கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 02, 2021

யார் முட்டாள் ? குட்டிக் கதை YAAR MUTTAL TAMIL SHORT STORY Kutty kathai

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது.

அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்.

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
500 ரூபாய்க்குத் தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.

ஆனால் வழிப்போக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 600 ரூபாய் கேட்டான்.

100 ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 500
ரூபாய்க்குப் பேரம் பேசினான்.

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 600 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான்.
மகிழ்வோடு சென்றுவிட்டான்.

ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனைப் பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல இலட்சம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்.

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்.

தமிழ்த்துகள்

Blog Archive