தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, February 07, 2022
அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 விரிவானம் தமிழ்க்கட்டுரை
அறிவுசால் ஔவையார் ஆறாம் வகுப்பு தமிழ் விரிவானம் பருவம் 2 இயல் 1 விடை
6th tamil virivanam arivu saal avvaiyar question answer
அறிவுசால் ஔவையார்
கடையேழு வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
ஆத்திசூடி தந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனையில் தங்கியிருந்து தமிழ்ப்
பணி செய்து வந்தார். காட்டு வளத்தைக் கண்டு மகிழச் சென்ற அதியமான் அரிய வகை கருநெல்லிக்கனி ஒன்றை, தானே பறித்துவந்து ஔவையாருக்குக்
கொடுத்தான். அதன் சுவையைப் பாராட்டியபடியே உண்டு மகிழ்ந்தார் ஔவையார். ‘அதை உண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்டகாலம் வாழ்வார்கள்’,
என்று அமைச்சர் கூறக் கேட்டு அதிர்ந்தார் ஔவையார். நாட்டைக் காக்கும் பொறுப்பை
உடைய அதியமான் தான் உண்ணாமல் எனக்குக் கொடுத்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு அவரோ ‘புலவர்
ஒருவர் மறைந்தால் அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது; ஆனால், என்னைப்போன்ற
ஒரு அரசன் இறந்து போனால், வேறு ஒருவர் அரசராகிவிடுவார்’, என்று கூறினான். ’ஔவையாரின்
நாவில் பிறக்கும் தமிழ் என்றும் நிலைபெற்று வாழும் அதில் அதியமானின் பெயரும் ஒட்டி
இருக்கும்; அதுவே தனக்கு மகிழ்ச்சி’, என்று அவன் கூறியதைக் கேட்டு ஔவையார் உள்ளம் மகிழ்ந்தார். தமிழ்த்துகள்
ஒருநாள்
அதியமான் முகத்தில் கவலையோடு இருப்பதைக் கண்ட ஔவையார் காரணம் கேட்டார். மன்னன்
தொண்டைமான் தன் நாட்டின் மீது படையெடுத்து வர இருப்பதாகச் செய்தி அனுப்பியதைக் கூறினார்.
யானையானது தன்மீது ஏறிக் குதித்து விளையாடும் சிறுவர்களிடம் பணிந்து அன்பு காட்டும்;
அதே யானை போர்க்களத்தில் பகைவர்களைப் பந்தாடும். அதுபோல, புலவர்களிடம் அன்பு
காட்டும் அதியமானும் போர்க்களத்தில் பகைவர் படையை வெருண்டு ஓடச் செய்வது வழக்கம்.
பிறகு ஏன் பயப்படுகிறாய்? என்று அதியமானிடம் கேட்டார். அதற்கு அதியமான்,' ஒவ்வொரு போரின் போதும் எத்தனை உயிரிழப்புகள்?
தந்தையை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்மார்கள், அண்ணனை
இழந்த தம்பி தங்கைகள் என எத்தனையோ பேரின் கண்ணீர் ஒவ்வொரு போர் வெற்றிக்குப்
பின்னாலும் மறைந்து இருக்கிறது’. எனவே, இந்தப் போரைத்
தவிர்த்தால் என்ன? என்று கேட்டான். அன்பிற் சிறந்த அதியமானே! உன் உள்ளம் எனக்குப்
புரிந்தது. இப்போதே தொண்டைமானிடம் சென்று இந்தப் போர் ஏற்படாதவாறு பேசித் தடுக்கிறேன்
என்றார். தன் வீர உணர்வுக்கும் தன் மனதிற்கும் சிறிதும் இழுக்கு ஏற்படாமல் ஔவையார்
நடந்துகொள்வார் என்பதில் அதியமானுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. தமிழ்த்துகள்
தொண்டைமான் தன் படைத் தலைவரிடம்
படைவீரர்களும் போர்க் கருவிகளும் ஆயத்தமாக இருக்கின்றனவா என்று கேட்டுக்
கொண்டிருக்கும் போது ஔவையார் அவைக்குள் நுழைந்தார். சமாதானம் பேசி போரை நிறுத்த
வேண்டி தூது வந்த ஔவையே வருக! என்றான் தொண்டைமான். வரவேற்பைப் பார்த்தால் என் வருகையை எதிர்பார்த்துக்
காத்திருப்பதாகத் தோன்றுகிறதே என்றார் ஔவை. பகைவர் நாட்டிலிருந்து வந்தாலும் தமிழ்ப்
புலவரை வரவேற்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தொண்டைமான் கூறினார். தமிழ்த்துகள்
தமிழின்மீது அன்புடையவன் தொண்டைமான் என்பதை அறியும் போது தனக்கும்
மிகுந்த மகிழ்ச்சியே என்றார் ஔவை. போர்க் கருவிகளைப் பார்வையிடுவதற்காக படைக்கலக் கொட்டிலுக்கு
அவரைக் கூட்டிச் சென்றான் தொண்டைமான். வில், அம்பு, வேல்,
ஈட்டி, வாள், கேடயம், மழு என எத்தனை கருவிகள் எத்தனை வகைகள் எத்தனை எண்ணிக்கை!
பார்க்கும்போதே வியப்பாக இருக்கிறது. புத்தம் புதிதாக நெய் பூசப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டுக்
காட்சியளிக்கின்றது என்று புகழ்ந்தார் ஔவையார். தமிழ்த்துகள்
அதியமானின் படைக்கருவிகள் பற்றிச் சொல்லுங்களேன் என்று தொண்டைமான் கேட்டார்.
அதியமானின் படைக் கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர்மழுங்கியும் கொல்லன்
உலைக்களத்தில் கிடக்கின்றன. இவ்வளவு அழகாக அடுக்கி வைக்கப்படவில்லை என்றார். ஔவையாரின்
சொற்கள் தொண்டைமானைக் குழப்பி விட்டன. அதன்மூலம் அதியமான் பல்வேறு போர்களில்
பகைவர்களை வெற்றி கொண்டவன். பலம் மிகுந்த அவனோடு இதுவரை போரில் ஈடுபடாத தான்
மோதினால் அதிக இழப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பால் உணர்த்திய ஔவையாரைப் பாராட்டினான்
தொண்டைமான். போரில்லா மகிழ்ச்சியில் இந்த உலகம் திளைக்கட்டும்
என்று கூறி விடைபெற்றுச் சென்றார் ஔவையார். தமிழ்த்துகள்
மு.முத்து முருகன்,
தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.ரெட்டியபட்டி.
Sunday, February 06, 2022
Saturday, February 05, 2022
மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தமிழ்ப் பேச்சு கட்டுரை MAKKAL IYAKKA VALARCHIYIL ULLATCHI NIRVAKAM TAMIL SPEECH COMPETITION
Friday, February 04, 2022
மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகம் - பேச்சுப்போட்டி MAKKAL IYAKKA VALARCHIYIL ULLATCHI NIRVAKAM PECHU POTTI
உள்ளாட்சி மக்களின் சுய ஆட்சி என கனவு கண்டவர் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். அவரின் கனவை நிறைவேற்றும்
விதமாக இன்று இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் குறிப்பாக
நம் தமிழ்நாட்டில் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது உள்ளாட்சி.
பழந்தமிழர் காலம் தொட்டே உள்ளாட்சி அமைந்திருந்ததை நாம்
அறிந்து கொள்ள முடியும். உத்திரமேரூர் கல்வெட்டு, மக்கள் குடவோலை எனும் குடும்பு முறை அமைப்பைச் செயல்படுத்தியது
பற்றிக் குறிப்பிடுகிறது. அம்முறை இன்றைய வார்டு முறை இருப்பதைப்போல அமைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
வெளிப்படையாகவும் மக்கள் பங்கேற்கும் ஒரு சிறந்த முறையாகவும் பண்டைய காலத்தில் உள்ளாட்சி
அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.
இந்தியாவில் உள்ளாட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
ரிப்பன் பிரபு என்று பெயர் பெற்ற
சார்ஜ் பிரடரிக் சாமுவேல்
ராபின்சன் என்பவர் ஆவார். இவர் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஏற்படுத்திக்
கொடுத்த நிர்வாகச் சீர்திருத்தம், இவரின் மக்கள் பணி போன்றவற்றால் ரிப்பன் எங்கள் அப்பன்
என்று அழைக்கப்பட்டார்.
1688 இல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி
தான் இன்றைய இந்தியாவின் மிகப் பழமையான உள்ளாட்சி அமைப்பாகும். நம் தமிழகத்தில் உள்ளாட்சி
அமைப்பு முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்றும் கிராமப் புறத்தை ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம்,
மாவட்ட ஊராட்சி என்றும் மூன்று அடுக்கு முறையில் பிரிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி எனும் சுயாட்சி சிறப்பாக இருக்க வேண்டும், அதன்
அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக 1492 இல் பஞ்சாயத்து ராஜ் சட்டம்
நிறைவேற்றப்பட்டது.
மக்களாட்சியின் ஆணிவேராகத் திகழும் கிராம சபை உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கிராம மக்களின் கருத்தை அறிந்து கிராமத்தின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றுகிறது. இது ஆண்டுக்கு 4 முறை சனவரி 26, மே 1, ஆகஸ்ட்
15, அக்டோபர் 2 ஆகிய நாள்களிலும் அவசர காலங்களில் தேவைக்கேற்பவும் சிறப்பு கிராம
சபை கூட்டம் கூட்டப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி வளர்ச்சியின் ஒரு மைல்கல்லாக நமக்கு நாமே திட்டம் அமைந்துள்ளது.
கிராம மக்களின் பங்களிப்போடு அரசின் பங்களிப்புடன் கிராமத்தின் வளர்ச்சிப் பணிக்கு
இத்திட்டம் பெரிதும் உதவி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு எனும் மகத்தான திட்டம்
கிராமப்புற, நகர்ப்புற மகளிரின் பொருளாதார வேலைவாய்ப்பைப் பெருக்கக் கிடைத்த நல்ல வரம்
என்றே கூறலாம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் சுயதொழில் செய்து வேலைவாய்ப்பையும்
பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்றனர்.
வையத் தலைமை கொள் என்பதற்கு ஏற்ப பெண்கள் இன்று பல்வேறு
மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சி நிர்வாகம் செய்கின்ற நிலைக்கு உயர்ந்து இருப்பதைக் காண
முடிகிறது. தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு
2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித்
தேர்தலில் பெண்கள் முப்பத்தி எட்டு சதவீதம் இடங்களில் வெற்றி
பெற்றனர் என்பது சிறப்பான ஒன்று. 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு பெண்களுக்கு
உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம்
செய்துள்ளது.
உள்ளாட்சி என்ற அமைப்பு இருப்பதாலேயே அந்தந்த ஊராட்சி,
நகராட்சி, மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்கின்றனர்.
மேலும் மக்களின் தொடர்பு அதிகம் இருப்பதால் உடனடியான தீர்வு கிடைக்கிறது. ஊரக மக்களின்
வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் கொடுக்கக்கூடிய உன்னதமான திட்டமாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
அமைந்துள்ளது. பெண்கள்,
முதியோர், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களுக்கும் 100 நாள்கள் வேலை உறுதியை வழங்கி
அவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதில் உள்ளாட்சியின் பங்கு உன்னதமானது.
மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், குடியிருப்பு,
சாலை, தெருவிளக்கு போன்றவற்றை உடனுக்குடன் உள்ளாட்சி நிறைவேற்றி வைக்கிறது. மேலும்
ஏழை எளிய மக்கள், பெண்கள், முதியோர், மாற்றுத் திறனுடையோர் என பலதரப்பட்ட மக்களின்
வாழ்வாதாரத்திற்கும் உள்ளாட்சி தன்னுடைய பங்களிப்பைச் செய்து வருவதால் உள்ளாட்சி மக்களுக்குக்
கிடைத்த ஒரு நல்லாட்சியே. மக்கள் இயக்க வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகத்தின் பங்கு
இன்றியமையாதது.
உள்ளாட்சி காப்போம், மக்களாட்சியை
நிலைநிறுத்துவோம்.
கு.முருகேசன்,
இடைநிலையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
9ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 வீட்டிற்கோர் புத்தகசாலை 9th tamil model notes of lesson
https://tamilthugal.blogspot.com/2020/09/9-veetirkor-put.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-veetirkor-puthakasaalai-9th-katturai.html
https://tamilthugal.blogspot.com/2020/08/5-9-veetirkor-putha.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-na.html
https://tamilthugal.blogspot.com/2020/04/perarignar-annas-golden-words.html
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 7, 2022 tenth tamil model notes of lesson
Wednesday, February 02, 2022
Tuesday, February 01, 2022
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan 2026 August 3 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 03-08-2026 முதல் 07-08-2026...
-
10th tamil model notes of lesson lesson plan august 10 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-08-2026 முதல் 14-08-2026 2...
-
10th Tamil Model notes of lesson Lesson Plan August 17 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-08-2026 முதல் 21-08-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan august 10 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-08-2026 முதல் 14-08-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan 2026 August 3 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 03-08-2026 முதல் 07-08-2026...
-
9th Tamil Model notes of lesson Lesson Plan August 17 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-08-2026 முதல் 21-08-2026 2...
-
8th tamil model notes of lesson lesson plan august 3 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 03-08-2026 முதல் 07-08-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan august 3 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 03-08-2026 முதல் 07-08-2026 2.பரு...
-
10th tamil model notes of lesson lesson plan 2026 july 27 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 27-07-2026 முதல் 31-07-2026 ...
-
8th Tamil Model notes of lesson Lesson Plan August 10 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-08-2026 முதல் 14-08-2026 2....
Blog Archive
-
▼
2026
(1356)
-
▼
August
(85)
- வா புதிய சமுதாயம் படைப்போம் தமிழ்ப் பேச்சு இளையோர்...
- வா புதிய சமுதாயம் படைப்போம் தமிழ்ப் பேச்சு pdf இளை...
- காலாண்டுத் தேர்வு பாடத்திட்டம் 2026 வகுப்பு 11, 12
- தொகைச் சொற்கள் தமிழ் இலக்கணம் tamil grammar thogai...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-08-2026 விய...
- சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் swamy v...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு வினாத்தா...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு வினாத்தா...
- தந்தை பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் thanthai per...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-08-2026 புதன்
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஐந்திணை உரிப்பொருள் அ...
- DR B. R. AMBEDKAR LIFE CHART IN TAMIL IMPORTANT NO...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-08-2026 செவ...
- சீத்தலைச் சாத்தனார் வாழ்க்கைக் குறிப்புகள் seethal...
- 2026 தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வி...
- தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு வினாத்தாள் 1 வகுப்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-08-2026 திங...
- குமரகுருபரர் வாழ்க்கைக் குறிப்புகள் kumarakurubara...
- கலைத்திருவிழா வில்லுப்பாட்டு இளையோர் திறன் kalai t...
- கலைத் திருவிழா இளையோர் திறன் குழு நடனம் அமேப ஆவுடை...
- சுதந்திர தின விழா மாணவி தமிழ்ப் பேச்சு வேலுநாச்சிய...
- சுதந்திர தின விழா மாணவன் தமிழ்ப் பேச்சு Independen...
- சுதந்திர தின விழா அமேப ஆவுடையாபுரம் Happy Independ...
- முடிவு உங்கள் கையில் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெற...
- Happy Independence day ghss AVUDAIYAPURAM celebrat...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-08-2026 சனி...
- 12th quarterly exam date time table 2026 காலாண்டுத...
- பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு கால அட்டவணை 2026...
- தேன்சிட்டு 2026 ஜூலை 1 மாத இதழ் வினாடி வினா வினாவி...
- தேன்சிட்டு 2026 ஜூலை இதழ் 1 வினாடி வினா - வினா விட...
- 12th காலாண்டுத் தேர்வு கால அட்டவணை 2026
- பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு கால அட்டவணை 2026
- வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கைக் குறிப்புகள் VEL...
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கைக் குறிப்புகள் N...
- அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கைக் குறிப்புகள் Mahatma...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-08-2026 வெள்ளி
- வேலுநாச்சியாரும் இந்திய விடுதலையும் தமிழ்க் கவிதை ...
- பாரதியாரும் இந்திய விடுதலையும் தமிழ்க் கவிதை Bhara...
- நேதாஜியும் இந்திய விடுதலையும் கவிதை தமிழ்க் கவிதை ...
- தேன்சிட்டு 2026 ஜூன் 2 மாத இதழ் வினாடி வினா வினாவி...
- தேன்சிட்டு 2026 ஜூன் இதழ் 2 வினாடி வினா - வினா விட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-08-2026 விய...
- காந்தியடிகளும் இந்திய விடுதலையும் தமிழ்க் கவிதை Ma...
- கப்பலோட்டிய தமிழரும் இந்திய விடுதலையும் தமிழ்க் கவ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026 புதன்
- என்ன செய்தார் நண்பர் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெற...
- பறவைகள் விலங்குகள் ஒலி மரபுச் சொற்கள் animals and ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-08-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் பொது திணை பால் 10th...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-08-2026 திங...
- ஐந்திணைகள் தமிழ் இலக்கணம் tamil ilakkanam ainthina...
- தேன்சிட்டு 2026 ஆகஸ்டு 1 மாத இதழ் வினாடி வினா வினா...
- தேன்சிட்டு 2026 ஆகஸ்ட் இதழ் 1 வினாடி வினா - வினா வ...
- இந்தியா விடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் பேச்...
- இந்தியா விடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் பேச்...
- இந்தியா விடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்க் கவித...
- ஈகைத்திறனில் மனிதம் செழிக்கட்டும் தமிழ்ப் பேச்சு L...
- ஈகைத்திறனில் மனிதம் செழிக்கட்டும் தமிழ்ப் பேச்சுப்...
- சுதந்திர இந்தியா தமிழ்க் கவிதை suthanthira india k...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 வெள்ளி
- இந்திய சுதந்திரமும் இளைஞர் பங்கும் தமிழ்க் கவிதை I...
- திருக்குறளின் வியக்கத்தக்க அதிசயங்கள் The amazing ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-08-2026 விய...
- அனுமனின் அன்பு ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கத...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-08-2026 புதன்
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுவினா எளிய விடை இயல் 4 Te...
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க்கைக் குறிப்புகள்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-08-2026 செவ...
- சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் முக்கியக் குறிப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் திருக்குறள் குறுவினா எளிய வி...
- கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கைக் குறி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-08-2026 திங...
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கைக் குறிப்...
- இளைஞர் கையில் இந்தியா இளையோர் திறன் கலைத்திருவிழா ...
- பத்தாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட்...
- ஏழாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் 2026
- இன்பமிகு எதிர்காலம் பிறந்திடுமே... இளையோர் திறன் க...
- பேரறிஞர் அண்ணா வாழ்க்கைக் குறிப்புகள் perarignar a...
- சுதந்திர தினம் ஓவியம் Independence Day Drawing Sut...
- இயற்கை ஓவியம் Nature Drawing Iyarkai Oviyam
- மகாகவி பாரதியார் ஓவியம் Mahakavi Bharathiyar Drawi...
- ஐந்திணை தமிழ் ஓவியம் Ainthinai Tamil Drawing Oviya...
- நாட்டை உயர்த்தவே.. கலைத்திருவிழா பாடல் இளையோர் திற...
- இளைஞர் கூட்டமே... கலைத்திருவிழா பாடல் இளையோர் திறன...
-
▼
August
(85)
