கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, June 11, 2022

7ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 பருவம் 1 மாதிரி பாடக்குறிப்பு ஒன்றல்ல இரண்டல்ல 7th model notes of lesson tamil Ondralla Irandalla term 1 unit 1

 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

வகுப்பு – 7

பாடம் – தமிழ்

பருவம் 1

இயல் 1

தலைப்பு – ஒன்றல்ல இரண்டல்ல

1.கற்றல் விளைவு

          பழந்தமிழகத்தில் வாழ்ந்த வள்ளல்கள் வரலாற்றை அறியும் திறன் பெறுதல்.

2.உணர்தல்

          தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்கள் என்பதை உணர்தல்.

3.முன்னறிவு

          அறிந்த வள்ளல்கள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.

          அறிந்த இலக்கியங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

4.விதைநெல்

          உடுமலை நாராயணகவி இயற்றிய ஒன்றல்ல இரண்டல்ல என்னும் தலைப்பில் உள்ள பாடல்.

5.விதைத்தல்

          தென்றலில் தேன் மணம், கனி, பொன் போன்ற தானியங்கள் வளமிக்கது. பரணி, பரிபாடல், கலம்பகம், எட்டுத்தொகை, திருக்குறள், அகம், புறம் பாடிய சங்க இலக்கியங்கள். முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் பாரி, புலவருக்குத் தலை தரத் துணிந்த குமண வள்ளல் போன்றோர் பலராவர் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.

          தமிழின் இலக்கியங்களையும் வள்ளல்ளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

6.கருத்துப்புனைவு



7.கருத்துத்தூவானம்

          தமிழ் வள்ளல்களை மாணவர்கள் அறியச் செய்தல்.

          தமிழின் இலக்கியச் சிறப்புகளை அறிந்து வரல்.

8.விளைச்சல்

          தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை?

          பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?

          எட்டுத்தொகை நூல்களை எழுதுக.

          பொருள் கூறுக.

          முகில், உபகாரி, அற்புதம்.

          தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

9.சங்கிலிப்பிணைப்பு

          நாராயணகவி பற்றிய குறிப்புகளை அறிதல்.

          தமிழின் இலக்கிய வடிவங்களைத் தொகுத்தல்.


தமிழ்த்துகள்

Blog Archive