கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 02, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-09-2025. செவ்வாய் .

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

02-09-2025. செவ்வாய் .

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 

இயல்: குடியியல் ; 

அதிகாரம் : பண்புடைமை ; 

குறள் எண் : 688.

குறள் :

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.

விளக்கம் :

தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

பழமொழி :

தெளிவான மனம் பிரகாசமான எதிர்காலத்தை தரும்.

A clear mind makes a bright future.

இரண்டொழுக்க பண்புகள் :

1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.

பொன்மொழி :

மூடனை நூறு அடி அடிப்பதை பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உரைக்கும். சாலமோன் ஞானி.

பொது அறிவு :

01. இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு பாலம் எங்குள்ளது?

மகாத்மா காந்தி சேது பாலம்

கங்கை-பீகார்

Mahatma Gandhi sethu bridge

Ganga- Bihar

02. மிர் (Mir) என்பது என்ன?

ரஷ்ய விண்வெளி நிலையம் Russian space station

English words :

+ put on wear, அணிதல்.

put out-extinquish, (தீயை) அணைப்பது

Grammar Tips:

Doubling Rule

→ Immediate After vowels if a letter comes it will be doubled

while writing suffixes

Ex: RUn Running

HOp-Hopped

BIg - Bigger

But here

JUmp-Jumped

m after U so it is not doubled

Help -helping

Milk -milking

அறிவியல் களஞ்சியம் :

மனிதர்களின் மேல் தோல் கீழ் மல்பீஜியன் அடுக்குகள் (Malphigian Layers) உள்ளன. இவ்வடுக்குகளில் நிறமித் துணுக்குகள் (Pigment Granules) காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றன. இந்நிறமித் துணுக்குகளில் உள்ள இரசாயனப் பொருள்களின் தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதால், நிறமும் வெவ்வேறு விதத்தில் அமைகிறது.

செப்டம்பர் 02 - உலகத் தேங்காய் நாள்

உலகத் தேங்காய் நாள் (world coconut day) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது.

நீதிக்கதை - தங்கத்தூண்டில்

ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம். அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். இதை பார்த்த சுரேஷ்., அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான்.

அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான். இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்ட்டு போய்ட்டான்.

பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு. தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.

ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது.

நீதி :நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள் 02.09.2025

*இலவச கல்வி உரிமைச் சட்டம் நிதி: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய

அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

*தமிழகத்தில் தொழில் தொடங்க ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

* வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது.

விளையாட்டுச் செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.

இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

2வது போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

Today's Headlines - 02.09.2025

* Free Education Act funding: Supreme Court has orders central government to respond within 4 weeks.

* Chief Minister M.K. Stalin has invited Tamil people residing in Germany, to start businesses in Tamil Nadu.

* Cylinder prices for commercial uses has been reduced.

SPORTS NEWS

The US Open tennis tournament is underway in New York. In this, Spain's Carlos Alcaraz won the 4th round.

Winning in the 2nd match: Sri Lanka won the ODI series against Zimbabwe.

Prepared by

Covai women ICT போதிமரம் 

தமிழ்த்துகள்

Blog Archive