கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, August 11, 2023

விடுதலை வேள்வி சுதந்திர தினக் கவிதை Viduthalai Velvi Sudhanthira Thina Kavithai

 

விடுதலை வேள்வி

 

புத்தனும் பதினெண் சித்தனும் வாழ்ந்த

மண்ணை அடிமை தந்திட்டோம்

எத்தனை உடல்கள் எத்தனை உயிர்கள்

இத்தரை மீட்க பழியிட்டோம்

பூலித் தேவனும் கட்டபொம்மனும்

கட்டிய அடித்தளம் இதுவல்லவா

வீரமங்கை வேலுநாச்சியும் மரு

திருவரும் கொடுத்த திமிர் அல்லவா?

 கொங்கு நாட்டின் சின்ன மலையும்

கட்டாலங்குளத்து அழகு முத்தும்

காட்டிய வீரம் நமதல்லவா?

வேங்கைப் புலியன்ன ஜான்சி ராணி

வீறுகொண்ட சுந்தரலிங்கமென வெள்ளையன்

கூறுபோட்ட நாட்டை மீட்கக்

கொட்டினோம் கொட்டியது கொஞ்சமல்ல!

 வேறுபட்டால் வெள்ளையன் வாழ்வான்

ஒன்றுபட்டால் நமக்கே வெற்றி

வேலூர்ப் புரட்சி காட்டியது பாதி ஜாலியன்

 வாலாபாக்கில் கொதித்தது நீதி !

பால கங்கா திலகரின் வழியில்

 வங்கச் சிங்கம் நேதாஜியும்

கோபாலகிருஷ்ண கோகலே வழியில்

குஜராத் மண்ணின் காந்திஜியும்

இருமுனைப் பந்தங்கள் ஆகினர் வெள்ளையர்

இந்திய மண்ணை விட்டே ஏகினர்

பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு

நாமக்கல்லாரின் வழிநடைப் பாட்டு

வாஞ்சிநாதனின் கைத்துப்பாக்கி

வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல்

விடுதலைக் கொடியை விடாது பற்றி

உயிரை விட்ட திருப்பூர் குமரன்

எவரைச் சொல்ல எவரை விடுக்க?

 இந்தியர் உயிரென்ன இரவலா விடுக்க?

விடுதலைப் போரின் தியாகிகளைத் தொழுவோம்

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!

-கவிஞர் கல்லூரணி முத்து முருகன்

தமிழ்த்துகள்

Blog Archive