katturai pechu child marriage tamil essay speech Child marriage prevention awareness
குழந்தைத் திருமணத் தடுப்பு விழிப்புணர்வு
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
முன்னுரை தமிழ்த்துகள்
மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
பங்கயர்க் கைந்நலம் பார்த்தல்லவோ- இப் தமிழ்த்துகள்
பாரினில் மேன்மைகள் வளருதம்மா என்றார் கவிமணி. பெண்ணாகப் பிறந்துவிட்டால்
பெரும் பாவம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது கணினிக் காலம் மட்டுமல்ல பெண்களின் காலம். தமிழ்த்துகள்
பெண் கல்வி, பெண்
பாதுகாப்பு, பெண்
உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உலகில் அதிகம் உள்ளது. இந்தியாவில் பெண்களின்
முன்னேற்றம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. குழந்தைத் திருமணம்
பெண்களின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாகும். குழந்தைத் திருமணம் விழிப்புணர்வு
பற்றி இக் கட்டுரையில் காண்போம்!. தமிழ்த்துகள்
பிஞ்சு மனதில்
நஞ்சை விதைக்கலாமா?
நம்மைப் பெற்றவள் பெண்;
நம்மை வளர்த்து ஆளாக்குபவள் பெண்; நமக்கு அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் முக்கிய இடம்
பெறுபவள் பெண். நாட்டில் ஒவ்வொரு ஆறுகளுக்கும் பெண் பெயரை வைத்துள்ளோம். ஆனால், வீட்டிலும்
வெளியிலும் பெண் என்பவள் காட்சிப் பொருளாக ஆக்கப்படுகிறாள். தமிழ்த்துகள்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தோம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்ற
பாரதியாரின் வரிகள் சில நேரம் கேள்விக்குறி ஆகிவிடுகின்றன. 18 வயதுக்குக் கீழ்
உள்ள பெண்களுக்குத் திருமண ஏற்பாடு செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். பிஞ்சு
மனதில் நஞ்சை விதைப்பது பாவம் அன்றோ? தமிழ்த்துகள்
குழந்தைத்
திருமணத்தால் ஏற்படும் இழப்புகள்
குழந்தைத் திருமணத்தால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. அவர்களின் கல்வி
தடைப்படுகிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. வீட்டின்
முன்னேற்றமும் நாட்டின் முன்னேற்றமும் தடைப்படுகிறது. குடும்ப வன்முறைக்கு அது
வித்திடுகிறது. தமிழ்த்துகள்
பாலியல் சுரண்டலாக சில நேரம் அமைந்து விடுகிறது. ஆரம்பகால கருவுறுதல்
நடைபெறுகிறது. குழந்தை இறப்பு, எடை குறைவாகப் பிறத்தல், முன்கூட்டிய குழந்தைப் பிறப்பு போன்ற தவறுகள்
நடக்கின்றன. சில நேரங்களில் கருக்கலைப்பு மூலம் பெண்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
தற்கொலைக்குத் தூண்டுதல்,
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தமிழ்த்துகள்
பாதகம் செய்பவரைக் கண்டால்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றான் மகாகவி
பாரதி. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் போக்சோ போன்ற பாதுகாப்புச் சட்டங்கள்
நடைமுறையில் இன்று இருக்கின்றன. குழந்தைத் திருமணத்தால் உடலும் மனமும் நலிவடையும்
என்பதை உணர்வுள்ள ஒவ்வொரு மனிதரும் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்த்துகள்
சாரதா சட்டம்
1929 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி
சார்பில் ஹர்பிலாஸ் சாரதா அவர்கள் முன்மொழிந்த குழந்தைத் திருமணத் தடுப்புச்
சட்டம் சாரதா சட்டம் என்ற பெயரில் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. 1891 ஜனவரி
மாதம் சட்ட முன்வடிவு அமைக்கப்பட்டது, இருந்தாலும், 1929 செப்டம்பர் 28 ஆம் நாளில் தான்
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்த்துகள்
தொடக்கத்தில் பெண்ணுக்கு 14 ஆணுக்கு
18 என்ற வயது வரம்பு இருந்தது. 1949 ஆம் ஆண்டு பெண்ணுக்கு 15 ஆணுக்கு 21 என்று
ஆனது. 1978 ஆம் ஆண்டு பெண்ணுக்கு 18 ஆணுக்கு 21 என்று மாற்றம் பெற்றது. 1955 இந்து
திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தமிழ்த்துகள்
2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத்
தடுப்புச் சட்டம் புது வடிவத்தில் செயல்படுத்தப்பட்டது. 2007 நவம்பர் 1 அன்று
நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் பிணையில் வெளிவர முடியாத அளவு குற்றவாளிகள் 2
ஆண்டுகள் சிறையில் அடைக்கும் அளவு சட்டப் பாதுகாப்பு கொண்டுவரப்பட்டது. குழந்தைத்
திருமண நிகழ்விற்கு உதவியோர் ஒரு லட்சம் ரூபாய் வரை தண்டத்தொகை கட்ட ஏதுவாக சட்டம்
இயற்றப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்
குழந்தைத்
திருமணத்திற்கான காரணங்கள்
அஞ்சி அஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே என்றார் மகாகவி பாரதி. அறியாமை, வறுமை, வரதட்சணைக்
கொடுமை, குடும்ப
வழக்கம், சாதிப்பற்று, மதக் கோட்பாடு
என்ற பல்வேறு பெயர்களில் குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்த்துகள்
சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் உரிய பருவம் வரும் வரை பெண் குழந்தைகளைக்
காப்பாற்ற முடியாது என்பதற்காகவும் பெற்றோர்களே குழந்தைத் திருமணத்தை நடத்தி
வைப்பதும் உண்டு. விருப்பமின்றி பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம்
செய்யும் நிகழ்வும் சில நேரங்களில் ஏற்படுகிறது. தமிழ்த்துகள்
வரதட்சணைத் தடுப்பு மற்றும் ஒழுங்கு முறைச் சட்டம் 2014 இதனை வன்மையாக
ஒடுக்குவதற்கு ஏற்படுத்தப்பட்டது. 30.12.2009 ஆம் ஆண்டு தமிழக அரசு மாநில விதிகளை
வகுத்துள்ளது. அதன்படி மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட நீதிமன்றம், உள்ளாட்சி
நிர்வாகத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக
நடவடிக்கை எடுக்கலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்
தடுப்பு
நடவடிக்கைகளும் விழிப்புணர்வும்
2001 ஆம் ஆண்டு யுனிசெப் கணக்கின்படி இந்தியாவில் 15 லட்சம் பெண்கள் 18
வயதிற்குக் கீழ் திருமணம் செய்தவர்கள். தகவலின் அடிப்படையில் முதல் வகுப்பு
நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்,
பெருநகர மாஜிஸ்ட்ரேட்,
மாவட்ட மாஜிஸ்திரேட் ஆகியோர் பிரிவு மூன்றின் கீழ் இடைக்கால இறுதி உத்தரவு
பிறப்பிக்க உரிமையுள்ளவர்கள் ஆவர்.
குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள், பாதுகாவலர்கள், சங்கங்கள் / தனியார் என எவராயினும் பிணையில்
வெளியே வர முடியாத அளவு சிறையில் அடைப்பதற்குச் சட்டம் வழிவகை செய்கிறது.
குற்றத்தில் ஈடுபடுபவர் மீது காவல்துறை கண்டிப்பாக முதல் தகவல்அறிக்கை (எஃப் ஐ
ஆர்) பதிவு செய்ய வேண்டும்.
பிரிவு 9, 10 & 11
இன் அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தை 'குழந்தைகள் நல
குழுமத்திடம்' ஒப்படைக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு 1098 என்ற உதவி எண்ணும்
14417 என்ற உதவி எண்ணும் பயன்படுகிறது. தமிழ்த்துகள்
இந்தியாவில் 602 மாவட்டங்களிலும் 1044 தொடர்வண்டி நிலையங்களிலும் இந்த எண்
உதவிக்காக அழைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடத்தப்பட்ட பெண்
குழந்தைகள், மருத்துவ
உதவி, பாதுகாப்பு, படிப்பு உதவி, பாலியல்
துன்புறுத்தலில் இருந்து தப்பித்தல், பெண் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதைத் தடுத்தல் போன்ற
பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம்
செயல்பட்டு வருகிறது. தமிழ்த்துகள்
உண்மையான
விடுதலை
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் -இப் பாரினில்பெண்கள் நடத்த வந்தோம்
-இனி
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்றார்
பாரதி. ஒரு பெண் தன் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு இந்தியாவின் முக்கிய
நகர வீதியில் நள்ளிரவில் எப்போது வலம் வருகிறாரோ அப்போதுதான் இந்த நாடு உண்மையான
விடுதலை பெற்றது என்பதை நான் நம்புவேன் என்றார் தேசப்பிதா காந்தியடிகள். தமிழ்த்துகள்
திருமண நிதி உதவித் திட்டம், கல்வி உதவித் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருகைப் பதிவு கண்காணிப்பு, அரசு சாரா
நிறுவனங்கள் மூலம் உதவி,
யுனிசெப் நிதியுதவி மூலம் பெண்கள் பாதுகாப்பு இவை அனைத்தும் செய்யப்பட்டு
வருகின்றன. தமிழ்த்துகள்
2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 2209 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 பாதிக்கப்பட்ட பிறகு 2020 இல் இது அதிகரித்து 3208 ஆக உள்ளது. 2021க்கு
முன் உள்ள ஐந்து ஆண்டுகளில் குழந்தைத் திருமணத் தடுப்பு எண்ணிக்கை 11,553 என்று
புள்ளி விவரங்கள் குறிக்கின்றன. இது, கவலைப்படத் தக்க ஒன்றாகும் தமிழ்த்துகள்
பெண்மை காப்போம்
உரிமை மீட்போம்
போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் பாலியல் குற்றங்களுக்கு எதிராக
செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுமைப்பெண் திட்டம், சிறுமிகளுக்கான
எச்பிவி தடுப்பூசித் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், விடியல் பயணம்
திட்டம், சுய
உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கும் திட்டம், பணி புரியும் மகளிர் விடுதிகள், சமூக நீதி
விடுதிகள், வெல்லும்
பெண்கள் திட்டம் ஆகியவற்றைத் தமிழக அரசு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
பொம்மலாட்டம், வீதி
நாடகம், பேரணிகள், கருத்தரங்குகள், குறும்படங்கள்
மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நலத்துறை
மூலமாக குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரே தாமாக
முன்வந்து தகவல் அடிப்படையில் குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி
வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்குத் திருமணம் நடக்கும் மிகை மாநிலங்களாக
இராஜஸ்தான், உத்திரப்
பிரதேசம், மத்தியப்
பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார், ஆந்திரப்
பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆண்களுக்குப் நிகராக பெண்கள் வெளியில் வந்து சாதிக்கத் துடிக்கும் இந்தக்
காலகட்டத்தில் தான் அவர்களை ஆபத்துகளும் நெருங்குகின்றன. இரும்புக் கரம் கொண்டு
அரசு அடக்கி வரும் இந்த வேளையில் பொதுமக்கள் குழந்தைத் திருமணம் பற்றிய
விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகும். தமிழ்த்துகள்
முடிவுரை
ஒரு கை தட்டினால் ஓசை வராது தனி மரம் தோப்பாகாது
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி தமிழ்த்துகள்
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார் என்றான் மகாகவி பாரதி. தமிழ்த்துகள்
பெண் வெறும் காட்சிப் பொருள் அல்ல! பிள்ளை பெறும் எந்திரமல்ல! இரத்தமும்
சதையும் அதில் கனவுகளும் கலந்து நடமாடும் மனித உயிர் என்பதை ஒவ்வொரு ஆணும்
புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த்துகள்
சரிநிகர் சமானமாக வாழ்வது சாதி சமய இன மொழி வேறுபாடு கடந்து மட்டுமல்ல! ஆண்
பெண் என்ற வேறுபாடும் கருதாது மனிதர் என்ற உணர்வோடு அனைவரது உணர்வுகளுக்கும்
மதிப்பளித்து வாழ்வதே மனித வாழ்வை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். தமிழ்த்துகள்
களப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த
சேவை மையம், வழக்குப்
பணியாளர்கள், ஆள்கடத்தல்
தடுப்புப் பிரிவு, காவல்
ஆய்வாளர்கள் என்று ஒரு பெரும்படையே குழந்தைத் திருமணத் தடுப்பில் ஈடுபட்டு
வருகிறது. இருந்தாலும்,
மக்கள் மனதில் இது தவறு என்ற எண்ணம் ஆழமாக விதைக்கப்பட்டால் தான் குழந்தைத்
திருமணம் என்ற சிந்தனை புதைக்கப்படும். தமிழ்த்துகள்
பெண்கள் நாட்டின் கண்கள் அதில் கண்ணீர் வழிவதற்கு நம்மில் எவரும் காரணமாக
இருந்து விடக்கூடாது. பெண்மையைப் போற்றுவோம்! உலக அரங்கில் பெண்களை மதிக்கும்
பெரிய மக்களாட்சி நாடு என்ற பெயரைப் பெறுவோம்! தமிழ்த்துகள்
-
நல்லாசிரியர்
கவிஞர் கல்லூரணி முத்து முருகன் – 9443323199 தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள்,
மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
