கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, September 12, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அழியாச் செல்வம் அக்டோபர் 6

7th tamil model notes of lesson

lesson plan October 6

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-10-2025 முதல் 10-10-2025

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

அழியாச் செல்வம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-709 ஒன்றைப் படித்து முழுமையான பொருளை உணர்ந்த அதன் பயன்பாட்டினைக் கூறுதல்.

T-711 படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்ள முயலுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

எளிய பாடல்களைச் சீர்பிரித்துப் படித்துப் பொருள் புரிந்து கொள்ளும் திறன்.

கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதனை உணர்தல்.

9.நுண்திறன்கள்

கல்வி சார்ந்த பாடல்களைத் தொகுத்து எழுதுதல்.

கல்வி சார்ந்து கலந்துரையாடுதல் .

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_6.html

https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2_26.html

https://tamilthugal.blogspot.com/2021/06/2-2-7th-tamil-aliya-selvam-kuruvina.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கவிதைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த கல்வி குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் பெருமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்து, அழியாச் செல்வம் பாடலைக் கூறுதல். கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். கல்வியின் சிறப்பு குறித்து மாணவர்கள் கலந்துரையாடுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கவிதைகளை அறியச் செய்தல். கல்வியின் அவசியத்தை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல் ....................................

          ந.சி.வி –       கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.

உ.சி.வி – ஏன் கல்விச் செல்வம் அழியாச் செல்வம் எனப்படுகிறது என எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive