கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, January 22, 2023

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 2 கவிதைப்பேழை model notes of lesson 7th term 3 unit 2

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-01-2023 முதல் 03-02-2023

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர்

6.பக்கஎண்

22 - 26

7.கற்றல் விளைவுகள்

T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும், பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிப்படுத்துதல்.

8.திறன்கள்

பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்.

9.நுண்திறன்கள்

வழிபாடு குறித்து அறிதல். அறநெறிகளை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டு அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2023/01/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2_22.html

https://tamilthugal.blogspot.com/2020/01/puthumai-vilakku.html

https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-puthumai-vilakku-7th-tamil-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2021/01/3-2-aram-ennum-kathir-7th-tamil.html

11.ஆயத்தப்படுத்துதல்

வழிபாடு பற்றிக் கூறச்செய்தல்.

உழவுத்தொழில் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

உருவகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் வழிபாடு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். பாடலின் சொற்களுக்கு அகராதி பார்த்துப் பொருள் அறிவது குறித்து விளக்குதல்.

          உருவகம் குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். பாடல்களை விளக்குதல். மாணவர்களை அறநெறிகள் குறித்து அறியச் செய்தல். இளமையில் கற்கும் இன்றியமையாமை குறித்து விளக்குதல்.




மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அழகான நயங்கள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          LOT – களை என்பதன் பொருள் ...............................

          MOT – பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.

HOT – நீங்கள் விளக்காக உருவகப்படுத்துபவை பற்றி எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.

பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்திய இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.


எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 9 tamil model notes of lesson 8th unit 9 அணி இலக்கணம்

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

30-01-2023 முதல் 03-02-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

9

4.பாடத்தலைப்பு

குன்றென நிமிர்ந்துநில் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

அணி இலக்கணம்

6.பக்கஎண்

209 - 210

7.கற்றல் விளைவுகள்

T-810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்.

8.திறன்கள்

செய்யுள்களில் இடம்பெறும் அணிகளைப் பற்றி அறிந்து சுவைத்தல் திறன்.

9.நுண்திறன்கள்

பிறிதுமொழிதல், வேற்றுமை, இரட்டுறமொழிதல் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/01/9-8th-tamil-mindmap-unit-9_22.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-8th-tamil-ani-ilakanam-question.html

https://tamilthugal.blogspot.com/2020/04/vetrumai-ani-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/04/pirithu-mozhithal-ani-ottani-tamil.html

https://tamilthugal.blogspot.com/2020/04/siledai-irattura-mozhithalani-tamil-il.html

https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-3.html

11.ஆயத்தப்படுத்துதல்

இருபொருள் தரும் சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கடந்த ஆண்டு பயின்ற அணிகளை நினைவூட்டுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          உவமையைக் கூறி கருத்தை உணர வைப்பதே பிறிதுமொழிதல் என விளக்குதல். வேற்றுமை அணி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். இரட்டுறமொழிதல் அணியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

          அணி பற்றி அறிந்துகொள்ளுதல். திருக்குறளில் பயின்று வந்துள்ள அணிகள் பற்றி அறிதல். மூவகை அணிகளையும் நன்றாக விளங்கிக்கொள்ளுதல்.


மனவரைபடம் மூலம் அணியை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அணி நயம் குறித்துக் கூறுதல். செய்யுளின் அழகை விளக்குதல்.

15.மதிப்பீடு

          LOT – இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் .............................. அணி.

          MOT – பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.

          HOT – உனக்குப் பிடித்த அணி பற்றி எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உன் பாடப்பகுதியிலுள்ள குறள்களில் அமைந்துள்ள அணி பற்றி எழுதுக.

சிலேடை குறித்து இணையம் மூலம் அறிதல்.


வகுப்பு 10 தமிழ்ப் பயிற்சித் தேர்வு வினாத்தாள் விடைகள் விருதுநகர் 10th tamil model public question

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 நீங்கள் நல்லவர் மனவரைபடம் 6th tamil mindmap term 3 unit 2

 


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 பராபரக்கண்ணி மனவரைபடம் 6th tamil mindmap term 3 unit 2

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 அறம் என்னும் கதிர் மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 2

 


ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 2 புதுமை விளக்கு, மனவரைபடம் 7th tamil mindmap term 3 unit 2

 


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 9 அணி இலக்கணம் மனவரைபடம் 8th tamil mindmap unit 9

 


Saturday, January 21, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சனவரி 2023 நாகப்பட்டினம் 10th tamil first revision exam question paper Nagapattinam

பதிவிறக்கு/DOWNLOAD

10ஆம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் விடைகள் pdf விருதுநகர் 10th tamil I revision

பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf - முதல் திருப்புதல் தேர்வு சனவரி 2023 விருதுநகர் மாவட்டம் 10th tamil answer key first revision exam virudhunagar

விடைக்குறிப்பு pdf

 பதிவிறக்கு/DOWNLOAD



வினாத்தாள் pdf


Friday, January 20, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் சனவரி 2023 10th tamil first revision exam question paper

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சனவரி 2023 கடலூர் மாவட்டம் 10th tamil first revision exam question paper Cuddalore

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சனவரி 2023 செங்கல்பட்டு மாவட்டம் 10th tamil first revision exam question paper chengalpattu

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf சனவரி 2023 விருதுநகர் மாவட்டம் 10th tamil first revision exam question paper virudhunagar

வினாத்தாள் pdf



பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு - முதல் திருப்புதல் தேர்வு சனவரி 2023 விருதுநகர் மாவட்டம் 10th tamil answer key first revision exam virudhunagar

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

முதல் திருப்புதல் தேர்வு சனவரி 2023

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி               15x1=15

1.ஆ.மணி வகை                                                               1

2.இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்                            1

3.ஈ.அங்கு வறுமை இல்லாததால்                                                1

4.இ.வலிமையை நிலைநாட்டல்                                         1

5.ஆ.அதியன் பெருஞ்சாத்தன்                                           1

6.அ.அருமை + துணை                                                     1

7.அ.திருப்பதியும் திருத்தணியும்                                          1

8.ஈ..அண்ணன் தம்பி                                                        1

9.இ.பால் வழுவமைதி திணை வழுவமைதி                         1

10.அ.காடு                                                                        1

11.ஈ.கால் உடை - காலால் உடைத்தல்                                1

12. இ.குலசேகர ஆழ்வார்                                                  1

13.அ.வாளால் - மாளாத                                                    1

14.ஈ.பெருமாள் திருமொழி                                                         1

15.ஆ.தீராத                                                                      1

 

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க      4x2=8

16.மெய்க்கீர்த்தி

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்    1

அழியாத வகையில் இருப்பதற்காகவே மெய்க்கீர்த்தி பாடப்பட்டது                       1

 

17.மாலையில் மாலை வாங்கினேன்                                                                1

மாலை - பொழுது

மாலை - மலர் மாலை                                                                                   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

18.சுத்தமான காற்றைச் சுவாசிக்க மரம் வேண்டும்                                                      1

மரம் இல்லையேல் காற்று இல்லை                                                                          1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

19.இறடிப் பொம்மல் பெறுகுவிர்

 

நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்                                                                                                   2

 

20.ஏற்ற வினா அமைக்க

மனித வாழ்விற்கு அழகூட்டுபவை எவை?                                                   1

 கரகாட்டத்தை எவ்வாறெல்லாம் கூறுவர்?                                                                 1

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டாய வினா

21.குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு                                                                                 2

 

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10

 

22. உரைத்த

உரை+த்+த்+                                                                                              1

உரை - பகுதி

த்       - சந்தி

த்       - இறந்தகால இடைநிலை

     - பெயரெச்ச விகுதி                                                                                      1

 

23.அ.முத்துப்பல்

முத்துப் போன்ற பல்

 உவமைத்தொகை                                                                                        1

 ஆ.எழுகதிர் காலையில் எழுகதிர் பார்ப்பதற்கு அழகு

வினைத்தொகை                                                                                          1

 

24. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகள்

வெட்சி - கரந்தை                                                                                         ½

வஞ்சி - காஞ்சி                                                                                             ½

உழிஞை - நொச்சி                                                                                                 ½

தும்பை - வாகை                                                                                           ½

 

25.அ.ஆர்கலி - கடல்                                                                                        1

ஆ.உழுவை - புலி                                                                                              1

 

26.உடுப்பதூஉம்

உண்பதூஉம்                                                                                                 1

இன்னிசை அளபெடை                                                                                  1

 

27.அ.இந்த ஆண்டு வெயில் கொஞ்சம் அதிகம்                                                   1

ஆ.அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்                                                  1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

28.கலைச்சொற்கள்

அ.கலந்துரையாடல்                                                                                                1

ஆ.பாசனம்                                                                                                   1

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6

29..தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது அதன் விளை பொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும்.                                                                                       1

.கோதுமையின் வகைகள் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை.    1

.தமிழ்நாட்டின் நெல்லின் வகைகள் செந்நெல், வெண்ணெல், கார்நெல் மற்றும் சம்பாவில் மட்டும் 60 வகைகள் உள்ளன                                                              1

 

30.பசிப்பிணி மருத்துவம்

பசித்தவருக்கு உணவு தந்து காப்பது இன்றைக்கும் தேவை                               1

வாய்மையே சிறந்த அறம்

உண்மை பேசுவது இன்றைக்கும் தேவை                                                                  1

பேரிடர் காலங்களில் உணவும் உண்மையும் முக்கியத் தேவை                                     1

 

31.உணவாக நான்

 முக்கால் பங்கு நான்                                                                                     1

விளைவுக்கு நான்

ஐம்பூதங்களில் நான்                                                                                                1

மழையாக நான்

பேராற்றல் நான்                                                                                            1

 

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க        2x3=6

32.முதல் மழை விழுந்ததும் மேல் மண் பதம் ஆகிவிட்டது                                1

அதிகாலை வெள்ளி முளைத்து விட்டது

மாட்டை எழுப்பி கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு மழை பொழியும்                1

நிலமும் சிலிர்த்து பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்.                                                        1

 

33.பழமைக்கும் பழமையானது

புதுமைக்கும் புதுமையானது                                                                                     1

குமரிக்கண்டத்தில் அரசாண்டது

பாண்டியன் மகளாய்ப் பிறந்தது                                                                        1

 சங்க இலக்கியமாய் விளங்குகிறது

திருக்குறளின் பெருமையாய் இருப்பது                                                            1

 

34.கட்டாய வினா                                                                              3

சிலப்பதிகாரம்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;                                    - இளங்கோவடிகள்.

அல்லது

முல்லைப்பாட்டு

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்.                                 - நப்பூதனார்.

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க        2x3=6

35.பூப்பறித்த - இரண்டாம் வேற்றுமைத் தொகை

பூவைப் பறித்த

 

பூங்கொடி - உவமைத்தொகை

பூப் போன்ற கொடி                                                                               1

 

ஆடு மாடுகள் - உம்மைத் தொகை

ஆடுகளும் மாடுகளும்                                                                          1

 

மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத் தொகை

 மணியைப் பார்த்தாள்                                                                                     1

 

36. தன்மையணி

இலக்கணம்

இயற்கையில் அமைந்த உண்மையான இயல்புத் தன்மையினை கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும்           1

சான்று

மெய்யிற் பொடியும்                                                                                     1

விளக்கம்

இப்பாடலில் கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தைக் கேட்பவர் மனதில் பதியுமாறு பாடி இருப்பதால் இது தன்மையணியாகும்                                                    1

 

37.கொடுப்/பதூ/உம்         - நிரை நிரை நேர்   - கருவிளங்காய்

துய்ப்/பதூ/உம்        - நேர் நிரை நேர்     - கூவிளங்காய்                          1

இல்/லார்க்             - நேர் நேர்             - தேமா

கடுக்/கிய               - நிரை நிரை                   - கருவிளம்

கோ/டிஉண்           - நேர் நிரை            - கூவிளம்                                1

டா/யினும்              - நேர் நிரை            - கூவிளம்

 இல்                      - நேர்                              - நாள்                                      1

 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க    5x5=25

38. பூக்கையைக் குவித்து வாய்மையே மழை நீராகி கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாடியது                                                                                                

எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப் புண் போல், பிரிந்தன புள்ளின் கானில் என்று உருகி இருக்கிறார் வீரமாமுனிவர்.                                                                          

இப்புலம்பல் கேட்டு தேன் மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள மலர்களும் சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அழுவன போன்று கூச்சலிட்டன.         2

 

அல்லது

 

 மலர்ந்தும் மலராத கவிதை நயம் பாராட்டுதல்                                         5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

39.அனுப்புநர்                   ½

பெறுநர்                           ½

விளி                               ½

பொருள்                          ½

செய்தி                                     

முடிப்பு                                      ½

இடம் நாள்                       ½

உறைமேல் முகவரி          ½

 

அல்லது

 

இடம் நாள்                       ½

விளி                               ½

செய்தி                                      2

முடிப்பு                                      1

உறைமேல் முகவரி          1

 

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.                                                        5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

41. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் விண்ணப்பம்               5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

42.அ.இன்சொல் பேசினால் என்ன விளையும் தீய சொல் பேசினால் என்ன விளையும் பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அல்லது

ஆ.

பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.                                                            5

 


 


 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க   5x8=24

 

43.நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - மேடை உரை              8

 

அல்லது

 

தமிழ்ச் சொல்வளம்

 

44.அன்னமய்யா                                                                                  8

 

அல்லது

 

 மகளிர் நாள் விழா அறிக்கை

 

45.மரம் நடு விழா நன்றியுரை                                                               8

 

அல்லது

 

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை

தமிழ்த்துகள்

Blog Archive