கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 15, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 23

 10th tamil model notes of lesson

lesson plan February 23

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

23-02-2026 முதல் 27-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

பொதுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............               தமிழ்த்துகள்

அ.முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்                ஆ.குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ.குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்              ஈ.மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

2.”மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ” இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறி.

அ.கருமை                        ஆ.பச்சை                         இ.பழுப்பு                 ஈ.நீலம்

3. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

4. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ.குலைப்பெயர் வகை                                    ஆ.மணிப்பெயர் வகை                 

இ.கிளைப்பெயர் வகை                                     ஈ.இலைப்பெயர் வகை

5 சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

6. பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

7. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

 உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது”.

பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

8. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக.

9. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

10. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

11, நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழி நின்று விளக்குக.  

12. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

13. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

படிப்போம் பயன்படுத்துவோம்.      

14. Storyteller                                                 

15. Screenplay                   

16. வெய்யோனொளி... எனத் தொடங்கும் கம்பராமாயண மனப்பாடப்பாடலை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive