கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, October 26, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வளம்பெருகுக நவம்பர் 3

8th tamil model notes of lesson

lesson plan November 3

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

03-11-2025 முதல் 07-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

வையம்புகழ் வணிகம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

வளம்பெருகுக

6.பக்கஎண்

92 - 93

7.கற்றல் விளைவுகள்

T-818 தமது சொந்த அனுபவங்களைத் தமக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் எழுதுதல் ( கதை, கட்டுரை, பாடல் வடிவில் அனுபவங்களை வெளிப்படுத்துதல் )

8.கற்றல் நோக்கங்கள்

உழவு சார்ந்த நூல்களை நூலகத்திலிருந்து படித்தல்.

நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறியும் திறன்.

9.நுண்திறன்கள்

வான்மழையால் வளமான பயிர்கள் செழிப்பது குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/10/6-8th-tamil-mindmap-unit-6.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_81.html

https://tamilthugal.blogspot.com/2021/05/6-8th-tamil-kuruvina-vidai-unit-6-valam.html

11.ஆயத்தப்படுத்துதல்

உழவு குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தகடூர் யாத்திரையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் வளம் பெருகுக பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். சேர நாட்டின் உழவுச் சிறப்புகள் குறித்து விளக்குதல். உழவுத்தொழிலின் அவசியம் குறித்து மாணவர்களைக் கேட்டல்.

மாணவர்கள் அறிந்த விவசாயம் குறித்துக் கூறச்செய்தல்.




     மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

உழவுத்தொழில் குறித்துக் கூறுதல். உழவுக்கு மழையின் அவசியம் குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வாரி என்பதன் பொருள் ..............................

          ந.சி.வி – உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

          உ.சி.வி – உழவுக் கருவிகளைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உழவின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive