TENTH TAMIL UNIT 1 SHORT QUESTIONS AND ANSWERS 2025 NEW
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, July 04, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா விடைகள் இயல் 1 Tenth 10TH TAMIL SHORT QUESTION ANSWER unit 1 sslc
Tenth 10TH TAMIL SHORT QUESTION ANSWER unit 1 sslc
நாட்டின் உலகளாவிய வளர்ச்சியில் காமராஜர் தமிழ்ப் பேச்சு கட்டுரை naattin ulakalaviya valarchiyil kamarajar
naattin ulakalaviya valarchiyil kamarajar tamil pechu katturai
Kamaraj in the country's global development tamil speech essay
நாட்டின் உலகளாவிய வளர்ச்சியில் காமராஜர் தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf naattin ulakalaviya valarchiyil kamarajar
naattin ulakalaviya valarchiyil kamarajar tamil pechu katturai
Kamaraj in the country's global development tamil speech essay
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-07-2025. வெள்ளி.
School morning prayer activities
04-07-2025. வெள்ளி.
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் ;
இயல்: இல்லறவியல்;
அதிகாரம் : விருந்தோம்பல் ;
குறள் எண் : 085.
குறள் :
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
விளக்கம் :
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
பழமொழி :
அறிவு என்ற தோட்டம் எப்போதும் மலர்கிறது.
Knowledge is a garden that blooms forever.
இரண்டொழுக்க பண்புகள்:
1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
ஒழுங்கு கட்டுப்பாடு, நெறிமுறைகள் இல்லாத புத்திசாலித்தனமானது, மனித இனப் பண்புக் கூறுகளிலேயே மிகவும் அபாயகரமானது. - ஜெஸ்ஸி சியாங்.
பொது அறிவு:
01.இந்தியாவில் நிலப் பகுதியை அடிப்படையாகக் கொண்ட முதல் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (Eco Sensitivity Zone) எது?
மகாபலேஷ்வர் மற்றும் பஞ்ச்கானி பகுதி-மகாராஷ்டிரா
Mahabaleshwar and Punjagani Area-Maharashtra
02. நர்மதை நதி எங்கு உற்பத்தியாகிறது?
அமர்கண்டக் மலை மத்தியப் பிரதேசம்
Amarkandak mountain Madhyapradesh
English words & Tips :
knead to press and squeeze a mixture of flour and water (dough) with your hands, மாப்பிசைதல்
Need to have to, தேவை.
Both the words are homophones.
Grammar Tips: Ways to make long sound Magic "e'
* Cape
* Bite
அறிவியல் களஞ்சியம்:
நன்னீர் அளவில் பனிமலை/ பனிக்கட்டி 69 சதவீதமும், நிலத்தடி நீர் 30.1 சதவீதமும், மேற்பரப்பு நீர் 0.3 சதவீதமும், மற்றவை 0.6 சதவீதத்தையும் கொண்டுள்ளது. மேற்பரப்பு நீரில், ஏரிகள் 87 சதவீதமும், சதுப்பு நிலங்கள் 11 சதவீதமும் மற்றும் ஆறுகள் 2 சதவீதத்தையும் கொண்டதாக உள்ளன. மொத்த ஹைட்ரோஸ்பியர் நீர்த்தொகுதியில் உத்தேச நீர் அளவு 1,360,000,000 கி.மீ3 (326,000,000 மில்லியன் 3) கன அடிகள்.
໘໑໙ 04
மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்
மேரி க்யூரி (ஆங்கிலம் : Marie Salomea Skłodowska-Curie, பிறப்பு நவம்பர் 7, 1867 -இறப்பு ஜூலை 4, 1934.
புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார்.
அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.
நீதிக்கதை
-சிறந்த ஆயுதம்
சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பாலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், "ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!" என்றார். "ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!" என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பால் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், "பீர்பால்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?" என்று கேட்டார்.
"பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!" என்றார் பீர்பால். "ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார். "இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!" என்று பீர்பால் சொல்ல, "அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?" என்று அக்பர் கேட்டார்.
"மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!" என்றார் பீர்பால். "பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?" என்று சலிப்புடன் அக்பர் கேட்க, "பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது. தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.
அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை" என்றார். பீர்பாலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், "திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?" என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். "வாள்!" என்றார் ஒருவர். "இல்லை!" என்று மறுத்த பீர்பால், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!" என்றார். "எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!" என்றார் மற்றொருவர்.
"பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!" என்றார் பீர்பால். "சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?" என்று அக்பர் கேட்க, "சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!" என்றார் பீர்கால். "வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!" என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பாலை எள்ளி நகையாடினர். "சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்றார் பீர்பால்.
மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பாலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, "பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது. அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!" என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.
உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார். வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பால் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.
வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது. தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை.
போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.
சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பாலைக் கட்டித் தழுவிக் கொண்டார். "பீர்பால்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!" என்று மனதாரப் பாராட்டினார்.
இன்றைய செய்திகள்
04.07.2025
* வேகமாக கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை: உச்சநீதிமன்றம்.
* 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
* செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம். அமெரிக்க நரம்பியல் அகாடமி எச்சரிக்கை.
* காசாவில் வான்தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 82 பாலஸ்தீனர்கள் பலி.
விளையாட்டுச் செய்திகள்
அதிவேக அரைசதம்: ரிஷப் பண்டிற்கு பிறகு, வைபவ் சூர்யவன்ஷி படைத்த அசத்தல் சாதனை.
கார் விபத்தில் பிரபல போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா பலி.
Today's Headlines - 04.07.2025
Supreme Court informed the Insurance companies that they do not have to pay compensation for the deaths of speeding drivers:
Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated 208 urban health centers
Kerala government orders to Police should not hesitate to shoot criminals
Mobile phones may cause stroke in young people. American Academy of Neurology warns.
-82 Palestinians killed in Gaza airstrikes and gunfire.
SPORTS NEWS
Fastest half-century: After Rishabh Pant, Vaibhav Suryavanshi creates an amazing feat.
Famous Portuguese footballer Diogo Jota dies in car accident.
Thursday, July 03, 2025
திருக்குறள் 172 படுபயன்... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - padupayan...
thirukural Explanation tamil & english - padupayan...
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
திருக்குறள் 171 நடுவின்றி... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - naduvinri
thirukural Explanation tamil & english - naduvinri
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-07-2025. வியாழன்
School morning prayer activities
03-07-2025. வியாழன்
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் ;
இயல்: இல்லறவியல்;
அதிகாரம் : விருந்தோம்பல் ;
குறள் எண் : 082.
குறள் :
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
விளக்கம் :
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
பழமொழி :
> யோசிக்கும் மனதின் அதிபெரிய கருவி அமைதி தான்.
Silence is the loudest tool of a thinking mind.
இரண்டொழுக்க பண்புகள்:
1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
அதிக அதிகாரம் உள்ளவர் அதை மிக மென்மையாக பயன்படுத்த வேண்டும் செனீக்கா.
பொது அறிவு :
01. உலக தடகளப் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
அஞ்சு பாபி ஜார்ஜ்-
நீளம் தாண்டுதல்
Anju Bobby George
Long jump
02. தென்னிந்தியாவின் எல்லோரா என்று அழைக்கப்படும் இடம் எது?
கழுகுமலை-தமிழ்நாடு
Kalugumalai - Tamil Nadu
English words & Tips :
+ Trustee -தர்மகர்த்தா, பொறுப்பாளி.
+ Trust -நம்பிக்கை
Grammar Tips:
Phrase - Under lock and key -பாதுகாப்பாக வைத்தல்
Usage
→ She keeps her jewellery under lock and key.
→ I keep all my secrets under lock and key
அறிவியல் களஞ்சியம் :
பசுபிக் மகா சமுத்திரம் 35.25 சதவீதத்தையும், அட்லாண்டிக் மகா சமுத்திரம் 20.09 சதவீதத்தையும், இந்து மகா சமுத்திரம் 14.65 சதவீதத்தையும் ஆக்ரமித்துள்ளன. கடல் 1.3 X 1018 டன் அளவுள்ள நீரைத் தன்வசம் கொண்டதாக இருக்கிறது.
ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
2008 ஆம் ஆண்டில், இத்தாலியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளின் குழு, ரெஸெரோவின் தலைமையில், பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கவும் முடிவு செய்தது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான வலுவான வழக்கறிஞரான, புகழ்பெற்ற பாதுகாவலர் சர் டேவிட் அட்டன்பரோவின் பிறந்தநாளை ஒட்டி, ஜூலை 3-ஆம் தேதி, முதல் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வு வெற்றிகரமாக இருந்தது, முதன்மையாக இத்தாலியில் பிளாஸ்டிக் பைகள் இல்லாத மாற்றுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தியது.
நீதிக்கதை -எதிர்கால வாழ்க்கை
ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும் மகனும் ஏதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கே என்ன நடக்கிறது?" என்று முல்லா வினவினார்.
முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் "என்றாள் தாய் வேதனையோடு.
குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன்3 எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?" என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.
நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை" என்று அடம்பிடித்தான்.
முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர். "அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?" என்று திகைப்போடு கேட்டான் பையன். "பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா" என்றார் முல்லா.
இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.
இன்றைய செய்திகள்
03.07.2025
* 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தும் பணி துவங்கி உள்ளது.
* அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு.
* இந்தியாவுடன் குறைந்த வரியில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
* தெற்காசிய நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சார்க் அமைப்பு செயலிழந்துள்ள நிலையில் தற்போது புதிய அமைப்பை உருவாக்க சீனா முயற்சி எடுத்து வருகிறது.
விளையாட்டுச் செய்திகள்
2வது டி20 போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர் அதிரடியால் இந்தியா வெற்றி.
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய 23 முன்னணி வீரர், வீராங்கனைகள்.
Today's Headlines 03.07.2025
The work of upgrading the Chennai Port Ship Terminal to handle 3,000 passengers has begun at a cost of Rs. 19.25 crore.
-New restrictions for foreign students studying in the US.
US President Trump announces a trade deal with India at a low tariff soon.
With the SAARC organization to promote integration among South Asian countries in a dysfunctional state, China is currently trying to create a new organization.
SPORTS NEWS
2nd T20-Jemimah Rodrigues, Amanjot Kaur, who leads to india's victory.
Wimbledon Tennis: 23 top players who crashed out in the first round.
Wednesday, July 02, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் தேர்வு வினாத்தாள் pdf ஜூன் 2025
பதிவிறக்கு/DOWNLOAD
Tenth tamil unit 1 marks 30 one mark test question paper chennai district 2025 pdf new syllabus june month exam
வேளாண்மை வளர்ச்சியில் காமராஜர் தமிழ்ப் பேச்சு கட்டுரை Kamaraj in agricultural development tamil speech
Kamaraj in agricultural development speech
velanmai valarchiyil kamarajar tamil pechu katturai
வேளாண்மை வளர்ச்சியில் காமராஜர் தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf velanmai valarchiyil kamarajar
velanmai valarchiyil kamarajar tamil pechu katturai
Kamaraj in agricultural development tamil speech essay
காமராஜரின் சிந்தனைகளும் செயல்களும் தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf
KAMARAJARIN SINTHANAIKALUM SEYALKALUM TAMIL PECHU KATTURAI
Kamaraja's thoughts and actions Tamil speech, article
அருப்புக்கோட்டை அருள்மிகு வராகி அம்மன் கோவில் இயந்திர யானை கஜா
நடிகை திரிஷா வழங்கிய யானை
Aruppukottai arulmigu varahi amman temple elephant kaja gifted by trisha
திருக்குறள் 170 அழுக்கற்று... குறளும் விளக்கமும் thirukural Explanation tamil & english - alukkatru
thirukural Explanation tamil & english - alukkatru
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025. புதன்
School morning prayer activities
02-07-2025. புதன்
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் ;
இயல்: இல்லறவியல்;
அதிகாரம் : அன்புடைமை ;
குறள் எண் : 077.
குறள் :
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
விளக்கம் :
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
பழமொழி :
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியின் வாளியை நிரப்பும்.
Every drop of effort fills the bucket of success.
இரண்டொழுக்க பண்புகள்:
1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
* எல்லையற்ற அதிகாரம் அபாயகரமான முறைகேட்டில் முடியும்.
எட்மண்ட் பர்க்.
பொது அறிவு :
01. இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற பானிபட் என்ற இடம் எந்த மாநிலத்தில் உள்ளது?
அரியானா (Haryana)
02. இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை துறைமுகம் எது?
மும்பை - மகாராஷ்டிரா
Mumbai - Maharashtra
English words & Tips :
* Race - competition between people or vehicle.
பந்தயம், இனம்
* Raise - to lift or move,
உயர்த்துதல்
அறிவியல் களஞ்சியம் :
புவிப்பரப்பில் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் கடல்நீரின் அளவு 97 சதவீதம் மற்றும் நன்னீரின் அளவு 3 சதவீதமாகும். சூழ்ந்துள்ள கடல்நீர் பரப்பு 1,49,400,000 சதுர கிலோ மீட்டர்கள்
ஜூலை 02
உலக விளையாட்டுத் துறை செய்தியாளர்கள் தினம்
World
SPORTS JOURNALISTS DAY
JULY-02
சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.
நீதிக்கதை
பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.
நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான்.
அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான்.
முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? என்று முனிவர் கூறினார். மன்னன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
இன்றைய செய்திகள்
02.07.2025
* யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்- மு.க.ஸ்டாலின்.
* காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு.
* மத்திய அரசின் ஆலோசனையின் படி, வட சென்னையின் வியாசர்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவை துவங்கப்பட்டு உள்ளது.
* விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி- முதலமைச்சர் உத்தரவு.
விளையாட்டுச் செய்திகள்
*ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
இங்கிலாந்து- இந்தியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.
Today's Headlines 02.07.2025
Proud moment of "Naan Muthalvan scheme" 50 out of 57 candidates who cleared the UPSC exam.
As per the advice of the Central Government, the service of 120 electric buses has been started from the Vyasarpadi workshop in North Chennai.
Rs. 4 lakh relief fund for the families of those who died in the Virudhunagar cracker factory explosion Chief Minister ordered.
Israeli attack on people waiting for food in Gaza leaves 74 innocent civilians dead.
*SPORTS NEWS*
ICC T20 Batting Rankings: Smriti Mandhana moves up to 3rd position.
England-India 2nd Test begins in Birmingham tomorrow.
Tuesday, July 01, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 01-07-2025. செவ்வாய்
School morning prayer activities
01-07-2025. செவ்வாய்
திருக்குறள் :
பால் : அறத்துப்பால் ;
இயல்: இல்லறவியல்;
அதிகாரம் : அன்புடைமை ;
குறள் எண் : 076.
குறள் :
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
விளக்கம் :
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று
கூறுவர்: ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
பழமொழி :
கேள்விகள் மலரும் போது மனம் வளர்கிறது.
The mind grows when questions bloom.
இரண்டொழுக்க பண்புகள்:
1. பெரியோர், பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.
2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
கட்டளையிடும் பதவி வேண்டுமானால் முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள் - விவேகானந்தர்.
பொது அறிவு :
01.புகழ் பெற்ற மதுராந்தகம் ஏரி எந்த மாவட்டத்தில் உள்ளது?
செங்கல்பட்டு மாவட்டம் Chengalpat district
02. இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டு வங்காள விரிகுடாவில் எத்தனை தீவுகள் உள்ளன?
572 Islands
English words & Tips :
Callous -
கடுமையான
Heartless
இரக்கமற்ற
Grammar Tips:
There are seven coordinating conjunction which can be easily remembered by a word
FANBOYS
For And Nor But Or Yet So
அறிவியல் களஞ்சியம் :
காகிதத்தின் மீது வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகிதத்தை மேல்நோக்கி தூக்கச் செல்கிறது. அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகருகிறது. இந்தக் காற்றின் செயல்பாடே பறவையை மேல்நோக்கி உயரச் செய்து பறக்க வைக்கிறது.
ஜூலை 01
(National Doctors' Day)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் நாள் (National Doctors' Day) .
ஜூலை 01
கல்பனா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்
கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.
விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை.
நீதிக்கதை -துன்பம்!
அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்.. "உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை.!" கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்.. நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!" எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்.. சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!" ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்.. ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது. இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..
நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்.!"
நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறைகூறாதீர்கள்..!
இன்றைய செய்திகள் 01.07.2025
*தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அமலுக்கு வந்தது 'வாட்டர் பெல்' திட்டம்.
*இளம் வயதினருக்கு வரும் புற்றுநோய்க்கு HPV வைரஸ் தொற்றே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு.
விளையாட்டுச் செய்திகள்
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் கோலாகல தொடக்கம்: சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு.
*கிரேட் அமெரிக்கன் பால் பார்க்கில் சின்சினாட்டி ரெட்ஸ் அணி சான் டியாகோ பேட்ரெஸை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பின்தங்கிய நிலையில் வந்தது. 9வது போட்டியில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கிய ஸ்பென்சர் ஸ்டீர் ஆட்டத்தை சமன் செய்தார்.
Today's Headlines - 01.07.2025
The 'Water Bell' scheme was implemented in schools in Tamil Nadu.
The Tamil Nadu government has announced a special incentive of ₹297 crore for those engaged in sugarcane farming.
Doctors reported as HPV virus infection is the cause of cancer in young people
Central government announces 8.2% interest rate for small savings schemes
SPORTS NEWS
Wimbledon Open Tennis: Rs. 35 crore prize money for the champion.
The Cincinnati Reds came from behind to beat the San Diego Padres 3-2 at Great American Ball Park. Trailing 2-1 in the 9th, Spencer Steer tied the game.
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson new june 2026 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
9th tamil june month weekly monthly syllabus 2026
-
6th tamil model notes of lesson lesson plan 2026 june 4 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2...
-
குற்றியலுகரம் தமிழ்த்துகள் வினாடி வினா மதிப்பெண்: 0 / 20 செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641 அடுத்த கேள்வி தேர்வ...
-
Tenth Tamil Choose the best answer book inside questions and answers 123 Unit 1 new syllabus பதிவிறக்கு/DOWNLOAD
-
9th tamil model notes of lesson june 2026 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 04-06-2026 முதல் 05-06-2026 2.பாடம் ...
-
பகுபத உறுப்பிலக்கணம் தமிழ்த்துகள் வினாடிவினா மதிப்பெண்: 0/20 செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 986544...
Blog Archive
-
▼
2026
(983)
-
▼
June
(10)
- ஐவகை நிலங்கள் five lands in Tamil
- பறவை விலங்குகள் இளமைப் பெயர்கள் தமிழ் மரபுச் சொற்க...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் மனப்பாடப்ப...
- பறவை விலங்குகள் இருப்பிடப் பெயர்கள் birds animals ...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுநல் வாடை மனப்பாடப்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 தன்னேர் இலாத தமிழ் மனப...
- இந்திய தேசியச் சின்னங்கள் Indian national emblem
- தமிழ் இலக்கணம் மெய்யெழுத்து வகைகள் tamil ilakkanam...
- தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 2 T...
- தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 1 T...
-
▼
June
(10)
