கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 19, 2021

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 குறுவினா விடை எளிமையாக 10th tamil unit 1 kuruvina vidai short questions and answers

குறுவினா - விடை         2 மதிப்பெண்கள் 

1. 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

 

வேங்கை - மரம், வேம்+கை (வேகின்ற கை)

 

1). தனிமொழி: 'வேங்கை' என்னும் சொல் தனியாக நின்று வேங்கை மரத்தைக் குறிப்பதால், தனிமொழியாகிறது.

 

2). தொடர்மொழி: 'வேங்கை' என்னும் சொல் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்னும் பொருளைத் தருவதால், தொடர் மொழியாகிறது.

 

3). பொதுமொழி: இவ்வாறு, 'வேங்கை' எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்து, பொதுமொழியாகிறது.

 2. "மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

 

"மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்:

சிலப்பதிகாரம் 

மணிமேகலை

எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்:

சீவக சிந்தாமணி 

வளையாபதி 

குண்டலகேசி

 3. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

 

1). சரியான தொடர்கள்:

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

2). பிழையான தொடர்:

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

3). பிழைக்கான காரணம்:

வாழைத்தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.

 

 

4. 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்' - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

 

1). உடுப்பதூஉம் உண்பதூஉம்-இன்னிசை அளபெடை

 

2). இன்னிசை அளபெடை:

செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிர் எழுத்துகள் அளபெடுப்பது, இன்னிசை அளபெடையாகும்.

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

 காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் கி. வா.ஜகந்நாதன்.

அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது அவர், " அடடே , காலையிலேயே மாலை வந்துவிட்டதே" என்றார்.

அவரது சொல்லின் சிலேடை நயத்தை அனைவரும் ரசித்தனர்.

தமிழ்த்துகள்

Blog Archive