கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 09, 2021

12 ஆம் வகுப்பு தமிழ் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க 50 வினாக்கள் 12th tamil choose the best answer questions 50

 வகுப்பு 12                தமிழ்

சரியான விடையைத் தேர்வு செய்க.

1.பிழையான தொடரைக் கண்டறிக.

அ.காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

ஆ.மலையேறி கல்வெட்டை கண்டறிந்தனர்.

இ.காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

ஈ.நெற்பயிர்கள் மழையில் மூழ்கின.

2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

அ.அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.

ஆ.புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

இ.வறட்சி பல இடங்களை பாதித்துள்ளது.

ஈ.மயில்கள் விறலியர் போல் ஆடுகின்றன.

3.இலக்கியத்தையும் மொழியையும்

ஒருசேர பேசும் இலக்கணநூல்.

அ.யாப்பெருங்கலக்காரிகை

ஆ.தண்டியலங்காரம்

இ.தொல்காப்பியம்

ஈ.நன்னூல்

4.தன்னேர் இலாத தமிழ் - என்ற பாடல்

தண்டியலங்காரத்தில்... இடம்பெற்றுள்ளது

அ.பொருளணியியலில்

ஆ.சொல்லணியியலில்

இ.பொதுவியலில்

ஈ.உரைமேற்கோள்பாடலாக

5.தமிழ் அழகியல் என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ.சிற்பி பாலசுப்பிரமணியம்

ஆ.தி.சு.நடராசன்

இ. நெல்லையப்பர்

ஈ.பாரதியார்

6.கீழ்க்கண்டவற்றுள் எந்த கவிதை நூல் சாகித்ய அகாதமி விருது பெற்றது?

அ.ஒரு கிராமத்து நதி

ஆ.ஒளிப்பறவை

இ.சர்ப்பயாகம்

ஈ.நிலவுப்பூ

7.வானம் +எல்லாம் = வானமெல்லாம் என்று புணர்வதற்கான விதி

அ.ஈறுபோதல்

ஆ.முன் நின்ற மெய் திரிதல்

இ.இனமிகல்

ஈ.உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

8.விளங்கி =இதில் "இ"என்பதன் உறுப்பிலக்கணம் யாது ?

அ.பெயரெச்ச விகுதி

ஆ.வினையெச்ச விகுதி

இ.தொழிற்பெயர் விகுதி

ஈ.எதுவுமில்லை

9.உயிர்வரின் "ஒரு, இரு "என்பன முறையே எவ்வாறு மாறும்

அ.ஓர், ஈர்

ஆ.ஒன்றாய் இரண்டாய்

இ.ஒன்று இரண்டு

ஈ.எதுவுமில்லை

10.நடைநவின்றொழுகும் என்ற தொடர் இடம் பெற்றுள்ள நூல்

அ.நன்னூல்

ஆ.தண்டியலங்காரம்

இ.தொல்காப்பியம்

ஈ.யாப்பெருங்கலக்காரிகை

11.தமிழில் திணைப்பாகுபாடு ----------அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ.பொருட்குறிப்பு

ஆ.சொற்குறிப்பு

இ.தொடர்க்குறிப்பு

ஈ.எழுத்துக்குறிப்பு

12.உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்

அ.நன்னூல்

ஆ.அகத்தியம்

இ.தொல்காப்பியம்

ஈ.இலக்கண விளக்கம்

13.யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து

உணர்த்தும் திணைகள் முறையே.....

அ.அஃறிணை, உயர்திணை

ஆ.உயர்திணை, அஃறிணை

இ.விரவுத்திணை, அஃறிணை

ஈ.விரவுத்திணை, உயர்திணை

14.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டு இருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

அ.சூரிய ஒளிக்கதிர்

ஆ.மழை மேகங்கள்

இ.மழைத்துளிகள்

ஈ.நீர்நிலைகள்

15.பிறகு ஒருநாள் கோடை என்ற கவிதை இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?

அ.நீர்வெளி

ஆ.மழைக்கு பிறகும் மழை

இ.நானென்பது வேறொருவன்

ஈ.அய்யப்ப மாதவன் கவிதைகள்

16.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது எதனால்?

அ.சூரிய வெளிச்சம்

ஆ.நிலாவொளி

இ.இடி மின்னல்

ஈ.இவை அனைத்தும்

17.மொழியின் அடிப்படைப் பண்புகள் யாவை?

அ.திணை பால் எண் இடம்

ஆ.எழுத்து அசை சீர் அடி

இ.தன்மை முன்னிலை படர்க்கை

ஈ.மேற்கண்ட எதுவுமில்லை

18.தன்மைப் பன்மை எத்தனை வகைப்படும்?

அ.4

ஆ-2

இ.3

ஈ.5

19.ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது இதில் ஒவ்வொரு   என்பது --------

அ.ஒருமை

ஆ.பன்மை

இ.மேற்கண்ட இரண்டும்

ஈ.எதுவுமில்லை

20.நாம் முயற்சி செய்வோம் என்பது --

அ.உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

ஆ.உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

இ.தன்மைப் பன்மை

ஈ.எதுவுமில்லை

21.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க கால சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை

அ.அறவோர், துறவோர்

ஆ.திருமணமும், குடும்பமும்

இ.மன்றங்களும், அவைகளும்

ஈ.நிதியமும்,சுங்கமும்

22.இவற்றை வாயில் அருகே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன்ரூமி குறிப்பிடுவது.

அ.வக்கிரம்

ஆ.அவமானம்

இ.வஞ்சனை

ஈ.இவை அனைத்தும்

23."உவா உற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார்"-யார்  யார்?

அ.சடாயு, ராமன்

ஆ.இராமன், குகன்

இ.இராமன்,சுக்ரீவன்

ஈ.இராமன், சவரி

24.எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது   மூச்சினிலே- என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

அ.தனிக்குடும்ப முறை

ஆ.விரிந்த குடும்ப முறை

இ.தாய்வழிச் சமூகமுறை

ஈ.தந்தைவழிச் சமூக முறை

25.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்கள்   பொருந்துவதைத் தேர்க.

அ.தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்

ஆ. தேவையற்ற இடங்களில் இடைவெளிவிட்டு எழுதுதல்

இ.நிறுத்தற்குறிகள் உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

ஈ.வல்லின மெய்களை தேவையான இடங்களில் எழுதுதல்

26.உரிமைத்தாகம் கதையின் ஆசிரியர் யார்?

அ.பூமணி

ஆ. உத்தம சோழன்

இ.தோப்பில் முகமது மீரான்

ஈ.ராமகிருஷ்ணன்

27.தாழ்கடல், மாதவம் - இலக்கண குறிப்பு தருக

அ.வினைத்தொகை, உம்மைத்தொகை

ஆ.வினைத்தொகை ,உரிச்சொற்றொடர்

இ.உரிச்சொற்றொடர் , பண்புத்தொகை

ஈ.உரிச்சொற்றொடர் பெயரெச்சம்

28.ஈறுபோதல், இனமிகல் என்ற விதிகளுக்குட்படுவது

அ.இன்னுரை

ஆ.நண்ணுதல்

இ.அருங்கானம்

ஈ. மாதவம்

29."குன்று சூழ்வான் மகன்" என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுபவர்    யார்?

அ.குகன்

ஆ.சுக்ரீவன்

இ.வீடணன்

ஈ.அனுமன்

30.திருவளர்செல்வன் என்பது சரி. இதற்கான இலக்கண விதி யாது?

அ.விளிப்பெயர் முன் வல்லினம் மிகாது.

ஆ. பெயரெச்சத்தின் முன் வல்லினம் மிகாது

இ.வினைத்தொகையில் வல்லினம் மிகாது

ஈ.எதுவுமில்லை

31.சுரதா நடத்திய கவிதை இதழ்

அ.இலக்கியம்

ஆ.காவியம்

இ.ஊர்வலம்

ஈ. விண்மீன்

32.விண் வேறு விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும்

செங்கதிரும் வேறு இத்தொடர் தரும் பொருள்...

அ.விண்ணும் வெண்மதியும் வேறுவேறு

ஆ.விண்வெளியும் செங்கதிரும் வேறுவேறு

இ.வெண்மதியும் முகிலும் வேறு வேறு

ஈ.விண்,விண்வெளியில் உள்ள வெண்மதி செங்கதிர் முகில் அனைத்தும் வேறு வேறு

33.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ.வசம்பு

ஆ.மணத்தக்காளி இலைச்சாறு

இ.கடுக்காய்

ஈ.மாவிலைக்கறி

34.குழிமாற்று எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் ...

அ.இலக்கியம்

ஆ.கணிதம்

இ.புவியியல்

ஈ.வேளாண்மை

35.கணக்காயர் என்பவர் யார்?

அ.உரையாசிரியர்

ஆ.நூலாசிரியர்

இ.இதழாசிரியர்

ஈ.உபாத்தியாயர்

36."இதில் வெற்றி பெற" என்ற கவிதை- எந்தக் கவிதைத்   தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

அ.ஊர்வலம்

ஆ.தேன்மழை

இ.அமுதும் தேனும்

ஈ.துறைமுகம்

37.வெண்பாவிற்குரிய தளைகள் என்பன...

அ. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

ஆ. இயற்சீர் வெண்டளை கலித்தளை

இ.வெண்சீர் வெண்டளை கலித்தளை

ஈ.நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத்தளை

38.வெண்பா ஒன்றில் நான்கடியும் ஒரே எதுகை பெற்று வரின் அது

அ.ஒரு விகற்பம்

ஆ.பல விகற்பம்

இ.இணை எதுகை

ஈ.பொழிப்பு எதுகை

39.நான்கடி முதல் 12 அடி வரை உள்ள வெண்பா-

அ.கலிவெண்பா

ஆ.நேரிசை வெண்பா

இ.பஃறொடை வெண்பா

ஈ.இன்னிசை வெண்பா

40.நாள் மலர் காசு பிறப்பு என்பன

அ.ஓரசைச்சீர்

ஆ.ஈரசைச்சீர்

இ.மூவசைச்சீர்

ஈ.இவை மூன்றும்

41.திருக்குறள் எவ்வகை பாக்களால் ஆனது?

அ.நேரிசை வெண்பா

ஆ.குறள் வெண்பா

இ.இன்னிசை வெண்பா

ஈ.சிந்தியல் வெண்பா

42.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார்?

அ.பாரதிதாசன்

ஆ.பாரதியார்

இ.நாமக்கல் கவிஞர்

ஈ.கண்ணதாசன்

43.அறத்துப்பாலில் அமைந்துள்ள அதிகாரங்கள் எத்தனை?

அ. 25

ஆ. 38

இ. 70

ஈ. 50

44.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என பாடியவர்?

அ.பாரதியார்

ஆ.பாரதிதாசன்

இ.கண்ணதாசன்

ஈ.கவிஞர் வாலி

45.கடலின் பெரியது

அ.உற்ற காலத்தில் செய்த உதவி

ஆ.தினையளவு செய்த உதவி

இ.பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

ஈ.மேற்கண்ட மூன்றும்

46.புணை, ஏமம் பொருள் தருக

அ.செல்வம் பாதுகாப்பு

ஆ.சினம் ஊழ்

இ.தெப்பம் பாதுகாப்பு

ஈ.வெஃகாமை, அஃகாமை

47.அன்பும் அறமும், நன்கலம் - இலக்கண குறிப்புத் தருக....

அ.எண்ணும்மை பண்புத்தொகை

ஆ.எண்ணும்மை வினைத்தொகை

இ.இரட்டைக்கிளவி வினைத்தொகை

ஈ.பெயரெச்சம் வினையெச்சம்

48.வையகமும் வானகமும் ஆற்றல் அரிது எதற்கு ?

அ.செய்யாமல் செய்த உதவி

ஆ.பயன்தூக்கார் செய்த உதவி

இ.தினைத்துணை நன்றி

ஈ.செய்ந்நன்றி

49.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை இக்குறட்பாவில் பயின்று வரும் அணி

அ.ஏகதேச உருவக அணி

ஆ.உவமையணி

இ.தொழில் உவமையணி

ஈ.நிரல்நிறை அணி

50.திருக்குறளில் இடம்பெற்றுள்ள இயல்களின் எண்ணிக்கை

அ.7

ஆ.8

9

ஈ .6

தமிழ்த்துகள்

Blog Archive