மேற்கோள்கள்
தமிழ்ப் பொன்மொழிகள்
பொன்மொழி
சிந்தனைத் துளி
சிந்தனைத்துளிகள்
Successful student
1. கடிகாரத்தைப் பார்க்காதே. அது செய்வதை நீயும் செய் (Do not watch the clock. Do what it does. Keep going) : சோர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து விடாமல் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இரு.
2. அறிவே பலம் (Knowledge is Power): கல்வி, உனக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணர உதவும் மாபெரும் சக்தி.
3. வெற்றியாளர்கள் வெளியேறுவதில்லை; வெளியேறுபவர்கள் வெற்றியடைவதில்லை (Winners never quit and quitters never win): வெற்றி அடைய விடா முயற்சி தேவை. விட்டு ஓடினால் வெற்றி கிட்டாது.
4. கல்விக்காக செய்யும் முதலீடு சிறந்த வட்டியைப் பெற்றுத் தரும் (An investment in knowledge pays the best interest): கல்வி எனும் முதலீடு வாழ்க்கையில் நிச்சயமாக சிறந்த பலனைப் பெற்றுத் தரும்.
5. சந்தர்ப்பங்கள் தானா வருவதில்லை, நாமே உருவாக்குவது (Opportunities don't happen, you create them): முன் கூட்டியே செயல்பட்டு சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்.
6. சந்தேகம் கனவுகளைக் கொல்வது போல் தோல்வி கொல்வதில்லை (Doubts kill more dreams than failure ever will): இலக்கை அடைய தன்னம்பிக்கையே ஆதாரம். தோல்விகளை விட சந்தேகங்கள் கொடியவை.
7. சத்தமின்றி கடின உழைப்பைக் கொடு, வெற்றி ஆர்ப்பரிக்கட்டும் (Work hard in silence, let success make noise): நீ அமைதியாய் இரு. உன் சாதனைகள் பேசட்டும்.
8. ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை (Rome was not built in a day): பெரிய சாதனைகளை அடைய அதிக நேரமும் பொறுமையும் தேவை.
9. அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்க உதவாது (A smooth sea never made a skilled sailor): கஷ்டமான சூழ்நிலைகள் நமக்கு விலை மதிப்புள்ள திறமைகளையும் சோதனைகளைக் கடந்து மீண்டு வரவும் கற்றுத் தருகின்றன.
10. சேமிப்பு இல்லாத குடும்பம் கூரை இல்லாத வீட்டுக்குச் சமம்.
11.பக்திக்கும் மரியாதைக்கும் உரிய இடம் கோவில் மட்டுமல்ல. நாம் பணிபுரியும் இடமும் தான்.
12.சேமிக்கக் கற்றுக் கொள், சிக்கனம் தானாக அமையும்.
13.சொல்லில் நிதானம் சுகத்தைக் கொடுக்கும்.
14.உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது , சேவைதான் வெளிப்படுத்தும்.
15.தடைகளைத் தாண்டி செல்லுவது தான் சிறந்த வெற்றியாகும்.
16.நன்மையை பலர் விரும்புவர், உண்மையை சிலரே விரும்புவர்.
17.நம்பிக்கையும் உழைப்பும் உடையவன், எதையும் எளிதில் முடிக்க வல்லவன்.
18.ஆசையை விட்டவனுக்கு அதிகாரத்தில் நாட்டம் இருக்காது.
19.உனக்கு நீயே நீதிபதியாக இரு.
20. சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.
21.பட்டமரம் தழைக்க, பாலைவனம் பசுமை ஊற்றாக அன்பு தேவை.
22.வலிமை உண்டாவது உடல் பலத்தால் அல்ல, மனஉறுதியால்.
23.எதையும் எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இல்லை.
24.சீக்கிரம் வருவதெல்லாம் சீக்கிரம் போகும்.
25.
