8th tamil model notes of lesson
lesson plan October 27
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-10-2025 முதல் 31-10-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
குழலினிது யாழினிது – கற்கண்டு, வாழ்வியல்
5.உட்பாடத்தலைப்பு
எச்சம், திருக்குறள்.
6.பக்கஎண்
81 - 90
7.கற்றல் விளைவுகள்
T-821 படிப்பவரின் தரம், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்திற்கொண்டு பயன் விளையுமாறு தன்னைத்தானே
வெளிப்படுத்துதல்,
T-816 மொழி பற்றிய
நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை
மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)
8.கற்றல் நோக்கங்கள்
பாடப்பகுதியில் இடம்பெறும் எச்சங்களைக் கோடிட்டு தெரிநிலைப்
பெயரெச்சங்களைப் பட்டியலிட்டு
எழுதுதல்.
திருக்குறள் பாடல்களைச் சீர்பிரித்தும் பொருளுணர்ந்தும் படித்தல்.
9.நுண்திறன்கள்
கொடுக்கப்பட்ட எச்சங்களில் குறிப்புப் பெயரெச்சச் சொற்களைக் கண்டறிந்து எளிய சொற்றொடர்களை அமைத்தல்.
திருக்குறள்களை வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/echam-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_31.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-1-3.html
https://tamilthugal.blogspot.com/2021/07/3-echam-8th-tamil-ilakkanam-vina-vidai.html
https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html
https://tamilthugal.blogspot.com/2025/10/4_20.html
11.ஆயத்தப்படுத்துதல்
திருக்குறள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
எச்ச வகைகளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
எச்சம் குறித்து
மாணவர்களுக்கு விளக்குதல். எச்ச வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
பாடப்பகுதியில் இடம்பெறும் எச்சங்களைக் கோடிட்டு தெரிநிலைப்
பெயரெச்சங்களைப் பட்டியலிட்டு
எழுதுதல்.
திருக்குறளின் விளக்கத்தைப் புரிய வைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
திருக்குறளின் கருத்துகளை உள்வாங்குதல். வாழ்வில் பின்பற்ற
முயலுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – முற்றுப்பெறாமல் எஞ்சி
நிற்கும் சொல் ...............................
ந.சி.வி – அரசன் தண்டிக்கும்
முறை யாது?
உ.சி.வி – வினையெச்சத்தின் வகைகளை எழுதுக.
உனக்குப் பிடித்த குறள்களை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
திருக்குறளில் உள்ள அணிகளை
அறிக.


