கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, July 31, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் 2025


Tenth tamil weekly monthly syllabus for August 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் 2025

9th tamil August Monthly weekly syllabus 

12 ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ஜூலை 2025 விருதுநகர் மாவட்டம்

12th tamil first mid term exam question paper july 2025 virudhunagar district+2

11 ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ஜூலை 2025 விருதுநகர் மாவட்டம்

11th tamil first mid term exam question paper july 2025 virudhunagar district +1

காலாண்டுத் தேர்வு தொடக்கம் முடிவு நாள் செப்டம்பர் 2025


Quarterly exam date time table 2025 September open and close date

அரையாண்டுத் தேர்வு தொடக்கம் முடிவு நாள் டிசம்பர் 2025

Half yearly exam date time table open and close date December 2025

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ஜூலை 2025 தென்காசி மாவட்டம்

8th tamil first mid term exam question paper july 2025 tenkasi district

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ஜூலை 2025 தென்காசி மாவட்டம்

9th tamil first mid term exam question paper july 2025 tenkasi district

பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் ஜூலை 2025 தென்காசி மாவட்டம்

10th tamil first mid term exam question paper july 2025 tenkasi district

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2025. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2025. வியாழன்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல் இல்லறவியல்;

அதிகாரம் : புறங்கூறாமை ; 

குறள் எண் : 184.

குறள்

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.

விளக்கம் :

எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

பழமொழி :

உங்கள் மனநிலை தான் உங்கள் உயரத்தை தீர்மானிக்கும்.

Your attitude determines your altitude.

இரண்டொழுக்க பண்புகள்:

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.

2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

பிரார்த்தனைகளில் மிக உயர்ந்தது பொறுமை - புத்தர்.

பொது அறிவு :

01. இந்தியாவில் யாருடைய பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக(ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது?

மேஜர் தியான் சந்த் 

Major Dhyan Chand.

02. முதன் முதலில் இரும்பு கப்பலை செய்தவர் யார்?

வில்லியம் வில்கின்சன் 

William Wilkinson

English words :

Shovel a tool used for picking up and moving sand or snow.

மண் அல்லது பனி அகற்றும் கருவி

Grammar Tips:

tion rules

If the base word ends with t or te

Add 'tion'

Example

Act

action

Complete completion

Invent invention

Create creation

Solute -solution

Locate- Location

Educate- Education

Translate-Translation

Pollute- Pollution

Select -Selection

Correct Correction

அறிவியல் களஞ்சியம் :

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

நீதிக்கதை - உழைப்பின் பயன்

ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம் தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.

இன்றைய செய்திகள்

31.07.2025

* தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது- துணை முதலமைச்சர் பெருமிதம்.

* தமிழகத்தின் கிராமப்புறங்களில் செயல்படக்கூடிய டீக்கடைகள் முதல் கல்யாண மண்டபம் வரை (119 சேவை தொழில்களுக்கு) கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை பாதுகாப்பு படையினர் அதிரடி.

* இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை மக்கள் அச்சப்படவேண்டாம் என்று அறிவுறுத்தல்.

விளையாட்டுச் செய்திகள்

*கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.

இங்கிலாந்து -இந்தியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

Today's Headlines

31.07.2025

* Tamil Nadu is the leading state in attracting industrial investments - Proudly says the deputy CM.

*The Tamil Nadu government has announced that 119 service industries (from tea stalls to wedding halls) operating in rural areas of Tamil Nadu will have to pay a fee and obtain a business license.

* Security forces killed 2 terrorists in Jammu and Kashmir.

* No tsunami warning for India, people are advised not to panic.

SPORTS NEWS

India qualified for the semi-finals by defeating West Indies in the last league match.

The 5th and final Test match between England and India begins today

Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, July 30, 2025

சிறார் திரைப்படம் ஜூலை 2025

பார்க்க/பதிவிறக்க

Children film july movie link

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-07-2025. புதன்.

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

30-07-2025. புதன்.

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம் : புறங்கூறாமை ; 

குறள் எண் : 184.

குறள் :

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்.

விளக்கம் :

எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

பழமொழி :

நீ மாற்றத்தை விரும்பினால், நீயே அதற்கான முன்னோடியாக இரு.

Be the change you want to see.

இரண்டொழுக்க பண்புகள்:

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.

2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

* பொறுமையும் விடாமுயற்சியும் மலையையே புரட்டி விடும் 
- மகாத்மா காந்தி

பொது அறிவு :

01. மனித ரத்த வகைகளை கண்டுபிடித்தவர் யார்?

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 

Karl Landsteiner

02.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

Constantine Joseph Beschi

English words:

+ nostril nose passage மூக்குத் துளை;

+ odorous - sweet smelling நறுமணம் 

Grammar Tips:

She has excellent oral skills for music

In this sentence, instead of oral, we should use AURAL skills.

Oral related to the mouth.

AURAL related to the hearing.

அறிவியல் களஞ்சியம் :

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிக்கும்.

ஜூலை 30 - டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்

முத்துலட்சுமி (Muthulakshmi . பிறப்பு சூலை 30, 1886 - இறப்பு சூலை 22, 1968. மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.

நீதிக்கதை -புள்ளிமான்கள்

ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன.

அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது. எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? "நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள்" என்றன புள்ளிமான்கள். 'சரி, உங்களில் யார் திறமையானவர்கள்?' என்று கேட்டது சூரியன்.

'நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்!' என்றன புள்ளிமான்கள்.

சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது. சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது.

ஒரு புள்ளி மான் சொன்னது, "நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்" என்றது. இன்னொரு புள்ளிமானும், "நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன்" என்று சொன்னது. இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, "அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து மகிழ்ந்தன.

நீதி : நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

இன்றைய செய்திகள்

30.07.2025

* காலாண்டு, அரையாண்டு தேர்வு: அட்டவணைகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

* புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம் - பன்னாட்டுப் புலிகள் தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை.

* துருக்கியில், இதுவரை இல்லாத வகையில் 122.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால் அங்கு காட்டுத்தீ பரவி வருகிறது. காட்டுத்தீக்கு இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.

* கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 105 இந்தியர்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டுச் செய்திகள்

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

எனது சாதனை பயணம் தொடரும்: உலக கோப்பை செஸ் சாம்பியன் திவ்யா நம்பிக்கை.

Today's Headlines - 30.07.2025

* Our educational minister, Anbil Mahesh, has released the Quarterly and Half-yearly exam schedules.

* Our Chief Minister, M.K. Stalin, delivered a speech on International Tiger Day, stating that we should protect tigers, as they are the soul of our forests.

* Turkey has recorded an all-time high temperature of 122.9 degrees Fahrenheit, sparking wildfires that have killed 14 people so far.

* Over 3,000 people, including 105 Indians, have been arrested in a cyber fraud raid in Cambodia.

SPORTS NEWS

The West Indies team suffers a crushing defeat to Australia on Home Town.

My journey of achievement will continue: World Cup chess champion Divya Bhasma.

Prepared by Covai women ICT_போதிமரம்

Monday, July 28, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2025. செவ்வாய் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

29-07-2025. செவ்வாய் .

திருக்குறள் :

பால் : அறத்துப்பால் ; 

இயல்: இல்லறவியல்;

அதிகாரம்: அழுக்காறாமை ; 

குறள் எண் : 165.

குறள் :

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது.

விளக்க உரை :

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

பழமொழி :

> இன்று செய்யக்கூடியதை நாளைக்கு தள்ளி வைக்காதே. 

Don't put off until tomorrow, what you can do today.

இரண்டொழுக்க பண்புகள்:

1. இயற்கை வளங்கள் கடவுள் நமக்கு அளித்த கொடை.

2. எனவே அவற்றை பேணிப் பாதுகாப்பேன்.

பொன்மொழி :

ஒழுக்கத்தின் பெருமையை குறைப்பதை தவிர, பொறாமைக்கு வேறு தன்மை கிடையாது - லிவி.

பொது அறிவு :

01.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?

Dr.ராஜ்குமாரி அம்ரித் கவுர் .

Dr.Rajkumari Amrit Kaur

02. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர் யார்?

தாதாபாய் நௌரோஜி 

Dadhabai Naoroji

English words :

frantic - extremely frightened, doing things in hurry. 
அச்சம் கொண்ட, படபடப்புடன் செயலாற்றுகிற

Grammar Tips:

They bought potatoes. They bought meat. They bought both potatoes and meat We should use both... and When we need both things together.

அறிவியல் களஞ்சியம் :

எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.

ஜூலை 29 பன்னாட்டுப் புலி நாள்

INTERNATIONAL

Tiger

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.

நீதிக்கதை -கிணற்றில் விழுந்த நரி

ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்தது. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தது நரி. பத்து நாட்கள் கடந்து போனது. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே... மே...ன்னு கத்திக்கொண்டே வந்தது.

உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைத்து எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்தது. என்ன நரியாரே... தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே... சே... நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணற்றுக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணற்றுத் தண்ணீர் ரொம்ப சுவையாக இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சுப்பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை.

உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே... இந்தத் தண்ணீர் சுவையா ஒன்னும் இல்லையே... உன்னை நம்பி வந்தேன் பாரு... இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம்... கையை கொடு... என்னைச் சீக்கிரமா காப்பாத்து... என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.

இன்றைய செய்திகள்

29.07.2025

* சென்னையில் மாணவர்கள், மகளிருக்கு சிறப்பு பஸ் சேவைகள்-போக்குவரத்துக் கழகம் பரிசீலனை.

* உதகையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

* பட்டினியில் உயிரிழக்கும் காசா மக்கள்.. 3 இடங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்.

*விளையாட்டுச் செய்திகள்

பெண்கள் உலகக் கோப்பை செஸ்: சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்.

*ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

Today's Headlines - 29.07.2025

* Transport Corporation of Chennai has considered special bus services for students and women.

*The continuous heavy rains in Ooty have affected the normal life of the People.

* Israel announced a temporary ceasefire in 3 locations as the people in Gaza are dying of hunger.

SPORTS NEWS

Women's World Cup Chess: Divya Deshmukh won the championship.

In the cricket series, India and Pakistan are in the Asia Cup Group A.

Prepared by

Covai women ICT போதிமரம் 

Today's punch involvement golden lines


 

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கோபல்லபுரத்து மக்கள் ஆகஸ்ட் 4

10th tamil model notes of lesson

lesson plan august 4

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-08-2025 முதல் 08-08-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கூட்டாஞ்சோறு – விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

கோபல்லபுரத்து மக்கள்.

6.பக்கஎண்

54 - 58

7.கற்றல் விளைவுகள்

T-1011 சிற்றூர் மக்களின் வாழ்வியல் முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்து கொள்ளுதல், அதுசார்ந்து கலந்துரையாடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கிராமத்து விருந்தோம்பல் குறித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

பகிர்ந்தளிக்கும் கிராமத்து மனிதநேயத்தை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/12/3-10th-tamil-online-test-with.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-kopallapurathu.html

https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_5.html

https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-viriva.html

https://tamilthugal.blogspot.com/2023/07/pdf-3-kopalapurathu-makkal10th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-3-10_19.html

https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_12.html

https://tamilthugal.blogspot.com/2024/12/ai-10_8.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-3-kopalla.html

https://tamilthugal.blogspot.com/2024/06/3.html

11.ஆயத்தப்படுத்துதல்

          கிராமத்து விருந்தோம்பல் குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.

12.அறிமுகம்

கி.ராஜநாராயணனை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          கோபல்லபுரத்து மக்கள் கதையின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          புதியவர்களை வரவேற்றல் – விருந்தளித்தல் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          வட்டார வழக்குச் சொற்களை அறிதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       மகுளி என்பது .......................

ந.சி.வி – விருந்தோம்பலை விளக்குக.

உ.சி.வி –      அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள

பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

உணவு குறித்த பழமொழிகளைத் திரட்டுதல்.

விருந்தினர் குறித்து அறிந்து வருதல்.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்கழிப் பெருவிழா ஆகஸ்ட் 4

9th tamil model notes of lesson

lesson plan august 4

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-08-2025 முதல் 08-08-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

உள்ளத்தின் சீர் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

மார்கழிப் பெருவிழா.

6.பக்கஎண்

57 - 58

7.கற்றல் விளைவுகள்

T-9012 விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர்தம் பண்பாட்டு அடையாளத்தை உணர்தல்.

9.நுண்திறன்கள்

வழிபாடு குறித்து அறிதல்.

விழா நிகழ்வுகளைப் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_0.html

https://tamilthugal.blogspot.com/2022/05/andal.html

https://tamilthugal.blogspot.com/2024/12/7-7.html

https://tamilthugal.blogspot.com/2024/12/7-7_21.html

https://tamilthugal.blogspot.com/2024/12/4-4_12.html

https://tamilthugal.blogspot.com/2024/12/4-4_15.html

11.ஆயத்தப்படுத்துதல்

          மார்கழி மாத வழிபாடுகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

ஆண்டாள் குறித்து வினவி, திருப்பாவையை அறிமுகப்படுத்துதல்.

மாணிக்கவாசகர் பற்றிக் கூறி, திருவெம்பாவையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          இலக்கியங்களில் வழிபாடு குறித்து அறியச் செய்தல்.

          திருப்பாவை பாடல் குறித்து விளக்குதல். வழிபாடு குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          திருவெம்பாவை பாடல் குறித்து விளக்குதல். சைவ, வைணவம் குறித்து மாணவர்கள் அறிதல்.

தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          விழா குறித்த பாடல்களைப் படைத்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ...............................

          ந.சி.வி –       திருவெம்பாவை - விளக்குக.

உ.சி.வி –      திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

ஆனைச்சாத்தான் குருவி பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.

ஆண்டாள் பற்றிய தகவல்களை அறிதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புத்தியைத் தீட்டு ஆகஸ்ட் 4

8th tamil model notes of lesson

lesson plan august 4

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-08-2025 முதல் 08-08-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கல்வி கரையில - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

புத்தியைத் தீட்டு

6.பக்கஎண்

50-51

7.கற்றல் விளைவுகள்

T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.

8.திறன்கள்

அறிவின் பெருமையை விளக்கும் பாடலைப் படித்தல்

9.நுண்திறன்கள்

கல்வியின் பெருமை குறித்த ஔவையார் பாடல்கள் , திருக்குறள் கதைகள்  போன்றவற்றைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

          https://tamilthugal.blogspot.com/2021/05/4-8th-tamil-puthiyai-theettu-kuruvina.html

          https://tamilthugal.blogspot.com/2025/07/3_28.html

          https://tamilthugal.blogspot.com/2025/07/3.html

11.ஆயத்தப்படுத்துதல்

கல்வி குறித்த பழமொழிகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கல்வி குறித்து விளக்கி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அறிவு, அன்பால் பிறரை வெல்லும் வெற்றி குறித்த தகவல்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

அறிவின் பெருமையை விளக்கும் பாடலைப் படித்தல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வி அறிவு குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கோயிலப்பா – பிரித்து எழுதுக ..............................

          ந.சி.வி – யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

          உ.சி.வி – கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைப் பட்டியலிடுக.


எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 புத்தியைத்தீட்டு கற்பித்தல் துணைக்கருவி

 8th tamil teaching aid tlm



எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 புத்தியைத்தீட்டு மனவரைபடம் 8th tamil mind map puthiyai theetu

 8th tamil mind map puthiyai theetu



ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தேசியம் காத்த செம்மல் ஆகஸ்ட் 4

7th tamil model notes of lesson

lesson plan august 4

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-08-2025 முதல் 08-08-2025

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

நாடு அதை நாடு – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்

6.பக்கஎண்

51-55

7.கற்றல் விளைவுகள்

T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.

8.திறன்கள்

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவரைப் பற்றி அறியும் திறன்

நாட்டுக்குழைத்த தலைவர்களின் வரலாறு மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_38.html

https://tamilthugal.blogspot.com/2022/08/blog-post_16.html

https://tamilthugal.blogspot.com/2020/04/pasumpon-muthurama.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-muthuramalinga-thevar.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்டம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் வீரத்தைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

முத்துராமலிங்கத்தேவர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் இளமைப்பருவம் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். அவரின் பல்துறை ஆற்றல்கள் குறித்துக் கூறி, அவை பற்றி மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல். வாய்ப்பூட்டுச்சட்டம் குறித்து விளக்குதல். நேதாஜி குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் கூறச் செய்தல்.

          முத்துராமலிங்கத்தேவரின் பேச்சாற்றல் குறித்து விளக்குதல். அவரின் தேர்தல் வெற்றிகளைப் பட்டியலிடுதல். குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு, ஆலயநுழைவுப் போராட்டம் பற்றி விரிவாக விளக்குதல். சிறைவாசம், பெண்கள்மேல் மதிப்பு போன்ற நிகழ்வுகளைக் கூறுதல்.

          பாடப்பொருள் மூலம் கண்டறிந்த சிறப்புக் கூறுகளை மாணவர்கள் விளக்குதல். இந்திய விடுதலையில் தமிழகத்தின் பங்கினை அறிதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விடுதலைப் போராட்டங்களை அறியச் செய்தல். தமிழரின் வீரத்தை உணரச் செய்தல். விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை உணர்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ..............................

                   முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் ....................................

          ந.சி.வி – முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

                   வாய்ப்பூட்டுச் சட்டம் குறித்து எழுதுக.

உ.சி.வி – நல்ல தலைவருக்கான பண்புகளாக நீ எண்ணுபவற்றை எழுதுக.

                   உனக்குப் பிடித்த விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து எழுதுக.

முத்துராமலிங்கத்தேவர் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive