கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, April 11, 2026

TET TRB TNPSC TAMIL SILAPATHIKARAM FREE ONLINE QUIZ தமிழ் சிலப்பதிகாரம் போட்டித்தேர்வு வினாடிவினா

சிலப்பதிகாரம் - வினாடி வினா

சிலப்பதிகாரம் - தமிழ்த்துகள் வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய 20 முக்கிய வினாக்கள்
கால அளவு: 10:00

TET TRB TNPSC TAMIL KAMBA RAMAYANAM FREE ONLINE QUIZ தமிழ் கம்பராமாயணம் போட்டித்தேர்வு வினாடிவினா

கம்பராமாயணம் - வினாடி வினா

கம்பராமாயணம் - தமிழ்த்துகள் வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

போட்டித் தேர்வுக்கான முக்கிய வினாக்கள்

நேரம்: 10:00

TET TRB TNPSC TAMIL GRAMMAR VETRUMAI FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம் வேற்றுமை போட்டித்தேர்வு வினாடிவினா

தமிழ் இலக்கணம் - வேற்றுமை வினாடி வினா

தமிழ்த்துகள் தமிழ் இலக்கணம்: வேற்றுமை (20 வினாக்கள்)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

கால அளவு: 10:00

AFTER SUBMIT SCROLL UP TOP SEE CORRECT ANSWER AND SCORE

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 முக்கியக் குறிப்புகள் TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 material

 


TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 material 

TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 study material 

book inside one word important notes 👇

pdf link


ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இயல் 1 முக்கியக் குறிப்புகள் pdf TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 material

 பதிவிறக்கு/DOWNLOAD


TET TRB TNPSC TAMIL 6th term 1 unit 1 study material 


book inside one word important notes pdf

Friday, April 10, 2026

வகுப்பு 10 தமிழ் அரசு பொதுத்தேர்வு விடைக்குறிப்பு 2026 SSLC public exam 10th tamil govt answer key

 


SSLC public exam 10th tamil govt answer key


விடைத்தாள் திருத்தும் தமிழாசிரியர் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத் தேர்வு விடைக்குறிப்பு pdf 2026 SSLC public exam 10th tamil govt answer key

Tenth tamil public exam answer key 2026
10th tamil sslc key

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10.04.2026. வெள்ளி

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

10.04.2026. வெள்ளி 

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: படையியல் ;

அதிகாரம் : படைச்செருக்கு ;

 குறள் எண் : 777.

குறள் :

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

உரை :

பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

பழமொழி :

> செய்யும் தொழிலே தெய்வம்.

Work is worship.

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

+ படைப்பாற்றலின் கதவை திறக்கக் கூடிய சாவி கல்வி. -அகதா கிறிஸ்டி.

பொது அறிவு :

01.மிகக் குறைந்த வயது அமெரிக்க அதிபர் யார்?

தியோடர் ரூஸ்வெல்ட் 

Theodore Roosevelt

02. ஒலிம்பிக் கொடியை உருவாக்கியவர் யார்?

பியர் டி கூபர்டின்– 1913

 Pierre de Coubertin -1913

English words :

+meticulous giving or showing great attention to details

நுணுக்க விவரங்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிற.

jostle to push hard against somebody in a crowd.

கூட்டத்தில் ஒருவர் மீது வலுவுடன் இடித்தல்

தமிழ் இலக்கணம் :

இன்று நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அந்நிய மொழி அவற்றின் மொழி ஆதாரங்கள் குறித்து பார்ப்போம்

1. குல்லா - பார்சி

2. ரிக்க்ஷா - ஜப்பானிய

3. பஜார் - பார்சி

4. அலமாரி - போர்ச்சுகீசியம்

5. இனாம் - உருது

அறிவியல் களஞ்சியம் :

ஒளியின் வேகம் பொதுவாக வினாடிக்கு 186,000 மைல்கள் எனக் குறைத்துக் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொன்னால், அது 299,792,458 மீ/வி (மீட்டர்/விநாடி அதாவது வினாடிக்கு 186,287.49 மைல்களுக்குச் சமம்).

ஏப்ரல் 10 - உடன்பிறப்புகள் நாள்

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது. 1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர். அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.

நீதிக்கதை -கெட்டிக்கார சேவல்

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது. இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்" என்றது.

நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது. இதைக் கண்ட நரி, "என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது?" என்று கேட்டது. அதற்கு சேவல், " அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா? என்பதைக் கவனிக்கிறேன்" என்றது.

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக "சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்" என்று கூறி கிளம்பியது. சேவல், "அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது" நரி "அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்" என்றது

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் 'யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது" என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் பொய் சொன்னாலும் அது புத்திசாலியிடம் வெளிபட்டு விடும்.

இன்றைய செய்திகள்

10.04.2026

*கேரளா, அசாம் மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் நேற்று சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றுள்ளது.

* வந்தே பாரத்தை விட மணிக்கு 220 கி.மீ வேகத்தில் செல்லும் 2 புதிய ரயில்களை தயாரிக்கிறது இந்திய ரயில்வே.

* அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு வார காலத்திற்கு ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என எஸ்என்எஸ்சி அறிவித்தது.

விளையாட்டுச் செய்திகள்

*மகளிர் பிரிவு 9-வது சுற்று செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, சக நாட்டு வீராங்கனையான திவ்யா தேஷ்முக் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய வைஷாலி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அபார வெற்றி பெற்றார்.

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோல் நடைபெறுகிறது.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

10.04.2026

* Voting for the legislative assembly elections was held yesterday in Kerala, Assam, and the Union Territory of Puducherry.

* Indian Railways is preparing two new trains that can run at a speed of 220 km/h, faster than the Vande Bharat trains.

* Instead of a ceasefire between the United States and Israel, the SNSC announced that safe transportation through the Strait of Hormuz will be allowed for a period of two weeks.

SPORTS NEWS

In the women's section of the 9th round chess tournament, Tamil Nadu's Indian player Vaishali faced fellow Indian player Divya Deshmukh. Vaishali played brilliantly and secured an impressive victory with smart moves.

The Monte Carlo Masters international tennis tournament is being held in Monaco. In this, Zverev performed well and advanced to the quarterfinals by winning 6-2, 7-5.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Thursday, April 09, 2026

கண்ணா உன் கருணை... பெருமாள் வழிபாடு தசாவதாரம் பாடல்

 


kanna un karunai... perumal valipadu song

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09.04.2026.வியாழன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

09.04.2026.வியாழன்.

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: படையியல் ;

அதிகாரம் : படைச்செருக்கு ; 

குறள் எண் : 775.

குறள் :

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு.

உரை :

பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.

பழமொழி :

எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.

All roads lead to Rome.

இரண்டொழுக்க பண்புகள்:

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

+ இளமையில் கல்வியை புறக்கணித்தவன்,

தனது இறந்த காலத்தை மட்டும் இழந்தவன் அல்ல எதிர்காலத்தையும் இழந்தவன் ஆவான். - யூரி பிடிஷ்.

பொது அறிவு :

01. முதல் உலகப்போரை முடித்து வைத்த உடன்படிக்கை எது?

வெர்சாய் உடன்படிக்கை, 

The Treaty of Versailles

02.அமெரிக்காவிற்கு சுதந்திர தேவி சிலையை பரிசளித்த நாடு எது?

பிரான்ஸ்-1886

France-1886

English words :

developer - a person or company that builds houses, shops etc உருவாக்குபவர்

Random anything that is without a pattern ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, குறிப்பின்றி

தமிழ் இலக்கணம் :

இளம் பயிர் வகைகளின் பெயர்

நெல், சோளம், கத்திரி - நாற்று

மா, புளி, வாழை - கன்று

தென்னை - பிள்ளை

பனை - மடலி/ வடலி

அறிவியல் களஞ்சியம் :

அறிவியலில் உள்ள மிகவும் வியக்கத்தக்க உண்மைகளில் ஒன்று, நாம் உண்ணும் உணவைச் சுவைக்க உமிழ்நீர் தேவைப்படுகிறது என்பதுதான். ஒரு உணவு சுவைப்பதற்கு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் உமிழ்நீரில் கரைய வேண்டும். உணவில் உள்ள வேதிப்பொருட்கள் கரைந்தவுடன், அவற்றை நமது சுவை மொட்டுகளில் உள்ள ஏற்பிகளால் கண்டறிய முடியும்.

நீதிக்கதை -

குரங்கின் காற்றாடி

அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு செல்லாமல், நெகிழி உறைகளில் காய்கறிகளை வாங்கி வருவார் முத்துவின் அம்மா.

அந்த நெகிழி உறைகள்தான் முத்துவிற்கும் பாலுவிற்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதைப் போக்கும். ஆம், அந்த நெகிழிப் பைகளை வயதான கரடி மாமாவிடம் கொடுத்து காற்றாடி செய்து வானில் பறக்கவிடுவதில் இருவருக்கும் பெரு மகிழ்ச்சி.

அப்பா குரங்கு நெகிழியால் (பிளாஸ்டிக்) எவ்வளவு தீமை என்று கூறியும், அதைக் காதில் வாங்காது, நாள்தோறும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரும் உறைகளை அப்படியே குப்பைத் தொட்டியில் எறிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் முத்துவின் அம்மா. வாங்கி வருகிற பெரிய உறைகளை எடுத்து காற்றாடி விட்டுக் கொண்டிருந்தான் முத்து.

எவ்வளவு சொல்லியும் மனைவியும், மகனும் மனம் திருந்தாதது கண்டு மிகவும் வருந்தினார் முத்துவின் அப்பா.

எப்பப் பார்த்தாலும் அப்பாவுக்குக் குறை சொல்றதே வேலையாகப் போய்விட்டது என முத்துவும் பாலுவும் அப்பாவின் வருத்தத்தைப் புரிந்து கொள்ளாமல் பள்ளி விடுமுறை நாட்களில் காற்றாடி விடுவதைக் கடமையாக்கிக் கொண்டனர். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வெளியூரில் வேலை முடித்து தனது ஊருக்கு, மோட்டார் வண்டியில் வந்து கொண்டிருந்தது ஓர் இளங்கரடி. உயரமான குன்றின் மீது பல குட்டிக் குரங்குகளுடன் காற்றாடி பறக்கவிட்டு உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர் முத்துவும் பாலுவும்.

முத்துவின் காற்றாடிக்கு பாலு தன் காற்றாடி மூலம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் வெற்றி பெறுவதற்கான விளையாட்டு அது. அதற்காக அவர்கள் அந்நூலில் வஞ்சிர கோந்து, கண்ணாடிச் சில்லு தூள்கள், பாட்டரி கரி என பலவற்றைச் சேர்த்து, கத்தி போன்று கடினமாக்கி வைத்திருந்தனர். எதிர்பாராதவிதமாக முத்துவின் காற்றாடி அறுந்தது. காற்றில் அசைந்து அசைந்து காற்றாடி நூல் வண்டியில் வந்து கொண்டிருந்த இளங்கரடியின் கழுத்தை அறுத்துவிட்டது. அய்யோ! என்று அலறியது இளங்கரடி. ரத்தம் வேகமாக வெளியேறியது. அருகில் இருந்தவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது கரடி.

பயத்தில் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர் பாலுவும் முத்துவும். அவர்களின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. மறுநாள் செய்தித்தாளில் காற்றாடி நூலால் இளங்கரடி கழுத்து அறுபட்ட செய்தியும், அதற்குக் காரணமான முத்து, பாலுவின் படங்களும் வெளியாகியிருந்தன.

தனது தவறை உணர்ந்த குட்டிக் குரங்குகள் காவல் நிலையத்தில் தலைகவிழ்ந்து நின்றனர். தந்தையும் தாயும் வந்து காவலரிடம் மன்னிப்புக் கேட்டனர். இனி, பெற்றோரின் பேச்சை மீறுவதில்லை, பூமிக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை என்றும் வாக்கு அளித்தனர்.

நானும், இனி கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளையே கொண்டு செல்வேன் என முத்துவின் தாயார் கூறினார்.

இன்றைய செய்திகள்

09.04.2026

* சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்தடை அதிகரித்து வருகிறது.

* ஈரானை குறிவைத்து வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்களில் அதி நவீன ஏவுகணைகளை அமெரிக்கா குவித்து வருகிறது.

*ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் அனைத்து நாடுகள் மீதும் 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

விளையாட்டுச் செய்திகள்

*மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி.

Today's Headlines 09.04.2026

* Power outages are increasing in Chennai and the districts of Chengalpattu, Kanchipuram, and Tiruvallur.

* The United States is deploying advanced missiles at military bases in Gulf countries targeting Iran.

* Donald Trump has announced that a 50% import tariff will be imposed on all countries supplying military weapons to Iran.

SPORTS NEWS

In the Indian Premier League match between the Mumbai Indians and the Rajasthan Royals, Rajasthan won by 27 runs. With this, the Rajasthan Royals have secured the top position in the points table with 3 wins in 3 matches.

Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, April 08, 2026

TET TRB TNPSC TAMIL GRAMMAR FREE ONLINE QUIZ அடிப்படைத் தமிழ் இலக்கணம் வினாடிவினா

தமிழ்த்துகள் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

போட்டித் தேர்வுப் பயிற்சி

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

வினா: 1/20 10:00

தேர்வு முடிந்தது!

TET TRB TNPSC TAMIL ILAKKANAM VETRUMAI FREE ONLINE QUIZ தமிழ் இலக்கணம் வேற்றுமை வினாடிவினா

தமிழ்த்துகள் வேற்றுமை இலக்கணம்

வினாக்களும் விளக்கங்களும்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

வினா: 1/20 10:00

தமிழ்த்துகளின் வாழ்த்துகள்!

தேர்வு முடிந்தது.

TET TRB TNPSC TAMIL ILAKKANAM FREE ONLINE QUIZ TAMIL ILAKKIYA SORKAL தமிழ் இலக்கிய வகைச் சொற்கள் வினாடிவினா

இலக்கிய வகைச் சொற்கள் Quiz

தமிழ்த்துகள் இலக்கிய வகைச் சொற்கள் (இலக்கணம்)

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரம்: 10:00 மதிப்பெண்: 0 / 20

தேர்வு முடிந்தது!

TET TRB TNPSC TAMIL ILAKKANAM VALU FREE ONLINE TEST தமிழ் இலக்கணம் வழு & வழாநிலை வினாடிவினா

தமிழ்த்துகள் இலக்கண வினாடி வினா - வழக்கு

தமிழ்த்துகள் இலக்கணத் தேர்வு (வழு & வழாநிலை)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரம்: 10:00 மதிப்பெண்: 0/20

தேர்வு நிறைவடைந்தது!

TET TRB Psychology Quiz உளவியல் வினாடி வினா

Psychology Quiz - Tamilthugal

தமிழ்த்துகள் - உளவியல் வினாடி வினா (Psychology Quiz)

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

நேரம்:
10:00

தமிழ்த்துகளின் வாழ்த்துகள்!

AFTER SUBMIT SCROLL UP TOP SEE SCORE

ஆறாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

6th english annual exam question paper virudhunagar district 

ஏழாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் முழு ஆண்டுத் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2026

7th maths English medium question paper virudhunagar district 

ஒன்பதாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 2026

9th maths tamil medium annual exam question paper virudhunagar district 

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ எட்டாம் வகுப்பு தமிழ் வினாடி வினா தேர்வு 14

 

NEW TN TET - TNPSC - TRB 2026 8TH TAMIL 30 MARKS QUIZ 

FREE ONLINE TEST 14 link touch below👇



TN TET - TNPSC - TRB 2026 FREE ONLINE TEST 8TH TAMIL 30 MARKS எட்டாம் வகுப்பு தமிழ் இலவச இயங்கலைத் தேர்வு 14

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08.04.2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

08.04.2026. புதன்

திருக்குறள் :

பால் : பொருட்பால்

; இயல்: படையியல் ;

அதிகாரம் : படைச்செருக்கு; 

குறள் எண் : 774.

குறள் :

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.

உரை :

கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

பழமொழி :

> அறிவு வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் செல்வம்.

Knowledge is a lifelong treasure.

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி மற்றும் பயிற்சி ஆகிய இரண்டும் தான் வெற்றியை தரும்.

2. எனவே தேர்வுகள் நெருங்கும் இந்த நேரத்தில் முயற்சி எடுத்து கூடுதல் நேரம் படிப்பேன்.

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆனதில்லை. வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை. காமராஜர்.

பொது அறிவு:

01.செடிகளின் வளர்ச்சியை அறிவதற்கு பயன்படும் கருவி எது?

கிரிஸ்கோகிராஃப்- Crescograph.

02. 'என் உண்மை' என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதியவர் யார் ?

முன்னாள் பிரதமர். திருமதி.இந்திரா காந்தி 
Former Prime Minister Mrs. Indira Gandhi

English words:

commotion confused movement,

பெருங் கூச்சல், அதி உற்சாகமான அல்லது குழப்பமான இயக்கம்

concoction any foodstuff or medicines made by combining different ingredients,

வேறுபட்ட உணவு பொருட்கள் அல்லது மருந்து பொருட்களின் கலவை

தமிழ் இலக்கணம்:

தோலின் தன்மை கொண்டு அவை அழைக்கப்படும் பெயர்கள்.

1. மெல்லிய பழத் தோல் - தொலி

2. திண்ணமான பழத்தோல் - தோல்

3. வன்மையான பழத்தோல் - ஓடு

4. காய்ந்த முழு சுரையின் தோல் - குடுவை

5. நெல், கம்பின் தோல் - உமி

அறிவியல் களஞ்சியம் :

ஹீலியத்தை அதன் கொதிநிலையை விட சில டிகிரி குறைவாக, அதாவது 452 டிகிரி ஃபாரன்ஹீட் (-269 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலைக்குக் குளிர்வித்தால், அது மீப்பாய்மமாக (superfluid) மாறுகிறது. அதாவது, அதனால் உராய்வின்றி நகர முடியும். அது ஒரு கண்ணாடிக் குவளையின் ஓரங்களுக்கு மேல் உயர்ந்து செல்ல முடியும். இது மட்டுமல்ல, ஒரு கொள்கலனில் உள்ள மூலக்கூறு-மெல்லிய விரிசல்கள் வழியாகவும் அது வெளியேற முடியும். அறிவியலில் உள்ள மற்ற வியக்கத்தக்க உண்மைகளில் பிரபஞ்சத்தில் இரண்டாவது அதிக அளவில் காணப்படும் தனிமம் ஹீலியம் ஆகும்.

ஏப்ரல் 08

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் நினைவுநாள்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா Bankim Chandra Chattopadhyay பிறப்பு ஜூன் 27, 1838 - இறப்பு ஏப்ரல் 8, 1894.

ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.

நீதிக்கதை

பலசாலி முயல்

அடர்ந்த காட்டு வழியே நடந்து கொண்டிருந்த முயல், மூங்கில் குருத்துகளை உடைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த யானையைப் பார்த்தது. "வணக்கம் யானையண்ணே. இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு" என்றது. தன் காலடியில் நின்ற முயல்குட்டியை அலட்சியமாகப் பார்த்தது யானை. "என் கால் நகம் அளவுகூட இல்லாத நீ எல்லாம் என்கிட்டே பேசுற அளவு வளர்ந்துட்டியா?" என்று கடுமையாகக் கேட்டது. முயல் குட்டியின் முகம் வாடிப்போனது.

ஏன் யானை அண்ணன் தன்னிடம் இப்படி பேசியது என்று யோசித்தபடியே நடந்தது. காட்டையொட்டி இருக்கிற ஏரியில் வாழும் முதலை அக்காவிடம் கேட்கலாமே என்று எரிக்கு ஓடியது. "முதலை அக்கா..." முயலின் சத்தம் கேட்டு, தண்ணீருக்கு வெளியே எட்டிப் பார்த்தது முதலை. கடற்கரையில் இருந்த முயலைப் பார்த்து, "நீயா? என்னைக் கூப்பிட்டாயா?" என்றது.

ஆமாம் எனத் தலையாட்டியது முயல். அது அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "என் கண்ணைவிட சின்னதா இருக்கற உன்கிட்டே பேசறதுக்கு எனக்கு நேரம் இல்லை" என்று யானையை விடக் கடுமையாகப் பேசிவிட்டுத் தண்ணீருக்குள் சென்றது முதலை. முயலின் சோகம் அதிகமானது. மீண்டும் முதலையை அழைத்தது. "நான் உருவத்துல சின்னதா இருந்தாலும் பலத்துல உங்களைவிட பெரியவன். வேணும்னா ரெண்டு பேரும் நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா?" என்று கேட்டது. முதலைக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை. இருந்தாலும் போட்டிக்கு ஒப்புக்கொண்டது.

நீளமான கயிறைக் கொண்டுவந்து முதலையிடம் கொடுத்தது. "அக்கா, இந்தக் கயிற்றின் இன்னொரு முனையை நான் பிடித்துக் கொள்வேன். நான் இழு என்று சொன்னதும் நீங்கள் இழுக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு, கயிறுடன் காட்டுக்குள் ஓடியது. அங்கே இருந்த யானையையும் இதேபோல போட்டிக்கு அழைத்தது. "இதென்ன பெரிய விஷயம்? நான் ஒரு இழு இழுத்தால் நீ காணாமல் போய்விடுவாய்" என்று சொல்லிக்கொண்டே கயிறைத் தன் தும்பிக்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது யானை.

"நீங்கள் கொஞ்சம் பொறுங்கள் அண்ணா. நான் அந்தப் பக்கம் சென்று, கயிற்றின் இன்னொரு முனையைப் பிடித்துக்கொள்கிறேன். இழு என்று சொன்னதும் போட்டி தொடங்கும்" என்று சொல்லிவிட்டு, யானையின் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு புதரில் மறைந்துகொண்டது. முதலைக்கும் யானைக்கும் கேட்பதுபோல் சத்தமாக, "இழுக்கலாம்" என்று கத்தியது. உடனே அடுத்த முனையில் முயல் குட்டி இருப்பதாக நினைத்து இரண்டு விலங்குகளும் கயிறை வேகமாக இழுத்தன.

இரண்டுக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. முயலுக்கா இத்தனை வலிமை இருக்கிறது என்று நம்ப முடியாமல் கயிறை வேகமாக இழுத்தன. கொஞ்சம் விட்டால் முதலை தண்ணீரைவிட்டு வெளியே வந்துவிடும் போல இருந்தது. யானைக்கும் அப்படித்தான். தும்பிக்கையே உடைந்துவிடும் போல வலித்தது. இருந்தாலும் இரண்டும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி இழுத்தன.

பட்டென இரண்டாக அறுந்தது கயிறு. அந்த வேகத்தில் அருகில் இருந்த மரத்தில் மோதி மண்டை வீங்கியது யானைக்கு. முதலை பாறையில் மோதி சிராய்த்துக்கொண்டது. முயலின் திட்டம் புரியாமல், உருவத்தை வைத்து திறமையை எடைபோட்டுவிட்டோமே என்று நொந்தபடி யானையும் முதலையும் அதனதன் வேலையைப் பார்க்கக் கிளம்பின.

அன்று முதல் முயல் குட்டியை எங்கே பார்த்தாலும் புன்னகைத்தபடியே வணக்கம் சொன்னது யானை. முதலையும் முயல் குட்டியிடம் மரியாதையாகப் பழகியது.

இன்றைய செய்திகள் 08.04.2026

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

* இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட சுமார் 4 கோடி குழந்தைகள் உடற்பருமனுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த பாதிப்பு ஆண்டுக்கு 5% அதிகரித்து வருகிறது.

* நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை எழுதவோ அல்லது வழக்குகளில் முடிவெடுக்கவோ Al-யைபயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் & குஜராத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines - 08.04.2026

* 26 lakh people have applied for the NEET examination across the country.

* In India, about 4 crore children under the age of 19 are living with obesity. In India, this incidence is increasing by 5% every year.

*The Kerala High Court and the Gujarat Court have banned AI-initiators from writing their judgments or deciding on cases.

Sports news

The Mantekarlo Masters Tennis competition is going on in Monaco. Men's Singles Division 2nd Round: India's Stefanos Tsitsipas won the 7-5, 6-4 set and advanced to the next round.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive