கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, December 13, 2020

பத்தாம் வகுப்பு திறன் அறிவோம் பலவுள் தெரிக விடைகளுடன் TENTH TAMIL BOOK BACK ONE WORD WITH ANSWERS

 பத்தாம் வகுப்பு                                தமிழ்                              பலவுள் தெரிக

இயல் 1

1.’மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது ...........

அ.வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ.பெரும் வணிகமும் பெரும் கலன்களும்  

இ.ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ.வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

விடை-              அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

2.’காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது .............

அ.இலையும் சருகும்                                 

ஆ.தோகையும் சண்டும்

இ.தாளும் ஓலையும்                  

ஈ.சருகும் சண்டும்

விடை-              ஈ. சருகும் சண்டும்

3.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ........

அ.எந் + தமிழ் + நா                       

ஆ.எந்த + தமிழ் + நா

இ.எம் + தமிழ் + நா                       

ஈ.எந்தம் + தமிழ் + நா                                

விடை-              இ. எம் + தமிழ் + நா

4.கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே .........

அ.பாடிய, கேட்டவர்                    

ஆ.பாடல், பாடிய

இ.கேட்டவர், பாடிய                    

ஈ.பாடல், கேட்டவர்

விடை-              ஈ. பாடல், கேட்டவர்

5.வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை ........

அ.குலை வகை                           

ஆ.மணி வகை

இ.கொழுந்து வகை                   

ஈ.இலை வகை

விடை-              ஆ. மணி வகை

இயல் 2

  1. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை ?

அ. உருவகம், எதுகை              

ஆ. மோனை, எதுகை

இ. முரண், இயைபு                      

ஈ. உவமை, எதுகை.                  

விடை- ஆ மோனை, எதுகை

   2. செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம் .

           செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

            செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

அ. செய்தி 1 மட்டும் சரி                            

ஆ. செய்தி 1, 2 ஆகியன சரி

இ. செய்தி 3 மட்டும் சரி                           

ஈ. செய்தி 1 3 ஆகியன சரி

விடை- ஈ செய்தி 1, 3 ஆகியன சரி

    3. பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது ?

அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்                  

ஆ. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ. கடல்நீர் ஒலித்தல்                                                                

ஈ. கடல் நீர் கொந்தளித்தல்


விடை- அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

   4. பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது ?

அ. பண்புத்தொகை                                    

ஆ. உவமைத்தொகை

இ. அன்மொழித்தொகை                       

ஈ. உம்மைத்தொகை 

விடை- இ அன்மொழித்தொகை

     5. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ. கொண்டல்              - 1.மேற்கு

ஆ. கோடை                    - 2.தெற்கு

இ. வாடை                        - 3.கிழக்கு

ஈ. தென்றல்                    - 4.வடக்கு

அ. 1,2,3,4                          

ஆ. 3,1,4,2                        

இ. 4,3,2,1                          

ஈ. 3,4,1,2

விடை- ஆ 3, 1, 4, 2

 

இயல் 3

1.பின்வருவனவற்றுள் முறையான தொடர் –

அ.தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ.தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.            

இ.தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ.தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

விடை - இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

2.சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்னும் அடியில் பாக்கம் என்பது –

அ.புத்தூர்                           

ஆ.மூதூர்                          

இ.பேரூர்                            

ஈ.சிற்றூர்

விடை - ஈ. சிற்றூர்

3.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது –

அ.வேற்றுமை உருபு                                 

ஆ.எழுவாய்                    

இ.உவம உருபு              

ஈ.உரிச்சொல்

விடை - அ. வேற்றுமை உருபு

4.காசிக்காண்டம் என்பது –

அ.காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் 

ஆ.காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ.காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

விடை - இ. காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

5.விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை –

அ.நிலத்திற்கேற்ற விருந்து                                  

ஆ.இன்மையிலும் விருந்து

இ.அல்லிலும் விருந்து                                             

ஈ.உற்றாரின் விருந்து

விடை - ஆ. இன்மையிலும் விருந்து

இயல் 4

1.உனதருளே பார்ப்பன் அடியேனே - யாரிடம் யார் கூறியது ?

அ.குலசேகராழ்வாரிடம் இறைவன்                                                

ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார்

இ.மருத்துவரிடம் நோயாளி                                                   

ஈ.நோயாளியிடம் மருத்துவர்

விடை ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார்

2.தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

தலைப்பு - செயற்கை நுண்ணறிவு                                                                 

குறிப்புகள் - கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ.தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

ஆ.குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது

இ.தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன

ஈ.குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது

விடை – அ. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

3.பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது ? 

அ.வானத்தையும் பாட்டையும்                     

ஆ.வானத்தையும் புகழையும்

இ.வானத்தையும் பூமியையும்                              

ஈ.வானத்தையும் பேரொலியையும்

விடை - ஈ. வானத்தையும் பேரொலியையும்

4.குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.                 

பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் - ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே ....................................

அ.மரபு வழுவமைதி, திணை வழுவமைதி                 

ஆ.இடவழுவமைதி, மரபு வழுவமைதி

இ.பால் வழுவமைதி, திணை வழுவமைதி                                 

ஈ.காலவழுவமைதி, இட வழுவமைதி

விடை – இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி

5.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது ?

அ.துலா              

ஆ.சீலா              

இ.குலா              

ஈ.இலா

விடை ஈ.இலா

இயல் 5

1.மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

அ.சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஆ.காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ.பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ.சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

விடை – அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

2.அருந்துணை என்பதைப் பிரித்தால் ........................                                 

அ.அருமை + துணை                               

ஆ.அரு + துணை                               

இ.அருமை + இணை                               

ஈ.அரு + இணை

விடை – அ. அருமை + துணை

3.இங்கு நகரப்பேருந்து நிற்குமா ? என்று வழிப்போக்கர் கேட்டது .............. வினா.

அதோ, அங்கே நிற்கும். என்று மற்றொருவர் கூறியது ...................... விடை.

அ.ஐயவினா, வினா எதிர் வினாதல்                                              

ஆ.அறிவினா, மறை விடை

இ.அறியா வினா, சுட்டு விடை                                           

ஈ.கொளல் வினா, இனமொழி விடை

விடை -இ. அறியா வினா, சுட்டு விடை

4.அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை - என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது ?

அ.தமிழ்              

ஆ.அறிவியல்                

இ.கல்வி            

ஈ.இலக்கியம்

விடை – இ. கல்வி

5.இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ........................ 

இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ........................................ 

அ.அமைச்சர், மன்னன்                                          

ஆ.அமைச்சர், இறைவன்          

இ.இறைவன், மன்னன்                                         

ஈ.மன்னன், இறைவன்

விடை – ஈ. மன்னன், இறைவன்

இயல் 6

1.குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............

அ.முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்                          

ஆ.குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்                       

ஈ.மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை – இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

2.ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது ?

அ.ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்                          

ஆ.ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

இ.ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

ஈ.ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்

விடை – இ. ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

3.மலர்கள் தரையில் நழுவும், எப்போது ?

அ.அள்ளி முகர்ந்தால்                               

ஆ.தளரப் பிணைத்தால்

இ.இறுக்கி முடிச்சிட்டால்                      

ஈ.காம்பு முறிந்தால்

விடை – ஆ. தளரப் பிணைத்தால்

4.கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது ?

அ.கரகாட்டம் என்றால் என்ன ?                        

ஆ.கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும் ?

இ.கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை ?

ஈ.கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?                                               

விடை – ஈ. கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?

5.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

அ.நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்              

ஆ.ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ.அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்                       

ஈ.அங்கு வறுமை இல்லாததால்

விடை – ஈ. அங்கு வறுமை இல்லாததால்

இயல் 7

1.சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ.உழவு, மண், ஏர், மாடு                                                          

ஆ.மண், மாடு, ஏர், உழவு       

இ.உழவு, ஏர், மண், மாடு                                                          

ஈ.ஏர், உழவு, மாடு, மண்

விடை – இ. உழவு, ஏர், மண், மாடு

2.மாலவன் குன்றம் போனாலென்ன ? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ.திருப்பதியும் திருத்தணியும்                                                             

ஆ.திருத்தணியும் திருப்பதியும் 

இ.திருப்பதியும் திருச்செந்தூரும்                                                         

ஈ.திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை - அ. திருப்பதியும் திருத்தணியும்

3.தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

அ.மேம்பட்ட நிருவாகத் திறன் பெற்றவர்                                                    

ஆ.மிகுந்த செல்வம் உடையவர்

இ.பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்                         

ஈ.நெறியோடு நின்று காவல் காப்பவர்

விடை – ஈ. நெறியோடு நின்று காவல் காப்பவர்

4.இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம் ..........

அ.நாட்டைக் கைப்பற்றல்                                                      

ஆ.ஆநிரை கவர்தல்

இ.வலிமையை நிலைநாட்டல்                                           

ஈ.கோட்டையை முற்றுகையிடல்

விடை – இ. வலிமையை நிலைநாட்டல்

5.தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி கருதியது .....................

அ.திருக்குறள்                               

ஆ.புறநானூறு                                               

இ.கம்பராமாயணம்                     

ஈ.சிலப்பதிகாரம்

விடை – ஈ. சிலப்பதிகாரம்

இயல் 8

1.மேன்மை தரும் அறம் என்பது ....................

அ.கைமாறு கருதாமல் அறம் செய்வது

ஆ.மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ.புகழ் கருதி அறம் செய்வது                                         

ஈ.பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை – அ. கைமாறு கருதாமல் அறம் செய்வது

2.வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் - இவ்வடி குறிப்பிடுவது ................

அ.காலம் மாறுவதை                                                                 

ஆ.வீட்டைத் துடைப்பதை

இ.இடையறாது அறப்பணி செய்தலை           

ஈ.வண்ணம் பூசுவதை

விடை – இ. இடையறாது அறப்பணி செய்தலை

3.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்

பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப் படுவோர்

அ.உதியன், சேரலாதன்                                                         

ஆ.அதியன், பெருஞ்சாத்தன்

இ.பேகன், கிள்ளிவளவன்                                                     

ஈ.நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

விடை – ஆ. அதியன், பெருஞ்சாத்தன்

4.காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் ..........................

அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது                   

ஆ.என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ.இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்                                                    

ஈ.என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

விடை – அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

5.சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ...................

அ.அகவற்பா                  

ஆ.வெண்பா                  

இ.வஞ்சிப்பா                   

ஈ.கலிப்பா

விடை அ. அகவற்பா

இயல் 9

1.இவள் தலையில் எழுதியதோ

கற்காலம் தான் எப்போதும்... இவ்வடிகளில் கற்காலம் என்பது

அ.தலைவிதி                                 

ஆ.பழைய காலம்             

இ.ஏழ்மை                     

ஈ.தலையில் கல் சுமப்பது

விடை – ஈ. தலையில் கல் சுமப்பது

2.சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ.அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்

ஆ.பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் 

இ.அறிவியல் முன்னேற்றம்                                                

ஈ.வெளிநாட்டு முதலீடுகள்

விடை – ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

3.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ....................................... வேண்டினார்.

அ.கருணையன் எலிசபெத்துக்காக                                               

ஆ.எலிசபெத் தமக்காக

இ.கருணையன் பூக்களுக்காக                                         

ஈ.எலிசபெத் பூமிக்காக

விடை – அ. கருணையன் எலிசபெத்துக்காக

4.வாய்மையே மழைநீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி

அ.உவமை                      

ஆ.தற்குறிப்பேற்றம்                  

இ.உருவகம்                   

ஈ.தீவகம்

விடை – இ. உருவகம்

5.கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது 

அ.தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

ஆ.சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

இ.அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ.அழகியலுடன் இலக்கியம் படைத்தார்

விடை – ஆ.சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.

தமிழ்த்துகள்

Blog Archive