கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 18, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-12-2025. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18-12-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : அறத்துப் பால்

; இயல்: இல்லறவியல் ;

அதிகாரம் : நடுவு நிலைமை ;

குறள் எண்: 112.

குறள்:

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப் புடைத்து.

உரை :

நடுவுநிலைமை உடையவனின் செல்வ வளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

பழமொழி :

அதிகம் உழைத்தால், அதிகமாக ஒளிர்வீர்கள்.

The harder you work, the brighter you shine.

இரண்டொழுக்க பண்புகள்:

1. கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி :

குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.-விவேகானந்தர்.

பொது அறிவு :

01.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி Constantine Joseph Beschi

02.முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் யார்?

கர்னல் ஜான் பென்னிகுவிக்

Colonel John Pennycuick

English words:

skipper - captain of a ship

disbarred - removed

தமிழ் இலக்கணம்:

முக்காற்புள்ளி (:):அடுத்து வரும் சொற்கள் அல்லது வாக்கியத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

முக்காற்புள்ளி (:) பயன்படுத்தப்படும் இடங்கள் :

தலைப்பை விரித்து கூறல் : ஒரு தொகைச் சொல்லை (bundle word) அதன் பாகங்களாகப் பிரித்துச் சொல்லும்போது

எ.கா: முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

அறிவியல் களஞ்சியம் :

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் பிரதிபலிப்பு கண்ணாடிகளை நிறுவி, இரவு பகுதிகளில் சூரிய ஒளியை திருப்பும் திட்டத்தை அடுத்தாண்டு செயல்படுத்த உள்ளதாக கலிபோர்னியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரதிபலிப்பு கண்ணாடியுடன் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. சூரிய ஒளி குறைந்த பகுதிகளுக்கு இத்திட்டம் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. ஆனால் இது இயற்கைக்கு எதிரானது என வானியல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 18

ஜெ.ஜெ. தாம்சன் அவர்களின் பிறந்தநாள்

ஜெ.ஜெ. தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன்( பிறப்பு டிசம்பர் 18, 1856 - இறப்பு ஆகஸ்ட் 30, 1940) அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன அணு இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர். இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்.

டிசம்பர் 18

நா.பார்த்தசாரதி அவர்களின் பிறந்தநாள்

நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, பிறப்பு டிசம்பர் 18, 1932 - இறப்பு டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.

நீதிக்கதை கவலை பறந்தது

குட்டி யானைக்குத் தாகம் எடுத்தது. குளத்தைத் தேடிச் சென்றது. கரையில் பசுமையான மரங்கள் பூத்துக்குலுங்கின. ஒரு மரத்தில் கிளி ஒன்று வந்து அமர்ந்தது. அதன் பச்சை நிறமும் சிவந்த வாயும் யானைக் குட்டியை மிகவும் கவர்ந்தது. என்னை மட்டும் கடவுள் இப்படி கருப்பாக படைத்துவிட்டாரே இந்த கிளி இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று ஏங்கியது. அப்போது குக்கூ என்ற குரல் கேட்டது. குரல் வந்த திக்கில் குயில் ஒன்று பாடியது. கருப்பாக இருந்தாலும் குயில் இனிமையாக பாடுகிறதே என் குரலும் இருக்கிறதே என ஒரு தடவை பிளிறியது. சில வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் தேன் குடிப்பதைக் கண்டதும் ஐயோ என் தும்பிக்கை இந்த பூவின் மீது பட்டாலே அது உதிருமே பின் எப்படி தேன் குடிப்பது? என வருந்தியது.

தன்னைத் தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதை எண்ணி கண்ணீர் விட்டது. குட்டியைக் காணாத தாய் யானை குளத்திற்கு வந்தது. குட்டியின் நிலை கண்ட தாய் யானை கண்ணே உன் குறையை மட்டும் பார்க்கும் நீ நிறைகளைப் பார்க்கத் தவறிவிட்டாய். கடவுள் நமக்கு பலமான தும்பிக்கை வெண்ணிற தந்தம் எல்லாம் தந்திருக்கிறார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூட சொல்வார்கள். இதோ இந்த மரத்தைக்கூட உன்னால் பிடுங்கி எறிந்துவிட முடியும் அனைவருக்கும் நிறை குறை உண்டு. குறைகளை மறந்து நிறைகளை எடுத்து வாழப் பழக வேண்டும் என்றது. தாயின் பேச்சைக் கேட்ட குட்டியானையின் கவலை பறந்தது.

இன்றைய செய்திகள் 18.12.2025

* நிதிபற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், தமிழக அரசு, தனது நிதித் தேவைகளுக்காக மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

* சென்னையில் மேலும் 600 முதலமைச்சர் மின்சார பஸ்கள் கொண்டு வர உள்ளதாக மு.க.ஸ்டாலின் தகவல்.

நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

* இந்திய அளவில் 2024 ஆம் ஆண்டில் 4.88 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

*ஐசிசி டி20 தரவரிசை: முதல் இந்தியராக சாதனை படைத்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார். டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.

Today's Headlines 18.12.2025

* Due to a financial shortage, the Tamil Nadu government has announced that it will sell bonds worth a total of Rs. 5,000 crore through auction to meet its economic needs.

*M.K.Stalin informed that 600 more electric buses will be brought to Chennai. Tamil Nadu is at the top of the targets released by NITI Aayog.

* There were 4.88 lakh road accidents in India in 2024. Out of these, 1.77 lakh people lost their lives.

SPORTS NEWS

ICC T20 Rankings: Tamil Nadu batsman Varun Chakravarthy becomes the first Indian to achieve this feat. He is the 8th-highest-ranked player in the T20 bowlers' rankings.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive