கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, March 30, 2025

புனித ரமலான் வாழ்த்து கவிதை ரம்ஜான் நோன்பு happy ramzan wishes

 


பணிநிறைவு பாராட்டு விழா அரசு மேல்நிலைப்பள்ளி ஆவுடையாபுரம் TEACHER RETIREMENT FUNCTION Ceremony ghss


TEACHER RETIREMENT FUNCTION Ceremony ghss

class 1 to 5 revised annual examination time table April 2025 திருத்தப்பட்ட கால அட்டவணை

திருக்குறள் 89 உடைமையுள்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 89 udaimaiyul Explanation tamil and english

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. 

Friday, March 28, 2025

வகுப்பு 10 தமிழ் அரசு பொதுத்தேர்வு உத்தேச விடைக்குறிப்பு 2025 SSLC public tamil tentative answer key


SSLC public tamil tentative answer key

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு உத்தேச விடைக்குறிப்பு மார்ச் 2025 pdf SSLC Tenth tamil public exam tentative answer key

 SSLC Tenth tamil public exam tentative answer key

பதிவிறக்கு/DOWNLOAD

பொதுத்தேர்வு 2025 பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எப்படி இருந்தது SSLC PUBLIC EXAM TAMIL QUESTION Review


SSLC PUBLIC EXAM TAMIL QUESTION Review

பத்தாம் வகுப்பு தமி்ழ் 2025 அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் SSLC Tenth Tamil Govt Public Exam Question


SSLC Tenth Tamil Govt Public Exam Question 

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் மார்ச் 2025 pdf SSLC Tenth tamil public exam original question paper

 பதிவிறக்கு/DOWNLOAD


SSLC Tenth tamil public exam original question paper march 2025 pdf

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-03-2025. வெள்ளி

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-03-2025. வெள்ளி

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம்: பண்புடைமை; 

குறள் எண் :1000.

குறள்:

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று.

பொருள்:

தீயவன் பெற்ற பெரும் செல்வம். பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தின் கெடுதியால் கெடுதல் போலாகும்.

பழமொழி :

> கடன் துன்பத்திற்கு வழி வகுக்கும். Borrowing is sorrowing.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.


பொன்மொழி :

* பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனேன்றால் பொய் வாழவிடாது, உண்மை சாகவிடாது. - விவேகானந்தர்.

The Golden Rule

பொது அறிவு :

1. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?

விடை : நாக்கு.

2. உலகிலேயே மிக நீளமான பழமையான கால்வாய் எது ?

விடை : கிராண்ட் கால்வாய் ( சீனா )

English words & meanings :

Fever.

காய்ச்சல்,

Headache

தலைவலி

வேளாண்மையும் வாழ்வும் : பயன்பாட்டுக்குப் பின்னர் தண்ணீர்க்

குழாய்களை நன்கு மூட குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

மார்ச் 28 மாக்சிம் கார்க்கி அவர்களின் பிறந்தநாள்.

✓மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்.

✓பிறப்பு 28 மார்ச் 1868 - இறப்பு 18 சூன் 1936.

உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார். எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான 'மகர் சுத்ரா' (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்.

1898-ல் 'ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்' வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் 'தி லோயர் டெப்த்ஸ்' என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற 'மதர்' (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை -முரசொலி

ஒரு நரி பசியினால் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அது கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது. தன்னைப் போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று புறப்பட்டிருக்கிறதோ என்று அது பயந்தது. தன் பசி தீருமுன் தான் பிறிதொரு மிருகத்தின் பசிக்கு விருந்தாகிவிடக் கூடுமோ என்று கலங்கியது.

இருந்தாலும், இது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டது. மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக் கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது.

நரி, மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர் முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமாக அசையும் போது, அந்த முரசைத் தாக்கியது. அது தாக்கும் போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது.

இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரி, 'பூ! வெறும் தோல் முரசுதானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட் டேன்!" என்று சொல்லிக் கொண்டே போய்விட்டது.

நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே நன்று.


28.03.2025

இன்றைய செய்திகள்

ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு.

* மத்திய அரசின் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்.

ராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது.

*பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் அதன் முக்கிய உதிரி பாகங்களுக்கு நிரந்தரமாக 25 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளன.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.

TODAY NEWS

The high court ordered to provide pension money benefits immediately to the Government Transport Corporation.

A separate resolution in Tamil Nadu Legislative Assembly regarding the matter on Vagbu.

In the Gulf of Mannar in Ramanathapuram, the Ram Sethu sand dunes which connects Sri Lanka and India connecting have also been found to be the largest reproductive site of the six rare seawater bird species.

The Parliamentary Standing Committee recommends the immediate release of funds for the states who do not accept the BMSR scheme.

The world countries have retaliated to the announcement of US President Donald Trump's announcement that the US imported vehicles and its major spare parts will be permanently charged.

IPL in Chennai Metro trains will be operated till 1:00 pm, as the cricket match is being held today, Chennai Metro Rail Company said.

The International Table Tennis Tournament started in Chennai yesterday.

பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக் கவிதை


A congratulatory poem for the students

திருக்குறள் 87 இனைத்துணைத்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 87 inaithunai... Explanation tamil and english

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

Thursday, March 27, 2025

பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு...

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு  

👉பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை :

தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவைகள்:

Blue Pen -2
( Ink / Gel )
Long Size Scale / Pencil / Sharpner /  ink & pencil Eraser / 
For Maths: Geometry Box & Pro-circle

*தேர்வு நடைபெறும் நேரம்*
: காலை 10 மணி முதல் - மதியம் 1:15 மணி வரை ( 10:00 - 1:15 )

1) தேர்வு எழுதும் பள்ளிக்குச் சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு (அதாவது 9 மணிக்குள்) முன்பே சென்றுவிட வேண்டும்.

2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

3) Blue  பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. Sketch / Colour pencil பயன்படுத்தக்கூடாது.

 4).Blue Black pen இரண்டிலும் கலந்து கலந்து Answer எழுதக் கூடாது. 

5) Uniformல்தான் Examக்கு போக வேண்டும்.

6) தேர்வு அறைக்குள் Electronic devices, Cell Phone, Kerchief, Scientific Watch, Calculator, Purse, Towel, Bag, Empty Box, Water bottle ஆகியவற்றை வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது.

7). சாதாரண Watchஐ அணியலாம். மேலு‌ம் Chappal, Shoe, Belt வகுப்பறைக்குள் அணிந்து செல்லக் கூடாது.

8) *10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது*. 9:30 மணிக்குள் செல்ல வேண்டும். 

*விடை எழுத வேண்டிய முறைகள்*:
1) Answer Sheetன் முன்பக்கம் உள்ள உங்களுடைய 
Exam Roll No / Name / 
Date of Birth / Subject Name / Medium / Date / Photo ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

2) விடையைத் தெளிவாக எழுத வேண்டும்.

3)100 Markக்கும் விடைகளை எழுத வேண்டும். Pass ஆனால் போதும் என்று வெறும் 40, 50 Markக்கு மட்டும் விடை எழுதி விட்டு மீதமுள்ளதை விட்டு விடக்கூடாது. 

4) Answer தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தாங்கள் படித்த விடைகளை எழுத வேண்டும்.

5) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.

6) தாங்கள் விடைகளை எழுதி, ஒருவேளை அது தவறாக இருந்து அதனை அடித்து விட்டால், உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.

7) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.

8) குறைந்தது 15 to 20 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 4 பக்கங்கள் 5 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆக முடியாது. 

9) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.

10) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும். 

11) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.

12) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.

13) தேர்வு எழுதி முடித்தவுடன் Question Number & Page Number அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.

14) Page Numberஐ கவனமாக Answer Sheetன் முன்பக்கம் எழுத வேண்டும்.

16) எந்த சந்தேகம் இருந்தாலும் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.

17) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.

18) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு விடைத்தாளின் கீழ்ப்பகுதியை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.

19) Answer Sheetல் Answer எழுதும்போது உள்பக்கம் எந்த இடத்திலும் உங்களுடைய Name & Exam Numberஐ எழுதக்கூடாது.

20) தேர்வு அறையில் தங்களுக்குக் கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.

21) விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட  வேண்டும்.

22) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d)  (அ/ஆ/இ/ஈ) ( i, ii, iii, iv ) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதக் கூடாது.

23) எந்த விடையும் கலந்து கலந்து எழுதக்கூடாது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்துப் பின்னரும் எழுதக்கூடாது. 
Order மாறாமல்  வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத வேண்டும்.

24) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.

General Advice: 👇👇👇👇
Bit அடிப்பது /பிறரைப் பார்த்து எழுதுவது / 
பிறர் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது என தேர்வில் நேர்மை இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தேர்வை நேர்மையாக எழுத வேண்டும். 
👇👇👇👇

தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்.

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்- 27.03.2025, வியாழன்

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்- 27.03.2025, வியாழன் 

   
திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை


குறள் எண்: 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.


பொருள்:
எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும்
இருளாகும்.


பழமொழி :

The swine do not know what heaven is
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை 

இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 
2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :
சதுரங்க விளையாட்டில் முன்யோசனை வெல்லுவதைப் போல ,வாழ்க்கையிலும் முன்யோசனை வெல்லுகிறது ! ---ஸெஸில்

பொது அறிவு : 
1. எந்த தேசத்தில் அதிக அளவு ரோஜாக்கள் பயிரிடப்படுகிறது.?
விடை: ஜாம்பியா. 80% சதவீத பூக்கள்
2. ஒவ்வொரு வினாடிக்கும் எத்தனை மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின?.
விடை : 205 மில்லியனுக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் ஒவ்வொரு வினாடிக்கும் அனுப்பப்படுகிறது.

English words & meanings :

 Exercise    -      உடற்பயிற்சி 

Face mask     -     முகக்கவசம்


வேளாண்மையும் வாழ்வும் : 
 உங்களின் நீர் உபயோகங்களை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் எங்கு, எப்படி தண்ணீர் வீணாகிறது எனக் கண்டறிந்து அதைத் தடுக்க முடியும்.

மார்ச் 27

உலக நாடக அரங்க நாள்  

உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.

யூரி அலெக்சியேவிச் ககாரின் அவர்களின் நினைவு நாள்


யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

நீதிக்கதை
 ஆறும்‌ நீரும்‌ 

நல்ல வெயில்‌ காலம்‌. வழிப்போக்கர்‌ இருவர்‌ சாலை வழியாகச்‌ சென்று
கொண்டிருந்தார்கள்‌- 
நடைக்‌ களைப்பும்‌ வெயில்‌ கொதிப்பும்‌ அவர்‌ களுக்குத்‌ தண்ணீர்த்‌ தவிப்பை உண்டு பண்ணின. சுற்றிலும்‌ 
ஒரே பொட்டல்‌. அருகில்‌ வீடு வாசல்‌ தோப்புத்‌ துரவு ஒன்றும்‌ கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல்‌ திகைத்தார்கள்‌. 

திடீரென்று அவர்களில்‌ ஒருவர்‌ மகிழ்ச்சியோடு பேசினார்‌ “அண்ணா, இப்போதுதான்‌ நினைப்பு வருகிறது. வலதுகைப்‌ புறமாக கூப்பிடு தூரம் சென்றால்‌ அங்கே ஓர்‌ ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணீர்‌ குடித்துக்‌  களைப்பாறியபின்‌ திரும்பலாம்‌”?  என்று அவர்‌ கூறிய செய்தி இன்பம்‌ தந்தது. 

இருவரும்‌ சிறிது தூரம்‌ வலது  புறமாகத்‌ நடந்தபின்‌,ஆற்று
மணல்‌ பரந்து கிடப்பதைக்‌ கண்டார்கள்‌. ஆற்றைக்‌ கண்டுவிட்ட குதூகலத்துடன்‌ கொதிக்கும்‌ மணற்சூட்டையும்‌  பொருட்படுத்தாமல்‌ விரைந்து நடந்தார்கள்‌.

ஆனால்‌ என்ன ஏமாற்றம்‌ ! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க்‌ கிடந்தது. இக்கரையிலிருந்து அக்‌ கரைவரை எங்கும்‌ ஒரே மணல்வெளிதான்‌ கண்‌ணுக்குத்‌ தெரிந்தது.  தூரத்தில்‌ கானல்தான்‌ தோன்றியது.

இருவரும்‌ மனமுடைந்து போனார்கள்‌. சிறிதுநேரத்தில்‌ தண்ணீர்‌ கிடைக்காவிட்டால்‌ மயங்கிச்‌சோர்ந்து விழ வேண்டியதுதான்,அவர்கள்‌ நம்பிக்கை இழந்து நின்றபோது ஆடு மேய்க்கும்‌ பையன்‌ ஒருவன்‌ அங்கே வந்தான்‌” ஆற்று மணலைத்‌ தோண்டினான்‌ இரண்டடி ஆழம்‌ தோண்டிய பின்‌ அடியிலிருந்து தண்ணீர்‌ ஊறி வந்தது.  இரு கைகளாலும்‌ அள்ளிக்‌ குடித்து சென்றான்‌. அதைப்‌ பார்த்த வழிப்போக்கர்கள் தாங்கள்‌ நின்ற  இடத்திலேயே மணலைத்‌ தோண்டினார்கள்‌. 

அங்கேயும்‌ அடியில்‌ நீர்‌ ஊறியது, அவர்கள்‌ தூய்மையான அந்த நீரைப்‌ பருகித்‌ போற்றிப்‌ புகழ்ந்து சென்‌றார்கள்‌, 

 நீதி : ஆற்றைப் போல் நல்ல குடியில் பிறந்த பெரியோர்கள், தாங்கள் துன்பமடைந்த காலத்தும் தங்களை நாடி வந்தோருக்கு நன்மையே செய்வார்கள்.

இன்றைய செய்திகள்

27.03.2025


* அமெரிக்காவில் ஆவின் நெய்க்கு அதிகளவில் மவுசு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


* கிராமப்புறங்களில் ரூ.3150 கோடி மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அறிவிப்பு.


* டிஜிட்டல் கைது மோசடி தொடர்பாக 83,668 வாட்ஸ் அப் எண்கள், 3,962 ஸ்கைப் அக்கவுன்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


* வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


* மியாமி ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Minister Rajagannappan said in the legislative session that there is a great demand for Aavin ghee in the United States.


* Rural Development Minister E. Periyasamy has announced that community health complexes will be built in rural areas at an estimated cost of Rs 3150 crore.


* It was reported in the Lok Sabha that 83,668 whatsup numbers and 3,962 Skype accounts have been crippled in connection with digital arrests.


* The US has announced that 25 per cent additional tax will be imposed on countries that import oil and gas from Venezuela.


* Miami Open tennis: Improvement of American player Taylor Britz quarterfinals.

திருக்குறள் 86 செல்விருந்து.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 86 sel virunthu Explanation tamil and english

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்விருந்து வானத் தவர்க்கு.

நபிகள் நாயகம் வாழ்வில் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil story In the life of Nabikal nayagam


 tamil story In the life of Nabikal nayagam

Wednesday, March 26, 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2025.புதன்

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2025.புதன்

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம்: பண்புடைமை ; 

குறள் எண் : 998.

குறள்:

நண்புஆற்றா ராகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை.

பொருள்:

நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும் பண்புடன் பழகாமை இழிவாகும்.

பழமொழி :

சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.

A man is created by the environment.

இரண்டொழுக்க பண்புகள்:

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :

+ நீ வெற்றிக்காக போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள். - கண்ணதாசன்.

பொது அறிவு :

1. ஆதார் கார்டு முதலில் எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டது?

விடை: மகாராஷ்டிரா.

2. பாம்பின் வாயில் எத்தனை பற்கள் உள்ளன?

விடை : 200 பற்கள்

English words & meanings:

+ Cough.

இருமல்

+ Diarrhea.

வயிற்றுப்போக்கு/ பேதி

வேளாண்மையும் வாழ்வும் :

குழாயில் நீர்க் கசிவு இருப்பின் பிளம்பரை அழைத்து வந்து உடனே சரி செய்யுங்கள்.

மார்ச் 26

லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள்

லூடுவிக் வான் பேத்தோவன்

பிறப்பு 1770 - இறப்பு மார்ச் 26, 1827.

இவர் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் கால கட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார்.

அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

நீதிக்கதை -

பஞ்சவர்ணக் கிளிக்குஞ்சுகள்

மிகப் பெரிய பேரரசர் ஒருவருக்கு, சீன நாட்டு அறிஞர் ஒருவர் இரண்டு பஞ்சவர்ணக் கிளிக்குஞ்சுகளை பரிசளித்தார். பஞ்சவர்ணக் கிளியை, அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதுவர் என்பதால், பேரரசர் அகமகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து "இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!" என்றுஎன்று கட்டளையிட்டார்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தார் பேரரசர். "அரசே... இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையைவிட்டு நகர மறுக்கிறது" என்று கூறினார் பயிற்சியாளர். உடனே பேரரசர், தனது நாட்டில் உள்ள புகழ்பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து, பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டார்.

அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, "இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே" என்றனர். "இதற்கு என்ன ஆயிற்று, ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலைசெய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்கலாம்" என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, "நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார் பேரரசர்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருப்பதை பார்த்தார் பேரரசருக்கு ஒரே மகிழ்ச்சி.. "இந்த அற்புதத்தைச் செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!" என்றார். அந்த விவசாயி பேரரசர் முன்பு வந்து பணிந்து நின்றார். "எல்லாரும் முயற்சிசெய்து தோற்றுவிட்ட நிலையில், நீ மட்டும் கிளியை எப்படி பறக்கச் செய்தாய்?" என பேரரசர் கேட்டார்.

பேரரசரை வணங்கியபடியே விவசாயி சொன்னார், "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!" என்று சொன்னார்.

நீதி : இயற்கையும் சில சமயம் அந்த விவசாயி போல, நாம்,

நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடும். அது நமது நன்மைக்கே, நம் சக்தியை, ஆற்றலை, நாம் உணரவேண்டும் என்பதற்காகவே.

இன்றைய செய்திகள் 26.03.2025

* ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.


இன்றைய செய்திகள்

* தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு.

கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்தனர் ஜாண்டு குமார் மற்றும் சீமா ரானி.

*2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதிச் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி தகுதி.

Today's Headlines 26.03.2025

To encourage online booking reservation scheme, The Tamil Nadu State Transport Corporation has announced special lucky draw.

Toll Fees at 40 Toll Plazas in Tamil Nadu to be Increased from April 1st: National Highways Authority of India Announced.

Comprehensive Screening Centers to Detect All Types of Cancer to be Launched in All Districts of Tamil Nadu Within 10 Days: Minister Ma. Subramanian. This method is first in the Country.

India Urges at the United Nations that Pakistan Continues to Illegally Occupy the Jammu and Kashmir Region and Should Vacate it Immediately.

Earthquake in New Zealand: Recorded 6.7 on the Richter Scale.

Khelo India Para Games: Jaandu Kumar and Seema Rani Set National Records in Weightlifting.

2026 World Cup Football: New Zealand Team Qualifies for the Qualifying Round.

திருக்குறள் 85 வித்தும்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம் thirukural Explanation tamil and english


thirukural 85 vithum... Explanation tamil and english

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

Tuesday, March 25, 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.03.2025 செவ்வாய்

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.03.2025 செவ்வாய் 

திருக்குறள்: 

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:997

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

 மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்:

அரம் போன்ற கூறிய அறிவுடையவராக இருந்தாலும் மனிதத் தன்மை

இல்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார்.

பழமொழி :

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.
The spinning world makes every thing rotate.

இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 
2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு  மனிதரும்  அவரது இலட்சியத்தை அடைய முடியாது. ---காமராஜர்

பொது அறிவு : 
1. மண்பானையில் உள்ள நீரை குடித்தால் எவ்வகை நோய் குணமாகும்? 
விடை :  இரத்த அழுத்தம்.          
2. உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்கு உள்ளது? 
விடை : சீனா 

English words & meanings :

Blood pressure      -   இரத்த அழுத்தம

Blood test     -    இரத்த பரிசோதனை


வேளாண்மையும் வாழ்வும் : 
 * மறக்காமல் பயன்படுத்தியதும் குழாயை நிறுத்துங்கள்.

மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.

நீதிக்கதை
 வானத்தில் வீடு 

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், "என்னோட பண்ணையில் ஒரு வீடு கட்டணும் , ஆனா அந்த வீடு தரையில் கட்ட கூடாது உன்னால் முடியுமா?"என்று கேட்டார்.

 பீர்பால், அதற்கு நிறைய பணமும் ,மூன்று மாதம் அவகாசமும் வேண்டும், என்றார்.
, உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தார்

வீட்டிற்கு போன பீர்பால் 
வேட்டைகாரர்களிடம்,"எனக்கு 100 பச்சை கிளிகள் வேண்டும் அதை பிடித்துக் கொண்டு வாங்க" என்றார்.

உடனே எல்லா வேட்டைக்காரர்களும் காட்டுக்கு சென்று அதிக பச்சை கிளிகளை பிடித்துக் கொண்டு வந்தனர்.

அவற்றை தன்னுடைய மகளிடம்  ஒப்படைத்த பீர்பால் ,இந்த கிளிகளுக்கு எல்லாம் பேச கற்றுக் கொடுக்க கூறினார்.

சிறிது நாட்கள் கழித்து, 
எல்லா கிளிகளும் பேச ஆரம்பித்தது.உடனே பீர்பால் கட்டடம் கட்டணும் ,கல் எடுத்துட்டு வாங்க  என்று கட்டடம் கட்டும் போது பேசும் எல்லாம்  வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க சொன்னார்.

மூன்று மாதம் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தாயிற்று வந்து பாருங்க என்று அக்பரை பண்ணைக்கு அழைத்து சென்றார் பீர்பால்.

அங்கு வந்து பார்த்தால் நிறைய கிளிகள் இருந்தன.அவை கட்டடம் கட்டணும் ,மண்ணைபோடுங்க ,
தண்ணீர் ஊற்றுங்க என்று பேசிக் கொண்டே இருந்தன.

இதைப் பார்த்த அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "என்ன பீர்பால் இந்த கிளிகளா எனக்கு வீடு கட்டி தர போகுது?" கேட்டார்.

அதற்கு பீர்பால், "ஆமாம் அரசே! காற்றில் வீடுகட்ட ,காற்றில் பறக்கும் பறவைகளால் தான் முடியும்," என்று கூறினார்.

தன்னை பீர்பால் தோற்கடித்து விட்டார்  என்பதை புரிந்து கொண்டார் அரசர்.

இன்றைய செய்திகள்

25.03.2025

* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.


* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.


* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.


* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.


* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines


* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan


   * Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.

 

   * Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.


   * The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.

 

   * Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.


   * Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round.

பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை நாடக வடிவில் கொக்கைப்போல


10th tamil drama big question answer


Tenth Tamil neduvina big question and answer pdf drama writing kokkaipola koliyaipola uppaipola

குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் - கொக்கைப் போலகோழியைப் போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் - கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் -  குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி -  கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் - ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.

பத்தாம் வகுப்பு தமிழ் நெடுவினா விடை நாடக வடிவில் எழுதுதல் pdf மாணவன் - கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Tamil neduvina big question and answer pdf drama writing kokkaipola koliyaipola uppaipola

குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் - கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் - கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் -  குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி -  கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் - ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.

திருக்குறள் 84 அகனமர்ந்து.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் விளக்கம் தமிழ் ஆங்கிலம்


thirukural 84 akanamarnthu... Explanation tamil and english

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

Monday, March 24, 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.03.2025 திங்கள்கிழமை

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.03.2025 திங்கள்கிழமை 
 

திருக்குறள்: 
பால்: பொருட்பால்

இயல்: குடியியல்
அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:996

 பண்புஉடையார்ப் பட்டுஉண்டு உலகம்: அதுஇன்றேல்

 மண்புக்கு மாய்வது மன்.

பொருள்:

உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது. அஃதில்லாவிடின்

அழிந்து போயிருக்கும்.

பழமொழி :

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்
Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 
2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.

பொன்மொழி :
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். ---அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 
1. நெடுஞ்சாலையில் அவசர அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைபேசி சாவடி எது?
 விடை:  SOS (save our souls).       
2.  VIVO நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
 விடை: சீனா

English words & meanings :

Backache.     -     முதுகுவலி

Blood.    -     இரத்தம்

வேளாண்மையும் வாழ்வும் : 
 உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே தண்ணீரை உபயோகியுங்கள்.
மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்

நீதிக்கதை
 யானையும் பலமும் 

ஒரு மிக பெரிய காட்டில் ஒரு பெரிய யானை வாழ்ந்து வந்தது. அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டில் வாழ்ந்து வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்தன.

யானை வர்ற பக்கம் கூட போகாமல் பயந்து,  அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாமல் செய்தன.

இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்தது.

தன்னோட பழகாம தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்னை எல்லாரும் உதாசீனப் படுத்துறது யானைக்கு வருத்தமாக இருந்தது.

ஒரு நாள் காட்டுக்குள் பெரிய மழை பெய்து திடீர் வெள்ளம் வர ஆரம்பித்தது.குட்டி குட்டி மிருகங்கள் வாழும் இடத்தை சுற்றி பெரிய ஆறு மாதிரி தண்ணீர் ஓட ஆரம்பித்தது. அதனால் தீவில்   எல்லா மிருகங்களும் உள்ளேயே மாட்டிக்கொண்டன.

வெளிய வந்து உணவு தேட முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லா மிருகங்களும் தங்களுடைய குட்டிகளுடன் பட்டினி கிடந்தன.

 அந்த பக்கம் வந்த யானை இதை எல்லாம் பார்த்தும் ,ரொம்ப நாளாக  தன்னோட வேலையை மட்டும் பார்த்து வந்த யானை ஒன்றும்  பேசாமல் அங்கிருந்து நடக்க ஆரம்பித்தது.


அப்போது,ஒரு குட்டி குரங்கு "யானை மாமா எங்க குடும்பமே பசியில் கிடக்கு எங்களுக்கு உதவ கூடாதான்னு"என்று கேட்டது.
அதை பார்த்து சிரித்த யானை "நான்தான் அரக்கன் மாதிரி இருக்கிறேன் என்னை பார்த்து பயமாக இல்லையா?" என்று கேட்டது. 

 அந்த குட்டி குரங்கு, "எங்க அப்பா அம்மா உங்கள் உருவத்தைப் பார்த்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்திடக் கூடாதுனு அப்படி சொல்லி வளர்த்தாங்க ,ஆனா ஒருத்தரோட உருவத்தை வைத்து அவர்களுடைய குணத்தை எடை போடக் கூடாதுனும் சொல்லி இருக்காங்க , உங்களுடைய அமைதியான வாழ்க்கை முறையை பார்த்த எனக்கு நீங்க ஆபத்தானவர்னு தோன்றவில்லை" என்று கூறியது.

முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசுவது யானைக்கு ரொம்ப சந்தோசம். உடனே தன்னோட துதிக்கையை கொண்டு எல்லா மிருகங்களையும் காப்பாற்றியது. 
 
அன்றிலிருந்து யானையையும் தங்களில் ஒருத்தராக நினைத்து பழக ஆரம்பித்தார்கள். அந்த குட்டி மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளையும் அந்த யானையுடன் விளையாட அனுமதித்தார்கள்,அதனால் ரொம்ப சந்தோசமாக வாழ ஆரம்பித்தது யானை.

இன்றைய செய்திகள்

24.03.2025

* தமிழகத்தில் 'ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன், சூரியசக்தி மின்நிலையங்களையும் சேர்த்து அமைக்க உள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* தமிழகத்தில் இன்று கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* லடாக் பகுதியில் சீன சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளதற்கு, தூதரகம் மூலம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது என நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.


* கியூபா உட்பட 4 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை வெளியேற்ற அமெரிக்க அரசு முடிவு.


* தேசிய மகளிர் ஹாக்கி போட்டி: 4-வது நாள் ஆட்டத்தில் ஒடிசா, ஹரியானா, மிசோரம், மத்திய பிரதேசம் அணிகள் வெற்றி.


* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: 4வது சுற்றுக்கு முன்னேறினார் அமெரிக்க வீராங்கனை கோகோ காப்.

Today's Headlines

* Electricity board officials have stated that in Tamil Nadu, 'hybrid' power plants, combining wind and solar energy, will be established through public-private partnerships.


 * The Chennai Meteorological Department has forecast heavy rainfall in 8 districts of Tamil Nadu today, including Coimbatore and Erode.


 * India has expressed its opposition through diplomatic channels to China's illegal occupation of Ladakh and the creation of two districts, as stated by Minister of State for External Affairs Kirti Vardhan Singh in Parliament.


 * The US government has decided to deport 500,000 people from four countries, including Cuba.


 * National Women's Hockey Competition: Odisha, Haryana, Mizoram, and Madhya Pradesh teams won on the 4th day of the competition.


 * Miami Open Tennis Tournament: American player Coco Gauff advanced to the 4th round.

பத்தாம் வகுப்பு தமிழ் 99 மதிப்பெண்கள் விடைத்தாள் Tenth tamil topper high marks paper presentation


Tenth tamil topper high marks answer paper presentation 

திருக்குறள் 83 வருவிருந்து.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 83 varuvirunthu... Explanation tamil and english

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

Sunday, March 23, 2025

Saturday, March 22, 2025

Tenth Tamil public exam expected very important questions பத்தாம் வகுப்பு தமிழ் முக்கிய வினாக்கள் 2025


Tenth Tamil public exam expected very important questions 

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வுக்கு முக்கிய வினாக்கள் 2025 pdf 10th important questions

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Tamil Public Exam Expected very important questions pdf

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.03.2025 சனிக்கிழமை

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.03.2025 சனிக்கிழமை 



திருக்குறள்: 


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள்எண்:995


நகையுள்ளும் இன்னாத இகழ்ச்சி: பகையுள்ளும்

 பண்புஉள பாடுஅறிவார் மாட்டு.


பொருள்:

விளையாட்டிற்குங்கூட ஒருவரை இகழ்தல் கூடாது. பகைவரிடத்தும் பாராட்டும் குணமே பண்பாளரிடம் காணப்படும்.


பழமொழி :

Hear more talk less
கேட்பதற்கு தீவிரம் பேசுவதற்கு மந்தமாயும் இருக்க வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.
2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.

பொன்மொழி :
நான் மெதுவாக நடப்பவன் தான் ; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.---ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு : 
1. Flipkart நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தது? 
விடை:  அமெரிக்கா.     
2. மொபைல் போன் பேட்டரி எதனால் ஆனது? 
விடை :  லித்தியம் அயன்
English words & meanings :

 Tailor.      -      தையல்காரர்


Teacher.   -      ஆசிரியர்

மார்ச் 22

உலக நீர் நாள் (World Water Day),


உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.


1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை
 புத்திசாலி பூனை
 ஒரு பூனை ஒரு பெரிய 
மரத்துக்கு கீழே நின்றுக்
கொண்டு இருந்தது.
அப்போது  வேட்டைநாய்கள் குறைக்கும் சத்தம் தொலைவில் கேட்டது. பூனை அதை உற்றுக் கேட்டது.
அந்த மரத்தடிக்கு ஒரு நரியும் வந்தது.அந்த நரி பூனையிடம் , 
”வேட்டை நாய் சத்தம் கேட்குதே; அதெல்லாம் வந்தால் எப்படி தப்பிப்பாய்? "  என்று கேட்டது.
அதற்கு பூனை,” நான் உன்னை மாதிரி பெரிய அறிவாளியா? எனக்கு ஒரே ஒரு வழிதான் தெரியும்.இந்த மரத்தின் மீது 
ஏறி உச்சிக்குப் போய் தப்பிப்பேன். அவைகள் போனதும் மறுபடியும் கீழே இறங்கி வருவேன்” என்று பதில் கூறியது.
“நீ எப்படி தப்பிப்பாய்” என்று பூனை நரியிடம் திருப்பிக் கேட்டது.
அதற்கு நரி,”எனக்கென்ன, எனக்கு ஆயிரம் வழி தெரியும்” என்று பதில் கூறியது.
அப்போது வேட்டைநாய்கள் சத்தம் அருகில் கேட்டதால் பூனை மளமளவென்று மரத்தின்மேல் ஏறியது.
வேட்டைநாய்கள் நரியை சூழ்ந்து கொண்டன.கடைசி நேரத்தில் ஒன்றும் தோன்றாமல் நரி மாட்டிக் கொண்டது
பூனை நரியைப் பார்த்து, “என்ன நரியாரே, ஆயிரம் வழியில் ஒன்று கூட நினைவுக்கு வரவில்லையா”என்று கேட்டது.
நீதி: முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை கஷ்டம்.

இன்றைய செய்திகள்

22.03.2025


* குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.


* தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


* கேமரா, எஸ்ஓஎஸ் பட்டன், நவீன தீயணைப்பு அமைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு பேருந்துகள் ஏப்ரல் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன என அரசு போக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியுள்ளார்.


* ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.


* அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.


* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்.


* தேசிய மகளிர் ஹாக்கி தொடர்: 2-வது நாளில் ஒடிசா, மணிப்பூர், அரியானா, ஜார்கண்ட் அணிகள் வெற்றி.


Today's Headlines


* Food Safety Department Officer Sathishkumar has advised drinking water manufacturing companies to refill water in drinking water cans only up to 30 times.


   * Minister M. Subramanian stated in the Legislative Assembly that snake and dog bite medications are available in all 2,286 government primary health centers in Tamil Nadu.


   * Express buses with features like cameras, SOS buttons, and modern fire suppression systems are expected to be in service by the end of April, according to Santhapriyan Kamaraj, founder of the Government Transport Enthusiasts Association.

 

   * The Cabinet Committee on Security has approved the purchase of modern artillery worth ₹7,000 crore for the military.

   

* President Donald Trump has signed documents to dismantle the US Department of Education.

 

* Swiss Open Badminton Tournament: India's Trisha-Gayatri pair advanced to the quarterfinals.

   

* National Women's Hockey Tournament: Odisha, Manipur, Haryana, and Jharkhand teams won on the 2nd day.

Tenth Tamil One Mark Exam Question பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் சிறப்புத் தேர்வு வினாத்தாள் 2025


Tenth Tamil One Mark Exam Question 

பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் சிறப்புத் தேர்வு pdf Tenth Tamil One mark test

 பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Tamil One mark test one word questions pdf 

திருக்குறள் 81 இருந்தோம்பி.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 81 irunthombi... Explanation tamil and english

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

Friday, March 21, 2025

தன்னம்பிக்கை வரிகள் motivational lyrics


 

10th Social Science question 10 சமூக அறிவியல் வினாத்தாள் மூன்றாம் திருப்புதல் 2025 விருதுநகர்


10th Social Science question third revision exam virudhunagar district 2025

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf மூன்றாம் திருப்புதல் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2025

  பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth X sslc 10th Social Science Tamil and English medium third revision exam question paper pdf virudhunagar district 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-03-2025. வெள்ளி

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-03-2025. வெள்ளி

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 994.

குறள்:

நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்புபா ராட்டும் உலகு.

பொருள்:

முறையுடன் நன்மையை உலகத்திற்கும், தனக்கும் கருதுவாருடைய குணத்தை உலகம் போற்றும்.

பழமொழி :

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

Do what you can with what you have where you are.

இரண்டொழுக்க பண்புகள்:

1. வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2. கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

· விதைத்துக் கொண்டே இரு, முளைத்தால் மரம்....

இல்லையேல் உரம். .- சேகுவேரா.

பொது அறிவு :

1. கசப்புகளின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?

விடை : நிலவேம்பு.

2. நதிகள் இல்லாத நாடு எது?

விடை : சவுதி அரேபியா

English words & meanings:

Shop keeper

கடைக்காரர்

Speaker

பேச்சாளர்


வேளாண்மையும் வாழ்வும் :

இல்லத்தில் எவ்வாறு நீரை சேமிக்கலாம் என்று பார்ப்போம். சமையலறையிலோ, குளியலறையிலோ தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மார்ச் 21

(International Day of Forests)

பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.

மார்ச் 21

25 (World Poetry Day)

உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மார்ச் 21 உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day)

உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கருதப்படுகின்றது. கலை

மார்ச் 21

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள்

(International Day for the Elimination of Racial Discrimination)

இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர். எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

தன்னம்பிக்கை

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்க கூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

நீதி : தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

21.03.2025

* 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ரஜாவத் வெற்றி.

Today's Headlines - 21.03.2025

Municipal Administration Minister K.N. Nehru informed the Assembly that 375 non-agricultural village panchayats have been included in the 100-day employment scheme.

The High Court has ordered that online Patta applications should not be rejected without inquiring with the applicant.

The Election Commission has decided to link Voter ID cards with Aadhaar.

Miami Open Tennis Tournament: Russia's Anna Blinkova has advanced to the next round.

Swiss Open Badminton Tournament: India's Rajawat won today's match.

திருக்குறள் 80 அன்பின்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 80 anbin valiyathu... Explanation tamil and english

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

Thursday, March 20, 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-03-2025. வியாழன்

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-03-2025.

வியாழன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ;

இயல்: குடியியல்;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 993.

குறள்:

உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால்; வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.

பொருள்:

மனிதர்கள் ஒத்திருப்பது என்பது உறுப்பால் ஒத்திருப்பது அன்று, இனிது பேசும் பண்பினால் ஒத்திருப்பதேயாகும்.

பழமொழி :

> மாற்றம் என்பது மானிடத்தத்துவம்.

Variety is the spice of life.

இரண்டொழுக்க பண்புகள்:

1. வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2. கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால், தோற்கடிக்க அல்ல, உன்னை பார்க்கவே எவரும் பயப்படுவர். - பாரதியார் .

பொது அறிவு:

1. இஸ்டோரியா என்பதன் பொருள் என்ன?

விடை : விசாரிப்பதன் மூலம் கற்றல்.

2. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் எது?

விடை: நீலகிரி

English words & meanings:

+Police.

காவலர்

Producer.

தயாரிப்பாளர்

வேளாண்மையும் வாழ்வும் :

நீங்கள் இருக்கும் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றாலும் நாளைக்கே பற்றாக்குறை வரலாம். வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம்.

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள்

World House Sparrow Day - WHSD

World Sparrow Day


உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவு கூரப்படுகிறது.

நீதிக்கதை

குரங்குகளுக்கு கூறிய புத்தி

ஒரு காட்டில் பல குரங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. குளிர்காலத்தில் ஒருநாள் மிகவும் கடுமையான குளிராக இருந்தது. குரங்குகளால் குளிரைத் தாங்க முடியவில்லை. கொஞ்சம் நெருப்பு கிடைத்தால் சருகுகளைப் போட்டுத் தீமூட்டி குளிர் காயலாம் என்று ஒரு கிழக்குரங்கு கூறிற்று. நெருப்புக்கு எங்கே போவது என்று குரங்குகள் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு மின்மினிப் பூச்சி பளிச் பளிச் சென்று மின்னியவாறு பறந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட ஒரு குரங்கு அதோ நெருப்பு போகிறது என்று கூறிற்று. மற்றொரு குரங்கு அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்து வந்து தரையில் போட்டது.

மற்ற குரங்குகள் சுற்றிலும் கிடந்த குப்பை கூளங்களைச் சேகரித்து வந்து மின்மினிப் பூச்சிமீது போட்டன. பிறகு குரங்குகள் நெருப்பு கொழுந்து விட்டு எரியப் போகிறது என எதிர்பார்த்து சூழ்ந்து அமர்ந்து கொண்டன. ஆனால் தீ எரியும் வழியைக் காணோம்.

பிறகு குரங்குகள் வாயினால் குப்பையை ஊதி நெருப்பை எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டன. மரத்தில் அமர்ந்து குரங்குகளின் கோமாளித்தனைத்தை கவனித்துக் கொண்டிருந்த கலகலவென்று சிரித்தபடி மரத்தை விட்டிறங்கி கீழே வந்து அமர்ந்தது, பறவை ஒரு

பிறகு குரங்குகளை நோக்கி "நண்பர்களே! மின்மினிப் பூச்சியை நெருப்பு என்று எண்ணிக் கொண்டு தீ மூட்ட வீண் பிரயாசை எடுக்கிறீர்கள். நீங்கள் என்னதான் வாயால் ஊதினாலும் மின்மினிப் பூச்சியிடமிருந்து நெருப்பு வரவே வராது. வீண் வேலையை விட்டுவிடுங்கள்" என்று புத்திமதி கூறிற்று. "உனக்கு ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு உன் வேலையைப் பார்" என்று கூறிவிட்டு குரங்குகள் மறுபடியும் குப்பையை வாயால் ஊதித் தீ உண்டாக்க முயற்சியெடுத்தன.

பறவை, குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணிப் பரிதாபப்பட்டு திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறிக் கொண்டிருந்தது. இதனால் கோபமுற்ற குரங்குகள் பறவை மீது பாய்ந்து தாக்கின.

நீதி : முட்டாளுக்கு புத்தி சொல்வது வீண் முயற்சி தான்.

இன்றைய செய்திகள்

20.03.2025

சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மாநகராட்சிக்கு உட்பட்ட 70 பூங்காக்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தக வாசிப்பு மண்டலங்கள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் 87 செ.மீ. ஆழத்தில் பதக்கம், இரும்பு கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.

தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.

Today's Headlines

20.03.2025

Chennai Corporation Budget: Mayor Priya has announced that the book reading zones with a roof facility will be set up at an estimated cost of Rs. Two crore

In the excavation of Vembakkottai at the depth of 87 cm Iron Medal is Discovered: Minister Thangam Thennarasu Informated.

The Chennai Meteorological Department said that there is a chance of mild rains in Tamil Nadu till March 22.

The central government has said that the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme is being implemented in the last 10 years.

US-based Nick Hague, Sunita Williams, Pear Wilmore and Russia Alexander returned to Earth on a Dragon spacecraft of SpaceX.

Swiss Open Badminton Tournament: India's Isharani Barua won and advanced to the next round.

IPL Cricket: Tickets for Chennai Mumbai Tickets have been sold in an hour.

பத்தாம் வகுப்பு தமிழ் பொது சிறப்புத்தேர்வு 2025 வினாத்தாள் 10th tamil public exam important question


 10th tamil public exam important question

Tenth Tamil Public model question பத்தாம் வகுப்பு தமிழ் பொது சிறப்புத் தேர்வு வினாத்தாள் 2025 pdf

பதிவிறக்கு/DOWNLOAD


Tenth Tamil common special exam question paper 2025 pdf

திருக்குறள் 79 புறத்துறுப்.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 79 purathuruppellam... Explanation tamil and english

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

Wednesday, March 19, 2025

வகுப்பு 10 அறிவியல் வினாத்தாள் மூன்றாம் திருப்புதல் தேர்வு 2025 விருதுநகர்


10th Science question third revision exam virudhunagar district 2025

பத்தாம் வகுப்பு அறிவியல் தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf மூன்றாம் திருப்புதல் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2025

 பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth X sslc 10th Science Tamil and English medium third revision exam question paper pdf virudhunagar district 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-03-2025.புதன்

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

19-03-2025. புதன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல் : குடியியல்;

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 992.

குறள்:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:

யாரிடத்தும் அன்புடனிருத்தலும், பிறந்த உயர்குடிக்கேற்ப வாழ்தலும் இரண்டும் பண்பான நெறிகளாம்.

பழமொழி :



> தாமதம் தாழ்வுக்கு ஏதுவாகும்.

Delay is dangerous.


இரண்டொழுக்க பண்புகள்:

1. வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2. கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

· தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கைதட்டல் பெறுகிறார். - பிடல் காஸ்ட்ரோ.

பொது அறிவு:

1. ஒரு துளி ரத்தத்தின் எடை எவ்வளவு?

விடை: 0.05 மில்லிகிராம்.

2. மனித உடலின் குளிர்ச்சியான பகுதி எது?

விடை : மூக்கு

English words & meanings :

Pilot.

விமானி

Politician.

அரசியல்வாதி

வேளாண்மையும் வாழ்வும்:

நீர் சேமிப்பு முறை என்பது ஏதோ மரம் நடு விழா என்பது போல் வருடத்திற்கு ஒரு சிலநாட்கள் செய்ய வேண்டிய செயல் அல்ல. இன்றைய பெருகிவரும் மக்கள்தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு வினாடியும் கடைப்பிடிக்க வேண்டிய அவசரத்தில் அனைவரும் உள்ளோம்.

நீதிக்கதை -சிங்கமும் சிலையும்

ராமுவும், சிங்கமும் நண்பர்கள். ஒரு நாள் ராமு தன்னுடன் சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.

"அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது." என்றான் ராமு.

"ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலையை செய்திருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்." என்று சொல்லியது சிங்கம்.

நீதி: தனக்கென்றால் தனி வழக்குதான்.

இன்றைய செய்திகள்

19.03.2025

* Trek Tamilnadu: 3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' - முதல்வர் ஸ்டாலின்.

உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் 9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மே 19 திரும்ப உள்ளனர்.

* சந்திரயான் 5 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரயான் 5 மிஷனை ஜப்பானின் ஜாக்ஸாவுடன் இணைந்து இஸ்ரோ செயல்படுத்த உள்ளதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார்.

* ஐபிஎல் 2025 தொடர் வரும் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று கொல்கத்தாவில் தொடங்க இருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெறும்.

Today's Headlines 19.03.2025

Trek tamilnadu: 'Rs 63.43 lakh in 3 months; Meaningful Travel CM Stalin.

The summer festival for the current year in Nilgiris, which is attracted to tourists globally, is underway.

Sunita Williams and Patch Wilmore 9 months later from the International Space Station to Earth They are returning May 19.

ISRO leader Narayanan has said that the central government has given permission to implement the Chandrayaan 5 project. Narayanan also said that ISRO will be implementing Chandrayaan 5 mission with Japan's Jacksa.

The IPL 2025 series is set to begin on Saturday (March 22) in Kolkata. It will be held until May 25.

திருக்குறள் 78 அன்பகத்தில்லா.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 78 anbakathilla Explanation tamil and english

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

Tuesday, March 18, 2025

காந்தியின் வாழ்வில் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை


tamil story In the life of Gandhiji

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-03-2025. செவ்வாய்.

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

18-03-2025.
செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல்

அதிகாரம்: பண்புடைமை ; 

குறள் எண் : 991.

குறள்:

எண்பகத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

பொருள்:

எவரிடத்தும் எளிதாக நட்புக்கொண்டு இனிதாக கலந்துரையாடுதல், பண்புடைமை என்ற நடத்தையைத் தரும்.

பழமொழி :

அஞ்ஞானி செல்வத்தை தேடுகிறான் ஞானிகளோ நற்குணங்களை அடைய நாடுகிறார்கள்.

The fool seeks the wealth but the wise the virtue.

இரண்டொழுக்க பண்புகள்:

1. வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.

2. கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.


பொன்மொழி :

* வெற்றியாளர்கள் ஒருபோதும் இழப்பதில்லை, ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள் !. - மகாத்மா காந்தி.

பொது அறிவு :

1. நோபல் பரிசு எப்போதும் எந்த தினத்தில் வழங்கப்படும்?

விடை : டிசம்பர் 10

2. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?

விடை : உருளைக்கிழங்கு

English words & meanings :

+ Lawyer.

வழக்கறிஞர்

+ Musician.

இசையமைப்பாளர்

வேளாண்மையும் வாழ்வும்:

உணவில்லாமல் ஒரு வாரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. ஒரு கிராம் தங்கத்தைவிட ஒரு டம்ளர் தண்ணீரின் மதிப்பு அதிகம் என்பது ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

மார்ச் 18 ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் பிறப்பு மார்ச் 18, 1858 - இறப்பு செப்டம்பர் 29, 1913. ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நீதிக்கதை -சிலந்தியிடம் பாடம் கற்ற அரசர்

போரில், அரசர் ஒருவர் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவரின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவரால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததனால் வெற்றி பெற்றார். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவரை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தார். அதனால் அவர் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டார். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டார். மனச்சோர்வினால் துணிவு இழந்தார். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தார். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.

அந்த சிறிய சிலந்தியின் செயல் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது. இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் "இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்" என்று எண்ணினார். மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தார். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தார். தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினார். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தார். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றார். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றார். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவர் என்றுமே மறக்கவில்லை.

நீதி: முயற்சிகள் எப்போதும் தோற்பதில்லை.

இன்றைய செய்திகள்

18.03.2025

இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியின் அடிப்படையில் ஒரே நேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

* குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்.

போலி பாஸ்போர்ட், விசா மோசடிக்கு 7 ஆண்டு சிறை: மக்களவையில் புதிய குடியுரிமை மசோதா தாக்கல்.

* இந்தியா - நியூசிலாந்து இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: தென்கொரிய வீராங்கனை அன்சே யங் சாம்பியன் பட்டம் வென்றார்.

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டனின் ஜேக் டிராப்பர்.

Today's Headlines 18.03.2025

In the Indian Army, applications are invited for Agniveer jobs. You can apply for any two categories simultaneously based on merit.

Group-1, Group-4 Examination announcements will be released in April: DNBSC President SK Prabhakar Information.

❖ Seven years in prison for fake passport, visa fraud: filed a new citizenship bill in Lok Sabha.

A Defense Agreement is signed between India and New Zealand.

In All India badminton tournament South Korean player Anse-young won the championship.

Indian wells Open International Tennis Tournament: Britain's Jack Dropper won the championship.

திருக்குறள் 77 என்பிலதனை.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 77 enbilathanai veyil pola... Explanation tamil and english

என்பி லதனை வெயில்போலக் காயுமே 
அன்பி லதனை அறம்.

Monday, March 17, 2025

10th maths revision questions பத்தாம் வகுப்பு கணக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2025 விருதுநகர் கணிதம்


10th maths revision questions

பத்தாம் வகுப்பு கணக்கு தமிழ் & ஆங்கில வழி வினாத்தாள் pdf மூன்றாம் திருப்புதல் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2025

 பதிவிறக்கு/DOWNLOAD 


Tenth X sslc 10th maths English medium third revision exam question paper pdf virudhunagar district 2025

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-03-2025. திங்கள்.

பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

17-03-2025. திங்கள்.

திருக்குறள் :

பால் : பொருட்பால் ; 

இயல்: குடியியல்;

அதிகாரம்: சான்றாண்மை ; 

குறள் எண் : 990

குறள் :

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை.

பொருள்:

நிறைகுணம் உடையவர் தன்னுடைய தன்மையில் குறைவாராயின், பூமி அவர் பாரத்தைத் தாங்காது.

TAMIL PROVERBS WITH THEIR ENGLISH TRANSLATION

பழமொழி :

அச்சத்திற்கு மருந்து இல்லை.

There is no medicine for fear.

DEVELOPMENT OF U MORAL CHARACTER AND ATTITUDE

இரண்டொழுக்க பண்புகள்:

1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.


2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.

பொன்மொழி :

நம்பிக்கை போன்ற சிறந்த மருந்து வேறு எதுவுமில்லை .- ஒரிசன் ஸ்வெட்

General Knowledge Questions and Answers

பொது அறிவு :

1. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு எத்தனை மாதங்களில் கைரேகை உருவாகும்?

விடை: 6 மாதங்கள்.

2. விமானத்தில் மொத்தம் எத்தனை என்ஜின்கள் இருக்கும்?

விடை : 4 இன்ஜின்கள்

English words & meanings :

Gardener.

தோட்டக்காரர்.

+ Judge.

நீதிபதி.

வேளாண்மையும் வாழ்வும் :

நம் வாழ்வில் நீர் சேமிப்பு மிக முக்கியம். நீர் சேமிப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் உங்கள் வாழ்நாளில் சில மணிநேரங்களை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.

மார்ச் 17

சாய்னா நேவால் அவர்களின் பிறந்தநாள்

சாய்னா நேவால் - Saina Nehwal, பிறப்பு: 17 மார்ச் 1990 ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார். உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், உலகத் தர வரிசையில் முதன் முதலாக முதலிடம் இந்தியப் பெண்ணும் இவரே. சூன் 21, 2009ஆம் நாள் ஜாகர்தாவில் நடந்த இந்தோனேசிய ஓப்பன் போட்டியில் தரவரிசையில் முன்னிற்கும் சீனாவின் லின் வாங்கை அதிரடியாக வென்று பட்டத்தைப் பெற்று வரலாறு படைத்தார். இந்த போட்டியை வென்ற முதல் இந்தியப் பெண் இவர்.

நீதிக்கதை

நன்றி ஓடுகளே!

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக் குறைதான் அது. ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன. "முயலே நில்!" என்றது ஆமை. முயல் நின்றது. "நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?" என்று கேட்டது நத்தை.

"இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!" என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது. "ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?""ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!" என்றது முயல்.

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது. ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன. சட்டென, புதர் மறைவிலிருந்து ஒரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது.

ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன. ஓநாய் முயலைப் பிடித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும், தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்களை எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

இன்றைய செய்திகள் 17.03.2025

+ அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன் வழங்கப்படும்: தமிழக வேளாண் பட்ஜெட்டில் தகவல்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்ன அங்கீகாரத்துக்கான உத்தேச பட்டியலில் புதிதாக 6 இந்திய வரலாற்று சின்னங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோ உடன் செல்லும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்.

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: ஹோல்கர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.

*ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: 'பிளே-ஆப்' சுற்று 29-ந் தேதி தொடக்கம்.

Today's Headlines 17.03.2025

The school department has ordered the submission of the headmasters who will be retired in May.

Farmers will be given a loan of Rs 17,000 crore crop: Tamil Nadu Agricultural Budget.

There are 6 new Indian historical symbols added to the proposed list of UNESCO traditional recognition.

Elon Musk's Space X spacecraft that goes with the Humanoid Robot to Mars.

Indianwells Open International Tennis Tournament.

ISL Football Series: 'Play-App' round starting on 29th.

திருக்குறள் 76 அறத்திற்கே.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


thirukural 76 arathirkey anbu... Explanation tamil and english

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 

மறத்திற்கும் அஃதே துணை.

Sunday, March 16, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2025 tamilthugal tenth tamil slow learner material


 tamilthugal tenth tamil slow learner material

பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் வழிகாட்டி 2025 pdf Tenth slow learners guide simple material

 Tenth slow learners guide simple material pdf

பதிவிறக்கு/DOWNLOAD

திருக்குறள் 75 அன்புற்று.. குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்


 thirukural 75 anbutru amarntha... Explanation tamil and english

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

தமிழ்த்துகள்

Blog Archive