கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, November 10, 2021

எட்டாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 8.புதிர், விடுகதைகள் Eighth Tamil refresher course answer key 8th

 

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(பட்டுக் கோட்டை , நூலகம், மூங்கில்காடு, பாரதியார் , பாய்மரக்கப்பல்)

1. முதலெழுத்து பாடலின் வேறு பெயரைக் குறிக்கும். 

 முதல் எழுத்துடன் அடுத்த இரண்டும் சேர்ந்தால் பெயரைக் குறிக்கும். 

 இறுதி இரண்டு எழுத்துகள் வினாச் சொற்களைக் குறிக்கும். இம்மூன்று புதிர்களும் சேரக் கிடைப்பது. தமிழ்க்கவிஞர்களில் ஒருவரின் பெயர் . யார் அவர்? 

பாரதியார் 

2.  முதல் மூன்று எழுத்துகள் காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதைக் குறிப்பது. 

 இறுதி மூன்றெழுத்துகள், அரசனின் பாதுகாப்பு அரணை இவ்வாறும் அழைப்பர் .

இவ்விரண்டும் சேர்த்தால் கிடைப்பது ஓர் ஊரின் பெயர் .

அது எந்த ஊர்?

பட்டுக்கோட்டை

3.  முதல் நான்கு எழுத்துகள், புல்லாங்குழல் செய்யப் பயன்படுவதைக் குறிக்கும். 

 இறுதி இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் மரம், செடி கொடிகள் நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

அது என்ன? ________________

மூங்கில் காடு

4.  முதல் இரண்டு எழுத்துகள் உறங்குவதற்கு உதவுவது. 

 இடையில் உள்ள மூன்றெழுத்துகள் உயிர்வாழ்வதற்கான காற்றைத் தருவது. 

 இறுதி நான்கு எழுத்துகள் கடலில் பயணிக்க உதவுவது.

அது என்ன? 

பாய்மரக் கப்பல்

5.  முதல் இரண்டு எழுத்துகள் மாணவர் கைகளில் தவழ்வது.

 இறுதி மூன்று புறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்.

அது என்ன? 

நூலகம்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஆந்தை , மயில், கொக்கு, அணில், பாம்பு)

1. நான் ஓர் அழகு தேவதை ; ஆடும் தேவதை . நான் யார் ?

மயில்

2. வளைவேன் , நெளிவேன் , வயிறு கலங்க வைப்பேன் . நான் யார் ?

பாம்பு

3. மரத்திற்கு மரம் தாவுவேன் . முதுகில் மூன்று கோடுகள் கொண்டிருப்பேன் . நான் யார் ?

அணில்

4. நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன் . ஓடையிலே மீன் பிடிக்கிறேன் . நான் யார் ?

கொக்கு

5. பகலில் துயில்வேன் . இரவில் அலறுவேன் . நான் யார் ?

ஆந்தை

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(காளான் , எலுமிச்சம்பழம், தர்பூசணி, வெண்டைக்காய், மாதுளம்பழம்)

1. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

வெண்டைக்காய்

2. வெளியே பார்த்தால் பச்சை ; வெட்டிப் பார்த்தால் சிவப்பு; சுவைத்துப் பார்த்தால் இனிப்பு அது என்ன?

தர்பூசணி

3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊசலாடுது?

எலுமிச்சம்பழம்

4. சொம்பு நிறையக் கம்பு அது என்ன?

மாதுளம்பழம்

5. மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?

காளான்

தமிழ்த்துகள்

Blog Archive