கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 06, 2021

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 13.வினாக்களுக்கு விடையளித்தல் seventh Tamil refresher course answer key 7th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு:

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.

இவற்றைப் போல மனிதனும் தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை. 

எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

1. படத்திற்குப் பொருத்தமான தொடரைப் பத்தியிலிருந்து எடுத்து எழுதுக.









எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை.

உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை.

2. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை – என்னும் தொடர் உணர்த்தும் கருத்து யாது?
தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ வேண்டும்.

3. யாரால் உலகம் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

4. பத்தியிலுள்ள இரண்டு எதிர்ச்சொற்களை எடுத்தெழுதுக.
தனக்கென - பிறர்க்கென
வாழாமல் - வாழ

5. பத்தியின் மையக்கருத்தை எழுதுக.
மனிதநேயம் 

6. பத்தியிலிருந்து இரண்டு வினா உருவாக்குக.
1.பிறர்க்கென வாழ்வதற்கு என்னென்ன தேவை?
2.மனிதநேயம் என்றால் என்ன?


தமிழ்த்துகள்

Blog Archive