பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
26-03-2026. வியாழன்
திருக்குறள் :
பால் : பொருட்பால்
; இயல்: நட்பியல் ;
அதிகாரம் : புல்லறிவாண்மை ;
குறள் எண் : 843.
குறள் :
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது.
உரை :
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
பழமொழி :
> போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
A contended mind is a continual foot.
இரண்டொழுக்க பண்புகள்:
1. போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.
2. என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.
பொன்மொழி :
நீங்கள் ஒருவருக்கு நன்மை செய்தால், அது உங்களுக்கே நன்மை செய்தது போன்றது. ஒருவருக்கு தீமை செய்தால், அது உங்களுக்கே தீமையாகும். அல்குர்ஆன்.
பொது அறிவு :
01. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?
ராகேஷ் சர்மா -Rakesh Sharma
02.காந்தி அமைதிப் பரிசு பெற்ற முதல் இந்திய அமைப்பு எது?
ராமகிருஷ்ணா மிஷன் Ramakrishna Mission
English words :
Debate - Discussion between candidates.
Secret Ballot - Voting privately.
தமிழ் இலக்கணம்:
- அறிவோம் தமிழ்
இல்லை, அல்ல, அன்று
இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே பொருள் தருவது போல் தோன்றினாலும்
அப்படி அல்ல. இவைகளை நாம் பயன்படுத்தும் இடம் வேறுபடும்.
இல்லை என்பது ஒரு பொருள் அல்லது நபர் இல்லாததைக் குறிக்கும்.
1. என்னிடம் பணம் இல்லை
2. என் தகப்பனார் இங்கு இல்லை
அல்ல என்பது "ஒன்று வேறு ஒன்றாக இல்லை என்று சொல்ல"
1. இது என் புத்தகம் அல்ல
அன்று என்பதும் மேலே குறிப்பிட்ட அதே பொருள் தான் தரும்
ஆனால் இது உயர்ந்த இலக்கிய நடை ஆக பயன்படுத்தப் படும்
1. இது உண்மை அன்று
2. இது நன்மை அன்று
அறிவியல் களஞ்சியம் :
ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்திலும், அதற்கு மூன்று இதயங்களும் உள்ளன.
மார்ச் 26
லூடுவிக் வான் பேத்தோவன்
அவர்களின் நினைவுநாள்
லூடுவிக் வான் பேத்தோவன் - Ludwig van Beethoven
பிறப்பு 1770 இறப்பு மார்ச் 26, 1827
இவர் செருமனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார்.
அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16 நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.
நீதிக்கதை
நரி சொன்ன பொய்
ஒரு நாள் காலையில் சேவலானது மரத்தின் மீது அமர்ந்து பலமுறை கூவிக் கொண்டே இருந்தது. சேவல் கூவும் சத்தத்தைக் கேட்ட நரி சேவல் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியோ மிகுந்த பசியுடன் இருந்ததால் அந்த சேவலைப் பிடித்து சாப்பிட ஆசை ஏற்பட்டது. ஆனால் சேவலோ மரத்தின் மீது இருந்ததால் நரியால் மரத்தில் ஏறிப்பிடிக்க முடியவில்லை.
சேவலைப் பார்த்து, சகோதரனே!, வணக்கம். உனக்கு ஒரு நல்ல செய்தி. இனி பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. நீ கொஞ்சம் கீழே வந்தால் இதைப் பற்றித் தெளிவாகப் பேசுவோம் என்றது. நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டு தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.
அதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, எதையோ அடிக்கடி எட்டிப் பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது. அதற்குச் சேவல், அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றது. வேட்டை நாய்கள் என்றதும் நரி வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.
சேவல், அருமை சகோதரா, போகாதே. நான் இப்பொழுதே கீழே இறங்கி வருகிறேன். ஏன் நாய்களைக் கண்டு பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று கேட்டது சேவல். அதற்கு நரி அந்த ஒப்பந்தத்தைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால், என் நிலைமை என்னவாகும்? அதனால் நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது. சேவல் யாரை ஏமாற்றப் பார்த்தாய், உன்னுடைய கெட்டிக்காரத் தனமானப் பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.
நீதி : புத்திசாலிகளை யாரும் சீக்கிரத்தில் ஏமாற்ற முடியாது.
இன்றைய செய்திகள்
26.03.2026
* ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்; 8 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால் ரீபண்ட் இல்லை: புதிய விதிமுறை அமலாகிறது
* கொலம்பியாவில் ராணுவத்தின் C-130 ஹெர்குலிஸ் ரக விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்துள்ளது. இதில் 66 பேர் வரை பலியாகி உள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்
* போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முறைப்படி ஒப்புதல் கொடுத்துள்ளது
விளையாட்டுச் செய்திகள்
*5வது டி20: நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என வென்றது.
Today's Headlines
26.03.2026
* Shocking news for train passengers: No refund will be given if tickets are cancelled within 8 hours before departure comes into effect. new rule
* In Colombia, a military C-130 Hercules aircraft has crashed and broken apart. Around 66 people have died, and 70 others have been injured.
* Iran has officially agreed to hold talks with the United States to bring an end to the war.
Sports News
5th T20: South Africa defeated New Zealand and won the series.
They won by 33 runs and secured the series 3-2
Prepared by
Covai women ICT போதிமரம்
