கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, June 17, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெரியபுராணம், புறநானூறு. ஜூன் 23

9th tamil model notes of lesson

lesson plan 2025 june 23

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-06-2025 முதல் 27-06-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிருக்கு வேர் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பெரியபுராணம், புறநானூறு.

6.பக்கஎண்

29 - 34

7.கற்றல் விளைவுகள்

T-9007 நீரின் வளமை, தேவையை வெளிப்படுத்தும் பாடல்களைப் படித்துணர்ந்து அக்கருத்துகளைப் பின்பற்றுதல்.

T-9008 கருத்துகளை வெளிப்படுத்தும் முறையறிந்து பேசுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

நீர் மேலாண்மையின் தேவையை உணர்தல்.

9.நுண்திறன்கள்

நீர் மேலாண்மை, இயற்கை வளங்கள் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-periya.html

https://tamilthugal.blogspot.com/2018/07/9.html

https://tamilthugal.blogspot.com/2020/07/periya-puranam-online-quiz-with-e.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-periya.html

https://tamilthugal.blogspot.com/2022/05/sekkilar.html

https://tamilthugal.blogspot.com/2020/07/puranaanooru.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மாணவர்கள் அறிந்த அணைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஐம்பூதங்களை வினவி, நீரின் முக்கியத்துவத்தைக் கேட்டல்.

இயற்கை வளங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          புறநானூறு, பெரிய புராணம், இயற்கை வளங்கள் குறித்து விளக்குதல்.

          அக்கால நீர் வளங்களை அறிதல்.

திருநாட்டுச் சிறப்புகளையும் வளங்களையும் விளக்குதல்.

நீரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.




          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இயற்கை குறித்த கவிதைகளைப் படைத்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பெரியபுராணம் நூலின் ஆசிரியர் ...................

          ந.சி.வி – உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

உ.சி.வி –      நீ அறிந்த நீர்நிலைகளின் பெயர்களைக் கூறு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          நீர்நிலைகளின் படங்களைத் தொகுத்தல்.


தமிழ்த்துகள்

Blog Archive