கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, July 24, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 திருக்குறள் சிறுவினா விடை 10th TAMIL UNIT 3 THIRUKURAL SIRU VINA VIDAI SHORT QUESTIONS AND ANSWERS

 1.வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

 கோலொடு நின்றான் இரவு      

- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

       இக்குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி.

       உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் வந்து இடையில் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி. 

       உவமேயம் - ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது.

       உவமை - வேல் போன்ற ஆயுதத்தைக் காட்டி வழிப்பறி செய்வது.

       உவமஉருபு - போலும்

       ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது என்பது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

2.கவிதையைத் தொடர்க.

       தண்ணீர் நிறைந்த குளம்

       தவித்தபடி வெளிநீட்டும் கை

       கரையில் கைபேசி படமெடுத்தபடி

       கவலையின்றி பலர்

       மனிதர்களை மறந்து

       மனித நேயம் குறைந்து.

 

தமிழ்த்துகள்

Blog Archive