கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, February 13, 2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு தமிழ்க் கட்டுரை

 Role of Students in Environment Protection Tamil Essay

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

முன்னுரை                        தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் என்பது ஓர் உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, உயிரற்ற கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. இயற்கையை நேசி என்பதனை நாம் மறக்கக் கூடாது. நாம் வாழும் சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருந்தால் நாம் நீண்ட காலம் வாழலாம். நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சுற்றுச்சூழலின் அவசியம்              தமிழ்த்துகள்

இயற்கையோடு இணைந்து வாழ் என்பதற்கேற்ப சுற்றுச்சூழல் நம் வாழ்வில் இன்றியமையாதது. மனிதன் இயற்கையை நேசித்து வாழ்ந்தால் பேரிடர்களும் துன்பங்களும் குறையும். நம் பழக்கவழக்கங்களைத் தீர்மானிப்பதும் நம் உணவு, உடையைத் தீர்மானிப்பதும் சுற்றுச்சூழலே. எனவே சுற்றுச்சூழலின் அவசியத்தை மாணவர்கள் அறிய வேண்டும்.             தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் மாசடைதல்       தமிழ்த்துகள்

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் நாகரிக வளர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியலின் அசுர வளர்ச்சியானது நம் சுற்றுச்சூழலைப் பாதிப்படையச் செய்கிறது. உலகில் 75% காணப்படும் நீர்ப் பரப்பானது தொழிற்சாலைக் கழிவுகளினாலும் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் இரசாயனங்களால் நீர் மாசடைகிறது. நெகிழிப் பொருள்களாலும், சட்டவிரோதமான மண் அகழ்வினாலும் நிலம் மாசடைகிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுப்புகைகளினாலும், வாகனப் புகைகளினாலும் காற்று மாசுபடுகிறது. மாணவர்கள் சுற்றுச்சூழல் மாசை நீக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்த்துகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் பங்கு         தமிழ்த்துகள்

மாணவர்கள் தங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது பாதுகாக்க வேண்டும். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எனப் பிரித்து அவற்றை உரிய முறையில் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும். இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை அமைக்க வேண்டும். நெகிழிப் பயன்பாடுகளைக் குறைக்க வேண்டும். மீண்டும் மஞ்சள்பை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

முடிவுரை                                             தமிழ்த்துகள்

"பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கும் நிலத்திற்கும் இடையிலான நல்லிணக்க நிலை" என்கிறார் ஆல்டோ லியோபோல்ட். அனைத்து உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழல் வாழிடமாக இருப்பதால், அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.     தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive