றன. இதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு, உயிரினப் பன்மையும் குறைகிறது.
  • மனித ஆரோக்கிய பாதிப்பு: மாசுபட்ட நீரைக் குடிப்பதால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் பரவுகின்றன. நீண்ட காலமாக மாசுபட்ட நீரை உட்கொள்வது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.
  • சுற்றுச்சூழல் சீர்கேடு: நீர் மாசுபாடு மண்ணையும் காற்றையும் மாசுபடுத்தி, சுற்றுச்சூழல் சமநிலையைக் குலைக்கிறது.
  • பொருளாதார இழப்பு: மீன்வளம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். சுற்றுலாத் துறையும் பாதிக்கப்படுகிறது.

தீர்வுகள்:

  • கழிவுநீர் சுத்திகரிப்பு: அனைத்து கழிவுநீரும் முறையாக சுத்திகரிக்கப்பட்டு நீர்நிலைகளில் கலக்க வேண்டும்.
  • தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்துதல்: தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை முறையாக வெளியேற்ற வேண்டும்.
  • விவசாய முறைகளில் மாற்றம்: இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீர் மாசுபாட்டைக் குறைக்கலாம்.
  • பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல்: பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக துணிப்பைகள், கண்ணாடி பாட்டில்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
  • மரம் நடுதல்: மரங்கள் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து, மண் அரிப்பைத் தடுத்து, நீர் மாசுபாட்டைக் குறைக்கின்றன.

நீர் மாசுபாடு என்பது ஒரு தனிநபர் பிரச்சனை அல்ல. இது அனைவரையும் பாதிக்கும் ஒரு கூட்டுப் பிரச்சனை. ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளித்து நீர் மாசுபாட்டைத் தடுக்க வேண்டும். நாம் இன்று எடுக்கும் நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.

நன்றி!

எதிர்காலத்தில் விவசாயம் தமிழ்ப் பேச்சு கட்டுரை

 ethirkalathil vivasayam tamil speech katturai pechu

எதிர்காலத்தில் விவசாயம்

முன்னுரை

    மனித குலத்தின் தொட்டில் விவசாயம். சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்கிறது உலகப் பொதுமறை. நாகரிகத்தின் தொடக்கமே விவசாயப் புரட்சியிலிருந்துதான். ஆனால், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் இன்றைய சூழலில், விவசாயம் எந்த திசையில் பயணிக்கிறது? எதிர்காலத்தில் விவசாயம் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், நமது உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தொழில்நுட்பத்தின் ஆதிக்கம்

    எதிர்கால விவசாயம் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தில் இருக்கும். செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும்.

  • செயற்கை நுண்ணறிவு: பயிர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணித்து, நோய்களைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு உதவும். மண்ணின் தன்மையை ஆய்வு செய்து, அதற்கேற்ற உரங்களைப் பரிந்துரைக்கும்.
  • இயந்திரக் கற்றல்: பயிர்களின் வளர்ச்சியைக் கணித்து, விளைச்சலை அதிகரிக்க உதவும். காலநிலை மாற்றத்திற்கேற்ப பயிர்களைத் தேர்ந்தெடுக்கவும் இயந்திரக் கற்றல் உதவும்.
  • ரோபோடிக்ஸ்: விதைப்பு, களையெடுத்தல், அறுவடை போன்ற பணிகளை ரோபோக்கள் துல்லியமாகவும் வேகமாகவும் செய்யும். இதனால், மனித உழைப்பு குறைந்து, உற்பத்தி அதிகரிக்கும்.

நிலைப்புத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

    எதிர்கால விவசாயம் நிலைப்புத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கியமாகக் கருதும்.

  • நீர் மேலாண்மை: நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள, சொட்டு நீர்ப் பாசனம், மழைநீர் சேமிப்பு போன்ற நவீன நீர் மேலாண்மை முறைகள் பின்பற்றப்படும்.
  • உயிர் உரங்கள்: இரசாயன உரங்களுக்குப் பதிலாக, இயற்கை உயிர் உரங்கள் பயன்படுத்தப்பட்டு மண் வளம் பேணப்படும்.
  • புதிய பயிர்கள்: காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு புதிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு, கார்பன் வெளியீடு குறைக்கப்படும்.

நகர்ப்புற விவசாயம்

    நகர்ப்புறங்களில் நிலம் குறைவாக இருப்பதால், செங்குத்து விவசாயம், நீர் வளர்ப்பு போன்ற நவீன விவசாய முறைகள் பின்பற்றப்படும். இதன் மூலம், நகர்ப்புற மக்களுக்கு புதிய மற்றும் சுத்தமான உணவு கிடைக்கும்.

சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

எதிர்கால விவசாயம் பல சவால்களையும் வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் திறன், விவசாயிகளுக்குப் போதுமான பயிற்சி அளித்தல், அரசின் ஆதரவு போன்றவை முக்கியமான சவால்கள். அதே சமயம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி போன்ற பல வாய்ப்புகளும் உள்ளன.

முடிவுரை

    எதிர்கால விவசாயம் தொழில்நுட்பம், நிலைப்புத்தன்மை மற்றும் நகர்ப்புற விவசாயம் ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய விடியலை உருவாக்கும். இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, விவசாயத்தை நம் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

நெகிழி இல்லாத உலகம் கவிதை 2

 

நெகிழி இல்லாத உலகம் கவிதை

பூமித் தாயின் மடியில், 

பச்சைப் பசேலென்ற வண்ணம், 

நாம் வாழும் இடம், 

எழிலான கண்ணோட்டம். 

நெகிழிப் பிசாசின் ஆதிக்கம் பரவிய காலம், 

பூமியின் நலன் கருதி மாற்றம் தேவை என்ற காலம்.

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக், 

மீன்கள் அழுகின்றன, 

பறவைகள் சிக்குண்டு உயிர் துறக்கின்றன. 

மண்ணில் கலக்கும் நஞ்சு, 

பயிர்கள் வாடிப்போகின்றன, 

இயற்கையின் சமநிலை குலையத் தொடங்கின்றன.

நெகிழிப் பைகளைத் தவிர்த்து, 

துணிப் பைகளைப் பயன்படுத்துவோம், 

ஒருங்கிணைந்து செயல்பட்டு மாற்றத்தை உருவாக்குவோம். 

நம் பிள்ளைகளுக்கு, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

நெகிழி இல்லாத உலகம், 

நம் கனவு, நம் இலக்கு, 

ஒருங்கிணைந்து செயல்பட்டு, 

வெற்றி பெறுவோம் நிச்சயம். 

பூமித் தாயின் மடியில், 

மீண்டும் பூத்துக் குலுங்கட்டும், 

பசுமை நிறைந்த உலகம், 

நம்மை வரவேற்கட்டும்.

தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்தாள் 3 சேலம்


+1 talent exam question paper 3

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்


 அதிகாரம்:பழைமை 


குறள் எண்:802


 நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு

 உப்புஆதல் சான்றோர் கடன்.


பொருள்:நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.


பழமொழி :

Anger is sworn enemy .

 தீராக் கோபம் போராய் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :  


* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.  

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :


சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ..!-----விவேகானந்தர்

பொது அறிவு : 



1. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது ?    



விடை : உருளைக்கிழங்கு.    



2. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?   



விடை : ரோமானியர்கள்



English words & meanings :



 Knife-கத்தி,



Plate-தட்டு



வேளாண்மையும் வாழ்வும் : 



ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.



அக்டோபர் 16 இன்று



உலக உணவு நாள் (World Food Day)



உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.



2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

நீதிக்கதை



 யார் சிறந்தவன்? 



டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்.



அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த சிலைகளில் எழுதி திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் விஜயநகர அரசின் அறிவை நாங்கள் மதிப்போம் !” என்று தனது தூதர்களிடம் சொல்லி அனுப்பினார். 



ஒரேமாதிரியான மூன்று சிலைகளையும் கவனித்து ராயர் வியப்படைந்து அச்சிலைகளை தம் சபையில் வைத்து அவற்றின் குணாதிசயங்களை சோதித்துக் கூறும்படி கட்டளையிட்டார். 



மூன்று சிலைகளும் ஒரு சிறிதும் உருவ வேறுபாடின்றி ஒன்று போலவே இருந்தமையால் முடிவு சொல்ல முடியாமல் சபையினர் திண்டாடினர். 



கடைசியில் அப்பாஜி அம்மூன்று சிலைகளையும் கூர்ந்து கவனித்த போது மூன்று சிலைகளின் காதுகளிலும் துவாரமிருப்பது அவருக்கு தெரிந்தது. உடனே மெல்லிய ஈர்க்குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு முதல் சிலையில் உள்ள காது துவாரத்தில் நுழைந்தார். அந்தக் குச்சி வாய்வழியாக வந்து வெளிப்பட்டது. திருப்தி அடைந்த அப்பாஜி, அடுத்த சிலையில் அதே குச்சியை ஒரு காதுக்குள் நுழைத்த போது அது மற்றொரு காது வழியாக வந்து வெளிப்பட்டது. கடைசியாக மூன்றாவது சிலையின் காதுக்குள் விடப்பட்ட குச்சி வெளியே வரவில்லை உள்ளுக் குள்ளே தங்கி விட்டது. உடனே அப்பாஜி புன்னகையுடன் விவரித்தார்.



 ஒரு காதில் வாங்கி தன் இரகசியங்களை வாயால் வெளிப்படுத்துபவன் அதமன் ! அந்த இரகசியத்தை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டு விடுபவன் மத்திமன் ! மற்றவர் சொன்ன இரகசியத்தை வெளியே விடாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி வைப்பவன் தான் உத்தமன் !” அவனே சிறந்தவன் என்று மூன்று சிலைகளின் கீழ் முறையே ” அதமன், மத்திமன், உத்தமன் ! ” என்று எழுதி அனுப்பினார். 



அதைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியினது அறிவாற்றலை எண்ணி அசந்து போனார்.



நீதி: அறிவுகூர்மையுடன் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்



இன்றைய செய்திகள் - 16.10.2024

* தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு.



* திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.



* பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.



* டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது.



* 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.



Today's Headlines



* North East Monsoon has started: Heavy rain is expected in 12 districts of Tamil Nadu tomorrow.



 * Heavy rains in Tiruvallur: Increase in water supply to 5 lakes supplying drinking water to Chennai.



* Within 24 hours, 1.55 lakh people have applied for internships in reputed companies with financial assistance under the Prime Minister's Internship Scheme.



 * The Denmark Open International Badminton Tournament started yesterday in Odense.



 * Tamil Nadu team won the champion title in the men's category of the 31st Men's National Adya Padya Tournament.

தமிழ்த்துகள்

Blog Archive