கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 30, 2021

ஒப்படைப்பு 2 பத்தாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு tenth tamil assignment 2 key answer

 பத்தாம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு 2 விடைக்குறிப்பு

பகுதி அ

  1. இயற்கை
  2. மென்காற்று
  3. இளங்கோவடிகள்
  4. இருத்தல்
  5. முல்லைப்பாட்டு
  6. தொகைநிலைத்தொடர்
  7. பண்புத்தொகை
  8. பண்புத்தொகை
  9. பாஞ்சாலி சபதம்
  10. பாரதியார்
பகுதி ஆ

11. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

12.வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கம்உண் டாம்.


13.கிழக்கு - கொண்டல்

மேற்கு - கோடை

வடக்கு - வாடை

தெற்கு - தென்றல்


14.மரம் தரும் வரம் உயிர்வளி


15.ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப்பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர். அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும் தீய மொழியைக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

இதுவே விரிச்சி எனப்படும்.


பகுதி இ

16காற்று மாசடைவதால் ஏற்படும் விளைவுகள்

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் ஏற்படுகிறது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைகிறது.

அமிலமழை பெய்கிறது.


17.

அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது.

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளை உடைய திருமால்,

குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் 

தரும்பொழுதுமண்ணுக்கும் விண்ணுக்குமாப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழை மேகம்.

அம்மேகம் ஒலிக்கும் கடலின் குளிர் நீரைப் பருகிப் 

பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, லையைச் 

சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் 

பொழிகிறது.

தமிழ்த்துகள்

Blog Archive