கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 04, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாஞ்சை வளம் ஜனவரி 12

6th tamil model notes of lesson

lesson plan January 12

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

12-01-2026 முதல் 14-01-2026

2.பருவம்

3

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

புதுமைகள் செய்யும் தேசமிது – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பாஞ்சை வளம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்,

8.கற்றல் நோக்கங்கள்

கதைப்பாடலைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.

9.நுண்திறன்கள்

நாட்டுப்புறக் கதைகள் மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_82.html

https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-7th-tamil-mindmap-term-1-unit-3_9.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-paanjai-valam-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த நாட்டுப்புறக்கதைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கட்டபொம்மனின் வீரத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நாட்டுப்பற்றுடன் திகழ்ந்த தமிழர்களின் வீரத்தை உணர்த்துதல். வீரபாண்டியக் கட்டபொம்மன் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தைக் கூறுதல். இன்றைய வளங்களோடு அதை மாணவர்களை ஒப்பிடச் செய்தல்.

          நாட்டுப்புறப் பாடலைப் பற்றிக் கலந்துரையாடுதல். பாடல் குறித்த மாணவர்களின் கருத்தைக் கூறுதல். தமிழர்களின் வீரம் குறித்து அறிதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி       மெத்தைவீடு என்று குறிப்பிடப்படுவது ....................................

          ந.சி.வி       பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

உ.சி.வி      கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணமாக நீ எண்ணுபவற்றை

எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கட்டபொம்மன் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive