திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல் : குடியியல்;
அதிகாரம் : நன்றியில் செல்வம் ;
குறள் எண் : 1006.
குறள் :
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.
பொருள்:
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
பழமொழி :
ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்.
A teacher is better than two books.
இரண்டொழுக்க பண்புகள்:
1) தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன்.
2) தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல் எழுதுவேன்.
பொன்மொழி :
உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம்.
ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது. சார்லி சாப்ளின்.
பொது அறிவு :
1. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
விடை : பிங்கலி வெங்கையா.
2. காற்றிலுள்ள நைட்ரஜனுக்கு பதிலாக ஆழ்கடலில் மூழ்குபவர்கள் பயன்படுத்தும் மந்த வாயு எது?
விடை: ஹீலியம்
English words & meanings :
+ Aeroplane.
விமானம்
+ Bicycle.
மிதிவண்டி
வேளாண்மையும் வாழ்வும்:
மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை துணி துவைக்க பயன்படுத்துங்கள்.
ஏப்ரல் 07
உலக நலவாழ்வு நாள்
உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.
ஏப்ரல் 07 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் - பிறப்பு 7 ஏப்ரல் 1770 - இறப்பு 23 ஏப்ரல் 1850.
ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட வசன கவிதைகள் கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார்.
தி பிரிலூட் வேர்ட்ஸ் வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார்.
நீதிக்கதை
அபசகுனம்
அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள கடவுளின் படத்தை தான் பார்ப்பார். ஒரு நாள் அவர் கண் விழிக்கும் போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல பிரச்சனைகள் வந்தது. எல்லாம் சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் நடந்தது என்று, அந்த சிப்பாயை தூக்கில் போட உத்தரவிட்டார். இந்த விஷயம் பீர்பாலுக்கு தெரிய வந்தது. பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடபோகிறீர் என்று கோபமாக கேட்டார்.
அதற்கு அக்பர் இவனுடைய முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது, இவனுடைய முகம் அபசகுனமானது என்று கூறினார். அதற்கு பீர்பால் பயங்கரமாக சிரித்தார். "ஏன் சிரிக்கிறாய்?" என்று அக்பர் கோபமாக பீர்பாலை பார்த்து கேட்டார். அதற்கு பீர்பால் "நீங்கள் அவனுடைய முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே, அப்போ யாருடைய முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்" என்றார்.
அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த சிப்பாயை விடுதலை செய்தார்.
இன்றைய செய்திகள்
07.04.2025
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
500 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்களின் வீடுகளில் சோலார் பேனல் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.
* உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி.
உலக குத்துச்சண்டை கோப்பை: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார் ஹிதேஷ்.
* சார்லஸ்டன் டென்னிஸ் தொடர்: ஜெசிகா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
Today's Headlines 07.04.2025
This year's fishing ban in Tamil Nadu begins on the coming 15th. This ban will remain in effect for 61 days. Thus, the price of fish is expected to increase from next week.
The Supreme Court has ordered the Tamil Nadu government to determine the minimum educational qualification for minority educational institute teachers.
Solar Panel is a must in the homes of families who use 500 units. Kerala Government Announcement.
India has provided 442 metric tonnes of food items to Myanmar affected by the earthquake.
Russia's missile attack on Ukraine. 18 people killed.
World Boxing Cup: Hitesh set a historic record as the first Indian to advance to the final.
Charleston Tennis Series: Jessica Begula Progress to the final.