கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 31, 2024

தஞ்சை பெரிய கோயில் சனிப் பிரதோஷம் நந்தி அபிஷேகம் வழிபாடு


 

சனிப் பிரதோஷம் நந்தி அபிஷேகம் நாகலாபுரம் சிவன் கோவில்


 

ஆசிரியர் நாள் வாழ்த்து கவிதை TEACHERS DAY WISHES TO ALL TEACHERS SEPTEMBER 5 Kavithai ஆசிரியர் தினம்

முட்டையில் இருந்து வரும் குஞ்சு A chick from an egg

ஆசிரியர் நாள் வாழ்த்துக் கவிதை

 Teacher's day greeting poem

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈❤🎈

 

ஆண்டுக்கு ஆண்டு

அகிலம் கொண்டாடும்

அற்புத தினம் பல

வருகிறதே!

 

அவைஒவ் வொன்றும்

நமக்கு அழியா

அழகிய நினைவுகள்

தருகிறதே!

 

அன்பின் நினைவாய்

சில தினங்கள்..

ஆழ்ந்த வருத்தத்தில்

சில தினங்கள்.

 

இன்பம் பொங்கும்

சில தினங்கள்..

ஈகத்தை நினைத்திட

சில தினங்கள்..

 

உறவுகள் கொண்டாடும்

சில தினங்கள்...

ஊர் கூடி மகிழும்

சில தினங்கள்...

 

எத்தனை எத்தனை

தினங்களடா...

நினைத்ததும் இனித்திடும்

மனங்களடா...

 

அத்தனை தினத்திற்கும் முத்தாய்ப்பாய்

அழகிய தினம் ஒன்று உண்டென்பேன்..

 

அத்தனை தினத்தையும்

அழகாக்கும்

அதிசயம் ஆசிரியர்

தினமென்பேன்..

 

"எண்ணும் எழுத்தும்

கண் எனத் தகும்"என்று முன்னோர்கள்

சொன்னார்கள்...

 

எண்ணும் எழுத்தும்

அறிவித்தவரை

இறைவனே

என்றார்கள்...

 

அன்னைக்கும் தந்தைக்கும்

அடுத்த நிலையில்

ஆசிரியர் என்றார்கள்!

 

ஆசிரியர் காட்டிய

வழியில் தானே

அரசரும் சென்றார்கள்!

 

எரிகிற விளக்கு

என்ற போதிலும்

தூண்டுகோல் தேவையடா!

 

எழிலாய் அந்த

இடத்தில் இருப்பது

ஆசிரியர் சேவையடா!

 

உயரத்தில் ஏற்றி

உலகத்தைக் காட்டும்

உன்னத ஏணியடா!

 

எழுகடல் போன்ற

வாழ்வினைத் தாண்ட

உனக்கான தோணியடா!

 

உவமைகள் காட்டி

ஒப்பிட இயலா

உயர் பணி இதுவன்றோ!

 

உலகத்தில் உள்ள

உயர் தொழிற்கெல்லாம்

இதுவே பொதுவன்றோ!

 

எப்பிறப்பில் செய்த

எத்தவப் பயனோ

இப்பணி நமைச் சேர!

 

அப்பணிக்கே நமை

அர்ப்பணித்திடுவோம்

அகிலம் நம் பெயர் கூற!

 

 

அறிவொளி ஏற்றி

அறப்பணி ஆற்றும்

ஆசிரியர் இனம் வாழ்க!!!

 

அகம் மிக மகிழ்ந்தே

அனைவரும் வாழ்த்தும்

ஆசிரியர் தினம் வாழ்க!!!

 

 

அன்புடன்

சேவியர்

தமிழாசிரியர்

ஆலங்குடி புதுக்கோட்டை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நம் அனைவரின் பொறுப்பு தமிழ்க் கட்டுரை பேச்சு sutruchoolal pathukappu




சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு

 Environmental protection is the responsibility of all of us

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

முன்னுரை                        தமிழ்த்துகள்

          சுற்றுச்சூழல் என்பது நாம் வாழும் இந்த பூமியின் உயிர்ப்பு. சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் சிறப்பாகக் குறிக்கின்றது. இது நமக்கு காற்று, நீர், உணவு, பல்வேறு வகையான இயற்கை வளங்களை அளிக்கிறது. ஆனால், தொழில்மயமாதல், நகரமயமாதல், மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.      தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் பாதிப்பின் தீவிரம்

காடுகள் அழிப்பு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, கழிவு மேலாண்மை பிரச்சினைகள் என பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், வருங்கால சந்ததியினருக்கு வாழத் தகுதியற்ற ஒரு உலகைத்தான் நாம் விட்டுச் செல்வோம். எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.                                      தமிழ்த்துகள்

காடுகள் அழிப்பு தமிழ்த்துகள்

காடுகள் பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றன. ஆனால், மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதால் காடுகள் அழிந்து வருகின்றன. இதனால், மழைப் பொழிவு குறைந்து, வெப்பநிலை அதிகரித்து, மண் அரிப்பு ஏற்பட்டு, பல்லுயிர்ச்சூழல் பாதிக்கப்படுகிறது.            தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

நீர் மாசுபாடு                                தமிழ்த்துகள்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், குப்பைகள் ஆகியவை நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. இதனால், நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து, மனிதர்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. தமிழ்த்துகள்

காற்று மாசுபாடு

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள், கழிவு எரிப்பு ஆகியவை காற்றை மாசுபடுத்துகின்றன. இதனால், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகரிக்கின்றன. தமிழ்த்துகள்

கழிவு மேலாண்மை

பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற பொருட்கள் சிதைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். இவை நம் சுற்றுச்சூழலில் கலக்கும் போது, மண், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துகின்றன.                     தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்                  தமிழ்த்துகள்

சுத்தமான காற்று, நீர், உணவு போன்றவை நமக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு இல்லாவிட்டால், நோய்கள் அதிகரித்து, மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

பல்வேறு வகையான உயிரினங்கள் இயற்கையின் சமநிலையைப் பேணுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பு பல்வேறு உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது.             தமிழ்த்துகள்

காடுகள் அழிப்பு, புதைபடிவ எரிபொருள்களை அதிகளவில் பயன்படுத்துதல் போன்ற செயல்கள் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், கடல் மட்டம் உயர்ந்து, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகரிக்கின்றன.            தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா, விவசாயம் போன்ற துறைகள் பாதிக்கப்படுகின்றன.        தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்             தமிழ்த்துகள்

          மரங்கள் நடுவதன் மூலம் காடுகளை வளர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம்.

குளிக்கும் போது, பல் துலக்கும் போது, துணி துவைக்கும் போது நீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.     தமிழ்த்துகள்

பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்ற பொருள்களைச் சரியாகப் பிரித்து, மறுசுழற்சி செய்வதன் மூலம் கழிவு மேலாண்மை பிரச்சினையைத் தீர்க்கலாம்.            தமிழ்த்துகள்

தனிப்பட்ட வாகனங்களைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.                                     தமிழ்த்துகள்

சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.              தமிழ்த்துகள்

நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை விளக்கி, அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.            தமிழ்த்துகள்

முடிவுரை                          தமிழ்த்துகள்

          மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, இயற்கைமீதே போர் தொடுத்தால், அவன்மீது போர் தொடுக்கிறான் என்று அர்த்தம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் பொதுவான பொறுப்பாகும். தமிழ்த்துகள்

நாம் ஒவ்வொருவரும் நம் தினசரி வாழ்க்கையில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், நம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பாதுகாக்க முடியும். வருங்கால சந்ததியினருக்கு வாழத் தகுதியான ஒரு உலகை உருவாக்க வேண்டுமென்றால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயல்பட வேண்டும்.    தமிழ்த்துகள்

 

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் அனைவரின் பொறுப்பு தமிழ்க் கட்டுரை பேச்சு pdf

 பதிவிறக்கு/DOWNLOAD


Environmental protection is the responsibility of all of us tamil speech essay pdf

Friday, August 30, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் 50 மதிப்பெண்கள் வினாத்தாள் அலகுத்தேர்வு 6 இயல் 6


TENTH TAMIL UNIT TEST - 6 

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 புதிய பாடத்துடன் அலகுத்தேர்வு 6 வினாத்தாள் 50 மதிப்பெண்கள் pdf

 10th tamil unit test 6 tenth question paper new pdf


பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ்ப் பொன்மொழி கல்வியின் நோக்கம் tamil golden words quotes The purpose of education

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30.08.2024

School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30.08.2024 

திருக்குறள் :

பால்: அறத்துப்பால்  

அதிகாரம் / Chapter: புகழ் / Renown  

குறள் 240:

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய  
வாழ்வாரே வாழா தவர்.
மு.வரதராசன் விளக்கம்:

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

பொன்மொழி : 

1) நல்ல குடும்பத்தில் பிறந்தாலும்.. நல்ல வசதிகள் இருந்தாலும்.. கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்று ஆகின்றான். – சாணக்கியர்  
2) ஒரு காரியம் நிறைவேறும் வரை ஒரு உண்மையான அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். – சாணக்கியர்
, பழமொழி :

The old fox is caught at last

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் 
பொது அறிவு : 

தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?  

விடை : வேலூர்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
முக்கியச் செய்திகள் : 30.08.2024 - வெள்ளி   
மாநிலச்செய்தி:

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதை ஒட்டி, வரும் 1ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்!

உள்நாட்டுச்செய்தி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது

உலகச்செய்தி:

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு: முதலீட்டாளர்கள் சந்திப்பில் இன்று உரையாற்றுகிறார்

விளையாட்டுச்செய்தி:

பாராலிம்பிக் கோலாகல தொடக்கம்: களைகட்டியது பாரிஸ்.  

School Morning Prayer Activities in English Today
Important News:30.08.2024 - Friday   
State News:

Due to the Formula 4 car race in Chennai, the traffic will be changed until the 1st!

National News:

The Devasthanam has announced that Aadhaar is mandatory to buy Lattu Prasad at Tirupati Eyumalayan Temple

World News:

Chief Minister M.K.Stalin, who has visited Tamil Nadu to attract industrial investments, receives a warm welcome in the US: Addresses investors' meet today

Sports News:

Paralympic sensational start: Weeded Paris

Thursday, August 29, 2024

காலாண்டுத் தேர்வு பாடத்திட்டம் வகுப்பு 6-10 விருதுநகர் மாவட்டம் 2024

Quarterly exam syllabus 6th to 10th virudhunagar district 2024

நூல் வெளியீட்டு விழா வாழ்த்துக் கவிதை Congratulatory poem on book release

மனம் மயக்கும் மாலை மழை Enchanting evening rain

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-08-2024. வியாழன்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-08-2024. 
வியாழன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : அரசியல் ;

அதிகாரம்: இடுக்கண் அழியாமை ; 
குறள் எண் : 622.

குறள் :

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்.

பொருள்:

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும் அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத்துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

பழமொழி :

நற்குணமே சிறந்த சொத்து.

A good reputation is a fair estate.

இரண்டொழுக்க பண்புகள் :

1) கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.

2) எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

ஒரு கடினமான பணியின் தொடக்கத்தில் உள்ள நமது அணுகுமுறை, எல்லாவற்றையும் விட, அதன் வெற்றிகரமான முடிவை பாதிக்கும்."

வில்லியம் ஜேம்ஸ்.

பொது அறிவு :

1. நுண்ணோக்கியை முதன் முதலில் பயன்படுத்தியவர்

லியூவன் ஹுக்.

2. மரபுப் பண்புகளைக் கடத்துதலில் முக்கியப் பங்கு வகிப்பது

DNA

English words & meanings:

mantis - an insect looks like as it is praying, noun. 
மான்டிஸ். பெயர்ச் சொல்

வேளாண்மையும் வாழ்வும் :

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை "செவி" அல்லது "பதினு" எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை பதினை என்றனர்.

ஆகஸ்ட் 29

தியான் சந்த் அவர்களின் பிறந்தநாள்

✓ - Dhyan Chand.

✓பிறப்பு : அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 - இறப்பு : திசம்பர் 3, 1979.

✓இவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார்.

வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார்.

✓1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார்.

✓1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

நீதிக்கதை -மணியோசையும் மக்கள் அச்சமும்

ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு காடு இருந்தது. கிராமத்திலிருந்த ஒரு கோவிலில் உள்ள கதவில் ஒரு வெள்ளி மணி கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் ஒரு திருடன் மணியைத் திருடிக் கொண்டு காட்டிற்குள் ஓடி விட்டான். கோவிலுக்கு சொந்தமான வெள்ளி மணி காணாமல் போனதில் கிராம மக்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர். அன்று இரவு அந்த மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பல பக்கங்களிலிருந்தும் மணி ஓசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. இதைக் கேட்டு அம்மக்கள் பயந்துவிட்டனர். கோவில் மணியை திரும்பப் பெறுவதற்கு கிராம மக்கள் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கோவிலில் இருந்த தெய்வம் கோபித்துக் கொள்வதாக அந்த மக்கள் எண்ணி பயந்து போனார்கள்.

மறுநாள் கிராம மக்கள் சிலர் மணியைத் தேடி காற்றுக்குள் சென்றனர். ஆனால் மணி எங்கிருக்கிறது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஊருக்கு திரும்பினர். அந்த இரவும் அவர்களுக்கு மணியோசை கேட்டது. ஒருமுறை ஒரு திசையில் இருந்தும் அடுத்த முறை வேறு திசையில் இருந்தும் மணியோசை கேட்பது போல் அவர்களுக்கு தோன்றியது. உண்மையிலேயே அந்த மக்கள் மிகவும் நடுங்கிப் போனார்கள்.

மறுநாள், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன், உண்மையில் என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிய காட்டிற்குப் புறப்பட்டான். தனியாக காட்டுக்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு முரசு அடிக்கும் சத்தமும் மணியோசையும் கேட்டது. அவன் தைரியமாக சத்தம் வந்த திசையை நோக்கி சென்றான். அங்கு ஒரு குரங்கு கூட்டம் ஒரு முரசு, ஒரு மணி, சில உடுப்புகள் இவற்றை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருப்பதை கண்டான்.குரங்குதான் மணியை அடித்து ஓசையை எழுப்பி இருக்கிறது; மரத்திற்கு மரம் தாவுவதால் மணியோசை வெவ்வேறு திசைகளில் இருந்து கேட்கிறது என்பதையும் சிறுவன் உணர்ந்து கொண்டான். அவன் அங்கேயே பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான். ஒரு குரங்கு மணியை வைத்து விளையாடியவாரே அந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்தது ஒரு மரத்தில் உட்கார்ந்தது.

இதற்காக காத்திருந்த சிறுவன், குரங்கின் எதிரே சில பழங்களையும் கொட்டைகளையும் வீசி எறிந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு குரங்கு பழங்களையும் கொட்டைகளையும் பார்த்தது. அவற்றை எடுப்பதற்காக மரத்திலிருந்து இறங்கியது. சிறுவன் விரைந்து சென்று மணியை எடுத்துக் கொண்டான். கிராமத்திற்கு ஓடிவந்தான். காட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கிராம மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறினான். சூழலை உணர்ந்து சிந்தித்து செயல்பட்ட சிறுவனை அனைவரும் பாராட்டினார்கள்.

நீதி: எதையும் தீர விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதே நன்று.

இன்றைய செய்திகள் 29.08.2024 -

* காளான் வளர்த்தல் மற்றும் பயிரிடுதலை வேளாண் செயல்பாடுகளின் கீழ் சேர்த்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

*பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. எனவே மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

*மத்திய அரசு தடை செய்த 156 மருந்துகளை தமிழகத்தில் விற்றால் நடவடிக்கை: மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை.

* பொதுமக்கள் குறைகளை 21 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும்: புகார் மனுக்கள் குறித்து புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் முகாம்: இலங்கை கடற்படையுடன் தனித்தனியாக கூட்டுப் பயிற்சி.

* மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரீஸில் நேற்று தொடங்கியது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* 3-வது டி20 போட்டி; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்.

Today's Headlines - 29.08.2024

The Tamil Nadu government has issued a notification including mushroom growing and cultivation under agricultural activities.

As Tamil Nadu did not join the PM Sri scheme, the central government has stopped funding for school development works. Hence CM Stalin's letter to PM Modi requesting release of subsidy.

State Drug Control Department warns of action if they sell the 156 banned drugs by the central government.

Public grievances to be resolved within 21 days: Central government issues new rules on grievance petitions.

Indian, Chinese warships focked at Colombo port for Separate joint exercise with Sri Lanka Navy.

The Paralympic Games for the differently- abled started in Paris yesterday.

US Open Tennis; Spanish player Algarez advances to the next round.

West Indies beat South Africa and won the series completely in 3rd T20.

Wednesday, August 28, 2024

குற்றாலக் குறவஞ்சி கவியரங்கம் வாலிபத் தென்றலாய் கவிதை Kutralak Kuravanchi Kaviyarangam breeze

குற்றாலக் குறவஞ்சி கவியரங்கம் வசந்தவல்லி கவிதை Kutralak Kuravanchi Kaviyarangam Vasanthavalli poem

தமிழ்ப் பொன்மொழி பள்ளி tamil golden words quotes

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024

திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:621

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.


பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை.


பழமொழி :

Many hands make work light.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
இரண்டொழுக்க பண்புகள் :  
*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். 
 * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :
வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள்." - ஆல்பர்ட் ஸ்விட்சர்
பொது அறிவு : 
1. ஈஸ்ட் என்பது ஒரு______ 
விடை: பூஞ்சை 
 2. தேனீக்கள் வளர்க்கும் முறை______ 
விடை : ஏபிகல்சர்
English words & meanings :

 amiable-நட்பு,


  affable-நட்புணர்வுள்ள

வேளாண்மையும் வாழ்வும் : 
முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
நீதிக்கதை
 ஆணவத்தின் முடிவு.

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.

அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.

வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு,
“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.

இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது

” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.

இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.

சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.

சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.

இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.

 குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.

சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது. 
சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்; 

இவற்றையெல்லாம் பார்த்த காற்று  தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்து,தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.

 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.

இன்றைய செய்திகள்

28.08.2024


* கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை அறிய 'கூட்டுறவு’ என்ற செயலி சேவையை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.


* இளைய தலைமுறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்தசெயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.


* பொதுமக்களுக்கு பெரும் சுமையாகும் சுங்க கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.


* ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.


* விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன்.


* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லோரென்சோ முசெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  சபலென்காவும்

அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


* மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines


* Minister K.R. Periyakarupan inaugurates 'Cooperative' mobile app to know the services of cooperative societies.


* Tamilnadu public health department launches a project to raise awareness about the 20  benefits of regular walking among the younger generation.


* Central government was urged not to increase customs duty, which is a burden on the general public insisted by political leaders and trade associations.


*  Maharashtra government has announced that it will be the first state in the country to implement the Unified Pension Scheme (UPS) as the Unions of Central Government Employees have urged the state governments to implement the scheme.


 * Russia launches massive attack: Ukraine has been destabilized by missile and drone strikes."


 * US Open Tennis: Lorenzo Musetti and Sabalenka advance to the next round in men's and women's singles respectively.


*  Women's T20 World Cup: India   announced the team headed by Harmanpreet Kaur.

Tuesday, August 27, 2024

2024 வகுப்பு 10 தமிழ் காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 3 10th tamil Quarterly exam model question



மலரும் மொட்டுகள் Flowering buds

பத்தாம் வகுப்பு தமிழ் 2024 மாதிரி வினாத்தாள் 3 காலாண்டுத் தேர்வு pdf விருதுநகர் மாவட்டம்

 10th Tamil Quarterly Exam Model Question Paper 3 Pdf 

Tenth SSLC september 2024 Virudhunagar District


பதிவிறக்கு/DOWNLOAD

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்27-08-2024. செவ்வாய்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

27-08-2024. செவ்வாய்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : அரசியல் ; 
அதிகாரம் : காலம் அறிதல் ; 
குறள் எண் : 490.

குறள் :

கொக்கொக்க கூம்பும் பருவத்து  மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து.

பொருள்:

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல அமைதியா இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பழமொழி :

> தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய். Better to bend the neck than bruise the forehead.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன்.

2. எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

+ கல்வி என்பது ஒரு செலவு அல்ல.

அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம்.

லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன்.

பொது அறிவு:

1. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்:

100 - 120 நாள்கள் .

2. மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக.

இண்டிகா

English words & meanings :

Renowned - புகழ்பெற்ற,

Eminent - சிறந்த

வேளாண்மையும் வாழ்வும் :

ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். ஆட்டுக் கல்லில் தான் முன்னால் மாவு ஆட்டி வந்தார்கள்

நீதிக்கதை - குதிரையும் கழுதையும்

முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில், பண்ணையின் சொந்தக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு குதிரை ஒன்றும் கழுதை ஒன்றும் இருந்தன. குதிரைக்கு எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். ஆனால் கழுதைக்கு அதுபோல் கவனிப்பும், உணவும் கிடைக்கவில்லை. எனவே கழுதைக்கு எப்போதும் ஒரு மனக்கவலை இருந்தது. "நான் நன்கு வேலை செய்தும் என்னை சரியாக கவனிக்கவில்லை, ஆனால் வேலையே செய்யாமல் இருக்கும் குதிரையை மிகவும் நன்றாக கவனிக்கிறார்கள்" என்று கழுதை எண்ணியது. நாட்கள் கடந்து சென்றன, ஒரு நாள் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. பண்ணைக்காரன் தன் குதிரை மேல் ஏறி யுத்தத்திற்கு சென்றான்.

பல நாட்களுக்குப் பின் குதிரையையும், எஜமானனும் வீட்டிற்கு திரும்பினர். வீட்டிற்கு வரும்போது குதிரையின் காலில் பலமான அடிபட்டிருந்தது. காயத்தினால் உடல் புண்ணாகி இருந்த குதிரையைப் பார்க்க கழுதைக்கு மிகவும் பாவமாக இருந்தது. இதுவரை குதிரைக்கு கிடைத்த உபசரிப்பு பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்தது கழுதைக்கு புரிந்தது. கழுதை குதிரையிடம் சென்று, "நண்பா, இந்நாள்வரை உனக்கு கிடைத்த உபசரிப்பை நினைத்து நான் பொறாமை பட்டுள்ளேன். உன்னை நான் தவறாக எண்ணி உள்ளேன், தயவு செய்து என்னை மன்னித்துவிடு" என்று கூறியது.

அன்று முதல் கழுதை குதிரையிடம் நட்பாக பழகியது. இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். அதுமட்டுமில்லாமல் கழுதை தன்னை பண்ணைக்காரன் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று கழுதை வருத்தப் படவுமில்லை.

நீதி : நமக்கு கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

இன்றைய செய்திகள் 27.08.2024 -

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்.

*தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்.

* இந்திய ரயில் பாதைகள் 95% மின்மயமாக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க் ஆக உருவெடுத்துள்ளது.

* மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு

மையம் தகவல்.

* இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே முற்றும் மோதல்: பதற்றத்தை தடுக்க ஐ.நா வலியுறுத்தல்.

* ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; இந்தியாவின் தன்வி பாத்ரி 'சாம்பியன்'.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

* 2வது டி20; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.


Today's Headlines - 27.08.2024

None of those who came to Tamil Nadu from abroad have symptoms of monkeypox: Public Health Department Director informs.

Chief Minister M.K.Stalin travels to the US today to motivate investors to invest in Tamil Nadu.

Indian railways become the world's largest green railway network as 95% of trains are run by electricity.

Heavy rain warning issued for Madhya Pradesh, Rajasthan, Gujarat, Maharashtra, and South Rajasthan: by Indian Meteorological Department.

Israel-Hizbullah conflict escalates: UN urges to stop the war.

Junior Asian Badminton Championship; India's Dhanvi Bhatri won the championship.

US Open tennis tournament begins in New York City yesterday.

West Indies achieve a thrilling win, defeating South Africa in the 2nd T20.

தமிழ்த்துகள்

Blog Archive