கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 22, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 2

10th tamil model notes of lesson

lesson plan March 2

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-03-2026 முதல் 06-03-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

பொதுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.

அ)அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் 'வாழை இலை விருந்து விழாவை' ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. தமிழ்த்துகள்

ஆ) தமது முதல் படத்திலேயே புகழின் உச்சத்தைத் தொட்டார் சிவாஜிகணேசன்.

தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக. தமிழ்த்துகள்

குறிப்பு வரைக - அவையம்.

'வினை' -  என முடியும் திருக்குறளை எழுதுக.   தமிழ்த்துகள்

கலைச்சொல் தருக.       தமிழ்த்துகள்

அ) Screenplay -                         ஆ)Tempest -

அறியேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.         

எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக  ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்? தமிழ்த்துகள்

பழமொழிகளை நிறைவு செய்க.

அ) ஒரு பானை ...................................    ஆ) விருந்தும் .................................................

கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

 உழவர்கள் மலையில் உழுதனர். தமிழ்த்துகள்

 முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். தமிழ்த்துகள்

மரபுத் தொடருக்கான பொருள் அறிந்து தொடரில் அமைத்து எழுதுக.  

அ) கண்ணும் கருத்தும்               ஆ) அள்ளி இறைத்தல்

குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.     

வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.

புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’ தமிழ்த்துகள்

இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க. தமிழ்த்துகள்

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

'காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்' என்னும் புது மொழிக்கு வித்தாகிறேன். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும்போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படக் காரணமாகிறேன். உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பதும் எனக்குப் பெருமையே.

அ) உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா பெறும் இடம் யாது?

ஆ) காற்றை அடிப்படையாகக் கொண்டு பிறந்துள்ள புது மொழியைக் கூறு. தமிழ்த்துகள்

இ) காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் பெறும் மாநிலம் எது?     

மருத நிலத்தில் இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைக் கம்பரின் கலைநயத்துடன் எழுதுக.

வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. தமிழ்த்துகள்

அ) "தென்னன் மகளே" -  எனத் தொடங்கும் அன்னை மொழியே பாடலை எழுதுக.    அல்லது

ஆ) அள்ளல் - எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடலை எழுதுக.  தமிழ்த்துகள்

நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். ”இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய  குட்டியைத் தடவிக்கொடுத்து, ”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம் ”நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. தமிழ்த்துகள்

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்" -   இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.    

"தேவர் அனையர் கயவர் அவரும் தாம் தமிழ்த்துகள்

மேவன செய்தொழுகலான்" - இக்குறளில் வஞ்சப்புகழ்ச்சி அணி இடம் பெற்றுள்ளதை விளக்குக.

தமிழ்த்துகள்

Blog Archive