கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, March 27, 2025

பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு...

பத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு  

👉பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை :

தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டியவைகள்:

Blue Pen -2
( Ink / Gel )
Long Size Scale / Pencil / Sharpner /  ink & pencil Eraser / 
For Maths: Geometry Box & Pro-circle

*தேர்வு நடைபெறும் நேரம்*
: காலை 10 மணி முதல் - மதியம் 1:15 மணி வரை ( 10:00 - 1:15 )

1) தேர்வு எழுதும் பள்ளிக்குச் சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு (அதாவது 9 மணிக்குள்) முன்பே சென்றுவிட வேண்டும்.

2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

3) Blue  பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. Sketch / Colour pencil பயன்படுத்தக்கூடாது.

 4).Blue Black pen இரண்டிலும் கலந்து கலந்து Answer எழுதக் கூடாது. 

5) Uniformல்தான் Examக்கு போக வேண்டும்.

6) தேர்வு அறைக்குள் Electronic devices, Cell Phone, Kerchief, Scientific Watch, Calculator, Purse, Towel, Bag, Empty Box, Water bottle ஆகியவற்றை வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது.

7). சாதாரண Watchஐ அணியலாம். மேலு‌ம் Chappal, Shoe, Belt வகுப்பறைக்குள் அணிந்து செல்லக் கூடாது.

8) *10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது*. 9:30 மணிக்குள் செல்ல வேண்டும். 

*விடை எழுத வேண்டிய முறைகள்*:
1) Answer Sheetன் முன்பக்கம் உள்ள உங்களுடைய 
Exam Roll No / Name / 
Date of Birth / Subject Name / Medium / Date / Photo ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

2) விடையைத் தெளிவாக எழுத வேண்டும்.

3)100 Markக்கும் விடைகளை எழுத வேண்டும். Pass ஆனால் போதும் என்று வெறும் 40, 50 Markக்கு மட்டும் விடை எழுதி விட்டு மீதமுள்ளதை விட்டு விடக்கூடாது. 

4) Answer தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தாங்கள் படித்த விடைகளை எழுத வேண்டும்.

5) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.

6) தாங்கள் விடைகளை எழுதி, ஒருவேளை அது தவறாக இருந்து அதனை அடித்து விட்டால், உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.

7) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.

8) குறைந்தது 15 to 20 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 4 பக்கங்கள் 5 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆக முடியாது. 

9) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.

10) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும். 

11) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.

12) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.

13) தேர்வு எழுதி முடித்தவுடன் Question Number & Page Number அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.

14) Page Numberஐ கவனமாக Answer Sheetன் முன்பக்கம் எழுத வேண்டும்.

16) எந்த சந்தேகம் இருந்தாலும் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.

17) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.

18) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு விடைத்தாளின் கீழ்ப்பகுதியை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.

19) Answer Sheetல் Answer எழுதும்போது உள்பக்கம் எந்த இடத்திலும் உங்களுடைய Name & Exam Numberஐ எழுதக்கூடாது.

20) தேர்வு அறையில் தங்களுக்குக் கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.

21) விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட  வேண்டும்.

22) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d)  (அ/ஆ/இ/ஈ) ( i, ii, iii, iv ) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதக் கூடாது.

23) எந்த விடையும் கலந்து கலந்து எழுதக்கூடாது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்துப் பின்னரும் எழுதக்கூடாது. 
Order மாறாமல்  வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத வேண்டும்.

24) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.

General Advice: 👇👇👇👇
Bit அடிப்பது /பிறரைப் பார்த்து எழுதுவது / 
பிறர் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது என தேர்வில் நேர்மை இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தேர்வை நேர்மையாக எழுத வேண்டும். 
👇👇👇👇

தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள்.

தமிழ்த்துகள்

Blog Archive