தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, October 05, 2024
Friday, October 04, 2024
Thursday, October 03, 2024
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2024 EM
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் வழி காலாண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2024
Wednesday, October 02, 2024
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின் பங்கு
Role of space exploration in environmental protection
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின்
பங்கு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முத்துக்கடல் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்துங்
கடல் மீது கலங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே தமிழ்த்துகள்
கூத்தன் இருந்தான்; குறளரசன் அங்கிருந்தான்; வார்த்தைத் தமிழுக்கு வணங்காத கம்பன் இருந்தான்; நக்கீரன், நன்னாகன், நப்பசலை, ஒக்கூர் மாசாத்தி, ஒண்சாத்தன், சிலம்பெடுத்த தக்கோன் என முத்தமிழ் வளர்த்த மண்ணில்
யாப்பிலாப் பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி வளர்த்த மூப்பிலாத்
தமிழை மூச்சாய்க் கொண்ட என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே: முப்பாலால் குழைத்த
முத்தமிழ்ச் சொல்லெடுத்து வணங்குகிறேன்! தமிழ்த்துகள்
பூமிப்பந்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் மானிட இனத்தின் ஒரு துகளாய் உங்கள் முன்னே
நிற்கிறேன். ஒன்பது கோள்கள் இருந்தும் உயிர்க்கோளமாய் இருப்பதால்தான் இங்கு நாம் இருக்கிறோம்.
பூமிப்பந்தை ஒட்டி முளைத்த புல்வெளிகள் உயர்ந்த மரங்கள் எல்லாம் நமக்கு மட்டுமே சொந்தம்
என்று கொண்டாடி மகிழ்கிறோம். பூமிப்பந்து பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான ஒரு சூழல் மண்டலம்
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தமிழ்த்துகள்
காட்டை அழித்து நாட்டை உருவாக்கினான். வயல்களை அழித்து கான்கிரீட் வீடுகள் ஆக்கிவிட்டான்.
வானளாவ உயர்ந்திருந்த மரங்களை அழித்து தொழிற்சாலைகள் உருவாக்கி விட்டான். உயிர்வளி
உறிஞ்சி கரிவளி உமிழப் பழகி விட்டான். பசுமை இல்ல விளைவு தோன்றியதும் ஓசோனில் ஓட்டை
ஓட்டை என்று இப்போது கதறுகிறான்: மரங்கள் இயற்கையின் வரங்கள். உண்மைதான்,
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்- இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள்-
எனிற் சிந்தனை ஒன்றுடையாள் - என்றார் மகாகவி பாரதியார். இன்று இந்தியத் தாயோ 140 கோடி
முகமுடையாள் ஆகி விழி பிதுங்கி நிற்கிறாள். உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. தமிழ்த்துகள்
புதை படிம எரிபொருள் வெளியேறுவதைக் கண்காணிக்க ஒவ்வொரு நாடும் தன் பங்குக்குச்
செயற்கைக்கோளை அனுப்பி வருகிறது. 1961 இல் யூரிக்காரின் உயிர்ப்பொருளாக விண்வெளியில்
வலம் வந்தார். 1965இல் அலெக்சி லியோனோவ் விண்வெளியில் நடைபயணம் சென்றார். 1967இல் நிலவில்
அப்பல்லோ இறங்கியது. 1971 இல் முதல் விண்வெளி நிலையம் சல்யூட்! ஏற்படுத்தப்பட்டது.
இப்படி படிப்படியாக ஒவ்வொரு நாடும் தன் பங்குக்கு இந்தப் பால் வெளி அண்டத்தில் தங்கள்
செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தப் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்த்துகள்
ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பான யூ.என்.இ.பி 2016 இல் கரிம உமிழ்வு அறிக்கை வெளியிட்டது.
பசுமைக் குடில் வாயுக்களைக் கண்காணிப்பதற்கு ஐரோப்பியத் துணைக் கண்டம் சென்டினல் 5
என்ற செயற்கைக்கோளை ஏவியுள்ளது. தமிழ்த்துகள்
ஆறறிவு கொண்ட மனிதனால் நேரடியாக பார்க்க முடியாத காலநிலை மாற்றங்கள், பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் பெருக்கம் மற்றும் அழிவு காற்றில் உள்ள
கார்பன் மதிப்பீடு இவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் மனிதனுக்குச் சத்தம் இல்லாமல் காட்டிக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகை மாசுபடுத்தக் காரணமான மனிதன் நாளைய உலகம்
பசுமையாக இருக்க வேண்டும் என்பதில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளான். தமிழ்த்துகள்
பாலித்தீன் பைகள் பயன்பாட்டைக் குறைத்து விட்டான்; தொழிற்சாலைகளில் வெளிவரும் புகைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்து
விட்டது;
வடிகட்டிகள் அமைக்கப்பட்டு காற்றில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழ்த்துகள்
ஊர் கூடித் தேர் இழுத்தால் தானே நிலைக்குச் சேரும். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு
ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டியது அவசியம். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி
நிலம் வேண்டும் என்று கேட்ட பாரதி கூட பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் பக்கத்திலே வேணும்
என்று கேட்டார் அப்போதுதான் தென்றல் வந்து தீண்டும் என்பது புலவரான அவருக்குத் தெரியாமலா
இருந்திருக்கும்? தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பூமியின் சுற்றுவட்டப் பாதையில் தற்போது 20 செயற்கைக் கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு
இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நவீன அறிவியலின் கையில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
ஜாக்ஸா-என்ற ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா என்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி
மையம் இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் என ஒவ்வொரு நாடும் பல்வேறு விண்வெளி
ஆய்வு மையங்கள் அமைத்து செயற்கைக்கோள்களை அனுப்பி நமக்குச் சரியான அறிக்கைகளைத் தந்து
கொண்டிருக்கின்றன. தமிழ்த்துகள்
2015இல் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது
75 விழுக்காடு பசுமைக் குடில் விளைவு ஏற்படுவதற்கு புதை படிம எரிபொருள் தான் காரணம்
என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. எனவே மாற்று எரிபொருளைப் பயன்படுத்த அனைத்து நாடுகளும்
உறுதி பூண்டுள்ளன. பூமியின் சராசரி வெப்பநிலை 1.1 டிகிரி கூடிய நிலையில் 2040-ல் அது
1.5 டிகிரி உயரும் அபாயம் உள்ளது. தமிழ்த்துகள்
ஜூன் ஐந்தாம் நாளை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
வருகிறோம். இருந்தாலும், விண்வெளி ஆய்வுகளும் செயற்கைக்கோள் தரும் தகவல்களும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. தமிழ்த்துகள்
உலக விண்வெளி வார தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது
இனிவரும் காலங்களில் நிலவில் கால் பதித்தாலும் சரி செவ்வாய்க் கோளில் தரை இறங்கினாலும்
சரி மனிதன் அங்கும் மாசு ஏற்படக் காரணம் ஆகிவிடக்கூடாது. புவியை மாசிலிருந்து மீட்டே
ஆக வேண்டும். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பல்வேறு நாடுகளுக்குப் பண்பாட்டையும் நாகரீகத்தையும் கற்றுத்தந்த நம் பாரதம் விண்வெளித்
திட்டத்திலும் சந்திராயன், மங்கள்யான், ஆதித்யா என்று நிலவுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் சூரியனுக்கும் செயற்கைக்கோள்களை
அனுப்பி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் ஒருபடி மேலாகச் சென்று ரூமி என்ற மறு பயன்பாட்டுக்கான
ஹைபிரிட் ராக்கெட் ஏவியுள்ளது. தமிழ்த்துகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம்
இணைந்து 3 க்யூப் செயற்கைக்கோள்கள் மற்றும் 50 சிறிய செயற்கைக்கோள்களுடன் விண்ணில்
பாய்ந்த இந்த ராக்கெட் மறு பயன்பாடு செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செயற்கைக்கோள்களை பூமியின் சரியான சுற்றுவட்டப் பாதையில் நிறுத்திவிட்டு ஏழே நிமிடங்களில்
புவிக்குத் திரும்பி விட்டது மிஷன் ரூமி 2020 என்ற இந்த ராக்கெட் திட மற்றும் திரவ
எரிபொருள் கொண்டது. காலநிலை மாற்றம் காஸ்மிக் கதிர்வீச்சு புற ஊதாக்கதிர்வீச்சு காற்றின்
தன்மை இவற்றையெல்லாம் அளவிடும் வண்ணம் இன்றைக்குச் செயற்கைக்கோள்கள் நமக்குப் பயன்பட்டு
வருகின்றன. தமிழ்த்துகள்
விண்வெளி ஆய்வுத் திட்டம் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடு பெருமளவு தடுக்கப்படுகிறது.
நீண்டதொரு உறக்கத்திலிருந்து உலகம் விழித்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. பறவையைக்
கண்டான் விமானம் படைத்தான், பாயுமீனில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான், எங்கும் மாசினைக் கண்டான் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள்
படைத்தான் என்று வரலாறு பேசப்போகிறது. தமிழ்த்துகள்
வற்றும், வற்றா வளங்களை மனிதன் அளவிடுவதற்கும் சுற்றுப்புறச்
சூழலைப் பாதுகாப்பதற்கும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும்
விண்வெளி ஆய்வு துணை நிற்கிறது. தமிழ்த்துகள்
வேடிக்கை மனிதரைப் போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வைர வரிகளை
மனதில் பதிப்போம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் முழுமையாக
வெற்றி பெற ஒத்துழைப்பு தருவோம். தமிழ்த்துகள்
சிந்தையில் சிறகடித்த கருத்துகளைப் பந்தி போட்டுப் பரிமாறி இருக்கிறேன். சுவை உணர்ந்தோர்
கரவொலி எழுப்புங்கள் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி பாராட்டி அமைகிறேன். நன்றி வணக்கம்.
மு.முத்து முருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி. 9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள், போட்டித்தேர்வு வளங்கள் போன்ற எண்ணற்ற
தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
Tuesday, October 01, 2024
Conversation with the finest minds English Speech
Respected principal honorable judges and my dear brothers and sisters good morning all of you.
I am here with the Quote of Rene Das cartes that "the reading of all good books is like a conversation with the finest minds of past centuries".
Yes what a great quote it is! We acquire knowledge and information from various books. We can travel with the emotion of the other .we can understand others feelings also .we can know the culture and civilization of the past.
Arts, history, geography, biography ,health, fiction, warfare and other related books inspires everyone.
The reader sail same boat with other throughout the book.
For example if we read 'ponniyin Selvan' we feel the chola dynasty culture.
When we read 'the wings of fire 'written by Abdul Kalam we got more inspiration. we feel the same when we read the 'universe in a Nutshell' by Stephen Hawking.
Gitanjali book of Rabindranath Tagore leaders to a holy World. Our thirukkural stole number of reader's hearts around the world.
Nelson Mandela's "long walk to freedom" is a book of his total experience as a freedom fighte.'Das capital' of Karl Marx can change everyone's mind against capitalism.
If you want to speak with Mahatma Gandhiji. We must read his book" the story of my experiments with the truth".
Tamil sangam literatures are the treasure of our culture. Our epics and folklores make a travel with our ancestors.
Homer's "odyssy"
plato's "the republic "
Albert Einstein's "relativity" the famous Russian writer Leo tolstoy's " war and peace"are some of the books to have the feel of conversation with the author.
Habit of Reading books stimulate imagination. It create positive approach towards life. If anybody want to come out of stress must have the reading habit.
My dear brothers and sisters light the candle of your brain with the great writers. It will leads you a great and legible life.
Thank you one and all for giving me the chance.
-M.MUTHU MURUGAN KALLOORANI-626105
9443323199
Empathy is the highest form of knowledge - English Speech
It's a blooming day. We are gathering herer to get knowledge. Thank god for giving me the chance. Respected principal, my beloved teachers and my dear brothers and sisters good morning all.I am happy to among with you.
Today we are living in a computer world. Nobody ready to spend time for others. We are running for luxurious life. But we don't know that we are not happy without other's happy.
That's why I recalled a great Greek philosopher Plato.
He is saying that empathy is the highest form of knowledge.
We got knowledge by reading books. Nowadays we get more from internet. But nobody can tell that how to feel others feeling.
We already know sympathy. But empathy is different from sympathy.
"Empathy is more powerful than sympathy"
The main difference between sympathy and empathy is that empathy involved sharing the feelings of another person. sympathy is feeling concerned for someone else situation.
Empathy is the ability to understand and share another person's feeling.
"Empathy is the medicine the world needs"
cognitive and emotional reactions can be experienced.
Empathy is a sign of intelligent. Intelligent leaders understand that. Empathy is the base for motivation. Motivated people can transform communities and lives for the better.
One who come out from his ego can understand empathy.
The ability to feel empathy allows people "to work a mile in another shoes" .
There are various types of empathy .
* Effective empathy helps to know other person's emotions
* somatic empathy help us to know others physical reaction
* cognitive empathy leads us to value others mental state so it is called "the theory of mind".
In our habitual life be must have empathy. It will give us good name from parents and teachers . One who want to maintain friendship relationship in a smooth way must have empathy. I am not a philosopher to explain you in a elaborate way. Just I indicate some points here.
"Sympathy is the key that fits the lock of any heart "
But
"Empathy is the most essential quality of civilization"
If you feel burden simply forgive me.
We must say all is well everyday. I pray god to give a pleasant day for all of us. I thank one and all for giving me the chance.
-M.MUTHU MURUGAN
9443323199
ORATOR ,POET,ASTROLOGER AND NCC OFFICER
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson new june 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
9th tamil june month weekly monthly syllabus 2026
-
6th tamil model notes of lesson lesson plan 2026 june 4 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2...
-
குற்றியலுகரம் தமிழ்த்துகள் வினாடி வினா மதிப்பெண்: 0 / 20 செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641 அடுத்த கேள்வி தேர்வ...
-
Tenth Tamil Choose the best answer book inside questions and answers 123 Unit 1 new syllabus பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson june 2026 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
பகுபத உறுப்பிலக்கணம் தமிழ்த்துகள் வினாடிவினா மதிப்பெண்: 0/20 செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 986544...
Blog Archive
-
▼
2026
(983)
-
▼
June
(10)
- ஐவகை நிலங்கள் five lands in Tamil
- பறவை விலங்குகள் இளமைப் பெயர்கள் தமிழ் மரபுச் சொற்க...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் மனப்பாடப்ப...
- பறவை விலங்குகள் இருப்பிடப் பெயர்கள் birds animals ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுநல் வாடை மனப்பாடப்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 தன்னேர் இலாத தமிழ் மனப...
- இந்திய தேசியச் சின்னங்கள் Indian national emblem
- தமிழ் இலக்கணம் மெய்யெழுத்து வகைகள் tamil ilakkanam...
- தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 2 T...
- தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 1 T...
-
▼
June
(10)
