கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 26, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பூத்தொடுத்தல் நவம்பர் 3

 7th tamil model notes of lesson

lesson plan November 3

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பூத்தொடுத்தல்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தைத் தம் சொந்தச் சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்தல்,

8.கற்றல் நோக்கங்கள்

கவிதையைப் படித்து அதன் மையக் கருத்தை அறிந்து எழுதுதல்.

9.நுண்திறன்கள்

புதுக்கவிதைகளைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2023/08/10th-tamil-ppt-power-point-presentation_22.html

https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-6_17.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_60.html

https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_25.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-poothoduthal.html

https://tamilthugal.blogspot.com/2025/10/2-2_21.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த பூக்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

புதுக்கவிதையை நயத்துடன் அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பூத்தொடுத்தல் கவிதையை விளக்குதல். கவிதை நயத்தை உணர்த்துதல். அழகுணர்ச்சி குறித்து மாணவர்கள் அறிந்த தகவல்களைக் குழுவாகக் கூறச் செய்தல்.

          மலர் குறித்தும் வேலை குறித்தும் மாணவர்கள் பேசுதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், சங்கப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

புதுக்கவிதைகளை உணர்ந்து படித்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி       கவிஞர் உமா மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தவர்?

          ந.சி.வி – மலர்கள் எப்போது தரையில் நழுவும்?

உ.சி.வி – பூக்களைக் கொய்யும்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மாலை தொடுக்க உதவும் பூக்களின் பெயர்களை அறிந்து எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive