கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 4.செய்யுளின் நயங்களை அறிதல் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ-கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்ற லின்றி

நாட்டத்தில் கொள்ளாரடீ -கிளியே

நாளில் மறப்பாரடீ.

- கவிஞர் பாரதியார்

1. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சி 

நேர்மைத் 

ஞ்சனை

வாய்ச்சொல்லில் 

கூட்டத்தில் 

கூவிப் 

நாட்டத்தில் 

நாளில் .

2. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சி 

ஞ்சனை

கூட்டத்தில் 

நாட்டத்தில் 

3. மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ-கிளியே

நாட்டத்தில் கொள்ளாரடீ -கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

நாளில் மறப்பாரடீ.

4. மேற்கண்ட பாடலின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் பெயரை எழுதுக.

பாடலின் தலைப்பு

நடிப்புச் சுதேசிகள்

ஆசிரியரின் பெயர்

கவிஞர் பாரதியார்

தமிழ்த்துகள்

Blog Archive