கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, April 17, 2025

தமிழோடு விளையாடு 23 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.04.2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.04.2025

 
திருக்குறள்: 


பால்: பொருட்பால்


 இயல் :குடியியல்


 அதிகாரம்: உழவு


 குறள் எண்: 1032

 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

 எழுவாரை எல்லாம் பொறுத்து,


பொருள்:

உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.


பழமொழி :

சுறுசுறுப்பு வெற்றி தரும்.
Briskness will bring success.

இரண்டொழுக்க பண்புகள் :
*வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும், விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன். 
* பெற்றோருக்கு தெரியாமல் யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த ஆறு, குளம்,  குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.

பொன்மொழி :
நீ  சுமக்கின்ற நம்பிக்கை  நீ  விழும்  போது  உன்னை  சுமக்கும்.
பொது அறிவு : 
1. காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? 
விடை: தந்தை பெரியார்.        
2. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது? 
விடை: கீழாநெல்லி

English words & meanings :

 Bride.    -     மணமகள்


Candle.    -     மெழுகுவர்த்தி


வேளாண்மையும் வாழ்வும் : 
நீர் பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்.

ஏப்ரல் 17

உலக ஈமோஃபீலியா நாள்


ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று.

நீதிக்கதை
 நரித் தந்திரம்!


ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டது. எல்லா மிருகங்களும் வந்தன.
முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டது.
‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’என்று கேட்டது.
குரங்கு வந்து முகர்ந்து பார்த்து விட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’என்றது.
சிங்கத்துக்கு கோபம் வந்து விட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. குரங்கு சுருண்டு விழுந்துவிட்டது.
அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ என்றது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக் கொண்டே வந்தது.
சிங்கத்தை முகர்ந்து பார்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ என்றது. "பொய்யா சொல்றே?ன்னு சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் சுருண்டு விழுந்தது.
அடுத்த படியாக ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ என்றது சிங்கம்.
 நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக் கொண்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது. அப்புறம் கூறியது, ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’
 நரி தன் தந்திரமான குணத்தாலும், சமயோசித புத்தியாலும் தப்பித்தது.

இன்றைய செய்திகள்

17.04.2025


* அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


* தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்.


* 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா.


* இந்திய ஓபன் தடகளம் 2025: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்.


* பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* The Secretary of the Tamil Development and News Department has ordered all government department secretaries to issue government orders only in Tamil from now on.


 * The Meteorological Department has reported that the temperature will increase in Tamil Nadu for the next three days starting tomorrow. The public is advised to be cautious regarding the heatwave.

 

* The Supreme Court has issued a strict order stating that the license of the concerned hospital must be canceled if a newborn child goes missing.


 * China has issued 85,000 visas to Indians in the four months from January to April 2025. This is seen as a significant move in the relationship between the two countries.

.

 * Indian Open Athletics: Yash Veer Singh has won the gold medal in the javelin throw event at the Indian Open Athletics Championships.


 * Barcelona Open Tennis: Danish player Holger Rune has advanced to the quarterfinals of the Barcelona Open Tennis tournament. He is displaying excellent performance.

திருக்குறள் 107 எழுமை... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 107 Elumai... Explanation tamil and english

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

Wednesday, April 16, 2025

தேங்காய் உடைத்ததும் தானாகத் திறக்கும் கோவில் கதவு ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் அருப்புக்கோட்டை


 

ஏமாற்றுபவனுக்குக் கிடைத்த தண்டனை ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story moral The punishment for the cheater


tamil short story moral The punishment for the cheater


ஏழாம் வகுப்பு கணக்கு மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் 2025 விருதுநகர் மாவட்டம்

7TH maths English medium question paper virudhunagar district third term summative assessment exam 2025

ஏழாம் வகுப்பு கணக்கு மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் 2025 விருதுநகர் மாவட்டம்

7th maths tamil medium question paper virudhunagar district third term summative assessment 2025

ஆறாம் வகுப்பு கணக்கு மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் 2025 விருதுநகர் மாவட்டம்

6th maths English medium question paper virudhunagar district third term summative assessment 2025

ஆறாம் வகுப்பு கணக்கு மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் 2025 விருதுநகர் மாவட்டம்

6th maths tamil medium question paper virudhunagar district third term summative assessment 

Tuesday, April 15, 2025

திருக்குறள் 106 மறவற்க... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 106 maravarka... Explanation tamil and english

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2025


10th govt public exam social science question paper 2025

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2025 PDF

 TENTH SOCIAL SCIENCE GOVT PUBLIC EXAM ORIGINAL QUESTION PAPER 2025 PDF


பதிவிறக்கு/DOWNLOAD

திருக்குறள் 105 உதவி... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 105 uthavi... Explanation tamil and english

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

Sunday, April 13, 2025

தமிழ்ப் புத்தாண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் Tamil new year wishes

பத்தாம் வகுப்பு தமிழ் உணவுப் பொருள் காலாவதி முறையீட்டுக் கடிதம் 10th Tamil food expiry appeal letter


10th Tamil food expiry appeal letter

பத்தாம் வகுப்பு தமிழ் உணவுப்பொருள் முறையீட்டுக் கடிதம் PDF 10th standard Tamil food expiry appeal letter

 பதிவிறக்கு/DOWNLOAD


10th standard Tamil food expiry appeal letter pdf



திருக்குறள் 103 பயன்தூக்கார்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 103 payanthookaar... Explanation tamil and english

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் 
நன்மை கடலின் பெரிது

Saturday, April 12, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் 2025

9th tamil annual exam question paper 2025

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 மேகம் கற்பித்தல் துணைக்கருவி புதிய பாடத்திட்டம்

 10th teaching aid tlm

unit 2 megam new syllabus



பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 பிரும்மம் கற்பித்தல் துணைக்கருவி புதிய பாடத்திட்டம்

  10th teaching aid tlm

unit 2 brummam new syllabus




பத்தாம் வகுப்பு தமிழ் கலைத்திருவிழா பாராட்டுக் கடிதம் 10th Tamil art festival wish letter for friend


10th Tamil art festival wish letter for friend

பத்தாம் வகுப்பு தமிழ் கலைத்திருவிழா பாராட்டுக் கடிதம் PDF

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Tamil important letter to friend for wishing kalaithiruvila winner pdf

திருக்குறள் 102 காலத்தினால்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 102 kalathinal... Explanation tamil and english

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Friday, April 11, 2025

வகுப்பு 10 அறிவியல் வினாத்தாள் பொதுத்தேர்வு 2025 10th Science public exam original question 2025


10th Science public exam original question 2025 

பத்தாம் வகுப்பு அறிவியல் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2025 PDF

 பதிவிறக்கு/DOWNLOAD


TENTH SIENCE GOVT PUBLIC EXAM ORIGINAL QUESTION PAPER 2025 PDF

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-04-2025. வெள்ளி

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-04-2025. வெள்ளி

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : நன்றியில் செல்வம் ; 

குறள் எண் : 1009.

குறள்:

அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பொருள்:

அன்பின்றி அறம் செய்யாது சேர்த்த பொருளை எடுத்துக் கொள்வார் யாரோ?.

பழமொழி :

வியர்வை சிந்தாமல் இன்பம் இல்லை.

No sweet without sweat.

இரண்டொழுக்க பண்புகள்:

1) தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன்.

2) தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமலும் எழுதுவேன்.


பொன்மொழி :

நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை.

மிக முக்கியமாக கேள்விகள் கேட்பதை மட்டும் நிறுத்தாதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

பொது அறிவு :

1. காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

விடை: தமிழ்நாடு.

2. இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

விடை : குஜராத்

English words & meanings :

+ Subway

சுரங்கப்பாதை

Submarine

நீர்மூழ்கிக் கப்பல்

வேளாண்மையும் வாழ்வும் :

நீர் சேமிப்பு உத்திகளில் ஒன்று மழைநீர் சேகரிப்பு ஆகும். குளங்கள், ஏரிகள், கால்வாய்களை துார்வாருதல், நீர்த்தேக்கத்தை விரிவுபடுத்துதல், மழைநீர் பிடிக்கும் குழாய்கள் மற்றும் வடிகட்டும் அமைப்புகளை வீடுகளில் நிறுவுதல் ஆகியவை மழைநீரை சேகரிக்கும் வெவ்வேறு முறைகளாகும்.

ஏப்ரல் 11 - மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே

JYOTIRAO GOVINDRAO PHULE (11 APRIL. 1827-28 NOVEMBER 1890)

SOCIAL REFORMER

✓மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே

✓ பிறப்பு 11 ஏப்ரல் 1827 - இறப்பு 28 நவம்பர் 1890),

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாவார்.

✓சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர்.

✓ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.

✓தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதி அமைப்பை ஒழித்தல், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கல்வி கற்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட பல துறைகளுக்கு அவரது பணி விரிவடைந்தது.

✓அவரும் அவரது மனைவி சாவித்ரிபாய் புலேவும் இந்தியாவில் பெண் கல்வியின் முன்னோடிகளாக இருந்தனர்.

நீதிக்கதை -குரங்கு அறிஞர்

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான். "யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?" என்றான். "தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!" என்றார். "இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!" என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார். அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். "குரங்கை வெளியே அனுப்புங்கள்" என்று கத்தினர். கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்."வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!"

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். "இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!" என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர். "எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?" என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

இன்றைய செய்திகள் 11.04.2025

சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

* சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட சரக்கு முனைய வசதியை நிறுத்தியது இந்தியா.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% ஆக உயர்த்தி உள்ளார்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி.

* ஐ.பி.எல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்.

Today's Headlines 11.04.2025

The Minister of Micro, Small, and Medium Enterprises (MSME) Tha.mo. Anbarasan, announced in the legislative assembly that the maximum limit for additional investment subsidies for small businesses will be increased from ₹5 lakh to 10 lakh.

An agreement was signed in the presence of Chief Minister M.K. Stalin with Dixon Technologies Limited at the IndoSpace Industrial Park in Oragadam, Chennai, for an investment of ₹1,000 crore, creating 5,000 job opportunities.

India has stopped the cargo terminal facility provided to Bangladesh.

The trade war between the United States and China has intensified. Following Trump's increase of tariffs on Chinese goods to 104%, Chinese President Xi Jinping has raised tariffs on American goods to 84%.

Asian Badminton Championship: P.V. Sindhu won her first-round match.

IPL 2025: Dhoni will captain Chennai Super Kings again.

இன்று 11-04-2025 பள்ளியில் எடுக்க வேண்டிய சமத்துவ நாள் உறுதிமொழி

திருக்குறள் 101 செய்யாமல்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்



 thirukural 101 seyyamal... Explanation tamil and english

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

Thursday, April 10, 2025

Today's punch Knowledge and character அறிவும் குணமும்


 

பத்தாம் வகுப்பு தமிழ் முழு வினா வங்கி 2025 - 2026 புதிய பாடத்திட்டம்


10th tamil new syllabus full question bank

பத்தாம் வகுப்பு தமிழ் முழு வினா வங்கி புதிய புத்தகம் 2025 - 2026 pdf

 Tenth Tamil Full Book Back Question Bank Pdf new syllabus 2025 - 26


பதிவிறக்கு/Download

sslc public exam valuation camp shedule April 2025


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம் அட்டவணை

lovable friends dog cat crow அன்பான நண்பர்கள் காகம் பூனை நாய் bird animal friend


 

Wednesday, April 09, 2025

9th English annual examination question paper virudhunagar district April 2025

ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் ஏப்ரல் 2025

8th English annual examination question paper virudhunagar district April 2025

எட்டாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் ஏப்ரல் 2025

7th English third term exam summative assessment question paper virudhunagar district April 2025

ஏழாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2025 விருதுநகர் மாவட்டம்

6th English third term exam summative assessment question paper virudhunagar district April 2025

ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2025 விருதுநகர் மாவட்டம்

திருக்குறள் 100 இனிய உளவாக... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 100 iniya ulavaka Explanation tamil and english

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.04.2025 புதன்

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.04.2025 புதன் 

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல் :குடியியல் 

குறள் எண்:1008

அதிகாரம்: நன்றிஇச் செல்வம்

நச்சுப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.

பொருள்:
எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.

பழமொழி :
எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to rome.

இரண்டொழுக்க பண்புகள் :

* தேர்வு எழுதுவதற்காக நான் அனைத்து பாடங்களையும் நன்கு படித்து தயாராவேன். 

* தேர்வு விடைத்தாளில் அழகாகவும், தெளிவாகவும், பிழை இல்லாமல் எழுதுவேன்.

பொன்மொழி :

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் ,நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.----ஹிட்லர்

பொது அறிவு : 

1. உலகில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?



ஜப்பான்
2. மின்னஞ்சலின் தந்தை என்று அழைக்கப் படுபவர் யார்?



ரேமண்ட் டாம்லின்சன்
English words & meanings :

 Car - சிற்றுந்து 
 
Passenger - பயணியர்
வேளாண்மையும் வாழ்வும் : 

 குழாயைத் திறந்து விட்டுவிட்டு துணிகளை அலசாமல் ஒரு பக்கெட்டில் நீரைப் பிடித்து வைத்து அலசுங்கள்.

நீதிக்கதை

 மனம் திருந்திய மணி



மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அவனுடைய தாத்தாவிடம் அழைத்து சென்று”இவன் ரொம்ப சோம்பேறியாக இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்” என்று சொன்னார். 

தாத்தா ஒரு நாள், அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான். அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான். 

இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதற்குள்அவன் ரொம்ப களைத்து போனான் . அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான். 

தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கணும். அது சுலபமா போய்டும். பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டுநடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார். 

பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.



நீதி: ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது.

இன்றைய செய்திகள்

09.04.2025

* கனிம வளங்கள் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்கும் புதிய சட்டம் கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என தமிழக அரசு தகவல்.

* காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

* குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு மேல் தவறு செய்வதாகவும், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் இறுதிவரை போராடுவோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

* ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போ நகரில் மார்ச் 8 முதல் 13-ந் தேதி வரை நடக்க உள்ளது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Today's Headlines

* Tamil Nadu Government Information: A new law imposing taxes on lands with mineral resources has come into effect from the 4th of this month.

 * Minister K. Ponmudy's Statement in the Legislative Assembly: To prevent the effects of climate change, 100 million saplings have been planted in Tamil Nadu over the past 3 years.

 * Supreme Court Verdict: The Supreme Court has ruled that the Tamil Nadu Governor withholding approval for 10 bills for the President's consideration is illegal.

 * US-China Trade Tension: US President Trump has warned that if China does not withdraw the 34% tariff imposed on the US, an additional 50% tariff will be imposed on China. In response, China stated that the US is making repeated mistakes, they will not yield to such threats, and they will fight to the end.

 * Asian Badminton Championship: The Asian Badminton Championship is scheduled from March 8th to 13th. in Ningbo, China, from March 8th to 13th.

 * ISL Football Match: Mohun Bagan team has qualified for the final of the ISL football competition.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விருதுநகர் வினா விடை 2025 ஏப்ரல்


9th tamil annual exam


எட்டாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத்தேர்வு 2025 வினாத்தாள் விடைக்குறிப்பு


8th tamil annual apr 2025 answer


ஒன்பதாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர் மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD


 9th tamil annual exam answer key pdf Virudhunagar district april 2025

எட்டாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


 8th tamil annual exam answer key pdf Virudhunagar district april 2025

ஏழாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடை


7th tamil annual exam 2025 term3


திருக்குறள் 99 இன்சொல்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 99 insol... Explanation tamil and english

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது

ஆறாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத்தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர் வினா விடைகள்


6th tamil annual exam


ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


 7th Tamil Third term exam answer key virudhunagar district april 2025

ஆறாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர்

 பதிவிறக்கு/DOWNLOAD


 6th Tamil Third term exam answer key virudhunagar district april 2025

Tuesday, April 08, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர் மாவட்டம்

 9th tamil annual exam answer key Virudhunagar district april 2025


ஒன்பதாம் வகுப்பு     தமிழ்

முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஆ. ஊரகத் திறனறித் தேர்வு                                            1

2. அ. பிப்ரவரி 21                                                               1

3. ஈ. 40                                                                          1

4. ஆ. மணிமேகலை                                                          1

5. ஈ. புறநானூறு                                                                1

6. ஆ. சுயமரியாதை                                                           1

7. இ. வளம்                                                                      1        தமிழ்த்துகள்

8. அ.மட்டும்                                                                     1

9. இ. மயில்சாமி அண்ணாதுரை                                          1

10. வினா அச்சாகவில்லை                                                  1

11. இ. திருக்குறள்                                                              1

12. இ) புறநானூறு                                                              1

13. அ) எண்ணும்மை                                                          1

14. ஈ) குடபுலவியனார்                                                        1

15. அ) உண்டி கொடுத்தோர் – உண்டி முதற்றே                      1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      .      குடும்ப விளக்கு என்னும் நூலை எழுதியவர் யார்?                             1

.     தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்குவது எது?                          1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      1.        பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு.

2.       ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

3.       பேச்சு வழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம்.

4.       ஆகவே, இரண்டும் ஒன்றாகக் கருதப்படுகிறது.                                           2

தமிழ்த்துகள்

18.   வீணையோடு வந்தாள்        - வேற்றுமைத் தொடர்.                 1

கிளியே பேசு                      – விளித்தொடர்.                                   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

19.      1.        அட்டை தேய்ப்பி இயந்திரம்

2.       திறனட்டைக் கருவி

3.       தானியங்கிப் பண இயந்திரம்

4.       ஆளறிசோதனைக் கருவி

5.       தொலைநகல் இயந்திரம்.                                                                       2

தமிழ்த்துகள்

20.     1.இந்திய தேசிய இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.

2.தெய்வத்திற்குச் செய்யும் தொண்டினைக் காட்டிலும் தேசத்தொண்டே மேலானதாகும்.

3.ஆதலால் இராணுவப் பணியில் சேர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.              2

தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. சுழன்றும்ஏர்ப் பின்னது  உலகம்  அதனால்

உழந்தும் உழவே தலை.                                                            2

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.                                                                        2

தமிழ்த்துகள்

23. இடிகுரல் -        உவமைத்தொகை.                                                   1

பெருங்கடல்  -        பண்புத்தொகை.                                                      1

தமிழ்த்துகள்

24. அ. நீர் மேலாண்மை                                                                         1

ஆ. பண்பாட்டுக் கழகம்                                                                          1

தமிழ்த்துகள்

25. அ. பரமபதம், ஒழுங்கு, அணை கயிறு , பூமாலை                                    1

ஆ. ஆசை,  அன்பு, ஒழுக்கம், குற்றம்,  ஈரம்                                       1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

26. அகல்                                                                                                      2

தமிழ்த்துகள்

27. அ. முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை            1

ஆ. பள்ளி முதல் நாளில் எங்களை ஆசிரியர்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.      1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

28. பழனிமலையை விட இமயமலை மிகப் பெரியது.                                  2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. 1.சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார்.

2.அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

3.அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார்.

4.டோக்கியோவுக்குப் பயிற்சிக்குச் சென்ற 45 இளைஞர்களே 'டோக்கியோ கேடட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.                                                               3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

30.     1.தேசியத் திறனறித் தேர்வு, கல்வி உதவித் தொகைத் தேர்வு, ஊரகத் திறனறித் தேர்வுக்கு மாணவர்கள் இணையத்தின்வழி விண்ணப்பிக்கலாம்.

2.பள்ளிக்கட்டணத்தை இணையம் வழியாக செலுத்த முடியும்.

3.மாணவர்கள் தொழிற்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்.                                                                                             3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

31. அ. கம்மாய்                                                                                               1

ஆ. ஊருணி                                                                                                  1

இ. மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு.                  1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

 

32. 1.யசோதர காவியம் சினத்தை நீக்கச் சொல்கிறது, திருக்குறளும் தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்கிறது.

2.யசோதர காவியம் மெய்யறிவு நூல்களை ஆராயச்சொல்கிறது, திருக்குறளும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறது.                                                    3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

33. 1.ஓரறிவு-தொடுதல் உணர்வு-புல், மரம்

2.ஈரறிவு-தொடுதல் சுவைத்தல்-சிப்பி, நத்தை

3.மூவறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல் - கரையான், எறும்பு

4.நாலறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல் - நண்டு , தும்பி

5.ஐந்தறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் - பறவை, விலங்கு

6.ஆறறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் -மனிதன்.3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

34. கட்டாய வினா.

அ. முத்தொள்ளாயிரம்

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.                                                            3

தமிழ்த்துகள்

அல்லது

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

ஆ. அக்கறை

சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை.                                                                                                     - கல்யாண்ஜி.                                                                      3

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. 3                                                                                                  1

தோன்றல், திரிதல், கெடுதல்                                                                    1

நுழைவுத்தேர்வு, கல்லூரிச்சாலை, பற்பசை                                                1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

36. அணி இலக்கணம்

புகழ்வது போலப் பழிப்பதும் பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி.

எ.கா  

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். -திருக்குறள்

விளக்கம்

இதில் நினைத்ததைச் செய்வதில் கயவர்களைத் தேவர்களுக்கு நிகராகக்கூறிப் புகழ்வது போலப் புகழ்ந்து, பின் கயவர்கள் மனம் போன போக்கில் சென்று அழிவர் எனப் பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சியணி.                                                                            3

தமிழ்த்துகள்

37. சீர் அசை வாய்பாடு

கா/ணா/தான்           நேர் நேர் நேர்           தேமாங்காய்

காட்/டுவான்            நேர் நிரை               கூவிளம்

தான்/கா/ணான்      நேர் நேர் நேர்           தேமாங்காய்

கா/ணா/தான்           நேர் நேர் நேர்           தேமாங்காய்

கண்/டா/னாம்         நேர் நேர் நேர்           தேமாங்காய்

தான்/கண்/ட           நேர் நேர் நேர்           தேமாங்காய்

வா/று                     நேர்பு                     காசு                                                    3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                                             5x5=25

தமிழ்த்துகள்

38.அ. இராவணகாவியம் காட்சிகள்

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                             5

அல்லது

ஆ. குடும்ப விளக்கு கருத்துகள் ஒப்பீடு.                                                     5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

39. அ.

பதிப்பகத்திற்குக் கடிதம்.                                                                        5

(அல்லது)

ஆ. நண்பனுக்குக் கடிதம்.                                                                    

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

41.      5 நயங்கள் இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                          5                

தமிழ்த்துகள்

42. அ. மொழிபெயர்ப்பு

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     சமூகத்திற்குப் பணிகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

 

43. அ. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்கள்.                                        8

அல்லது                           தமிழ்த்துகள்

. ஏறுதழுவுதல்                                                                                 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

44. அ. அண்ணாவின் வானொலி உரை                                                   8

அல்லது                           தமிழ்த்துகள்

. தாய்மைக்கு வறட்சி இல்லை           

 

(தலைப்பை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

 

45. அ. எனது பயணம்                                                                            8

அல்லது                           தமிழ்த்துகள்

. மதிப்புரை                                                         

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive