கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 03, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தாய்மைக்கு வறட்சி இல்லை ஆகஸ்ட் 11

9th Tamil Model notes of lesson

Lesson Plan August 11

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

11-08-2025 முதல் 14-08-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உள்ளத்தின் சீர் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

தாய்மைக்கு வறட்சி இல்லை

6.பக்கஎண்

59 - 63

7.கற்றல் விளைவுகள்

T-9013 மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புகளைப் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழ்தல்.

9.நுண்திறன்கள்

தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_6.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_70.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-9-thaimaiku-varatchi-illai-pdf.html

https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_91.html

https://tamilthugal.blogspot.com/2020/08/9-9-thaymaiku-varat.html

https://tamilthugal.blogspot.com/2020/09/9-9-9th-ta.html

11.ஆயத்தப்படுத்துதல்

தாய்மை குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.

கதையாசிரியர் குறித்துக் கூறுதல்.

12.அறிமுகம்

சமுத்திரம் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.

கதையை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          தாய்மை பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          மறைந்த மனிதநேயம் குறித்து கதை மூலம் விளக்குதல்.

கதை சொல்லும் மனிதம் குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக கதையின் தாக்கம் குறித்து உரைத்தல்.

கதை குறித்து விளக்குதல். சிறுகதை நடையை மாணவர்கள் அறிதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் கதையை அறிதல், கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிறுகதைகள் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வாடாமல்லி நூலின் ஆசிரியர் ................................

          ந.சி.வி – சு.சமுத்திரம் – குறிப்பு வரைக.

உ.சி.வி – தாய்மையின் பெருமை போற்றும் கதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          தாயின் பெருமையை உணர்த்தும் நிகழ்வுகளை எழுதுக.

          உனக்குப் பிடித்த சிறுகதை குறித்து எழுதுக.


தமிழ்த்துகள்

Blog Archive