கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 25, 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 4

  9th tamil model notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

04-03-2024 முதல் 08-03-2024

2.பாடம் – தமிழ்

திருப்புதல்

1.தொல்காப்பியம் ...................... இயல்களைக் கொண்டுள்ளது.

அ.27                     ஆ.23                    இ.25            ஈ.29

2. மிசை – என்பதன் எதிர்ச்சொல் என்ன?

அ. கீழே                           ஆ. மேலே                        இ. இசை                          ஈ. வசை

3.தமிழில் ஏறத்தாழ ............. துணைவினைகள் உள்ளன.

அ.20                     ஆ.30                    இ.40            ஈ.50             தமிழ்த்துகள்

4. தீரா இடும்பை தருவது எது?

அ. ஆராயாமை, ஐயப்படுதல்                                       ஆ. குணம், குற்றம்  

இ. பெருமை, சிறுமை                                               ஈ. நாடாமை, பேணாமை

5. தமிழ் விடு தூது ..................... என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ. தொடர்நிலைச் செய்யுள்                              ஆ.புதுக்கவிதை     

இ. சிற்றிலக்கியம்                                           ஈ. தனிப்பாடல்                  

6. நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

அ. அகழி                         ஆ. ஆறு                          இ. இலஞ்சி                      ஈ. புலரி

7. ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

அ. திசைச் சொற்கள்          ஆ. வடசொற்கள்         இ. உரிச்சொற்கள்            ஈ. தொகைச்சொற்கள்

8. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ. தேசியத் திறனறித் தேர்வு                                      ஆ. ஊரகத் திறனறித் தேர்வு

இ. தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு    ஈ. மூன்றும் சரி

9. கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி ........................                       

அ.நேவிக்               ஆ.சுனாமி               இ.சித்தாரா     ஈ.அலையிக்

10. பொருந்தாத இணை எது?

அ. ஏறுகோள் – எருதுகட்டி                                       ஆ. திருவாரூர் - கரிக்கையூர்

இ. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு                                ஈ. பட்டிமன்றம் - பட்டிமண்டபம்

11. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ. மறுமை                       ஆ. பூவரசு மரம்                   இ. வளம்                          ஈ. பெரிய

12. வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.

13. ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

அ. பணிந்து-பணித்து

ஆ. பொருந்து-பொருத்து                                

14. துணைவினைகளின் பண்புகள் 2 எழுதுக.

15.கலைச்சொற்கள் தருக.                     

Excavation          

Phoneme

16. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.         

17. பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க.               

அ. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்

ஆ.தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.             

18. பொருத்துங்கள் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

தமிழ்த்துகள்

Blog Archive