கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 12, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் தொகுத்தறித் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 7th tamil exam answer key virudhunagar district term 3

 

விருதுநகர் மாவட்டப் பொதுத் தேர்வுகள்

தொகுத்தறித் தேர்வு 2023

பருவம் 3

ஏழாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி 1

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                         10X1=10

1.இ.ஒப்புரவு

2.ஈ.தாமிரபரணி

3.ஆ.எளிமை

4.இ.நாடு+என்ப

5.புடவை

6.கருணை

7.உலகம்

8.நெய்

9.குற்றாலம்

10.பாய்ச்சுதல்

 

பகுதி 2

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

11.அங்கவை, சங்கவை

 

12. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள்

பச்சையாறு

மணிமுத்தாறு

சிற்றாறு

காரையாறு

சேர்வலாறு

கடனாநதி

 

13. இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனி பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி எனப்படும்.

எடுத்துக்காட்டு – கலகல.

 

14. காக்கைக் குஞ்சு என்று எண்ணியிருந்த காக்கைக்கு அன்றைக்கு தான் அது குயில் குஞ்சு என்று தெரிந்தது.

எனவே காக்கை குயில் குஞ்சை போகச் சொன்னது.

 

15. பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

 

16. உவமை வேறு உவமைக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.

இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.

எடுத்துக்காட்டு - தமிழ்த் தேன்

 

17. பெரிய அளவில் முயற்சி இல்லாமல் வளம் தரும் நாடே சிறந்த நாடு என வள்ளுவர் கூறுகிறார்.

 

3 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              3X4=12

 

18. சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்.

இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கு உரியது.

அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார்.

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.

அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமை உடையது என்கிறது இயேசு காவியம்.

 

 

19. இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சி மொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

மிகுதியான மக்கள் பேசும் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றனர்.

சிலர் பழமை வாய்ந்த மொழியை ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர் வேறு சிலர்.

ஆனால் அந்த தலைவர் பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்றால் அது தமிழ் மொழி தான் என்று காயிதே மில்லத் உறுதியாகச் சொன்னார்.

இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் திராவிட மொழிகள் தான் இந்த மண்ணிலே முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள்.

அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப் பழமையான மொழி.

எனவே தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்.

 

20. இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தராது.

அடுக்குத்தொடர் பிரித்தால் பொருள் தரும்.

இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரு முறை மட்டுமே வரும்.

அடுக்குத்தொடரில் ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும்.

இரட்டைக்கிளவியில் சொற்கள் இணைந்து நிற்கும்.

அடுக்குத்தொடரில் சொற்கள் தனித்தனியே நிற்கும்.

இரட்டைக்கிளவி குறிப்புப் பொருளில் வரும்.

அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் காரணமாக வரும்.

 

21. மனிதர்களே விதைக்கவும் களை எடுக்கவும் அறுவடை செய்யவும் பயன்படுத்தப்பட்டனர் அன்று.

உழவு மாடுகள் செய்த வேலையை இன்று எந்திரங்கள் செய்கின்றன.

கமலை பூட்டி நீர் இறைத்தல்,  ஏற்றம் மூலம் இறைத்தல் என்ற நிலை மாறி மின்விசை மூலம் நீர் இறைக்கும் எந்திரங்கள் அப்பணியைச் செய்கின்றன.

மிகப்பெரிய அணைக்கட்டுகள் கட்டி அதில் வாய்க்கால்கள் அமைத்து பாசன முறை மேற்கொள்ளப்படுகிறது இன்று.

 

 

22. உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.

ஒப்புரவு என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.

 

 

 

5 வினாக்களுக்கு மட்டும் விடையளி                                              5X2=10

 

23.அ.செல்வம்

ஆ.கவிஞர்

 

24.பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

25.அ. தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.

 

ஆ. மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

 

26.அ. செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.

ஆ. பட்டு, கோட்டை, கோடை, கோடு, படு, படை, பட்டை.

 

 

27.அ.உள்ளங்கை நெல்லிக்கனி போல

 

ஆ.குன்றின் மேலிட்ட விளக்கு போல

 

28.அ.எத்தனை

ஆ.என்ன

 

29. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 4

அடிபிறழாமல் எழுது

 

30. புதுமை விளக்கு                                                                    4

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச்- செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று.

-        பொய்கையாழ்வார்

 

 

31. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்                                             2

சேராது இயல்வது நாடு.

 

 

பகுதி 5

ஏதேனும் 1                                 1X6=6

32, 33

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பகுதி 6

ஏதேனும் 1                                 1X6=6

34, 35

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

9th English annual exam question paper virudhunagar pdf ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 2023

பதிவிறக்கு/DOWNLOAD

8th English annual exam question paper virudhunagar pdf எட்டாம் வகுப்பு ஆங்கிலம் முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் விருதுநகர் ஆண்டு இறுதித்தேர்வு 2023

பதிவிறக்கு/DOWNLOAD

7th English third term exam question paper virudhunagar pdf summative assessment ஏழாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் பருவ தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் விருதுநகர்

பதிவிறக்கு/DOWNLOAD

6th English third term exam question paper virudhunagar pdf summative assessment ஆறாம் வகுப்பு ஆங்கிலம் மூன்றாம் பருவ தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் விருதுநகர்

பதிவிறக்கு/DOWNLOAD

Tuesday, April 11, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 9th tamil annual exam answer key virudhunagar district

 

விருதுநகர் மாவட்டப் பொதுத்தேர்வு 2023

முழு ஆண்டுத் தேர்வு

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

விடைக்குறிப்பு

பகுதி 1

சரியான விடை –                       15 X 1 = 15

1.        ஈ. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

2.       அ. பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

3.       ஆ. ஊரகத் திறனறித் தேர்வு

4.       அ. ஆராயாமை, ஐயப்படுதல்

5.       ஆ. வந்துவிட்டான், வரவில்லை

6.       ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

7.       ஈ. தொகைச்சொற்கள்

8.       இ. என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

9.       , இ. மோகன்சிங், ஜப்பானியர்

10.      இ.திருக்குறள்

11.      ஆ.பொருள் பின்வருநிலையணி

12.     அ.இராவண காவியம்

13.     ஆ.புலவர் குழந்தை

14.     ஆ.பெயரெச்சம்

15.     இ.துன்புறுதல்

 

பகுதி 2

பிரிவு 1

எவையேனும் நான்கு வினாக்கள்                  4 X 2 = 8

21 – கட்டாய வினா

 

16.     ஆறு, ஏரி, கிணறு, கண்மாய்.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

17. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ.மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் எவை?

ஆ.தொல்காப்பியர் நிலத்தைப் பிரித்த முறை எவ்வாறு அமைந்தது?

 

18. சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன் உயிர் , இறக்கும் வரை உள்ள நோய் ஆகும்.

 

19. இடம் :

மணிமேகலையின் விழாவறை காதையில் முரசு அறைந்தவன் கூறியது.      

பொருள் : 

பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள்.   

விளக்கம் :

இந்திர விழாவிற்காக புகார் நகரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று முரசு அறைந்தவன் தெரிவித்தான்.

 

20. எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஏன்?, எதற்கு?, எப்படி? என்னும் வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது பகுத்தறிவு எனப்படும்.

 

கட்டாய வினா

21. அன்புநாண்   ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

 

பிரிவு 2

எவையேனும் 5 மட்டும்              5 X 2 = 10

22. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

23. வளர்ப்பாய்

வளர்+ப்+ப்+ஆய்

வளர் – பகுதி

ப் – சந்தி

ப் – எதிர்கால இடைநிலை

ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

 

24. வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்.

கிளியே பேசு – விளித்தொடர்.

 

25.அ.சொற்றொடர்

ஆ.எழுத்துரு

 

26. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

27. அ.மதில்

ஆ.துன்பம்

 

28. அ. “நாளை வீட்டுக்கு வருவேன்,” என்று முரளி கூறினார்.

ஆ. தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்வதாக ஆசிரியர் கூறினார்.

 

பகுதி 3

 

பிரிவு 1

எவையேனும் 2 மட்டும்                       2 X 3 = 6

29. உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் ஆகும்.

          உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் ஆகும்.

 

30. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

31. அ.மலேயா, ஜப்பானியர்

ஆ.இந்திய தேசிய இராணுவம்

இ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

பிரிவு 2

எவையேனும் 2 மட்டும்                       2 X 3 = 6

 

34 – கட்டாய வினா

 

32. o  ஆடும் இளம் பெண்கள் கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.

o        மதுரையை ஆளும் மன்னனாம் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.

o        மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்க வரிகளை உடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.

o        அத்தை மகனும் மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன் முத்து மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

o        இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

 

 

33. o  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் "ஓ, என் சமகாலத் தோழர்களே!" என்னும் கவிதையில் இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

o        அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் என்கிறார்.

o        பண்டைத்தமிழரின் பெருமைகளை எல்லாம் கண்ணுக்குள்ளே பொருத்தக் கூறுகிறார்.

o        எடுப்பார் கைப்பிள்ளையாக இராமல் ஏவுகணை செலுத்துவதிலும் திறமை பெற்று இனிக் காணும் கோள்களில் கூட தமிழ் வாழ வழிவகை செய்யுங்கள் என்கிறார்.

o        கட்டுப்பாட்டை மறக்காமல் பொறுமையைக் கடைபிடிக்கக் கூறுகிறார்.

o        கூட்டுப்புழு தான் நாளை பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறக்க வேண்டாம் என்கிறார்.

 

கட்டாய வினா

34. அ. முத்தொள்ளாயிரம்

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

 

அல்லது

 

ஆ. பெரிய புராணம்

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்  குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை  வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம்  குளமெல்லாம்  கடல் அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்                            -  சேக்கிழார்

 

 

பிரிவு 3

எவையேனும் 2 மட்டும்                       2 X 3 = 6

 

35.

o        வல்லினம் இட வேண்டிய இடத்தில் இடாமல் எழுதுவதும் இட அவசியம் இல்லாத இடத்தில் இடுவதும் பொருள் வேறுபாட்டைத் தரும்.

o        கைதட்டு      -        இதில் வல்லினம் மிகாது (இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது)

o        கைத்தட்டு   -        சிறிய தட்டு  எனப்பொருள் வேறுபடுவதை அறியலாம்.

o        வாழ்த்துகள்  -        பாராட்டுகள் எனப்பொருள்படும்.

o        வாழ்த்துக்'கள்' - வல்லினம் மிக எழுதினால் வாழ்த்துவதற்காக வழங்கப்பட்ட கள் எனப் பொருள் வேறுபடும்.

o        மருந்துக்கடை - மருந்து விற்பனை செய்யும் கடை எனப் பொருள்படும்.

o        மருந்து கடை - வல்லினம் சேர்க்காமல் எழுதினால் 'மருந்தைக் கடை' என்று பொருள் வேறுபடும்.

 

 

36. ஆற்-றுவார்              நேர் நிரை              கூவிளம்

ஆற்-றல்                         நேர் நேர்                தேமா

பணி-தல்                         நிரை நேர்              புளிமா

அது-சான்-றோர்             நிரை நேர் நேர்       புளிமாங்காய்

மாற்-றா-ரை                    நேர் நேர் நேர்         தேமாங்காய்

மாற்-றும்                         நேர் நேர்                தேமா

படை                              நிரை                     மலர்

 

37. அணி –

உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவகஅணி ஆகும்.

எ.கா – இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

                வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

                அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்...

விளக்கம் –

இப்பாடலில் இன்சொல் நிலமாகவும் வன்சொல் களையாகவும் வாய்மை எருவாகவும் அன்பு நீராகவும் அறம் கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

 

பகுதி 4                                    

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 5 X 5 = 25

         

38.அ. o        அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு அப்பெருமரத்துடன் போட்டி போடுவதே வாழ்க்கைப்போர்.

o        வாழ்க்கை உறுதிபெற வேண்டுமென்றால் போட்டியிட்டு, போரிட்டே ஆக வேண்டும்.

o        பெருமரத்துடன் முட்டி மோதி மேலே செல்லும் துணிச்சலே இன்பம்.

o        முயற்சி உள்ளனவே வாழ்வில் மலர்ச்சி பெறும்.

o        நம்பிக்கை, தன்முனைப்போடு கூடிய போட்டியில் கமுகு வென்றது என வெற்றிபெறுவதற்கான வழிகளை ஆசிரியர் கூறுகிறார்.

 

ஆ. o  இன்றைய கணினிக் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் படித்தவராக இருந்தால் மட்டுமே தம் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

o        வானூர்தியைச் செலுத்தல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை என்கிறார் பாரதிதாசன்.

o        அதனை உண்மை என்று சொல்லும் நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது.

o        குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் விமானப்படை விமானத்தை இந்தியாவின் முதல் பெண் விமானப்படை விமானி அவனி சதுர்வேதி என்பவர் ஓட்டிச் சாதனை படைத்துள்ளார்.

o        "உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல் அன்றோ?", என்று கேள்வி கேட்கிறார் பெண்ணினத்தைப் பார்த்து.

o        ஆண் பெண் இருவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

o        இயற்கை வாழ்வை மறந்துவிட்டு மக்கள் செயற்கையாக வேதிப்பொருட்கள் கலந்த பொடிகளை உணவில் சுவை ஊட்டுவதற்காகச் சேர்ப்பது மாற வேண்டும்.

o        சிறுதானிய உணவுகள், காய்கறிகள், கீரைகள் சமைக்கும் விதம் அறிந்து தம்மக்களை வளர்க்க வேண்டும்.

 

39. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

அ. தலைப்பு

அனுப்புநர்

பெறுநர்

விளி

பொருள்

இப்படிக்கு

இடம், நாள்

உறைமேல் முகவரி

 

 

ஆ. தலைப்பு

முகவரி, நாள்

விளி

பொருள்

இப்படிக்கு

உறைமேல்முகவரி

 

40. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

41. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

42.அ. ஒரு முறை புத்தரும் அவருடைய சீடர்களும் தாகத்தில் இருந்தபோது அவர்கள் ஓர் ஏரிக்கரையை அடைந்தார்கள். அப்போதுதான் யாரோ ஒருவர் தன் ஆடைகளை அலசி இருந்ததால் ஏரி கலங்கியிருந்தது. எனவே தன் சீடர்களை அருகில் இருந்த மரத்தடியில் சிறிது ஓய்வு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த அரை மணி நேரத்தில் தண்ணீர் தெளிவானதைக் கண்டனர் சீடர்கள். தண்ணீரில் கலந்த களிமண் அடியில் தங்கும் வரை நீங்கள் காத்திருந்தீர்கள். அதுபோலவே தான் நம் மனமும். மனம் கலங்கும் போது அதனை தொந்தரவு செய்யாமல் சற்று ஓய்வெடுக்க விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். மீண்டும் தன் நிலைக்கு மனம் திரும்பும். நம் வாழ்வின் மிகச்சிறந்த முடிவுகளெல்லாம் அமைதியான மனது எடுத்த முடிவுகளே!

 

ஆ. பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

பகுதி 5

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                 3 X 8 = 24

 

43. அ. அல்லது ஆ

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

44. அ. அல்லது ஆ

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

45. அ. அல்லது ஆ

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive