கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 31, 2025

happy new year wishes 2026 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்


 

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் தமிழ்க் கவிதை HAPPY NEW YEAR WISHES 2026 TAMIL KAVITHAI


 

new year wishes 2026 புத்தாண்டு வாழ்த்துகள்

 


ஒன்பதாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 4 கவிதை


unit 4 Tamil Kavithai 9th std 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 3 கவிதை unit 3 Tamil Kavithai 9th std


unit 3 Tamil Kavithai 9th std 

new year wishes புத்தாண்டு வாழ்த்துக் கவிதை Happy new year poem puthandu vaazhthu kavithai


Happy new year poem puthandu vaazhthu kavithai

ஒன்பதாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 2 கவிதை unit 2 Tamil Kavithai 9th std


unit 2 Tamil Kavithai 9th std 

Tuesday, December 30, 2025

ஒரே பக்கத்தில் 2026 நாள்காட்டி ஒரு பக்கக் காலண்டர்


2026 one page calendar 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 1 unit 1 Tamil Kavithai 9th std கவிதை


unit 1 Tamil Kavithai 9th std கவிதை

யசோதர காவியம் தமிழ் மனப்பாடப் பாடல் ஒன்பதாம் வகுப்பு YASOTHARA KAVIYAM 9th tamil seyyul memory poem


 YASOTHARA KAVIYAM 9th tamil seyyul memory poem

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 5 திருக்குறள் மனப்பாடப்பாடல் 9th standard tamil memory poem THIRUKKURAL unit 5 new book


9th standard tamil memory poem THIRUKKURAL unit 5 new book

THOLKAPPIYAM UYIR VAGAI 9th tamil memory poem ஒன்பதாம் வகுப்பு தமிழ் தொல்காப்பியம் உயிர்வகை பாடல்


THOLKAPPIYAM UYIR VAGAI 9th tamil memory poem

Monday, December 29, 2025

பத்தாம் வகுப்பு மூன்றாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை மார்ச் 2026


10th SSLC third revision exam date time table march 2026

Virudhunagar district 

பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை பிப்ரவரி 2026


10th SSLC second revision exam date time table February 2026

Virudhunagar district 

பத்தாம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை ஜனவரி 2026


10th SSLC first revision exam date time table January 2026
Virudhunagar district 

9th standard tamil memory poem THIRUKKURAL unit 3 new book ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 திருக்குறள்


9th standard tamil memory poem THIRUKKURAL unit 3 new book

Saturday, December 27, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழிப்பயிற்சி வினாத்தாள் 9th tamil moli payirchi work book unit 7


9th tamil moli payirchi work book unit 7

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 7 மொழிப்பயிற்சி தேர்வு வினாத்தாள் பயிற்சித்தாள் pdf 9th Tamil Molipayirchi work book

 பதிவிறக்கு/DOWNLOAD


9th Standard Tamil Unit 7 Language Practice Exam Question Paper Practice Paper

Molipayirchi work book pdf

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழிப்பயிற்சி வினாத்தாள் 9th tamil moli payirchi work book unit 6


 9th tamil moli payirchi work book unit 6

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 6 மொழிப்பயிற்சி தேர்வு வினாத்தாள் பயிற்சித்தாள் pdf 9th Tamil Molipayirchi work book

      பதிவிறக்கு/DOWNLOAD


9th Standard Tamil Unit 6 Language Practice Exam Question Paper Practice Paper

Molipayirchi work book pdf

குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு தமிழ்க் கட்டுரை பேச்சு Child marriage prevention awareness tamil essay


child marriage awareness tamil essay

குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு தமிழ்க் கட்டுரை பேச்சு Child marriage prevention awareness

  katturai pechu child marriage tamil essay speech  Child marriage prevention awareness


 

குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

முன்னுரை    தமிழ்த்துகள்

மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா

பங்கயர்க் கைந்நலம் பார்த்தல்லவோ- இப்          தமிழ்த்துகள்

பாரினில் மேன்மைகள் வளருதம்மா என்றார் கவிமணி. பெண்ணாகப் பிறந்துவிட்டால் பெரும் பாவம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது கணினிக் காலம் மட்டுமல்ல பெண்களின் காலம். தமிழ்த்துகள்

பெண் கல்வி, பெண் பாதுகாப்பு, பெண் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உலகில் அதிகம் உள்ளது. இந்தியாவில் பெண்களின் முன்னேற்றம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. குழந்தைத் திருமணம் பெண்களின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாகும். குழந்தைத் திருமணம் விழிப்புணர்வு பற்றி இக் கட்டுரையில் காண்போம்!. தமிழ்த்துகள்

பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?

நம்மைப் பெற்றவள் பெண்; நம்மை வளர்த்து ஆளாக்குபவள் பெண்; நமக்கு அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் முக்கிய இடம் பெறுபவள் பெண். நாட்டில் ஒவ்வொரு ஆறுகளுக்கும் பெண் பெயரை வைத்துள்ளோம். ஆனால், வீட்டிலும் வெளியிலும் பெண் என்பவள் காட்சிப் பொருளாக ஆக்கப்படுகிறாள். தமிழ்த்துகள்

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தோம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற பாரதியாரின் வரிகள் சில நேரம் கேள்விக்குறி ஆகிவிடுகின்றன. 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்குத் திருமண ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது பாவம் அன்றோ? தமிழ்த்துகள்

குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் இழப்புகள்

குழந்தைத் திருமணத்தால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவர்களின் கல்வி தடைப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. வீட்டின் முன்னேற்றமும் நாட்டின் முன்னேற்றமும் தடைப்படுகிறது. குடும்ப வன்முறைக்கு அது வித்திடுகிறது. தமிழ்த்துகள்

பாலியல் சுரண்டலாக சில நேரம் அமைந்து விடுகிறது. ஆரம்பகால கருவுறுதல் நடைபெறுகிறது. குழந்தை இறப்பு, எடை குறைவாகப் பிறத்தல், முன்கூட்டிய குழந்தைப் பிறப்பு போன்ற தவறுகள் நடக்கின்றன. சில நேரங்களில் கருக்கலைப்பு மூலம் பெண்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது. தற்கொலைக்குத் தூண்டுதல், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தமிழ்த்துகள்

      பாதகம் செய்பவரைக் கண்டால்

பயங்கொள்ள லாகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா- அவர்

      முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றான் மகாகவி பாரதி. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் போக்சோ போன்ற பாதுகாப்புச் சட்டங்கள் நடைமுறையில் இன்று இருக்கின்றன. குழந்தைத் திருமணத்தால் உடலும் மனமும் நலிவடையும் என்பதை உணர்வுள்ள ஒவ்வொரு மனிதரும் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்த்துகள்

சாரதா சட்டம்

             1929 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி சார்பில் ஹர்பிலாஸ் சாரதா அவர்கள் முன்மொழிந்த குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் சாரதா சட்டம் என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. 1891 ஜனவரி மாதம் சட்ட முன்வடிவு அமைக்கப்பட்டது, இருந்தாலும், 1929 செப்டம்பர் 28 ஆம் நாளில் தான் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்த்துகள்

             தொடக்கத்தில் பெண்ணுக்கு 14 ஆணுக்கு 18 என்ற வயது வரம்பு இருந்தது. 1949 ஆம் ஆண்டு பெண்ணுக்கு 15 ஆணுக்கு 21 என்று ஆனது. 1978 ஆம் ஆண்டு பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21 என்று மாற்றம் பெற்றது. 1955 இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தமிழ்த்துகள்

             2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் புது வடிவத்தில் செயல்படுத்தப்பட்டது. 2007 நவம்பர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் பிணையில் வெளிவர முடியாத அளவு குற்றவாளிகள் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கும் அளவு சட்டப் பாதுகாப்பு கொண்டுவரப்பட்டது. குழந்தைத் திருமண நிகழ்விற்கு உதவியோர் ஒரு லட்சம் ரூபாய் வரை தண்டத்தொகை கட்ட ஏதுவாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்

குழந்தைத் திருமணத்திற்கான காரணங்கள்

      அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்றார் மகாகவி பாரதி. அறியாமை, வறுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்ப வழக்கம், சாதிப்பற்று, மதக் கோட்பாடு என்ற பல்வேறு பெயர்களில் குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்த்துகள்

சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் உரிய பருவம் வரும் வரை பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாது என்பதற்காகவும் பெற்றோர்களே குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பதும் உண்டு. விருப்பமின்றி பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம் செய்யும் நிகழ்வும் சில நேரங்களில் ஏற்படுகிறது. தமிழ்த்துகள்

வரதட்சணைத் தடுப்பு மற்றும் ஒழுங்கு முறைச் சட்டம் 2014 இதனை வன்மையாக ஒடுக்குவதற்கு ஏற்படுத்தப்பட்டது. 30.12.2009 ஆம் ஆண்டு தமிழக அரசு மாநில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட நீதிமன்றம், உள்ளாட்சி நிர்வாகத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்

தடுப்பு நடவடிக்கைகளும் விழிப்புணர்வும்

2001 ஆம் ஆண்டு யுனிசெப் கணக்கின்படி இந்தியாவில் 15 லட்சம் பெண்கள் 18 வயதிற்குக் கீழ் திருமணம் செய்தவர்கள். தகவலின் அடிப்படையில் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்ட்ரேட், பெருநகர மாஜிஸ்ட்ரேட், மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோர் பிரிவு மூன்றின் கீழ் இடைக்கால இறுதி உத்தரவு பிறப்பிக்க உரிமையுள்ளவர்கள் ஆவர்.

தமிழ்த்துகள்

குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சங்கங்கள் / தனியார் என எவராயினும் பிணையில் வெளியே வர முடியாத அளவு சிறையில் அடைப்பதற்குச் சட்டம் வழிவகை செய்கிறது. குற்றத்தில் ஈடுபடுபவர் மீது காவல்துறை கண்டிப்பாக முதல் தகவல்அறிக்கை (எஃப் ஐ ஆர்) பதிவு செய்ய வேண்டும்.

பிரிவு 9, 10 & 11 இன் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தை 'குழந்தைகள் நல குழுமத்திடம்' ஒப்படைக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு 1098 என்ற உதவி எண்ணும் 14417 என்ற உதவி எண்ணும் பயன்படுகிறது. தமிழ்த்துகள்

இந்தியாவில் 602 மாவட்டங்களிலும் 1044 தொடர்வண்டி நிலையங்களிலும் இந்த எண் உதவிக்காக அழைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட பெண் குழந்தைகள், மருத்துவ உதவி, பாதுகாப்பு, படிப்பு உதவி, பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பித்தல், பெண் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுத்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்த்துகள்

உண்மையான விடுதலை

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் -இப் பாரினில்பெண்கள் நடத்த வந்தோம் -இனி

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்றார் பாரதி. ஒரு பெண் தன் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு இந்தியாவின் முக்கிய நகர வீதியில் நள்ளிரவில் எப்போது வலம் வருகிறாரோ அப்போதுதான் இந்த நாடு உண்மையான விடுதலை பெற்றது என்பதை நான் நம்புவேன் என்றார் தேசப்பிதா காந்தியடிகள். தமிழ்த்துகள்

திருமண நிதி உதவித் திட்டம், கல்வி உதவித் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருகைப் பதிவு கண்காணிப்பு, அரசு சாரா நிறுவனங்கள் மூலம் உதவி, யுனிசெப் நிதியுதவி மூலம் பெண்கள் பாதுகாப்பு இவை அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்த்துகள்

2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 2209 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிக்கப்பட்ட பிறகு 2020 இல் இது அதிகரித்து 3208 ஆக உள்ளது. 2021க்கு முன் உள்ள ஐந்து ஆண்டுகளில் குழந்தைத் திருமணத் தடுப்பு எண்ணிக்கை 11,553 என்று புள்ளி விவரங்கள் குறிக்கின்றன. இது, கவலைப்படத் தக்க ஒன்றாகும் தமிழ்த்துகள்

பெண்மை காப்போம் உரிமை மீட்போம்

போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் பாலியல் குற்றங்களுக்கு எதிராக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுமைப்பெண் திட்டம், சிறுமிகளுக்கான எச்பிவி தடுப்பூசித் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், விடியல் பயணம் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கும் திட்டம், பணி புரியும் மகளிர் விடுதிகள், சமூக நீதி விடுதிகள், வெல்லும் பெண்கள் திட்டம் ஆகியவற்றைத் தமிழக அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

பொம்மலாட்டம், வீதி நாடகம், பேரணிகள், கருத்தரங்குகள், குறும்படங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலத்துறை மூலமாக குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரே தாமாக முன்வந்து தகவல் அடிப்படையில் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்குத் திருமணம் நடக்கும் மிகை மாநிலங்களாக இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆண்களுக்குப் நிகராக பெண்கள் வெளியில் வந்து சாதிக்கத் துடிக்கும் இந்தக் காலகட்டத்தில் தான் அவர்களை ஆபத்துகளும் நெருங்குகின்றன. இரும்புக் கரம் கொண்டு அரசு அடக்கி வரும் இந்த வேளையில் பொதுமக்கள் குழந்தைத் திருமணம் பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகும். தமிழ்த்துகள்

முடிவுரை

ஒரு கை தட்டினால் ஓசை வராது தனி மரம் தோப்பாகாது

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி           தமிழ்த்துகள்

பேணி வளர்த்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல

மாதர் அறிவைக் கெடுத்தார் என்றான் மகாகவி பாரதி. தமிழ்த்துகள்

பெண் வெறும் காட்சிப் பொருள் அல்ல! பிள்ளை பெறும் எந்திரமல்ல! இரத்தமும் சதையும் அதில் கனவுகளும் கலந்து நடமாடும் மனித உயிர் என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த்துகள்

சரிநிகர் சமானமாக வாழ்வது சாதி சமய இன மொழி வேறுபாடு கடந்து மட்டுமல்ல! ஆண் பெண் என்ற வேறுபாடும் கருதாது மனிதர் என்ற உணர்வோடு அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வாழ்வதே மனித வாழ்வை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். தமிழ்த்துகள்

களப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம், வழக்குப் பணியாளர்கள், ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல் ஆய்வாளர்கள் என்று ஒரு பெரும்படையே குழந்தைத் திருமணத் தடுப்பில் ஈடுபட்டு வருகிறது. இருந்தாலும், மக்கள் மனதில் இது தவறு என்ற எண்ணம் ஆழமாக விதைக்கப்பட்டால் தான் குழந்தைத் திருமணம் என்ற சிந்தனை புதைக்கப்படும். தமிழ்த்துகள்

பெண்கள் நாட்டின் கண்கள் அதில் கண்ணீர் வழிவதற்கு நம்மில் எவரும் காரணமாக இருந்து விடக்கூடாது. பெண்மையைப் போற்றுவோம்! உலக அரங்கில் பெண்களை மதிக்கும் பெரிய மக்களாட்சி நாடு என்ற பெயரைப் பெறுவோம்!   தமிழ்த்துகள்

 

-     நல்லாசிரியர் கவிஞர் கல்லூரணி முத்து முருகன் – 9443323199 தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்


குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு தமிழ்க் கட்டுரை பேச்சு pdf Child marriage prevention awareness tamil essay speech

 katturai pechu child marriage tamil essay speech  Child marriage prevention awareness


பதிவிறக்கு/DOWNLOAD

Friday, December 26, 2025

முதல் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் வகுப்பு 11, 12 ஜனவரி 2026


11th 12th First revision exam syllabus for all subjects January 2026

12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை ஜனவரி 2026

12th First revision exam date time table 2026 January +2

8th Tamil new book unit 3 full questions answers 2026 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 முழு வினா விடை


8th Tamil new book unit 3 full questions answers 2026

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 முழு வினாவிடை 2026 pdf 8th Tamil unit 3 new book full questions with answers

 8th Tamil unit 3 new book full questions with answers


பதிவிறக்கு/DOWNLOAD

8th Tamil new book unit 2 full questions answers 2026 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 முழு வினா விடை


8th Tamil new book unit 2 full questions answers 2026

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 முழு வினாவிடை 2026 pdf 8th Tamil unit 2 new book full questions with answers

 8th Tamil unit 2 new book full questions with answers


பதிவிறக்கு/DOWNLOAD

8th Tamil new book unit 1 full questions answers 2026 எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 முழு வினா விடை


8th Tamil new book unit 1 full questions answers 2026

எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 1 முழு வினாவிடை 2026 pdf 8th Tamil unit 1 new book full questions with answers

 8th Tamil unit 1 new book full questions with answers


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 முழு வினாவிடை 7th Tamil term 3 unit 1 new book full answers 2026


7th Tamil term 3 unit 1 new book full answers 2026

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 முழு வினாவிடை 2026 pdf 7th Tamil term 3 unit 1 new book full questions with answers

7th Tamil term 3 unit 1 new book full questions with answers  pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 முழு வினாவிடை 6th Tamil term 3 unit 1 new book full answers 2026


6th Tamil term 3 unit 1 new book full answers 2026

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 3 இயல் 1 முழு வினாவிடை 2026 pdf 6th Tamil term 3 unit 1 new book full questions with answers

 6th Tamil term 3 unit 1 new book full questions with answers  pdf 


பதிவிறக்கு/DOWNLOAD

Thursday, December 25, 2025

2026 பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக 5 மதிப்பெண்கள் கவிதை


10th tamil kavithai 5 marks katchiyai kandu kavinura eluthuka

வகுப்பு 9, 10 தமிழ் மிகவும் மெல்லக்கற்போர் ஒரே கவிதை 9th 10th TAMIL ONE KAVITHAI FOR VERY SLOW LEARNERS


9th 10th TAMIL ONE KAVITHAI FOR VERY SLOW LEARNERS

வகுப்பு 9, 10 மெல்லக்கற்போர் கவிதை காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல் TAMIL KAVITHAI FOR SLOW LEARNERS


TAMIL KAVITHAI FOR SLOW LEARNERS 10th tamil 9th tamil

HAPPY CHRISTMAS MERRY XMAS கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்


 

Wednesday, December 24, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 7 கவிதை


unit 7 Tamil Kavithai 10th std

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 6 கவிதை


 unit 6 Tamil Kavithai 10th std

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 5 unit 5 Tamil Kavithai 10th std கவிதை


unit 5 Tamil Kavithai 10th std

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 4 கவிதை unit 4 Tamil picture Kavithai 10th


unit 4 Tamil picture Kavithai 10th

Tuesday, December 23, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 3 கவிதை


unit 3 Tamil Kavithai 10th

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 2 கவிதை unit 2 Tamil Kavithai 10th


unit 2 Tamil Kavithai 10th Toppers

பத்தாம் வகுப்பு தமிழ் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக இயல் 1 கவிதை unit 1 Tamil Kavithai 10th std


unit 1 Tamil Kavithai 10th std கவிதை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2025. செவ்வாய்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

23-12-2025. செவ்வாய்.

திருக்குறள் :

பால் : அறத்துப் பால்

; இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : ஒப்புரவறிதல் ;

குறள் எண்:213.

குறள் :

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற.

உரை :

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பழமொழி :

> தன்னம்பிக்கையில் தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது.

Life begins with self - belief.

இரண்டொழுக்க பண்புகள்:

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி :

+ முதலில் மனிதன் குடிக்க ஆரம்பிக்கிறான் பின்னர் அது அவனை குடிக்க ஆரம்பிக்கிறது .-சிங்லெயிர் லூயிஸ்.

பொது அறிவு :

01.உலகின் மிகப்பெரிய செயலில் உள்ள எரிமலை எது?

அமெரிக்கா-மௌனா லோவா

America Mauna Loa

02.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் யார்?

இரண்டாம் இராசராசன் 

Rajaraja Chola II

English words:

Jammed - stuck,

Creased - having unwanted lines or folds

தமிழ் இலக்கணம் : நிறுத்தக்குறிகள் பயன்கள்:

1. பேச்சு நடையை எழுத்தில் கொண்டுவர உதவுகிறது.

2. கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

3. எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், ஏற்ற இறக்கத்துடன் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அறிவியல் களஞ்சியம் :

அமெரிக்காவின் 'நாசா', ஐரோப்பிய விண்வெளி மையம் இணைந்து சமீபத்தில் 'சென்டினல் -6பி' செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இது கடல்நீர்மட்ட உயர்வை கண்காணித்தல், கடல் வெப்பநிலை, புயல் கண்காணிப்பு, கட்டமைப்புகளை பாதுகாத்தல், கடலோர சமூக திட்டமிடலுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் வழங்கும் தகவலால் இந்திய கடலோர மக்களும் பயனடைவர் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக சாரசரி கடல்நீர்மட்ட உயர்வு என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும்.

நீதிக்கதை - துணிவு மிக்க சிறுவன்

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடக மேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடக மேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடக மேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது.

விஷயம் இதுதான் நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடக மேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.

அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது. மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! என்று அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீசாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீசாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூறினார்கள்.

பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்து கொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

இன்றைய செய்திகள் -23.12.2025

* கிறிஸ்துமஸ் பண்டிகை -அரையாண்டு விடுமுறை : வெளியூர்களுக்கு 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

* குடிசையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் அடுத்த 2 மாதங்களில் 74 ஆயிரம் புதிய வீடுகள் பயனாளிகளிடம் தமிழக அரசு ஒப்படைக்கவுள்ளது.

*இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.

நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்.

விளையாட்டுச் செய்திகள்

ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள்- 48 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீர்ர் ஜேக்கப் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தமாக 81 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகளை ஜேக்கப் கைப்பற்றி உள்ளார்.

Today's Headlines - 23.12.2025

* Christmas Festival Half-year vacation: 800 special buses to operate for outlying areas

* With the aim of creating a slum-free Tamil Nadu, the Tamil Nadu government will hand over 74,000 new houses to beneficiaries in the next 2 months through the Kalaignin Kanavu Illam project.

* 100% duty exemption on goods exported from India. Taxes on goods exported from New Zealand to India will be reduced by up to 95%.

SPORTS NEWS

Most wickets in a year - New Zealand batsman Jacob has broken a 48-year-old record, taking a total of 81 wickets across all three formats of cricket.

Jacob has taken 23 wickets in the Test series against the West Indies.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Monday, December 22, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.12.2025 திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.12.2025 திங்கள் 

திருக்குறள்: 

குறள் 196: 
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் 
மக்கட் பதடி யெனல்.   

                
 விளக்க உரை: 

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

பழமொழி :
Affection grows where kindness lives.  

கருணை இருக்கும் இடத்தில் அன்பு வளரும்.

இரண்டொழுக்க பண்புகள் :


1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி :

மது உள்ளே சென்றதும் அறிவு வெளியேறி விடுகிறது மது அருந்தக்கூடாது .- தாமஸ் பேகன்

பொது அறிவு : 

1.இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வென்றவர் யார்?

ஜான் பார்டீன் -John Bardeen

2.செயற்கை முறையில் இதயத் துடிப்பை உருவாக்க உதவும் சாதனம் எது?

இதயமுடுக்கி -Pacemaker

English words :

Clampdown -crackdown

Stalemate-deadlock

தமிழ் இலக்கணம்: 

 முக்கால் புள்ளி பயன்படுத்தப்படும் இடங்கள் 3:
ஒரு கூற்றின் தொடர்ச்சியாக:
"நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை."

அறிவியல் களஞ்சியம் :

 உலக வெப்பநிலை 1850ல் இருந்து கணக்கிடப்படுகிறது. ஆண்டு சராசரி வெப்பநிலையில் உலகின் வெப்பமான ஆண்டாக 2024 உள்ளது. இது தொழிற்புரட்சிக்கு (1850 - 1900) முந்தைய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.55 டிகிரி செல்சியஸ் அதிகம். 2ம் இடத்தில் 2023 (1.48 டிகிரி செல்சியஸ்) இருந்தது. தற்போது 2025 (ஜன., - நவ.,) சராசரி வெப்பநிலை 1.48 டிகிரி செல்சியஸ். இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இது 2ம் இடம் பெறுவது உறுதி. உலக சராசரி வெப்பநிலை உயர்வை, 1.5 செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என 'பாரிஸ் ஒப்பந்தம் - 2015' குறிப்பிடுகிறது.

டிசம்பர் 22

தேசிய கணித தினம் 

தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.[1]

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்

சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 சுயமரியாதை வேண்டும்



ஒரு நாள் புவனேஸ்வரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாகவும், சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு. ஆனால் தேவைபடும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். 



தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். 



ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். 



மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணிபுரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்சனையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.



வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? 



விவேகானந்தர்: முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.



வெள்ளைக்காரர்: தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man). 



விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். 



பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார். வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.12.2025

⭐டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.  

⭐நெல்லையில் ரூ.98 கோடியில் காயிதே மில்லத் நூலகம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

⭐காற்றுமாசு- பனிமூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு.
டெல்லியில் நேற்று காற்றின் தரம் 386 என்ற அளவில் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

Today's Headlines

⭐The Railway Ministry has announced that train fares will be increased from December 26. * This is the second increase in train fares in a year, after the first increase on July 1.

⭐Chief Minister M.K. Stalin laid the foundation stone of the Rs. 98 crore Qaide Millat Library in Nellai.

⭐Air pollution-Smog: Flight services affected in Delhi. Delhi's air quality was in the 'very poor' category at 386 yesterday. 

 *SPORTS NEWS*

🏀 Australia won the third Ashes Test against England by 82 runs

Covai women ICT_போதிமரம்

Saturday, December 20, 2025

வகுப்பு 10 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தேனி 10th tamil half yearly exam question theni 2025


10th tamil half yearly exam question theni 2025

வகுப்பு 10 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தூத்துக்குடி 10th tamil half yearly exam thoothukudi 2025


10th tamil half yearly exam tut 2025

வகுப்பு 10 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் திருச்சி 10th tamil half yearly exam question 2025


10th tamil half yearly exam question 2025

வகுப்பு 10 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தஞ்சாவூர் 10th tamil half yearly exam question 2025


10th tamil half yearly exam question 2025

வகுப்பு 10 தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் கள்ளக்குறிச்சி 10th tamil half yearly exam 2025


10th tamil half yearly exam 2025

Friday, December 19, 2025

TRUST EXAM KEY ANSWER DECEMBER 2025


Trust விடைகள் 2025

10th Science question tamil english medium 10 அறிவியல் வினாத்தாள் அரையாண்டுத் தேர்வு 2025 விருதுநகர்


10th Science question tamil english medium

தேன்சிட்டு 2025 டிசம்பர் 2 மாத இதழ் வினாடி வினா வினாவிடை then chittu December paper quiz question


quiz club வினாடிவினா மன்றம் குவிஸ் கிளப்

then chittu December paper quiz question👇

தேன்சிட்டு 2025 டிசம்பர் இதழ் 2 வினாடி வினா வினா விடை pdf then chittu December paper 2 quiz questions and answers

 then chittu December paper 2 quiz questions and answers


quiz club வினாடிவினா மன்றம் குவிஸ் கிளப்

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf தேனி மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Sslc 10th tamil half yearly exam question paper pdf theni district December 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf திருச்சி மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Sslc 10th tamil half yearly exam question paper pdf Trichy district December 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf தூத்துக்குடி மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Sslc 10th tamil half yearly exam question paper Thoothukudi district December 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf கள்ளக்குறிச்சி மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Sslc 10th tamil half yearly exam question paper pdf kallakurichi district December 2025

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf தஞ்சாவூர் மாவட்டம் 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

Sslc 10th tamil half yearly exam question paper pdf Tanjore district December 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-12-2025. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

19-12-2025. வெள்ளி 

திருக்குறள் :

பால் : அறத்துப் பால்

; இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : நடுவு நிலைமை ;

குறள் எண் : 115.

குறள் :

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.

உரை :

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி :

கடின உழைப்புக்கு வெற்றி தலைவணங்கும்.

Success bows to the hard work.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

+ நீ மதிக்கும் மனிதனை காண்பி. நீ எப்படிப்பட்டவன் என்பதை நான் தெரிந்து கொள்வேன். - தாமஸ் கார்லைல்.

பொது அறிவு :

01. "குழந்தை கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

அழ. வள்ளியப்பா

02.பாலை பதப்படுத்தும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் யார்?

லூயிஸ் பாஸ்டர் 

Louis Pasteur

English words:

+ torched - burned

+breach - breaking a rule

தமிழ் இலக்கணம்:

முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் 2:

விளக்கங்களைத் தொடங்குதல்: ஒரு தலைப்பு அல்லது பொதுவான கூற்றுக்குப் பிறகு விளக்கம் வரும்போது.

எ.கா: நல்ல தமிழில் எழுத வேண்டுமென்றால் நாம் அறிய வேண்டியவை: இலக்கணம், இலக்கியம், மொழி நடை.

அறிவியல் களஞ்சியம் :

வால் நட்சத்திரத்துக்கு வால் உள்ளது. சூரியனுக்கு அருகிலுள்ள புதன் கோளுக்கு வால் உள்ளது. 'கதிர்வீச்சு அழுத்தம்' காரணமாக சோடியம் அணுக்கள் வெளியே தள்ளப்பட்டு அதன் வளிமண்டலத்தை அகற்றி, அதற்கு நீண்ட ஒளிரும் வால் கிடைக்கிறது. அதுபோல பூமிக்கு வால் இருக்கிறதா என்றால் ஆம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால், விண்வெளியில் 20 லட்சம் கி.மீ., துாரத்துக்கு நீண்டுள்ளது. இது பூமியின் இருண்ட பக்கத்தில் இருப்பதால் இது தெரிவதில்லை. பூமியின் காந்தப்புலத்தை சூரிய காற்று சிதைப்பதால் இந்த வால் உருவாகிறது.

டிசம்பர் 19 -

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நினைவுநாள்


K.A.P. VISWANATHAM

கி. ஆ. பெ. விசுவநாதம் பிறப்பு 10 நவம்பர் 1899 - இறப்பு 19 திசம்பர் 1994. பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. என அழைக்கப்படுபவர், தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர். இவர் எழுதியுள்ள நூல்கள் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருது அவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.


இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. 1997ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவக் கல்லூரிக்கு கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது

நீதிக்கதை

மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.

ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.

அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன்.

ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

இன்றைய செய்திகள் 19.12.2025

* தமிழகத்தில் 1,439 பகுதிகளில் சட்டவிரோதக் கனிமத் திருட்டு கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனிமவளக் கொள்ளை கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

* இந்திய அணுசக்தித் துறையில் 100% தனியார் முதலீட்டை அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 'ஷாந்தி மசோதா' மக்களவையில் நிறைவேறியுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி: அரியானாவுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜார்க்கண்ட் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Today's Headlines - 19.12.2025

* Illegal mineral theft has been detected, and cases have been registered in 1,439 areas in Tamil Nadu. The Madras High Court has ordered strict action against the mineral theft.

* India is now the 4th largest economy, surpassing Japan.

* The Shanthi Bill, which allows 100% private investment in India's nuclear energy sector, has been passed in the Lok Sabha

SPORTS NEWS

Syed Mushtaq Ali Trophy Final: Jharkhand set a target of 263 runs for Haryana. The final of the Syed Mushtaq Ali Trophy is being held in Pune.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive