கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, June 01, 2022

செயங்கொண்டார் ஆசிரியர் குறிப்பு - JEYANKONDAR

 செயங்கொண்டார் என்னும் புலவர் பிற்கால சோழர் கால இலக்கியமான  கலிங்கத்துப்பரணியைப்  பாடியவர். 

முதலாம் குலோத்துங்கனுடைய அவைக்களப் புலவராக இருந்தவர். 

இவர் தீபங்குடியைச் சார்ந்தவராதலின் அருகர் என்பர். 

இந்நூலின் காப்புச் செய்யுளால் இவர் சைவர் என அறியலாம். 

முதன்முதலில் பரணி பாடியவர் இவரே. 

இவரது வரலாறு அறியப்படவில்லை. 

இவரது காலம் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

பிற்காலப் புலவரான பலபட்டடைச் சொக்கநாதர் "பரணிக்கோர் செயங்கொண்டார்" என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.

 சமகாலத்தவரான ஒட்டக்கூத்தரும் "தெந்தமிழ்த்தெய்வப் பரணி" என்று இவர் பாடிய பரணியைச் சிறப்பித்துள்ளார்.

புகார் நகர வணிகப் பெருமக்களைச் சிறப்பித்து இசை ஆயிரம் என்ற நூலையும் பாடியுள்ளார். 

அத்துடன் விழுப்பரையர் மீது உலாமடல் என்னும் நூலையும் பாடியுள்ளார்

தமிழ்த்துகள்

Blog Archive