கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 22, 2024

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு பிப்ரவரி 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 7th tamil third mid term exam answer key virudhunagar district 2024

ஏழாம் வகுப்பு

தமிழ்

மூன்றாம் இடைப்பருவத் தேர்வு பிப்ரவரி 2024

விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

 

I சரியான விடை                           5

1.அ. அறுவடை

2.ஆ.மாரி

3.இ.பாண்டிய

4.இ.இன்புருகு

5.ஆ.பாரதிதாசன்

 

II குறுவினா 3 மட்டும்                        3x2=6

 

6.அங்கவை, சங்கவை

 

7. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள்

பச்சையாறு

மணிமுத்தாறு

சிற்றாறு

காரையாறு

சேர்வலாறு

கடனாநதி

 

8. உவமை - ஒப்பிட்டுக் கூறப்படும் பொருள் உவமை.

உவமேயம் - உவமையால் விளக்கப்படும் பொருள்.

உவம உருபு –போல, போன்ற

எடுத்துக்காட்டு

மயில் போல ஆடினாள்

 

9. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல்

பொருள் தேடுவது ஒரு பெரிய காரியம்.

அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.

 

10. பூமியை அகல் விளக்காகவும் ஒலிக்கின்ற கடலை மெய்யாகவும் வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச் சுடராகவும் கொண்டவன் திருமால்.

சிவந்த ஒளி வீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்குப் பொய்கையாழ்வாரின் துன்பக்கடல் நீங்க வேண்டி பாமாலை சூட்டுகிறார்.

 

III சிறுவினா 1 மட்டும்                       1x4=4

 

11. ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.

நடவு நட்ட வயலில் மண் குளிருமாறு மடைவழியே நீர் பாய்ச்சினர்.

நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன.

பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன.

அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர்.

அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர்.

கதிரடித்த நெல்தாள்களைக் கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.

மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

 

12. ஒருவர் செய்யும் செயலானது அது தரும் பயனை விட செய்பவரின் மனப்பாங்கு, உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.

தரத்தைக் காட்டுகிறது.

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுதல் மட்டும் போதாது.

தற்காப்புக்காகவும் லாபத்திற்காகவும் கூட உதவி செய்யலாமே.

சொல்லப்போனால் இத்தகைய உதவிகள் ஒரு வகையில் வாணிகம் போலத்தான்.

அதே உதவியைக் கட்டுப்பாட்டு உணர்வுடன் உதவி பெறுபவரை உறவுப் பாங்கில் எண்ணி உரிமை உடையவராக நினைத்து உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு என்று அடிகளார் விளக்கம் தருகிறார்.

 

IV மனப்பாடப்பகுதி                                           3+2=5

 

13. அறம் என்னும் கதிர்

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்.

-    முனைப்பாடியார்

 

14. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

 

V எவையேனும் 2 மட்டும்                    2x2=4

 

15.அ. அறுவடை

ஆ. இலக்கு

 

16.அ. எத்தனை

ஆ. யார்

17.அ. நகமும் சதையும் போல

ஆ.பசுமரத்தாணி போல

 

VI கட்டுரை எழுதுக                          6

 

18.அ. என்னைக் கவர்ந்த நூல்

அல்லது

உண்மை ஒளி

 

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கவும்

 

 

செ.பாலமுருகன்,

தமிழாசிரியர்

அரசு மேல்நிலைப்பள்ளி,

ஆவுடையாபுரம்,

விருதுநகர் மாவட்டம்.

 

 

தமிழ்த்துகள்

Blog Archive