கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, February 10, 2026

அழகு ஆபத்தானது ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Beauty is dangerous kathai



 tamil short story Beauty is dangerous kathai
 

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf கோவை மாவட்டம் 10TH TAMIL second revision exam 2026

  பதிவிறக்கு/DOWNLOAD 


SSLC TENTH 10TH TAMIL second revision exam question paper pdf Covai district 2026

11 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு விருதுநகர் +1 11th tamil slow learners guide mlm vnr

 



+1 11th tamil slow learners guide mlm vnr


11 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கையேடு pdf விருதுநகர் +1 11th tamil slow learners guide

 பதிவிறக்கு/DOWNLOAD


+1 11th tamil slow learners guide

minimum level material pdf virudhunagar district

12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கையேடு விருதுநகர் hsc +2 12th tamil slow learners guide

 



 hsc +2 12th tamil slow learners guide


12 ஆம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக் கையேடு pdf விருதுநகர் hsc +2 12th tamil slow learners guide

பதிவிறக்கு/DOWNLOAD


hsc +2 12th tamil slow learners guide

minimum level material pdf virudhunagar district

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.2026 செவ்வாய்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.02.2026 செவ்வாய் 

திருக்குறள்:

குறள் 502:

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு.

விளக்க உரை:

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

பழமொழி:

Knowledge is the real wealth.

அறிவே உண்மையான செல்வம்.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி:

செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு. உலகத்தை இயக்குவதும் உழைப்பே -வெப்ஸ்டர்

பொது அறிவுட்

01.இந்திய தத்துவம்" (Indian Philosophy) என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

Dr. S. Radhakrishnan

02. உலைகள் மற்றும் உருகிய உலோகங்களில் உள்ள அதிக வெப்பநிலையை அளவிடப் பயன்படுவது எது?

பைரோமீட்டர்

Pyrometer

English words:

gaze-look with administration

peek-look secretly

தமிழ் இலக்கணம்:

தோப்பா தோட்டமா?

எந்த எந்த மரம் செடி கொடிகளுக்குப் பின்னால் தோப்பு என்ற சொல் வரும் அல்லது தோட்டம் என்ற சொல் வரும். இன்று காண்போம். மிக நீண்ட நாட்கள் இருந்து பயன் தரும் மரம் செடிகள் கூட்டம் தோப்பு என்று அழைக்கப்படும் குறுகிய கால மரம் செடிகள் கூட்டம் தோட்டம் என்று அழைக்கப் படும்

எ.கா: தென்னந் தோப்பு -நீண்ட கால பயன் தரும் மரம்

வாழைத் தோட்டம் குறுகிய கால பயன் தரும் மரம்.

மாந்தோப்பு

பூந்தோட்டம்

சவுக்குத் தோப்பு

மல்லிகைத் தோட்டம்

அறிவியல் களஞ்சியம் :

நாசாவின் ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவு ராக்கெட் ஏவுதளத்திற்கு வந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில், பெர்செவரன்ஸ் ரோவர் முதன்முதலில் AI மூலம் திட்டமிடப்பட்ட பயணத்தை (AI-Planned Drive) மேற்கொண்டுள்ளது.

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.

ஒருநாள் மாலை அவன் ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி ல் தாங்கி விட்டான்.

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்து வீடு முழுவதையும் அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான்.
பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

அது வானில் ஒரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

நீதி :

உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

10.02.2026

சந்திரயான்-4 லேண்டர் தரை இறங்குவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது-இஸ்ரோ தகவல்

டிஎன்பிஎஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2,2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக ரயில் திட்டங்களுக்கு ₹7,611 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

விளையாட்டுச் செய்திகள்

டி20 உலகக் கோப்பை: ஓமனை எளிதாக வீழ்த்தியது ஜிம்பாப்வே. முதலில் பேட்டிங் செய்த ஓமன் 103 ரன்னில் சுருண்டது. ஜிம்பாப்வே 13.3 ஓவரில் சேஸிங் செய்தது.

Today's Headlines

ISRO has Informed that the Landing Site for Chandrayaan-4 Lander has been found.

TNPSC has announced that the postponed Group 2, 2A exams will be held on March 15th.
★Central government has allocated ₹7,611 crore for Tamilnadu rail projects in the budget.

*SPORTS NEWS*

T20 World Cup: Zimbabwe beat Oman easily. Batting first, Oman were bowled out for 103. Zimbabwe chased down the target in 13.3 overs.

Covai women ICT_போதிமரம்

Monday, February 09, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் புயலிலே ஒரு தோணி விரிவானம் காட்சியாக 10th tamil puyalile oru thoni virivanam


 

படிப்போம் பயன்படுத்துவோம் பத்தாம் வகுப்பு தமிழ் ஆங்கில அகர வரிசையில்



tenth tamil kalaichol arivom


 

பத்தாம் வகுப்பு தமிழ் படிப்போம் பயன்படுத்துவோம் pdf ஆங்கில அகர வரிசையில் கலைச்சொல் அறிவோம் 10th tamil

10th tamil kalaichol arivom alphabetical order sslc padippom payanpaduthuvom pdf


பதிவிறக்கு/DOWNLOAD

தேன்சிட்டு 2026 பிப்ரவரி 1 மாத இதழ் வினாடி வினா வினாவிடை then chittu February paper 1 quiz question


then chittu February paper 1 quiz question

 

தேன்சிட்டு 2026 பிப்ரவரி இதழ் 1 வினாடி வினா - வினா விடை pdf then chittu February paper 1 quiz questions and answers

then chittu February paper 1 quiz questions and answers


quiz club வினாடிவினா மன்றம் குவிஸ் கிளப்

பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.02.2026 திங்கள்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.02.2026 திங்கள் 

திருக்குறள்:

குறள் 501:

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.

விளக்க உரை:

அறம், பொருள், இன்பம், உயிருக்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

பழமொழி:

Hard paths create strong people.

கடினமான பாதைகள் வலிமையான மனிதர்களை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்:

1. உலகில் உயர்வானது அனைத்து உயிர்களிடமும் நாம் காட்டும் அன்பும் பரிவும் தான்.

2. எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம்.

பொன்மொழி :

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்

-சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு:

01.உலகின் மிகப்பெரிய பள்ளி எது?

சிட்டி மாண்டிசோரி பள்ளி லக்னோ, இந்தியா 

City Montessori School -Locknow, India

02.பூமியின் வடக்கே உள்ள கடைசி நகரம் எது?

லாங்கியர்பைன்-நார்வே

Longyearbyen- Norway.

English words:

clance-look quickly

stare -looked fixedly

அறிவியல் களஞ்சியம்:

மலிவான AI சாட்பாட்கள் குறைந்த வசதி கொண்ட இடங்களில் மருத்துவ நோயறிதலை எளிதாக்குகின்றன. தோல் மீளுருவாக்கத்திற்கு உதவும் 'rete ridges' என்ற தண்டு செல் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நீதிக்கதை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன. கோபுரத்தில் சுத்தம் வேலைகள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த்தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான். அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே... என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான். பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்....அவ்வளவுதான் என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்கிற்கு, நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக் கேற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி:ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

இன்றைய செய்திகள்

09.02.2026

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 8-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னையில் கடும் பனிமூட்டம் விமான சேவைகள் பாதிப்பு

சவுதி அரேபிய அரசு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்கி வந்த கச்சா எண்ணெயை விலையை குறைக்க (ரூ.25) முடிவு செய்து உள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

டி20 உலகக்கோப்பை: தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் இந்திய அணி புதிய சாதனை.

Today's Headlines

★ Applications for the NEET entrance exam for admission to undergraduate medical courses can be submitted till March 8 itself.

★Heavy fog in Chennai affects flight services

★ The Saudi Arabian government has decided to reduce the price of crude oil supplied to Asian countries, including India (by Rs.25).

SPORTS NEWS

T20 World Cup: India sets a new record with the most consecutive wins.

Covai women ICT_போதிமரம்

Sunday, February 08, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாதம் tamil model notes of lesson

6th tamil model notes of lesson

lesson plan February 16

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-02-2026 முதல் 20-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

எல்லாரும் இன்புற – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

பாதம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல், அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.

8.கற்றல் நோக்கங்கள்

பிறர் பொருளை விரும்பாமை ஓர் அறம் என்பதை உணர்தல்.

9.நுண்திறன்கள்

விந்தைக் கதைகள் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_47.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2021/05/paatham-thunaipaada-katturai-tamil-non.html

https://tamilthugal.blogspot.com/2020/07/paatham-6th-tamil-thunaipa.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கதைகள் பற்றிக் கூறச்செய்தல்.

சிறுகதை குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

கடமை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பாதம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். கதையை விளக்குதல். மாரியின் பண்பு பற்றிக் கூறுதல்.

          நேர்மை குறித்து மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். மாரியின் நேர்மை குறித்து விளக்குதல். வாழ்வைச் செம்மைப்படுத்தும் அறம் குறித்து அறியச் செய்தல். அதிசயக் காலணி குறித்து மாணவர்களின் கருத்துகளைக் கூறச் செய்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பசியோடிருப்பவருக்கு உதவும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விந்தைக் கதைகள் குறித்து விளக்குதல். பல்வேறு அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கப் பழகுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – சிறுமியின் காலணியின் நிறம்..............................

          ந.சி.வி – பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – அறச்செயல்களாக நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ செய்த நேர்மையான செயல்களைக் கூறு.

அதிசயக் காலணி உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என எழுதுக.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு உண்மை ஒளி tamil model notes of lesson

7th tamil model notes of lesson

lesson plan February 16

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-02-2026 முதல் 20-02-2026

2.பருவம்

3

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

ஒப்புரவு ஒழுகு – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

உண்மை ஒளி

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

படக்காட்சிகள் வழி கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

பெருந்தன்மை குறித்து அறிதல். ஜென் கதையை அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_98.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-7th-tamil-mindmap-term-3-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2021/05/unmai-oli-7th-thunaipada-katturai.html

https://tamilthugal.blogspot.com/2020/06/unmai-oli-7th-tamil-th.html

https://tamilthugal.blogspot.com/2020/04/unmai-oli-7th-virivaanam.html

11.ஆயத்தப்படுத்துதல்

உதவுதல் பற்றிக் கூறச்செய்தல்.

ஜென் தத்துவம் குறித்து அறிந்தவற்றைப் பகிர்தல்.

12.அறிமுகம்

உதவி பற்றிய கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          உண்மை ஒளி கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். உதவி செய்தல் குறித்து விளக்குதல். மாணவர்களை உண்மை ஒளி கதையைக் கூறச் செய்தல்.

          குருவின் செயலையும் திருடனின் செயலையும் ஒப்பிடுதல். மாணவர்களை நல்ல கோட்பாடுகள் குறித்து அறியச் செய்தல். தன்னலம் குறித்து விளக்குதல். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கச் செய்தல்.

          வாய்ப்பு கிடைக்கும்போது பிறருக்கு உதவுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உதவுதலின் சிறப்பு குறித்து விளக்குதல். இதே போன்ற பிற கதைகளைக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – ஜென் என்ற சொல்லின் பொருள்................................

          ந.சி.வி – உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – நீ அறிந்த ஒரு ஜென் கதையை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உண்மை ஒளி படக்கதையை நாடகமாக நடித்துக் காட்டுக.

நீங்கள் செய்த உதவிகளைப் பட்டியலிடுக.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனித யந்திரம் tamil model notes of lesson

8th tamil model notes of lesson

lesson plan February 16

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-02-2026 முதல் 20-02-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

அறத்தால் வருவதே இன்பம் –விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

மனித யந்திரம்.

6.பக்கஎண்

140 - 143

7.கற்றல் விளைவுகள்

T-814 படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்..

8.கற்றல் நோக்கங்கள்

நவீனச் சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்.

9.நுண்திறன்கள்

வறுமையிலும் செம்மை - என்னும் தலைப்பில் கதை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_38.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_87.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-virivanam-manitha-yanthiram.html

https://tamilthugal.blogspot.com/2022/11/8-pdf-8th-tamil-virivanam-manitha.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த கதையைக் கூறச்செய்தல்.

புதுமைப்பித்தன் குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

புதுமைப்பித்தனை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மனித யந்திரம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். புதுமைப்பித்தன் குறித்து விளக்குதல். மீனாட்சிசுந்தரம் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல். மாணவர்களின் நேர்மையான சூழல்களைக் கூறச் செய்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

நேர்மையான தலைவர்களின் வாழ்வியல் சூழல், தற்போதைய பெருமை, புகழ் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – புதுமைப்பித்தனின் இயற்பெயர் ..............................

          ந.சி.வி –       மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.

          உ.சி.வி – வறுமையிலும் நேர்மையாக இருந்த ஒருவர் பற்றி எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

புதுமைப்பித்தனின் கதைகளைப் பட்டியலிடுக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு யாப்பிலக்கணம் tamil model notes of lesson

9th tamil model notes of lesson

lesson plan February 16

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-02-2026 முதல் 20-02-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

என்தலைக் கடனே – கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

யாப்பிலக்கணம்

6.பக்கஎண்

164 - 166

7.கற்றல் விளைவுகள்

T-9033 செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம்வழி அறிந்து அலகிடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

செய்யுள் உறுப்புகள் அறிதல்.

9.நுண்திறன்கள்

சீர் பற்றியும் சீரின் வகைகள் பற்றியும் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/03/9-8-9th-tamil-online-test-yappilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-adi_9.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-thallai.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yappilakkanam-seer.html

https://tamilthugal.blogspot.com/2020/07/yaappilakkanam-asai.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_65.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-8-yappilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_41.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_20.html

https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html

11.ஆயத்தப்படுத்துதல்

கடந்த வகுப்பில் பயின்ற யாப்பு குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

யாப்பு இலக்கணத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          யாப்பு பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை குறித்து விளக்குதல்.

எதுகை, மோனை, இயைபு குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக அசை குறித்து உரைத்தல்.

யாப்பு குறித்துப் பேசுதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          யாப்பின் உறுப்புகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

          கவிதையின் சிறப்புகளை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       யாப்பின் உறுப்புகள் ............................... வகைப்படும்.

          ந.சி.வி – அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

உ.சி.வி – உமக்குப் பிடித்த திருக்குறளை அலகிட்டு அதன் வாய்பாடு காண்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          மூவசைச் சீரில் அமைந்த பெயர்கள் 4 எழுதுக.

          கல்வி குறித்து ஒரு கவிதை எழுதுக.

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 16 tamil model notes of lesson

10th tamil model notes of lesson

lesson plan February 16

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-02-2026 முதல் 20-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

பொதுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி, விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.

தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக;

தொடரில் அமைக்க.

நச்சப் படாதவன்’ செல்வம் - இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?

“கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்” -

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?

காதல்மிகு கேண்மையினான் யார்?

மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -  இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்

இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

அயற்கூற்றாக எழுதுக.

"கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார்.


தமிழ்த்துகள்

Blog Archive