கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, February 27, 2023

மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson march 6

 

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-03-2023 முதல் 10-02-2023

2.திருப்புதல்

1.     பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

2.    நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?                  தமிழ்த்துகள்

3.    வள்ளைப்பாட்டு என்பது நெல் குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில் என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?

4.    இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

5.    துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை? தமிழ்த்துகள்

6.    நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

7.    கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

8.    உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

9.    விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

10.  வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?

11.   உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?

12.  மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை? தமிழ்த்துகள்

13.  ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?

14.  நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

15.  அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?

16.  ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?

17.  மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?            தமிழ்த்துகள்

18.  வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?        தமிழ்த்துகள்

19.  உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?

20. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?

21.  மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.

22. மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?       தமிழ்த்துகள்

23. சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?

24. இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

25. மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

26. குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?

27. மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?

28. பூமி எப்போது பாதையாகும்?          தமிழ்த்துகள்

29. நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை? தமிழ்த்துகள்

30. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

தமிழ்த்துகள்

Blog Archive